இனி 6 வயது நிரம்பிய பிறகே 1-ம் வகுப்பில் சேர்க்கை..!!

அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை கடிதம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது., நாட்டில் பள்ளிகளில் இனி 1 ஆம் வகுப்பு சேர்ப்பதற்கு குழந்தைகளுக்கு 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்றும் 1 ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது. அதேநேரத்தில் 3 வயதில் குழந்தைகளை ப்ரீ-கேஜி சேர்க்கலாம், 3 ஆண்டுகள் ப்ரீ-கேஜி, எல்கேஜி, யுகேஜி பயில வேண்டும். குழந்தைகளை 6 வயதில் 1 … Read more

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு..!! சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.1.30 லட்சம் வரை..!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகர் ஊரமைப்பு ஆகிய துறையில் காலியாக இருக்கும் 1,083 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வானது மே 27-ம் தேதி நடைபெற இருப்பதாக வெளியான … Read more

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றி – ஆலே முகமது துணை மேயராக தேர்வு

புதுடெல்லி: நீண்ட இழுபறிக்கு பிறகு நடந்த டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றுள்ளார். டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 250 இடங்களில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேச்சைகள் 3 இடங்களில் வென்றனர். டெல்லி மாநகராட்சி கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக வசமிருந்தது. இப்போது அதை ஆம் ஆத்மி … Read more

உடல் எடையை குறைக்க முடியாமல் அனுஷ்கா தவிப்பு

ஐதராபாத்: உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வருகிறார். ஸ்லிம் தோற்றத்தில் இருந்த அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்துக்காக தனது உடல் தோற்றத்தை மாற்றினார். 60 கிலோவாக இருந்தவர், அந்த படத்துக்காக 90 கிலோவுக்கு மாறினார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் உடல் எடையை குறைக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. 10 கிலோ வரைதான் அவரால் எடையை குறைக்க முடிந்தது. இதனால் பழைய 60 கிலோ எடைக்கு அவரால் வரமுடியவில்லை. இதனால் பல … Read more

பள்ளியில் முதல் வகுப்பில் குழந்தையை சேர்ப்பதற்கு 6 வயது இருக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: பள்ளியில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குறைந்தபட்ச வயதை 6-ஆக நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கைப்படி 3 முதல் 8 வயது குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி நிலைகள் 5 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கு முந்தைய கல்வி (ப்ரீ ஸ்கூல்) 3 ஆண்டுகள் அடங்கும். அதன் பின் முதல் வகுப்பு மற்றும் 2 வகுப்பு கல்வி நிலை இடம் … Read more

வீட்டிற்குள் புகைப்படம் எடுத்த மர்ம நபர்கள்: போலீசிடம் அலியா பட் புகார்

மும்பை: தனியுரிமை மீதான அத்துமீறல் அதன் எல்லையை தாண்டிவிட்டது என்று நடிகை அலியா பட் ஆவேச பதிவை வெளியிட்டுள்ளார். அதற்கு பல நடிகர், நடிகைகள் ஆதரவு கருத்து தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை அலியா பட், கடந்த சில தினங்களுக்கு முன் அவரது அனுமதியின்றி அவரது வீட்டிற்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் படத்தொகுப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அந்தப் பதிவில், ‘நீங்கள் என்ன விளையாடுகிறீர்களா. எனது வீட்டின் அறையில் நான் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். யாரோ என்னை பார்ப்பதை … Read more

சற்று நேரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி… அறையில் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி..!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரைச் சேர்ந்தவர் அஸ்லம் (24). இவருக்கு கடந்த 19-ம் தேதி ராஜதலாப் பகுதியைச் சேர்ந்த கக்ஷன் பானு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விருந்து ராய்ப்பூர் நகரின் சாஸ்திரி பஜாரில் அமைந்துள்ள சீரத் மைதானத்தில் நடைபெற இருந்தது. பந்தல் அலங்கரிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மணமகன் அஸ்லமும் … Read more

மதிப்பெண் சான்றிதழ் தராமல் இழுத்தடித்த கல்லூரி முதல்வரை உயிருடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவர்..!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பி.எம். பார்மசி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா (50). நேற்று மாலை கல்லூரி பணிகளை முடித்து விட்டு மாலை 4 மணியளவில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 24 வயது இளைஞன், முதல்வரிடம் வாக்குவாதம் செய்தார். உடனே சட்டென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, விமுக்தா ஷர்மா மீது ஊாற்றி தீ வைத்துள்ளார். பின்னர் கல்லூரி முதல்வர் பற்றி எரிந்த … Read more

கொரோனாவுக்கு அஞ்சி 3 ஆண்டு வீட்டிேலயே கிடந்த தாய், மகன்

குருகிராம்: குருகிராமில் கொரோனாவுக்கு பயந்து பெண் ஒருவர் தனது மகனுடன் அறையில் 3 ஆண்டுகளாக அடைந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராமில் சுஜன் மாஜி- முன்முன் மாஜி தம்பதியினர் 10 வயதுடைய மகனுடன் வசித்து வந்தனர். கொரோனா தொற்றின் போது கடை பிடித்த கட்டுப்பாடுகளை கொரோனா குறைந்த பிறகும் முன்முன் மாஜி கடைபிடித்தார். அவருடைய கணவர் தனது மனைவி நாளடைவில்  சரியாகி விடுவார் என்று அலுவலகம் செல்லத் தொடங்கினார். ஆனால், அலுவலகம் சென்று … Read more

உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு டெல்லி துணை முதல்வர் மீது சிபிஐ வழக்கு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி

புதுடெல்லி: துணை முதல்வர் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய  சிபிஐ.க்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசு, அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிய, கடந்த 2015ம் ஆண்டு ‘கருத்து கேட்பு குழு’வை அமைத்தது. இக்குழு பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல், இந்த குழுவின் மூலமாக ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை உளவு … Read more