ராஜ்பவன் மற்றும் முகாம் அலுவலகத்தில் கவர்னர், முதல்வர் தனித்தனியாக தேசிய கொடியேற்றினர்

திருமலை: ராஜ்பவனில் கவர்னரும், முகாம் அலுவலகத்தில் முதல்வரும் தனித்தனியாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இதனால், தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் சந்திரசேகரராவுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகின்றன. இந்தநிலையில், நாட்டின் குடியரசு  தின விழா ஒவ்வொரு ஆண்டும் செகந்திராபாத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்படும். ஆனால் கொரோனா பரவலை காரணம் காட்டி ராஜ் பவனிலேயே  கவர்னர் தேசியக்கொடி ஏற்றிக்கொள்ள வேண்டும் … Read more

நாகேஸ்வரராவை தரக்குறைவாக பேசினார்:பாலகிருஷ்ணாவை ‘தாக்கிய’நாக சைதன்யா, அகில் பிரதர்ஸ்

ஐதராபாத்: தாத்தா நாகேஸ்வர ராவ்வை தரக்குறைவாக விமர்சித்த பாலகிருஷ்ணாவை, சரமாரியாக அறிக்கை மூலம் தாக்கியுள்ளனர் பேரன்கள் நாக சைதன்யா, அகில். தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் நாகேஸ்வர ராவ். இவரது மகன் நாகார்ஜுனா, பேரன்கள் நாக சைதன்யா, அகில். அனைவருமே நடிகர்களாக உள்ளனர். நாகேஸ்வர ராவ் குடும்பத்துக்கும் பாலகிருஷ்ணாவுக்கும் ஏழாம் பொருத்தம். இந்நிலையில் சமீபத்தில் வெளியான பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படம், பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதன் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய … Read more

உலகின் முதல் நாசி வழி கொரோனா மருந்து இந்தியாவில் அறிமுகம்: தனியாருக்கு ரூ.800; அரசுகளுக்கு ரூ.325

புதுடெல்லி: குடியரசு தினமான நேற்று, உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக் அறிமுகப்படுத்தப்பட்டது. நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, இன்கோவேக் எனப்படும் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கடந்தாண்டு நவம்பரில் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், இந்த மருந்தை குடியரசு தினத்தையொட்டிய ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சர் … Read more

அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு..!

சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறை திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கியுள்ளது. அடையாறு ஆறு சென்னையின் முக்கியமான 3 ஆறுகளின் ஒன்றாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே மணிமங்கலத்தில் உருவாகும் இந்த ஆறு சென்னையில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 42.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பயணம் செய்யும் இந்த ஆறு அடையாறு, பேசன்நகர் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு சுற்றுசுழல் கழிமுக அமைப்பை ஏற்படுத்துகிறது. அதிக மாசு இருந்த … Read more

சூரத் | கார் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர்

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ள கார் ஷோரூம் ஒன்றில் அதிபயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத் நகரில் உள்ள உத்னா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம் மிகத் தீவிரமாக இருப்பதை பார்க்க இது குறித்த வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகிறது. இந்த விபத்து குறித்து செய்தி முகமை ஒன்றில் … Read more

குடியரசு தின விழாவில் பங்கேற்காத கேசிஆர்; ஆளுநர் இடையே முற்றும் மோதல்.!

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒன்றிய பாஜக அரசை கடுமையாக சாடி வருபவர்களில் முன்னனியில் இருப்பவர் கேசிஆர். மேலும் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாம் கூட்டணியை உருவாக்க பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறார். அதேபோல் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. தெலங்கானா அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடைபெறும். ஆளுநரும் முதல்வரும் இதில் … Read more

மேகாலயா பேரவை தேர்தல்: 55 வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டது காங்கிரஸ்

ஷில்லாங்: மேகாலயா சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் 55 வேட்பாளர்களின் பெயரை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மேகாலயாவில் பிப்ரவரி 27ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதையடுத்து டெல்லி காங்கிரஸ் தலைமை, 55 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தேர்தல் குழு பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்ட அறிக்கையின்படி, மாநில காங்கிரஸ் தலைவரும், ஷில்லாங் நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை எம்பியுமான வின்சென்ட் எச்.பாலா சுதங்கா சைபுங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். சமீபத்தில் தேசியவாத … Read more

மத்திய பட்ஜெட்டில் இந்த 7 புதிய அறிவிப்புகள் இருக்கலாம்! சாமானியர்களின் எதிர்பார்ப்புகள்!

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, பிப்ரவரி 1ஆம் தேதி சமர்ப்பிக்க உள்ளார். மேலும் தற்போதைய பிரதமர் மோடி அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக, அடித்தட்டு மக்கள், தொழில்துறையினர், ஊதியம் பெறுவோர் எனப் பலரும் இந்த பட்ஜெட்டை எதிர்பார்த்து உள்ளனர். முந்தைய பட்ஜெட்களைப் போலவே, 2023-24ஆம் ஆண்டுக்குரிய மத்திய பட்ஜெட்டும் … Read more

டெல்லி முதல்வருடன் சந்திப்பு; சமாதானத்திற்கு அழைத்த துணைநிலை ஆளுநர்.!

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கும் இடையே தொடக்கம் முதலே முட்டல் மோதலாக உள்ளது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், எந்தவொரு திட்டத்திற்கும் ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த வகையில் ஆம் ஆத்மி அரசு அனுப்பும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா காலம் தாழ்த்தி வருவதாக அக்கட்சி … Read more

பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகள் பரிமாறிய இந்திய வீரர்கள்..!

குடியரசு தினத்தையொட்டி எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்க தேச வீரர்களுடன் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் இனிப்புகளை பரிமாறினர். இதேபோல் மேற்குவங்க மாநிலம் ஃபுல்பாரியில் உள்ள இந்தியா-வங்கதேசம் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் வங்கதேச வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். Source link