டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக ரயில், விமான சேவை பாதிப்பு: பயணிகள் அவதி..!

டெல்லி: பனிமூட்டம் காரணமாக டெல்லியில் தொடர்ந்து விமான சேவை பாதிக்கப்படுவதால் பயணிகள் அவதிபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் காலை வேளையில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர். அதுமட்டுமில்லாமல், சிறிது தொலைவு மட்டுமே சாலைகள் தெரிவதால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி  வாகன ஓட்டிகள் செல்லும் நிலை உள்ளது. டெல்லி மற்றும் அதன் … Read more

விருதுநகருக்கு கூடுதல் தேங்காய் கொள்முதல் நிலையங்கள்: தென்காசி எம்.பி. தனுஷ்குமார் வலியுறுத்தல்

ஶ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்திற்கு கூடுதல் தேங்காய் கொள்முதல் நிலையம் தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பாரம்பரிய உள்ளூர் ரக பயிர்கள் கண்காட்சி மற்றும் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. தென்காசி எம்.பி தனுஷ் குமார் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன் வரவேற்றார். வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பில் தமிழகத்தில் பாரம்பரிய மற்றும் உள்ளூர் ரகத்தைச் சேர்ந்த பயிர் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் பாரம்பரிய ரகங்களின் … Read more

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் குறித்த வழக்கை விசாரிக்க முடியாது.!

டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், நீதிபதி டி ஒய் சந்திரசூட்டை இந்திய தலைமை நீதிபதியாக நியமித்ததற்கு எதிரான வ்ழக்கை தள்ளுபடி செய்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுவை விசாரணை செய்வதிலிருந்து விலகினர். இந்த மனுவில் அவர்கள் மீதும் சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், வழக்கை விசாரிக்க முடியாது என்று கூறியது. இந்த மனுவை ஜனவரி 16ம் தேதி மற்றொரு … Read more

50 நாட்களில் 3,200கி.மீ தூரம் நதியில் பயணம் செய்யும் வகையில் சொகுசு கப்பல் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: கங்கை நதியில் உலகின் மிகப் பெரிய கங்கா விலாஸ் கப்பல் சேவை பிரதமர் மோடி காணொளியில் தொடங்கி வைத்தார். 50 நாட்களில் 3,200கி.மீ தூரம் நதியில் பயணம் செய்யும் வகையில் கங்கா விலாஸ் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாரணாசியிலிருந்து திப்ரூகர் வரை நதிநீர் வழித்தடத்தில் கங்கா விலாஸ் கப்பல் சேவை இயக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.கங்கை நதியில் உலகின் மிக நீளமான நதி கப்பல் சேவையின் ஆரம்பம் ஒரு முக்கிய தருணம். இது இந்தியாவில் சுற்றுலாவின் புதிய … Read more

15 வயது முஸ்லீம் பெண் திருமணம் செய்துகொள்ளலாமா? உச்சநீதிமன்றம் விசாரணை.!

முஸ்லீம் பெண் பருவமடைந்த பிறகு விருப்பப்பட்ட நபரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று ஒப்புக்கொண்டது. 15 வயது பூர்த்தியடைந்த பருவமடைந்த முஸ்லீம் பெண் தனிப்பட்ட சட்டப்படி, சட்டப்பூர்வ மற்றும் செல்லுபடியாகும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை வேறு எந்த வழக்கிலும் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை … Read more

TTD: திருப்பதி திருமலையில் தங்கும் அறை வாடகை உயர்த்தப்பட்டதா? இதோ விளக்கம்

திருப்பதி: திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, லட்டு வழங்கும் கவுன்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில், TTD விரைவில் கூடுதல் கவுன்டர்களை அமைக்கும் என தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி தெரிவித்தார். திருமலையில் உள்ள அன்னமையா பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாதாந்திர டயல் யுவர் இஓ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய அவர், லட்டு வளாகத்தில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க 50 கவுன்டர்கள் தற்போது 24 … Read more

நாளை மகர விளக்கு பூஜை சபரிமலையில் பக்தர்கள் குவிகின்றனர்: 2 நாள் ஆன்லைன் முன்பதிவு ரத்து

திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை நாளை நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இன்றும், நாளையும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (31ம் தேதி) முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்கின. மண்டல காலத்தை விட மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தது. தினமும் சராசரியாக … Read more

கேரள பள்ளிகளில் இனி ‘சார்’, ‘மேடம்’ என அழைக்கத் தேவையில்லை… எல்லோரும் ‘டீச்சர்’ தான்!

திருவனந்தபுரம்: கேரளப் பள்ளிகளில் ஆசிரியர்களை சார் என்றும் ஆசிரியைகளை மேடம் என்றும் கூப்பிடும் வழக்கத்தை விடுத்து அனைவரையும் டீச்சர் என்று பாலின சார்பற்று அழைக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது. இந்த ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கல்வி பயிற்றுவிப்பவர்களை பாலின அடிப்படையில் சார், மேடம் என்று அழைப்பதைத் தடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதனை பரிசீலனை செய்து கேரளப் பள்ளிகளில் ஆசிரியர்களை சார் … Read more

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறை வாடகை உயர்வு? – தேவஸ்தானம் விளக்கம்!

‘திருப்பதியில் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளின் வாடகை உயர்த்தப்படவில்லை’ என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல் அலுவலர் தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் சாதாரண மற்றும் நடுத்தர பக்தர்களின் வசதிக்காக 50 – 100 ரூபாய் குறைந்த வாடகையில் அறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக திருப்பதி மற்றும் திருமலையில் 7,500 அறைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த அறைகள் 120 கோடி ரூபாயில் வெந்நீர் … Read more

கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி தத்தளித்த 2 மாணவர்கள் மீட்பு..!

புதுச்சேரியில், ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட டெல்லி ஐஐடி மாணவர்களை, தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க புதுச்சேரி சென்ற டெல்லி ஐஐடி மாணவ-மாணவிகளில் சிலர், கடற்கரையை சுற்றிப்பார்க்க சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது, இரண்டு மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டனர். இதனை கரையில் இருந்து பார்த்த மாணவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெரியகடை காவலர்கள் சக்திவேல், … Read more