பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் ஏசியா விமானம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் இருந்து கொல்கத்தா சென்ற ஏர்ஏசியா விமானம் பறவை மோதியதால் லக்னோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. “உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு  ஏர்ஏசியாவுக்கு சொந்தமான விமானம் 180 பயணிகளுடன் கொல்கத்தா புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன்மீது ஒரு பறவை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விமானம் அவசர, அவசரமாக மீண்டும் லக்னோ விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக … Read more

இந்த வயது பெண்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்

அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா முதல்வராக உள்ளார். அங்கு பெண்களுக்கு உரிய வயதிற்கு முன்பு திருமணம் செய்வதையும், கருத்தரிப்பதையும் தடுக்கும் விதமாக புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது ஆளும் பாஜக அரசு. அதன்படி, 14 வயதுக்கு குறைவான பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் எனவும், 14-18 வயது பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் பாயும் என … Read more

1,200 ஆண்டுகள் பழமையானது; உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: தமிழ்நாட்டின் உத்திரமேரூரில் உள்ள 1,200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தையே வியக்க வைக்கிறது. இந்த கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் கடந்த 2014 அக்டோபர் முதல் ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், 2023-ம் ஆண்டின் முதல் ‘மனதின் குரல்’ … Read more

வருமானத்தை விட 100 மடங்கு அதிக சொத்து குவித்த சிறை அதிகாரி : போலீஸ் சோதனையில் கட்டுக் கட்டாக பணம், நகை சிக்கியது

குவாலியர்:மத்திய பிரதேசத்தில் வருமானத்தைவிட 100 மடங்கு அதிக சொத்து குவித்த சிறை அதிகாரி வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.12.5 லட்சம் பணம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகள் சிக்கின. மபி மாநிலம் மொரேனா மாவட்ட சிறையில் உதவி சிறை அதிகாரி ஹரிஓம் பராசார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வைத்துள்ளதாக பல புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்சஒழிப்பு துறை போலீசார் ஹரிஓமுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்சஒழிப்பு துறை போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். … Read more

போர் விமானங்கள் நடுவானில் மோதல்கருப்பு பெட்டி மீட்பு

மொரேனா: மபியில் விபத்துக்கு உள்ளான போர் விமானங்களில் இருந்து கருப்பு பெட்டி, விமான தரவு கருவியின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளது. மபி மாநிலத்தில் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 விமான படை விமானங்கள் நொறுங்கி விழுந்தன. இதில், மிராஜ் விமான பைலட் அனுமந்தராவ் சாரதி பலியானார். சுகோய் விமானத்தின் 2 பைலட்களும் காயங்களுடன் தப்பினர். 2 விமானங்களும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என பாதுகாப்பு துறை நிபுணர்கள் தெரிவித்தனர்.ஆனால்,  விபத்துக்கான காரணம் பற்றி அதிகாரப்பூர்வ … Read more

எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சி விமான பயணி மீது வழக்குப்பதிவு

மும்ப:  மும்பை சென்ற விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 10ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தின் அவசரகால கதவை கர்நாடக பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேஜஸ்வியுடன் தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலையும் பயணித்தார். தேஜஸ்வி விமானத்தின் அவசர கால கதவை தவறுதலாக திறந்துவிட்டதாகவும், இதற்காக அவர் மன்னிப்புகேட்டதாகவும் ஒன்றிய சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா … Read more

மேகாலயா தேர்தலில் புது யுக்தி நட்சத்திர பேச்சாளர்கள், பேரணிகள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ்: வாக்காளர்களை வீடு, வீடாக சென்று சந்திக்க திட்டம்

ஷில்லாங்: மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திர பேச்சாளர், பெரிய பேரணிகள் எதுவும் இன்றி காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி- பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம் 27ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும்  மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.   நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் பெரிய பேரணி  எதுவும் இன்றி புதிய அணுகுமுறையில் கட்சி தேர்தலை சந்திக்கிறது. அதற்கு பதில், வாக்காளர்களை நேரடியாக வீடு,வீடாக … Read more

ஊபா சட்டத்தின் கீழ் ஹூரியத் ஆபிசுக்கு சீல் வைத்தது என்ஐஏ

ஸ்ரீநகர்: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (ஊபா) ஸ்ரீநகரில் உள்ள ஹூரியத் மாநாட்டு அமைப்பின் அலுவலகத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சீல் வைத்தது. காஷ்மீரில் 26 பிரிவினைவாத அமைப்புகள் இணைந்து கடந்த 1993ல் ஹூரியத் மாநாடு அமைப்பை உருவாக்கின. இதில் இடம் பெற்றுள்ள ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் நயீம் கான் கடந்த 2017ல் தீவிரவாதத்திற்கு நிதி உதவி வழங்கிய வழக்கில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம் இன்று அனைத்து கட்சி கூட்டம்: ஒன்றிய அரசு ஏற்பாடு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு, இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டமாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கி வரும் பிப்ரவரி 13ம் தேதி வரையிலும், 2ம் கட்ட பட்ஜெட் தொடர் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத் … Read more

2024 லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது: முதல் 2 நாளில் பூஜ்ஜிய, கேள்வி நேரத்திற்கு அனுமதி இல்லை

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா ேதர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. முதல் 2 நாளில் பூஜ்ஜிய மற்றும் கேள்வி நேரத்திற்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்கட்சிகள் குரல் எழுப்பியதால், … Read more