திரிபுரா தேர்தலில் 55 இடங்களில் போட்டியிடும் பாஜக.!

கம்யூனிஸ்ட்களின் கோட்டை என கருதப்பட்ட திரிபுராவில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வென்று பாஜக வெற்றிக் கொடி ஏற்றியது. சுமார் 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த பாஜக, வடகிழக்கில் பாஜகவிற்கு செல்வாக்கு கிடையாது என்ற பிம்பத்தை உடைத்து, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரந்து விரிந்த கட்சி என்ற அடையாளத்தை பெற்றது. தற்போது பாஜக வெற்றிகரமாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யப் போகிறது. பாஜக 2018ல் ஆட்சி பொறுப்பேற்றதும் பிப்லாப் குமார் தேப் அவர்கள் மாநில … Read more

குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்: ஒன்றிய அரசு அறிமுகம்

டெல்லி: பொது விநியோகத்திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து ஒன்றிய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணோட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை,  சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில்  கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக  மாற்றி, பொதுவிநியோகத்திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய … Read more

குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தின் பெயர் திடீர் மாற்றம்!

நூற்றாண்டு பழமையான குடியரசு தலைவர் மாளிகை முகல் கார்டன் என்று அழைக்கப்படும் தோட்டத்தின் பெயரை அம்ரித் உதியான் என மாற்றப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் அமைந்துள்ள முகல் தோட்டம் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லுட்யென்ஸால் அமைக்கப்பட்டது. இங்கு ரோஜா, டஹ்லியா உள்ளிட்ட பல வகையான மலர்களும் விதவிதமான மரங்களும் வைத்து பராமரிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரியில் குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டுமே பொதுமக்களுக்காக … Read more

குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயர் மாற்றம்..!!

நாடு சுதந்திரம் அடைந்ததன் 75 ஆவது ஆண்டு விழாவை அம்ரித் மகோத்சவ் என்று மத்திய அரசு கொண்டாடி வருகிறது. அம்ரித் மகோத்சவின் ஒரு அங்கமாக முகல் கார்டனின் பெயரை அம்ரித் உதயான் என்று மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆதிக்க அடையாளங்களை மாற்றும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அம்ரித் உதயன் தோட்டத்தை மக்களின் பார்வைக்காக குடியரசு தலைவர் திரௌபதி மர்மு நாளை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் டெல்லி … Read more

‘அம்ரித் உத்யன்’ என பெயர் சூட்டப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டம் மார்ச் 26 வரை திறப்பு

‘அம்ரித் உத்யன்’ என பெயர் சூட்டப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டம் மார்ச் 26 வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை அமிர்தப் பெருவிழா என கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்களுக்கு ‘அம்ரித் உத்யன்’ என்று பொதுவான பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இவை ‘முகல்’ (முகலாய) தோட்டங்கள் என்று அழைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டங்கள், பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் ‘உத்யன் உத்சவ் 2023’ நிகழ்ச்சியில் நாளை … Read more

ஆங்கிலேயர்களின் அட்டூழியங்கள் குறித்து ஆவணப்படம் எடுக்காதது ஏன்.?

‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான பிபிசியின் ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், இங்கிலாந்தில் 2001 முதல் 2006ம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா, பேசிய கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் , கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் நேரடி காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது. இதையடுத்து, இந்த … Read more

ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இன்று காலை அடுத்தடுத்து 3 விமானங்கள் விழுந்து நொறுங்கியது: ஒரு விமானி பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

போபால்: ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இன்று காலை அடுத்தடுத்து நடந்த 3 விமானங்கள் விழுந்த விபத்தில், ஒரு விமானி பலியானார். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து இன்று காலை பயிற்சிக்காக  சுகோய்-30 மற்றும் மிராஜ்-3000 ஆகிய இரண்டு போர் விமானங்கள் புறப்பட்டு சென்றன. இந்த விமானங்கள் மொரீனா அடுத்த பஹத்கர் பகுதியில் இன்று காலை, அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. வயல்வெளிகளில் விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து விபத்துக்குள்ளானதால், … Read more

வீடு புகுந்து பெண் கவுன்சிலர் கடத்தல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே துப்பாக்கி முனையில் பெண் கவுன்சிலரை கடத்திய கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்தனர். பல்லவாடா கிராமத்தில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகிய இருவரும் கடந்த 24ஆம் தேதி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். கடத்தல்காரர்களின் செல்போன் சிக்னலை வைத்து காரை பின் தொடந்த போலீசார் ஆந்திர எல்லையில் சித்தவேடு அருகே இருவரையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினரும், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி போலீஸாரும் … Read more

கூலி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் – பிரதமருக்கு கோரிக்கை விடுத்த தோட்டக்காரர்

புதுடெல்லி: என்னுடைய கூலியைப் பெற்றுத் தர ஏற்பாடு செய்யுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தோட்ட வேலை செய்யும் தொழிலாளி கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க சென்டிரல் விஸ்டா திட்டத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சிலருக்கு சிறப்பு அனுமதி டிக்கெட்கள் தரப்பட்டிருந்தன. அவ்வாறு சிறப்பு அனுமதியைப் பெற்றவர்களில் மத்தியபிரதேச மாநிலம் நிவாரி மாவட்டத்தைச் சேர்ந்த சுக் நந்தன் என்பவரும் ஒருவர். இதுகுறித்து சுக் … Read more

சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம்; யோகி ஆதித்யநாத் பேச்சு.!

இந்து மத கோட்பாடான சனாதன தர்மத்தை தமிழநாட்டின் முக்கிய அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் மற்றும் பெரியார் அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. மனு தர்மம், சனாதன தர்மம் உள்ளிட்ட கருத்துக்களை விசிகவின் தலைவர் தொல் திருமாவளவன் கடுமையாக எதிர்த்து வருகிறார். அதேபோல் பீகாரிலும் இந்த எதிர்ப்பு வாதம் மேலோங்கி வருகிறது. பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் கடந்த ஜனவரி 11ம் தேதி நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே ஆற்றிய உரையில், ‘‘ராமாயண … Read more