குஜராத்தில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு..!

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் உள்ள நவ்சாரியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் பலியான நிலையில், 15 பேர் பலத்த காயமடைந்தனர். பேருந்து டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து ஓடி கார் மீது மோதியதே விபத்துக்கு காரணமென கூறப்படுகிறது. விபத்தில் … Read more

6 நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள் கொரோனா பாதிப்பின்மை சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா  புதிய கட்டுப்பாடுகள் நாளை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. பயணத்தைத் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை ஏர் … Read more

விருமன் பட பாணியில் பைக்கில் சென்ற காதல் ஜோடி!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே விருமன் பட பாணியில் காதல் ஜோடி பைக்கில் பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உக்குநகர் பகுதியில் விருமன் பட பாணியில் ஒரு இளைஞர் தன்னுடைய காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து கட்டி அணைத்தபடி சாலையில் சென்றுள்ளார். இதனை அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் காதல் ஜோடி மீது … Read more

பஞ்சாபில் ஜாதி குறியீடு கொண்ட 56 பள்ளிகளுக்கு பெயர் மாற்றம்

சண்டிகர்: பஞ்சாபில் ஜாதி குறியீடு கொண்ட 56 அரசுப் பள்ளிகளுக்கு அம்மாநில அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. பஞ்சாபில் ஜாதி அடிப்படையில் பெயர் கொண்ட பள்ளிகளின் பெயரை மாற்றுமாறு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் தங்களின் அதிகாரவரம்புக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய பெயர்கள் உள்ள பள்ளிகள் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் … Read more

ஜனவரி 1, 2023 முதல் பல விதிகளில் மாற்றம்: சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்

புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரும் ஆண்டில் பல முக்கிய விஷயங்களின் மாற்றம் இருக்கும். இதில் சாமானியர்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய பல விஷயங்களும் உள்ளன. பல மாற்றங்கள் நேரடியாகவும், சில மறைமுகமாகவும் சாமானியர்களை பாதிக்கக்கூடும். புதிய ஆண்டின் மாற்றங்களில் ஜிஎஸ்டி விகிதம், வங்கி லாக்கர் விதிகள், சிஎன்ஜி-பிஎன்ஜி விலைகள், கிரெடிட் கார்டு விதிகள் ஆகியவை அடங்கும். அரசு வெளியிடும் மாற்றங்கள் அனைவருக்கும் கட்டாயமாக இருக்கும். என்பிஎஃஸ் பார்ஷியல் வித்ட்ராயல் உலக மக்களை பாடாய் … Read more

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டம் வெஸ்மா அருகே சொகுசு பேருந்து மீது சொகுசு கார் மோதி விபத்து: 9 பேர் உயிரிழப்பு

குஜராத்: குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டம் வெஸ்மா அருகே சொகுசு பேருந்து மீது சொகுசு கார் மோதி மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து மீது கார் மோதி விபத்தில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குஜராத்தில் சாலை விபத்து: 9 பேர் பலி; 28 பேர் காயம்

அகமதாபாத்: குஜராத்தில் சாலை விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். குஜராத் மாநில நவ்சாரி மாவட்டத்தில் நேற்றிரவு இந்த விபத்து நடந்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்ஸவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பேருந்தில் சிலர் திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்து தேசிய நெடுஞ்சாலை 48ல் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த டொயோட்டா ஃபார்ச்சுனர் காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணித்த 9 பேரும் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த … Read more

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு நாளை முதல் அமல்

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிதியாண்டின் சிறுசேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்புப் பத்திரங்கள், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு, இனி 8 சதவீத வட்டியும், தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்கு 7 சதவீத வட்டியும் கிடைக்கும். இதேபோல், அஞ்சலகங்களில் 1 வருடம் முதல் … Read more

தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2.54 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம்: உண்டியல் காணிக்கை ரூ.1,446.05 கோடி

திருமலை: தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்த பக்தர்கள் இந்த ஆண்டு சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தியதால் வருமானம் அதிகரித்துள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோது ஜனவரியில் ரூ.79.39 கோடியும், பிப்ரவரியில் ரூ.79.33 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் மார்ச் முதல் வாரத்தில் இருந்து பக்தர்களின் எண்ணிக்கையை தேவஸ்தான அதிகாரிகள் அதிகரித்ததுடன் … Read more

மக்கள் அத்துமீறலால் மூணாறில் மீண்டும் `படையப்பா’ அட்டகாசங்கள்! சீறும் வனத்துறை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ‘படையப்பா’ யானையின் அட்டகாசம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறுவாசிகளுக்கு  ‘படையப்பா’  என்றழைக்கப்படும்  ஒற்றை காட்டு யானை மிகவும் பரிச்சயம். அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி பொது இடங்களில் உலா வரும் ‘படையப்பா’ யானை, பொதுமக்களை அச்சுறுத்தாமல் சாலையோர கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் திண்பண்டங்களை தின்றுவிட்டு செல்வது அங்கிருப்போருக்கு தெரிந்த சங்கதிதான். இப்படி அமைதியாக காணும் ‘படையப்பா’ யானை சமீபகாலமாக ஆவேசமாக உலா வரத் துவங்கியுள்ளது. அந்தவகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘படையப்பா’ யானை, … Read more