ராஜஸ்தானில் மாட்டு சாணத்தில் இருந்து காகிதம்

ஜெய்ப்பூர்:  நாட்டில் மாட்டு சாணம் பொதுவாகவே உரமாக மற்றும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பீம்ராஜ் சர்மா மாட்டு சாணத்தில் இருந்து காகிதம், கவர், ராக்கி கயிறு, ஹோலி மற்றும் தீபாவளி பொருட்கள், பென்சில் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறார். இவரது நிறுவனத்தின் டைரிகள், பெட்டிகள், பென்சில்கள் மற்றும் ராக்கி உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. தனது தொழில் குறித்து பேசிய பீம்ராஜ், ‘’இதரப் … Read more

ரப்பர் விலையை ரூ.300 ஆக உயர்த்தினால் பாஜவுக்கு ஓட்டு போடுவோம்: கேரள பிஷப் பேச்சால் சர்ச்சை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் கத்தோலிக்க சபை சார்பில் விவசாயிகள் பேரணி நடந்தது. ரப்பர் உள்பட விவசாய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தலச்சேரி பிஷப் ஜோசப் பேசியதாவது: ரப்பர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடந்த பல வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.  ஒன்றிய அரசு நினைத்தால் ரப்பர் விலையை ரூ.250 ஆக உயர்த்த முடியும். தேர்தலில் ஓட்டாக மாறாத எந்த … Read more

ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் ஆபாச உள்ளடக்கங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை – அனுராக் தாக்கூர் எச்சரிக்கை

ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் ஆபாசமான மற்றும் அவதூறு உள்ளடக்கங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிராவின் நாக்பூரில் பேட்டியளித்த அவர், ஓடிடி தளங்களில் ஆபாசமான உள்ளடக்கம் குறித்து அதிகரிக்கும் புகார்கள் மீது அரசு தீவிரமாக உள்ளதாகவும், தேவைப்பட்டால் விதிமுறைகள் மாற்றப்படலாம் என்றும் கூறினார். மேலும், ஓடிடி தளங்களில் படைப்பாற்றலுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிலையில், படைப்பாற்றலின் பெயரால் அவதூறுகளை ஏற்க முடியாது என்றும் அனுராக் தாக்கூர் … Read more

கிரெடிட் கார்டு பயனர்களுக்கு எச்சரிக்கை… மோசடியால் லட்சக்கணக்கில் இழப்பு – முழு விவரம்!

Credit Card Cyber Crime: மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் சைபர் மோசடிக்காரர்கள், 50 வயது நபர் ஒருவரிடம் ரூ.7.6 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். கிரெடிட் கார்டு பின் நம்பரை உருவாக்க உதவுவதாக கூறி 50 வயது நபரை சைபர் வஞ்சகர்கள் ஏமாற்றினர். இச்சம்பவம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி நடந்தது. இதுதொடர்பாக, கடந்த வியாழக்கிழமை (மார்ச் 16) வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் மகாராஷ்டிரா மாநில மின்சார டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் (எம்எஸ்இடிசிஎல்) ஊழியராக உள்ளார். அவர் … Read more

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக ராகுல்காந்தி கருத்து.. விவரங்களை வழங்க நேரில் வலியுறுத்திய போலீசார்

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தது குறித்து, ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வழங்குமாறு வலியுறுத்தினர். ஒற்றுமை இந்தியா நடைபயணத்தின் முடிவில் ஸ்ரீநகரில் பேசிய ராகுல், பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக கூறியிருந்தார். இந்நிலையில், டெல்லியில் சிறப்பு காவல் ஆணையர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான போலீசார் ராகுலை சந்தித்து, கூடிய விரைவில் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வழங்குமாறு வலியுறுத்தினர். இந்நிலையில், முதற்கட்ட அறிக்கையை போலீசாரிடம் ராகுல் வழங்கியதாகவும், 10 … Read more

எங்கெங்கும் வெப்பம்! உச்சத்தை தொடும் மின்சார பயன்பாடு! கடந்த நிதியாண்டுடன் ஓர் ஒப்பீடு!

