உலகில் முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ‘பாகுபலி’ மூங்கில் தடுப்பு

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலத்தில் வாணி – வரோரா நெடுஞ்சாலையில் 200 மீட்டர் தூரத்துக்கு மூங்கில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் முறையாக நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள இந்த மூங்கில் தடுப்பு குறிப்பிடத்தக்க சாதனை. இதற்கு ‘பாகுபலி’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தற்சார்பு இந்தியா நடவடிக்கையில் சிறப்பான செயல்பாடு. இந்த மூங்கில் தடுப்புகள் பல அரசு மையங்களிலும், தேசிய வாகன பரிசோதனை சாலை களிலும் பல சோதனைகளுக்கு … Read more

மாவோயிஸ்ட்டுகளுக்கு நிதியுதவி வழங்கியவரின் 152 வங்கி கணக்கு முடக்கம்

புதுடெல்லி: மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு நிதியுதவி வழங்கியவரின் 152 வங்கிக் கணக்குகள் மற்றும் பரஸ்பர நிதி கணக்கை என்ஐஏ முடக்கி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம், லடேகர் நகரில் காவல் துறை வாகனம் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 4 காவலர்கள் உயிரிழந்தனர். அவர்களுடைய ஆயுதங்களையும் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் சந்தோஷ் கன்ஸ்ட்ரக்சன் … Read more

உணவுப் பஞ்சத்தில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய சரக்குக் கப்பலில் கோதுமை மூட்டைகளை அனுப்பியது ரஷ்யா..!

பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் உணவுப் பஞ்சம் மற்றும் தட்டுப்பாடு 40 சதவீதமாக மாறிவிட்ட நிலையில் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான குளோபல் மார்க்கட்டிங் சிஸ்டம் நிறுவனத்தின் எம்.வி.லீலா சென்னை என்ற சரக்குக் கப்பல் ரஷ்யா அனுப்பிய கோதுமை மூட்டைகளுடன் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை அடைந்துள்ளது. சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மூட்டைகளை பாகிஸ்தானுக்கு இந்தியாவின் உதவியுடன் ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.லிபரியன் கொடியோடு கோதுமை மூட்டைகளை ரஷ்யாவின் நோவோரோஸிஸ்க் துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் 1ம் … Read more

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது

டெல்லி: 2023-24 கல்வி ஆண்டில் முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட மையங்களில் காலை 9 மணி முதல் பகல் 12.30 வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது.

பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு – இந்தியாவின் கண்டுபிடிப்பை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகோள்

புதுடெல்லி: அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸ் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “பல்வேறு விவகாரங்கள் குறித்து பில் கேட்ஸ் உடன் ஆலோசனை நடத்தினேன். அவரது பணிவு, உலகத்தின் மீதான தெளிவான பார்வை பிரமிக்க வைக்கிறது” என்று தெரிவித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து பில் கேட்ஸ் தனது இணைய பக்கத்தில் விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஒரு வாரமாக நான் இந்தியாவில் … Read more

உணவுத் தட்டுப்பாட்டால் தவிக்கும் நிலையிலும் கூட, இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் மூலம் தீவிரவாதத்துக்கு நிதியளிக்கும் பாகிஸ்தான்

கடுமையான நிதி நெருக்கடி மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் தவிக்கும் நிலையிலும் கூட, காஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுவதற்கு பாகிஸ்தான் நிதி ஒதுக்கி வருவதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்காக போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக  ஜம்முகாஷ்மீர் போலீசார்  சோதனை நடத்தினர். அப்போது, எல்லைக் கோடு அருகே உள்ள ஒரு வீட்டில் இருந்து ஏழு கிலோ ஹெராயின், இரண்டு கோடி ரூபாய் ரொக்கம், 15000 அமெரிக்க டாலர்கள், … Read more

தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளைக் கடந்தும் பலன் அளிக்கிறது கல்லணை: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை இன்னும் உறுதியுடன் நின்று மக்களுக்கு பலன் தந்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைகளிலும் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் குறித்து இணையவழி கருத்தரங்கு மூலம் மக்களுக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்து வருகிறார். அந்த வரிசையில் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தொடர்பாக நேற்றைய இணையவழி கருத்தரங்கில் அவர் பேசியதாவது: வளர்ச்சி மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, எந்தவொரு நாட்டின் நிலையான வளர்ச்சியிலும் … Read more

மகாராஷ்டிராவில் வங்கதேசத்தினர் 18 பேர் கைது

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையின் கன்சோலி பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரின் திருமண நாளை கொண்டாட அந்நாட்டை சேர்ந்த பலர் கடந்த புதன்கிழமை ஒன்று கூடினர். அங்கு போலீஸார் திடீர் சோதனை நடத்தியதில் வங்கதேசத்தை சேர்ந்த 10 பெண்கள் உள்ளிட்ட 18 பேர் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இன்றி ஓராண்டுக்கு மேலாக அப்பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 1946-ம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டம் மற்றும் 1950-ம் ஆண்டு பாஸ்போர்ட் விதிகளின் … Read more

திரிபுராவில் 8ம் தேதி புதிய அரசு பதவியேற்பு: பிரதமர் பங்கேற்பு

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. முதல்வர் மாணிக் சாஹா நேற்று முன்தினம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பாஜ தலைமையிலான புதிய அரசு வருகின்ற 8ம் தேதி பதவியேற்கின்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பதவியேற்பு விழா விவேகானந்தர் மைதானத்தில் நடைபெறும் என்றார். … Read more

திரிபுராவில் பாஜக அரசு வரும் 8-ஆம் தேதி பதவியேற்பு..!!

சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக 32 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஒரு இடத்தையும் வென்றுள்ளது. பிரதமரின் மாநில பயணம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் எஸ்.கே.சின்ஹா ஆலோசனை நடத்திவருகிறார். மார்ச் 8-ம் தேதி புதிய அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் திரிபுரா வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். முதல்வர் மாணிக் சாஹா தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நரேன் … Read more