“தமிழ் மக்கள் தன் மீது செலுத்தும் அன்பு, மற்ற மாநிலத்தில் கிடைத்ததில்லை” – ராகுல்காந்தி

தமிழ் மக்கள் தன் மீது செலுத்தும் அன்பு, வேறு எந்த மாநிலத்திலும் கிடைத்ததில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி ராகுல்காந்தி டெல்லியில் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணத்தில்,  மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது அவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற தனிப்பட்ட கலந்துரையாடலின்போது,  தமிழ் மக்கள் தன் மீது உணர்ச்சிகரமாக அன்பு செலுத்துவதற்கான காரணம் என்னவென்று ராகுல்காந்தி,  கமல்ஹாசனிடம் கேட்டுள்ளார். அதற்கு,  தமிழ் மக்கள் தங்களுக்கு பிடித்த … Read more

அகமதாபாத்தில் இருந்து ராய்ப்பூருக்கு விமானத்தில் வந்து காதலியை 51 முறை கத்தியால் குத்தி கொன்ற காதலன்

ராய்ப்பூர்: அகமதாபாத்தில் இருந்து ராய்ப்பூருக்கு விமானத்தில் வந்து காதலை ஏற்க மறுத்த தனது காதலியை 51 முறை கத்தியால் குத்தி கொன்ற காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியை சேர்ந்த நீல் குசும் பன்னா (20)  என்பவரும், அதேபகுதியை சேர்ந்த ஷாபாஸ் (25) என்பவரும் காதலித்து வந்தனர்.  இருவரும் அடிக்கடி  தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப்பில் பேசினர். ஆனால் இருவருக்கும் திடீரென  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஷாபாஸிடம் பேசுவதை நீல் குசும் … Read more

பணமதிப்பிழப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா? – ரவிசங்கர் பிரசாத் கேள்வி

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானது என உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மைத் தீர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரச்சாரம் … Read more

யார் இ்ந்த நீதிபதி நாகரத்னா? -டிமானிடேஷன் வழக்கின் தீர்ப்பில் பரபரப்பு கருத்து!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரா பெங்களூரு வெங்கடராமையா நாகரத்னா என்பதன் சுருக்கமே B.V.நாகரத்னா. சட்டப்படிப்பில் பட்டம் பெற்றுள்ள இவர், பெங்களூரு பார் கவுன்சிலில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 28 இல் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டார். அதன்பின் இளம் வழக்கறிஞராக தலைநகர் பெங்களூரில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் திறம்பட பணியாற்றி உள்ளார். அரசமைப்புச் சட்டம், வணிக மற்றும் காப்பீட்டு சட்டம், பொது நிர்வாக சட்டம், நிலம் மற்றும் வாடகை சட்டம், குடும்ப நலச் சட்டங்கள் என … Read more

டெல்லியில் இளம்பெண் கொலைக்கு நீதி கேட்டு வெடித்தது போராட்டம்: கைதானவர்களில் ஒருவர் பாஜக நிர்வாகி என ஆம் ஆத்மி புகார்

டெல்லி: டெல்லியில் இளம் பெண் காரில் இழுத்து சென்று கொல்லப்பட்டதை கண்டித்து பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். டெல்லி சுல்தான்புரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அஞ்சலி சிங் என்ற இளம்பெண் கார்யேற்றி கொல்லப்பட்டது மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் மனோஜ் மிட்டல் என்பவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்று ஆம் ஆத்மி கட்சி … Read more

டெல்லி உட்பட பல மாநிலங்களில் போராட்டம் நடத்திய ஜைன மதத்தினர்! காரணம் என்ன?

தலைநகர் டெல்லியில் ஜைன மதத்தினர் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தின் பரஸ்நாத் மலைகளில் மீது அமைந்துள்ளது, சமத் ஷிகர்ஜி. இது, ஜைன மக்களின் மிகப்பெரிய புனித ஸ்தலமாகும். இந்த பரஸ்நாத் மலைப் பிரதேசத்தை, சுற்றுலாத்தலமாக மாற்றும் வகையில், அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் எடுத்திருக்கும் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக ஜைன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அதேபோல், குஜராத் மாநிலம் பாலிதானாவில் உள்ள … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் பின்னடைவு!!

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக, ரிமோட் வாக்குப்பதிவு முறையை கொண்டுவர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான செயல்முறை விளக்க கூட்டம் டெல்லியில் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க, அதிமுகவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதிமுக பொதுக்குழு செல்லும் என ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு … Read more

2022-ல் பாகிஸ்தானின் 22 மீனவர்களை கைது செய்துள்ளோம்: எல்லை பாதுகாப்புப் படை

புதுடெல்லி: 2022-ல் பாகிஸ்தான் மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களின் 79 படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை பாதுகாத்து வரும் எல்லை பாதுகாப்புப் படை பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2022-ல் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 ஹெராயின் போதைப் பொருள் பாக்கெட்டுக்களும், ரூ. 2.49 கோடி மதிப்புள்ள 61 கஞ்சா பாக்கெட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குஜராத் எல்லை … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது? லேட்டஸ்ட் நிலவரம் இதுதான்!

உருமாறிய ஒமிக்ரான் வகை வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது என்ற பேச்சு தான் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக தினந்தோறும் ஒரு தலைப்பு செய்தியாவது வந்து விடுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை பார்க்க முடிகிறது. நான்காவது அலை உருவாகுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமாகிறது. கொரோனா களநிலவரம் அதாவது, நாடு முழுவதும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கடந்த 24 மணி … Read more

பொன் மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்திருக்கிறது. தனக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல் முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ண முராரி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கனவே இந்த மனு கடந்த நவம்பர் … Read more