கன்னட நடிகர் சேத்தன் ஜாமீனில் விடுதலை

பெங்களூரு: இந்துத்துவ அரசியலை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட கன்னட நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கன்னட நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்துத்துவ அரசியல் பொய்களால் கட்டமைக்கப்பட்டது என விமர்சித்திருந்தார். இதுகுறித்து பஜ்ரங் தள அமைப்பின் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீஸார் அவரை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதையடுத்து அவரை பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கு காங்கிரஸாரும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு … Read more

2024 மக்களவை தேர்தல் மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி ஆலோசனை

கொல்கத்தா: கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான குமாரசாமி நேற்று மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள மம்தா பானர்ஜி இல்லத்துக்கு சென்ற குமாரசாமி, மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், 2024 மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த பிராந்திய கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்தும் இருதலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.  

வார்த்தைகளில் கண்ணியம் இருக்க வேண்டும் – பாஜக தலைவர்கள் கருத்து

புதுடெல்லி: வார்த்தைகளில் கண்ணியம் அவசியம். சூரத் நீதிமன்ற தீர்ப்பு ராகுல் காந்திக்கு படிப்பினையாக அமையும் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த குஜராத் எம்எல்ஏ புர்னேஷ் மோடி கூறும்போது, “சிலரது தவறுக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீதும் பழி சுமத்துவது சட்டவிரோதம். ராகுல் ஒட்டுமொத்த மோடி சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அரசியலுக்காக அல்லாமல் சமூகப் பிரச்சினைக்காகவே ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தேன். ராகுல் எத்தனை முறை மேல்முறையீடு செய்தாலும் எனது … Read more

எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்: 2 ஆண்டு சிறை தண்டனையை காரணம் காட்டி மக்களவை செயலகம் அறிவிப்பு; தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறியது தொடர்பாக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் நேற்று அறிவித்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில், கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘அனைத்து திருடர்களும் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவென்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதனை அதிகாரபூர்வமாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி … Read more

இந்தியாவை ஸ்தம்பிக்க வைக்க காங்கிரஸ் வியூகம்; ராகுல் காந்தி பரபர ட்விட்.!

ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட வியூகக் கூட்டத்தில் இன்று மாலை இந்த முடிவு எடுக்கப்பட்டது. “ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தொடர்பான அரசியல் வியூகம் குறித்து நாங்கள் விவாதித்தோம். வரும் நாட்களில் நாடு முழுவதும் போராட்டங்களை … Read more

ராகுல் காந்தி சிறை, அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 9வது நாள் அமர்வு தொடங்கியதும் பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல்காந்தி முதன்முறையாக மக்களவையில் கலந்துக்கொண்டார். அப்போது ராகுல் காந்தி சிறை மற்றும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். … Read more

2024க்குள் 1000 பேருக்கு வேலை – ஆகாச ஏர் நிறுவனம் அறிவிப்பு

1000 பேரை புதிதாக வேலையில் அமர்த்த உள்ளது ஆகாச ஏர் நிறுவனம். வரும் 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குள், 1000 பேரை புதியதாக பணிக்கு நியமிக்க உள்ளதாக ஆகாச ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 3,000ஆக அதிகரிக்க உள்ளது. விமானங்களின் எண்ணிக்கையும் விமானம் சென்று சேரும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், 1000 பேரை பணியில் அமர்த்த உள்ளதாக ஆகாச ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 7 மாதங்களுக்கு … Read more

கர்நாடக பாஜக முன்னாள் எம்எல்சி பாபுராவ் சிஞ்சன்சூர் காங்கிரஸில் இணைந்தார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜத ஆகிய முக்கிய கட்சிகள் பிற கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜக முன்னாள் எம்எல்சி புட்டண்ணா அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் 14 தலித் அமைப்புகளின் தலைவர்கள் முன்னாள் அமைச்சர் ஆஞ்சநேயா வழிகாட்டுதலின்பேரில் க‌ர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் முன்னிலையில் காங்கிரஸில் … Read more

நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலர் உத்பால் குமார் சிங் அறிவித்துள்ளார். தகுதி … Read more