கடந்த 2021-ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 1 லட்சம் பேர் மரணம்

புதுடெல்லி: கடந்த 2021-ம் ஆண்டில் நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துகளில் 1 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். இதில் பைக், மிதிவண்டிகளில் சென்றவர்கள், பாதசாரிகளும் அடங்குவர். 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021-ல் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 சதவீதம் உயர்ந்துள்ளதாக சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கார், லாரி மற்றும் மூன்றுசக்கர வாகனங்களில் சென்று உயிரிழந்தோரின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் 31 சதவீதம் குறைந்து 35,253-ஆக இருந்தது. பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததே சாலை … Read more

ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் ஆயுதம் ஏந்திய 2 தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதில் 4 பேர் உயிரிழப்பு..!

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கிராமத்தில் ஆயுதம் ஏந்திய 2 தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர் . 9 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கொலையாளிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஸ்ரீநகரில் துணைப் பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். குறி தவறியதால் ராணுவவீரர்கள் உயிர் தப்பினர் .ஆனால் இதில் ஒரு சிறுவன் காயம் அடைந்ததாக … Read more

காஷ்மீரில் பரபரப்பு: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பொதுமக்கள் பலி..!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே 3 வீடுகளுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சித்ரா பகுதியில் டிச.28ல் என்கவுன்ட்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட  4 தீவிரவாதிகளிடம் இருந்தும் 7 ஏகே ரக துப்பாக்கிகள், ஒரு எம்4 ரக துப்பாக்கி, 3 பிஸ்டல், ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் … Read more

ராஜஸ்தானில் ரயில் தடம் புரண்டது!…பதறிய பயணிகள்…

ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி விரைவு ரயில் தடம் புரண்டது. சூரியநகரி விரைவு பயணிகள் ரயில் பாந்த்ரா முனையத்திலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், அதிகாலை 3.27 மணியளவில் ஜோத்பூர் மண்டலத்தின் ராஜ்கியவாஸ்-போமத்ரா பிரிவுக்கு இடையே ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், விபத்து நிவாரண ரெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வடமேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வடமேற்கு ரெயில்வேயின் பொது … Read more

விபத்தில் சிக்கிய இளம்பெண்ணை நிர்வாணமாக 4 கி.மீ வரை தரதரவென காரில் இழுத்து சென்ற கொடூரம்..!!

டெல்லியில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 23 வயதான இளம்பெண் தனது ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த காருடன் அந்த ஸ்கூட்டி விபத்துக்குள்ளானது. காரில் வந்த 5 பேரும், காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். அப்போது விபத்தில் சிக்கிய அந்த பெண்ணின் ஆடை அவர்களது காரில் சிக்கியுள்ளது. கார் நிற்காமல் சென்றதால், அந்த பெண் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது, அந்த பெண்ணின் ஆடை கிழிந்தால், அவர் … Read more

கங்கை உட்பட 27 நதிகளில் 50 நாட்களில் 4,000 கி.மீ. பயணம்: உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பல் சேவை

புதுடெல்லி: கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 27 நதிகளில் 50 நாட்களில் 4,000 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ளும் உலகின் மிக நீண்ட தூர நதிவழி சொகுசு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் 7,500 கி.மீ. தொலைவு கடற்கரையும், 14,500 கி.மீ. தொலைவு நீர்வழித் தடங்களும் அமைந்துள்ளன. ஆனால் கடல்வழி, நதி வழிமூலம் நடக்கும் வர்த்தகம் 3.5 சதவீதமாக மட்டுமே உள்ளது. சீனாவில் 47 சதவீதம், ஐரோப்பிய நாடுகளில் … Read more

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் ஞானஸ்நான நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 பேருக்கு உடல்நல பாதிப்பு..!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்ச்சியில் உணவருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழ்வைப்பூர் அருகேயுள்ள ஒரு தேவாலயத்தின் ஞானஸ்நான நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டர். இந்நிகழ்ச்சிக்கு கேட்டரிங் நிறுவனமொன்று விநியோகம் செய்த உணவை சாப்பிட்டவர்களில் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

காரில் சிக்கி 4 கிமீக்கு இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் பலி

புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின. இந்நிலையில், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை 3.24 மணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில், கார் ஒன்றின் பின்பகுதியில் சடலம் இழுத்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. பின்னர் அதிகாலை 4.11 மணிக்கு வந்த மற்றொரு அழைப்பில், இளம்பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் சாலையில் கிடப்பதாக வந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

16 மாதங்களில் இல்லாத அளவில் டிசம்பரில் வேலையின்மை 8.30% ஆக உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது என்று இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு இந்தியாவில் டிசம்பர் மாதம் நிலவிய வேலையின்மை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த நவம்பரில் வேலையின்மை 8 சதவீதமாக இருந்தது. அது டிசம்பர் மாதம் 8.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஹரியாணாவில் வேலையின்மை 37.4 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை 8.96 சதவீதத்திலிருந்து 10.09 சதவீதமாக … Read more

வாரணாசி முதல் திப்ரூகார் வரை ஆற்றுவழி கப்பல் போக்குவரத்தை ஜன.13 ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அஸ்ஸாமில் உள்ள தீப்ரூகர் வரை ஆற்றுவழி கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி வரும் 13ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். உலகின் மிகப்பெரிய கப்பல் பயணமாக இருக்கும் இது சுமார் 3 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரத்தை கங்கை உள்பட 27 ஆறுகள் வழியாக கடந்து செல்லும். கங்கா ஆரத்தியை கப்பலில் இருந்து காணவும் 50 முக்கிய சுற்றுலாத் தலங்களை கடந்தும் இந்தக் கப்பல் பயணம் தொடரும். வங்காளதேசத்தில் ஆயிரத்து 100 … Read more