Freebies: இலவசங்களை வாரி வழங்கும் மத்திய அரசு! இலவச ரேஷன்! இலவசமாய் டிவி பார்க்கலாம்

நியூடெல்லி: பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இனிமேல் நீங்கள் இலவசமாக டிவி பார்க்கலாம். உங்கள் டிவி பார்க்கும் செலவை மோடி அரசு ஏற்கும். பட்ஜெட்டுக்கு முன், அரசு இந்த பெரிய முடிவை எடுத்துள்ளது. இலவசமாக ரேஷன் வழங்கும் மத்திய அரசின் முடிவைத் தொடர்ந்து, இலவசமாக தொலைகாட்சி பார்க்கும் வசதியை அளிக்கும் மத்திய அரசு இதற்கான செலவை ஏற்கிறது. இலவச உணவு தானியங்கள் வழங்குவதுடன், தற்போது டிஷ் டிவியையும் இலவசமாக … Read more

பெங்களூரு விமான நிலையத்தில் சோதனையின் போது பெண் பயணியின் சட்டையை கழற்ற சொன்ன பாதுகாப்பு வீரர்கள்: பாதிக்கப்பட்டவர் டிவிட்டரில் புகார்

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பெண் பயணி ஒருவரின் மேல் சட்டையை கழற்ற சொல்லி வலியுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. கிருஷானிகாத்வி என்ற விமான பயணி தனது டிவிட்டர் பதிவில், ‘நான் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, பயணிகளிடம் பரிசோதனை செய்ய நியமனம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற்  பாதுகாப்பு படை வீரர்கள், தான் அணிந்திருந்த சட்டையை ஸ்கேனிங் செய்வதற்காக கழுட்டும் படி வலியுறுத்தினர். இது எனக்கு வெட்கம், வேதனை … Read more

சொந்த தொகுதிக்கு செல்ல சந்திரபாபுவுக்கு ஆந்திர போலீஸார் அனுமதி மறுப்பு – குப்பத்தில் தொண்டர்கள் மீது தடியடி

குப்பம்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய நேற்று பிற்பகல் வந்தார். அவருக்கு கர்நாடகா – ஆந்திர மாநில எல்லையான ஜேபி கொத்தூரு என்னும் இடத்தில் ராட்சத கிரேன் உதவியால் மிகப்பெரிய மாலையை தொண்டர்கள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால், அங்கிருந்து சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதிக்கு காரில் செல்ல முயன்ற போது, பெத்தூரு எனும் இடத்தில் போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். ஆந்திர … Read more

இந்தியாவில் வேர் பரப்பும் ஒமிக்ரான் BF.7 – கட்டுப்படுத்துமா அரசு?

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை, அரசு தொடர்ந்து கண்காணித்து வர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்தியா வருவோரை விமான நிலையத்தில் கொரோனா சோதனைக்குட்படுத்தி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.  அந்த வகையில், சீனாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒமிக்ரான் BF.7 கொரோனா தொற்று வகை இந்தியாவிலும் சில பரவியிருந்த நிலையில், அதனை கண்டறியும் பொருட்டு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுபவர்களின் சோதனை மாதிரிகளை, மரபணு … Read more

அமைச்சர் ஜெய்சங்கருடன் சத்ய நாதெள்ளா சந்திப்பு

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் சத்ய நாதெள்ளா வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்து பேசினார். டிஜிட்டல் தளத்தில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

ரூ.19,744 கோடி மதிப்பிலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு ஒப்புதல் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தகவல்

புதுடெல்லி: சுத்தமான எரிசக்தி உற்பத்தி செய்யும் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் நோக்கத்தில்,ரூ.19,744 கோடி மதிப்பிலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று கூறியதாவது: தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆரம்ப கட்டமாக ரூ.19,744 கோடி மதிப்பில் இத்திட்டம் … Read more

கவுதம் தபாருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

புதுடெல்லி: சிஜி பவர் அண்ட் இன்டஸ்ரியல் சொல்யூசன்ஸ் லிமிடெட்  நிறுவனத்தின் முன்னாள் ப்ரமோட்டார் கவுதம் தபார் வங்கியில் ரூ.2435கோடி மோசடி செய்தததாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதர வங்கிகளில் பெற்றிருந்த கடனை திருப்பி செலுத்தாமல் அதே பத்திரங்களுக்கு எதிராக 13வங்கிகளின் கூட்டமைப்பில் இருந்து கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிஜி நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் ப்ரமோட்டார் கவுதம் தபாருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை … Read more

இப்படி ஒரு கேவலமான செயலை செய்த ஆசாமிக்கு 30 நாள் தடை விதித்த ஏர் இந்தியா!

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் இனி விமானத்தில் பயணிக்க தடை விதிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பயணி, “நான் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தேன். ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் தூங்க ஏதுவாக விளக்கு அணைக்கப்பட்ட வேளையில் ஒரு போதை ஆசாமி என் இருக்கைக்கு … Read more

ம.பி.யில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவரின் சட்டவிரோத ஓட்டல் இடித்து தரைமட்டம்

போபால்: மத்தியபிரதேச மாநிலம் சாகர் நகரில், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்ரி சந்த் குப்தாவின் சட்டவிரோத ஓட்டல் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 22-ம் தேதி ஜகதீஷ் யாதவ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மிஷ்ரி சந்த் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவான மிஷ்ரி சந்த் குப்தா உள்ளிட்ட 3 பேரை … Read more

அனில் பராப்பின் ரூ.10கோடி சொத்து முடக்கம்

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனில் பராப்(58) 3 முறை சிவசேனா சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். மாநிலத்தில் போக்குவரத்து மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தவர். இந்நிலையில் அனில் பராப், ரத்னகிரி மாவட்டத்தின் டபோலியில் ரிசார்ட் கட்டுவதில் கடலோர ஒழுங்கு முறை மண்டல விதிகளை மீறி, முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக இவர் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் அனில் … Read more