பயண வகுப்பு மாற்றப்பட்டால் விமான கட்டணம் திருப்பி அளிப்பு: பிப். 15 முதல் அமல்

டெல்லி: சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதியை திருப்பி அளிக்கும் விதிமுறை பிப். 15ம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது. விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை பிரிவான டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், ‘சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதியை திருப்பி அளிக்கப்படும். அதாவது சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்களின் டிக்கெட் கட்டணத்தில் வரிகள் உள்பட … Read more

டெல்லி மேயர் தேர்தல்; உச்சநீதிமன்றத்தை நாடிய ஆம் ஆத்மி.!

டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேட்சைகள் 3 பேர் என வெற்றி பெற்றனர். முதல்முறை ஆம் ஆத்மி தனிப் பெரும்பான்மை பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது. இதையடுத்து மேயர் யார் என்பதை தேர்வு செய்ய கடந்த ஜனவரி 6ஆம் தேதி மாநகராட்சி கூட்டம் கூடியது. முதலில் … Read more

Budget 2023: நடுத்தர வர்க்கத்தினருக்கு ஜாக்பாட், பட்ஜெட்டில் நல்ல செய்தி!!

மத்திய பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் நிதிநிலை அறிக்கை, அதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். 2024ல் மோடி அரசால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், இம்முறை பட்ஜெட் அறிவிப்புகள் மக்களுக்கு அனுகூலமான அறிவிப்புகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மக்களை மனதில் வைத்து அளிக்கப்பட்டுள்ள … Read more

திருமணத்தின் போது குட்டு அம்பலம்: கேரளாவில் பரபரப்பு; 5 வருடமாக சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கடை ஓனர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சேர்ந்தவர் முகம்மது நிசாம்(47). இவர் அப்பகுதியில் பெயிண்ட் கடை வைத்துள்ளார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவர் 16 வயது முதல் நிசாமின் கடையில் வேலை பார்த்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் நிசாம் பண ஆசை காட்டி அவரை பலமுறை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். நாளுக்கு நாள் இவரது … Read more

1972ல் 2 ரூபாய்.. 2023ல் 20 ரூபாய்.. மக்களுக்காக கட்டணத்தை உயர்த்தாத ”பத்மஸ்ரீ” டாக்டர்!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் எம்.சி.தவாருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கெளரவித்து வருகிறது. அந்த வகையில், நேற்றும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 77 வயதான மருத்துவர் டாக்டர் எம்.சி.தவாருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. 1946ஆம் ஆண்டு, ஜனவரி 16ஆம் தேதி, பாகிஸ்தானின் பஞ்சாபில் பிறந்த தவார், … Read more

“காரி துப்பினாலும் துடைத்துக் கொள்வேன்” : தமிழிசை ஆவேசம்!!

குடியரசு விழா நிகழ்ச்சிக்காக துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்று காலை புதுச்சேரிக்கு வந்தார். கொடி ஏற்றி வைத்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலங்கானாவில் சட்டமீறல், விதி மீறல் நடந்துள்ளது, கொரோனாவை காரணம் காட்டி குடியரசு தின விழாவை தெலங்கானா அரசு நடத்தவில்லை என்று கூறினார். ஆனால், 5 லட்சம் பேரை கொண்டு கூட்டம் நடத்தினார்கள். அப்போது கொரோனா பரவல் இல்லையா என கேள்வி எழுப்பினார். அரசியலமைப்பு சட்டப்படி குடியரசு தினம் கொண்டாடப்பட வேண்டும். ஆனால் … Read more

தடைசெய்யப்பட்ட பிபிசி ஆவணப்படம்; கேரளாவில் காங்கிரஸ் திரையிடல்.!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனமான பிபிசி கடந்த 17ம் தேதி ஆவணப்படத்தை வெளியிட்டது. பிபிசி தயாரித்து பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. பிரிட்டன் அரசின் ரகசிய விசாரணையில் கலவரத்துக்கு மோடியே நேரடி காரணம் என தெரியவந்ததாக ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், … Read more

வினோத வழக்கு! 45 ஆண்டுகளாக பூண்டு – வெங்காயத்தை சுவைக்காத கிராம மக்கள்!

வெங்காயம் மற்றும் பூண்டு உணவில் பயன்பாடுத்தாத வீடுகளை காண்பது மிக மிக அரிது. வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றின் விலை அதிகரித்தாலும், குறைந்தாலும், அவை செய்தித் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகின்றன. அவை பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம் – பூண்டு உபயோகிப்பதால் உணவின் சுவை அதிகரிக்கிறது. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இவை பருவகால நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. இவ்வளவு நன்மைகள் இருந்தும் இவற்றை தொடாமல் இருக்கும் … Read more

ஷாருக் கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ படம் முதல் நாளில் மட்டும் 55 கோடி ரூபாய் வசூல்..!

ஷாருக் கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம், முதல் நாளில் அதிகம் வசூலித்த இந்தி மொழி படம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக் கானின் நடிப்பில், வெளியான அத்திரைப்படம், முதல் நாளில் மட்டும் 55 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பதான்’, விடுமுறை அல்லாத புதன்கிழமையன்று வெளியானபோதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. Source link

அட்டாரி-வாகா எல்லையில் உற்சாகமாக நடந்த கொடி இறக்கும் நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு..!

வாகா: இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இருநாடுகளின் கொடிகளும் இறக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவின் 74வது ஆண்டு குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார். மாநிலங்களின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. முப்படைகள் மற்றும் கம்பீரமான பீரங்கிகள், டாங்கிகள், நவீன போர் விமானங்களின் அணிவகுப்புகளும் நடைபெற்றன. சுதந்திர தினம், குடியரசு தின நாட்களில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கொடியிறக்க … Read more