மத்திய பிரதேச மாநிலம் மொரினாவில் போர் விமானங்கள் விபத்து.. 1 விமானி உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் மொரினா அருகே சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 என்ற இரண்டு போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்ததில் விமானி ஒருவர் உயிரிழந்தார். குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது இன்று அதிகாலை 5.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. சுகோய்-30 போர் விமானத்தில் இரண்டு விமானிகளும், மிராஜ் 2000 போர் விமானத்தில் ஒரு விமானியும் இருந்த நிலையில், இரண்டு விமானிகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். விமானங்கள் ஒன்றுடன் ஒன்று … Read more

31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு?.. கூட்டத் தொடரில் குரல் எழுப்ப காங். முடிவு

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து பட்ஜெட் கூட்டத்தில் குரல் எழுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி இந்தியா – சீன எல்லையான யாங்ஸ்டே செக்டரில் உள்ள  அருணாச்சலத்தின் தவாங் பள்ளத்தாக்கில், இருநாடுகளின் வீரர்கள் மோதிக்கொண்டனர். அதனால் இரு தரப்பு பாதுகாப்புப் படையினருக்கும் சிறு  காயங்கள் ஏற்பட்டன. இவ்விவகாரம் குறித்தும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சீனாவின்  ஆக்கிரமிப்பு குறித்தும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் … Read more

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலி..!!

ஜார்க்கண்ட மாநிலம் தன்பாத்தின் பேங்க் மோட் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள ஹஸ்ரா கிளினிக் மற்றும் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவர் தம்பதி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையின் முதல் தளத்தில் மருத்துவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். முதலில் ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட தீ, பின்னர் பரவியதாக கூறப்படுகிறது. விபத்தின் போது அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நகரின் பேங்க் மோட் காவல் நிலையப் … Read more

“ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை தரும் மந்திரத்துடன் செயல்படுகிறோம்” – பிரதமர் மோடி

ஜெய்பூர்: தனது அரசு சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களுக்கும் அதிகாரம் அளிக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் செல்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் நடைபெறும் பகவான் ஸ்ரீதேவநாராயணனின் அவதார விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். அங்கு மலசெரியில் கூட்டத்தினரிடம் பேசிய பிரதமர் மோடி, “கடந்த எட்டு, ஒன்பது ஆண்டுகளாக சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள புறக்கணிக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க நாடு முயற்சி எடுத்து வருகிறது. … Read more

பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு விழா – பாதுகாப்பு கோரி அமித் ஷாவுக்கு கார்கே கடிதம்!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பை வழங்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதி உள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. குடியரசு தினத்தையொட்டி நேற்று முன்தினம் யாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் ஜம்மு – காஷ்மீரில் யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். அப்போது அவருடன், ஜம்மு … Read more

55 பயணிகளை விட்டுவிட்டு சென்ற விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

புதுடெல்லி: பெங்களூருவில் இருந்து டெல்லி செல்லும் விமான பயணிகளை விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற, கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து கடந்த 9ம் தேதி டெல்லிக்கு புறப்பட்ட கோ ஃபர்ஸ்ட் விமானம், தனது 55 பயணிகளை விமான நிலையத்தின் டர்மாக்கில் அப்படியே விட்டு விட்டு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் கிளம்பியதும், அதன் பயணிகள் தங்கள் கோபத்தை சமூக ஊடகங்களில்  … Read more

பிபிசி ஆவணப்படத்தை மொபைலில் பார்த்த பெண் கவுன்சிலர்

பிபிசி ஊடகம் குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டது. இதில் சில சர்ச்சைக்குரிய கருத்துகள் உள்ளதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ள இந்த ஆவணப்படம், “இந்தியா: தி மோடி கொஸ்டின்” என்ற பெயரில் பிபிசி வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியான நிலையில், இரண்டாம் பாகம் சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த ஆவணப்படம் ஒரு சாராரின் கருத்தைப் பரப்புரை செய்யும் வகையில் இருப்பதாகவும் உண்மைக்கு புறம்பான தகவல்களை … Read more

வேலியே பயிரை மேய்ந்தது..!! மாணவிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியர்..!!

சமீபத்தில் மாணவி ஒருவர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். மாணவியை கவனித்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி சென்று அவரை காப்பாற்றி, வெளியே கொண்டு வந்து, குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த சிறுமியிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் பற்றி விசாரணை நடந்தது. அதில், பயிற்சி மையம் ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி கல்வி கற்க சென்றுள்ளார். இதில், விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து … Read more

பெண்களின் திருமண வயதை உயர்த்த தனிநபர் சட்டங்கள் – பழங்குடியினர் மரபு பற்றி ஆய்வு

புதுடெல்லி: கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில், பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த மசோதா குறித்து ஆராய நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கல்வி, பெண்கள் நலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு ஆகிய விவகாரங்கள் மீதான நிலைக் குழுவுக்கு பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தாக்குர் தலைவராக உள்ளார். … Read more

சென்னையில் ஜி20 கல்விப் பணிக்குழு கூட்டம்!

ஜி-20 கல்விப் பணிக்குழுவின் முதலாவது கூட்டம், பிப்ரவரி 1,2 ஆகிய தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக ஜனவரி 31 ஆம் தேதியன்று சென்னை ஐஐடி வளாகத்தில் “கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு” குறித்த கருத்தரங்கு நடைபெறும். இதைத்தொடர்ந்து உலகளாவிய தளத்தில் கல்வித்துறையில் இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு ஜி-20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள், யுனெஸ்கோ, யுனிசெஃப் உள்ளிட்ட அமைப்புகள் … Read more