பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு

நெல்லூர்: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (28). இவர் கந்துக்கூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு கடையை மூடி விட்டு வீடு திரும்புகையில், பஸ் நிலையம் பின்புறம் பாம்பாட்டி ஒருவரை பார்த்த மணிகண்டா, அவரிடம் இருந்த பாம்பை தனது கழுத்தின் மீது போடும்படி கெஞ்சினார். ஆனால், பாம்பாட்டி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் மணிகண்டா தொடர்ந்து பணம் தருவதாக கூறி அவரை வற்புறுத்தினார். ‘ஒரே ஒரு … Read more

குடியரசு தின விழாவில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் நாட்டு நாட்டு பாடல் குழுவினருக்கு விருது வழங்கிய ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், நாட்டு நாட்டு பாடல் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ்க்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் விருது வழங்கி பாராட்டினார். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருதை வென்றதுடன், மார்ச் மாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது பட்டியலுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை அடுத்து விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. Source link

1,000க்கும் மேற்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியீடு!

டெல்லி: 1,000க்கும் மேற்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியில் 1091, தமிழில் 52, மலையாளத்தில் 29, தெலுங்கில் 28, கன்னடத்தில் 17, ஒடியாவில் 21, மராத்தியில் 14, அசாமியில் 4, உருதுவில் 3, நேபாளியில் 3, பஞ்சாபியில் 4 என தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு டூடுல்..!!

நாட்டின் 74வது குடியரசு தினம் இந்தியா முழுவது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் அனைத்து மாநிலங்களில் தலைநகர்களிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். இந்நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுல் அமைப்பை மாற்றி உள்ளது. அதில் குடியரசு தின அணிவகுப்பின் பல்வேறு கூறுகள் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகை, இந்தியா கேட், … Read more

கொலை முயற்சி வழக்கு – லட்சத்தீவு முன்னாள் எம்.பி.க்கான சிறை தண்டனை நிறுத்திவைப்பு

கொச்சி: தேசியவாத காங்கிரஸ் லட்சத்தீவு எம்.பி. முகம்மது பைசல். கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது இவருக்கும் லட்சத்தீவு முன்னாள் எம்.பி.யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மறைந்த பி.எம்.சயீத்தின் மருமகன் முகமது சலே என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது முகமது சலே கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். தாக்குதல் தொடர்பாக கவரெட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில் முகம்மது பைசல் உள்ளிட்ட 37 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவ்வழக்கில் முகம்மது பைசல், அவரது … Read more

பெண்ணை பார்த்து விசில் அடிப்பது பாலியல் தொல்லையா… உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு!

மொட்டை மாடியில் இருந்து விசில் அடித்து ஒலிகளை எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை முன்ஜாமீன் வழங்கியது. அப்போது, ​​ஒருவர் தனது வீட்டில் இருந்து விசில் அடித்ததாலேயே, பெண்ணுக்கு எதிரான பாலியல் நோக்கதுடன் தான் செய்தார் என உறுதியாக முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன்னை நோக்கி விசில் அடித்து அண்டை வீட்டாரை சிறைக்கு அனுப்ப கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி விபா கன்கன்வாடி மற்றும் நீதிபதி … Read more

டெல்லியில் நடைபெற்று வரும் 74வது குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு

டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் 74வது குடியரசு தின விழாவில் பெண்களை மையப்படுத்திய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுத்தது. தமிழ்நாடு, கேரளா, அசாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 23 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன.

ஒரே அறிக்கையால் ஆட்டம் கண்ட 'அதானி'; உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவு!

புகழ்பெற்ற அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், இந்தியாவின் அதானி குழுமம் பங்குச் சந்தையில் ஏராளமான மோசடி வேலைகளை செய்துள்ளதாகவும், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை நடத்தி வரி ஏய்ப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அதானி நிறுவனத்தின் கடன் அளவுகள் அதிகரித்துள்ளது குறித்தும் கவலை தெரிவித்தது. மின்சார டிரக் தயாரிப்பாளரான நிகோலா கார்ப், ட்விட்டர் நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளை குறைத்ததற்காக, ஹிண்டன்பர்க் நிறுவனம் பலராலும் அறியப்படுகிறது. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள், அடிப்படையில் … Read more

சிறுமி என்று கூட பாராமல் கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை..!!

2021-ம் ஆண்டு ஆந்திராவின் கிட்டலூர் மண்டல் மாவட்டத்தின் அம்பாவரம் கிராமத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம், பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் 7 வயதான அந்த சிறுமி, கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்த சிறுமியின் நெருங்கிய உறவினரான டி.சித்தையா (வயது 30) என்ற வாலிபர் சிறுமியை கற்பழித்து கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மனைவியை பிரிந்து வாழ்ந்த அவர், சம்பவத்தன்று பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி … Read more

74 வது குடியரசு தினம் | கடமை பாதையில் முதல் முறையாக நடந்த அணிவகுப்பு மரியாதை

புதுடெல்லி: ஆங்கிலேயர் காலத்தில் ‘கிங்ஸ் வே’ என்று பெயர்சூட்டப்பட்டு, ராஜபாதை என அறியப்பட்டு வந்த 3 கிமீ பாதை அண்மையில் புனரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் பெயர் ‘கடமை பாதை’ என மாற்றப்பட்டது. காலனியாதிக்க சுவடுகளின் அடையாளத்தை மாற்றும் வகையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெயர்மாற்றம் செய்யப்பட்ட ‘கடமை பாதையில் முதல் முறையாக குடியரசு தினவிழா பேரணி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முதல் முறையாக எகிப்து அதிபர் அப்தெல் படாக் அல் சிசி … Read more