இந்தியாவில் கடந்த நிதியாண்டைவிட, இந்த நிதியாண்டில் இந்தியாவின் மின் நுகர்வு அதிகரித்திருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டைவிட அதிகரித்த மின் நுகர்வு..  இந்த நிதியாண்டில் ஏப்ரல் – பிப்ரவரி காலத்தில் இந்தியாவின் மின் நுகர்வு 10 சதவீதம் அதிகரித்து 1375.57 பில்லியன் யூனிட்டுகளாக (BU) உயர்ந்துள்ளது. கடந்த 2021-22ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மின்சாரத்தின் அளவைவிட, இந்த ஆண்டு மின் நுகர்வு அதிகரித்திருப்பதாகவும் அரசாங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2021 – 22ஆம் ஆண்டு ஏப்ரல் … Read more

2024 மக்களவை தேர்தல்: எதிர்கட்சிகளின் ஃபார்முலா என்ன.? – அகிலேஷ் பரபரப்பு.!

சமீபத்தில் கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து, காங்கிரஸ் இல்லாத புதிய எதிர்க்கட்சி முன்னணிக்கு ஒப்புக்கொண்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் , காங்கிரஸ் கட்சி தனது பங்கை தானே தீர்மானிக்க வேண்டும் என்று இன்று கூறினார். காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி, நாங்கள் பிராந்திய கட்சிகள் என்று அவர் கூறினார். 1996 ஆம் ஆண்டு முதல் தனது கட்சி போட்டியிடாத காந்தி குடும்பத்தின் கோட்டையான அமேதி தொகுதியில் தனது கட்சி மக்களவைத் … Read more

உலகின் சிறந்த பகுதிகளாக இந்தியாவின் லடாக் மற்றும் மயூர்பஞ்ச் பகுதிகள் தேர்வு..!

இந்தியாவின் லடாக் மற்றும் மயூர்பஞ்ச் பகுதிகளை உலகின் சிறந்த பகுதிகளாக டைம்ஸ் ஆங்கில வார இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம்ஸ் இதழ் 2023ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 50 சுற்றுலாதளங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், வியக்க வைக்கும் உயரமான அழகிய மலைப்பகுதிகளை கொண்டுள்ள லடாக் திபெத்திய புத்த கலாசாரத்துடன் பல்வேறு அதிசயங்களையும் கொண்டுள்ளது என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஒடிசாவிலுள்ள மயூர்பஞ்ச் பகுதி அதன் பசுமையான நிலப்பரப்பு, வளமான கலாச்சார மரபு மற்றும் பழங்கால கோயில்களுக்கு பெயர் … Read more

16 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற காதலன்!!

16 வயது கர்ப்பிணி சிறுமியை அவரது காதலனே தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் ரஜாவ்லி என்ற பகுதியை சேர்ந்த சோனு குமார் என்ற இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 16 சிறுமிக்கும் ஓராண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக பழகவே, சோனு குமார் மூலம் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து கர்ப்பம் குறித்து சிறுமி, சோனு குமாரிடம் தெரிவித்து … Read more

ராகுல் காந்தியை சுற்றி வளைத்த போலீஸ் குழு; டெல்லியில் பதற்றம்.!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பாதயாத்திரையின் முடிவில் ஸ்ரீநகர் உரையின் போது, ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்’ என்ற அவரின் கருத்துக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியதற்கு பதில் அளிக்காததால், டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளின் குழு இன்று ராகுல் காந்தியின் வீட்டை முற்றுகையிட்டது. ராகுல் காந்தியின் உரை குறித்து அறிந்த போலீசார், மார்ச் 16 ஆம் தேதி ஒரு கேள்வித்தாளை அனுப்பி, “பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தன்னை அணுகிய பெண்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு” … Read more