சர்ச்சை கவர்னர் வெளியேற விரும்பியதால் மகாராஷ்டிரா புதிய ஆளுநராக அமரீந்தர் சிங் நியமனம்?.. காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவியவருக்கு பரிசு

புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில ஆளுநரான பகத்சிங் கோஷியாரி, சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கிவருகிறார். குறிப்பாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததால், மாநில பாஜக தலைவர்களால் ஆளுநர் கோஷியாரிக்கு … Read more

வெளி சந்தையில் விற்க நடவடிக்கை – கோதுமை கிலோவுக்கு ரூ.6 விலை குறையும்

புதுடெல்லி: கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில் வெளிச்சந்தையில் அவற்றை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய உணவுக் கழகத்திடம் மத்திய தொகுப்பின் கையிருப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமையை வெளிச் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன் எதிரொலியாக, வெளிச் சந்தையில் கோதுமையின் விலை கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ.6 வரை குறையும் என்று … Read more

மூன்று மாநில தேர்தல்: ஊடகங்களுக்கு கட்டுப்பாடு!

மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா சட்டப்பேரவை பொதுத் தேர்தல், ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆனையம் விதித்துள்ளது. மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநில சட்டப்பேரவைகளுக்கு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அட்டவணை கடந்த 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 27ஆம் தேதியும், திரிபுராவில் ஒரே கட்டமாக பிப்ரவரி 16ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இது தொடர்பாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 126 ன்படி அனைத்து ஊடகங்களும் கடைப்பிடிக்க … Read more

பீகாரில் சிலை கரைப்பு ஊர்வலத்தில் வாலிபர் சுட்டுக் கொலை

பாட்னா: பாட்னாவில் நடந்த சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் வாலிபர் ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த சரஸ்வதி தேவியின் சிலை கரைப்பு ஊர்வல கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீரஜ் (23) வயது இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்:பாட்னா போலீஸ் தலைமையகம் அருகே, சரஸ்வதி தேவியின் … Read more

”திகார் சிறையில் எனக்கு ப்ரோப்போஸ் செய்தார் சுகேஷ்” லீலைகளை அம்பலப்படுத்திய சீரியல் நடிகை!

“சிறையில் வைத்து என்னிடம் சுகேஷ் சந்திரசேகர் ப்ரோப்போஸ் செய்தார்” என இந்தி சீரியல் நடிகை சாஹத் கண்ணா கூறியது தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரம் உட்பட பல மோசடி மற்றும் முறைகேட்டு வழக்குகளில் பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருக்கும் போது சுகேஷ் பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருவது டெல்லி காவல்துறைக்கு பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது. இதுமட்டுமல்லாது சுகேஷின் செயலால் டெல்லியில் உள்ள அமைச்சர்களே … Read more

அரசு சார்பில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

டெல்லி அரசு சார்பில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மெட்ரோ நிலையங்களோ, பேருந்து நிறுத்தங்களோ இல்லாத துவாரகாவில் இ-ஸ்கூட்டர் திட்டம் முதலில் தொடங்கப்படும். அதன் பின்னர், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்கூட்டர்கள் தாமாக இயங்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர் வரை செல்லும். நாங்கள் பொது போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தி, … Read more

மோர்பி தொங்கு பாலம் விபத்து | 1,200 பக்க குற்றப்பத்திரிகை – ஒரேவா குழும அதிகாரி பெயர் சேர்ப்பு

காந்திநகர்: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் பிரபலமான தொங்கு பாலம் இருந்தது. இதனை கண்டுகளிக்க கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஏராளமானோர் பாலத்தில் திரண்டனர். இதையடுத்து, அந்த பாலம் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்தது. இதில், 135 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனிடையே இந்த பாலத்தை பழுதுபார்க்கும் பணிக்கான ஒப்பந்தத்தை 2022 மார்ச் மாதத்தில் ஒரேவா குழுமம் மோர்பி நகராட்சியிடமிருந்து பெற்றது. பல மாதங்களாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு … Read more

அழிவுப்பாதையில் ஜனநாயகம்; முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கண்ணீர்.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. … Read more

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுடன் நடிகர் சரத்குமார் திடீர் சந்திப்பு

திருமலை: தெலங்கானா மாநில முதல்வராக இருப்பவர் சந்திரசேகரராவ். இவர் தனது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்லும் விதமாக, கட்சியின் பெயரை ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ என மாற்றியுள்ளார். கடந்த வாரம் கம்மம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் உள்பட தேசிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ … Read more

பெயர் மாற்றம்: குடியரசுத் தலைவர் மாளிகையின் ‘முகலாய தோட்டம்’ இனி ‘அம்ரித் உத்யன்’

புதுடெல்லி: குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் உள்ள ‘முகல்’ கார்டன் எனப்படும் முகலாயத் தோட்டத்திற்கு ‘அம்ரித் உத்யன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் அமிர்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து குடியரசுத் தலைவரின் இணை செய்தித் தொடர்பாளர் நவிகா குப்தா கூறியது: “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் அமிர்தகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொகலாயர் தோட்டம் … Read more