அரசியல் சாசனமே முதன்மையானது என ப.சிதம்பரம் கருத்து

டெல்லி: நாடாளுமன்றமே முதன்மையானது என துணைகுடியரசு தலைவர் கூறியது தவறு, அரசியல் சாசனமே முதன்மையானது என ப.சிதம்பரம் தெரிவித்தார். பெரும்பான்மை கொண்ட அரசு நாடாளூமன்ற முறையை மாற்றி ஜனாதிபதி முறையை கொண்டு வந்தால் அது செல்லுமா,  மாநிலங்கள் இனி சட்டம் இயற்ற முடியாது என நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினால் அது செல்லுமா என ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஹாரில் வன்முறையில் முடிந்த விவசாயிகள் போராட்டம்

பாட்னா: பிஹாரின் பக்சார் மாவட்டம், சவுசா என்ற இடத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ‘சட்லஜ் ஜல் வித்யூத் நிகம்’ என்ற பெயரில் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. இத்திட்டத்துக்கு பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நிலம் வழங்கியுள்ளனர். அவர்கள் தங்களிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு புதிய விலை நிர்ணயிக்க கோரி நீர்மின் நிலையம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டத்துக்கு தலைமை வகித்த நரேந்திர … Read more

டெல்லி விமானநிலையத்தில் மதுபோதையில் நுழைவு வாயிலில் சிறுநீர் கழித்தவர் கைது

டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் மதுபோதையில் நுழைவு வாயிலில் சிறுநீர் கழித்தவர் கைது செய்யப்பட்டார். சவுதி அரேபியா செல்லவேண்டிய பயணி மது போதையில் விமானநிலையத்தில் சிறுநீர் கழித்துள்ளார். மதுபோதையில் சிறுநீர் கழித்துவிட்டு சக பயணிகளிடம் தகறாரில் ஈடுபட்ட பயணியை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.

கர்நாடகாவில் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் 2 பேர் கைது – என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை சேர்ந்த சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதாக கடந்த நவம்பர் 4-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்தது. இதுகுறித்து பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஷிமோகா, ஹாவேரி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஷிமோகாவை சேர்ந்த சையத் யாசின், மாஸ் முனீர் உள்ளிட்ட 4 பேர் சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ் … Read more

அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கோவிட் சோதனை தீவிரம்.. சோதனையில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

கோவிட் நான்காவது அலை பரவாமல் இருக்க அனைத்து விமானநிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 700 விமானங்களில் 15 லட்சம் பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 200 பேருக்கு தொற்று இருந்ததாகவும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மரபணு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சிலருக்கு பி.எப். 7 உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்த மாண்டவியா, இந்தியாவின் கோவிட் தடுப்பூசி இத்தகைய வைரசையும் … Read more

இந்திய ஒற்றுமை நடைப்பயணம்: 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு

டெல்லி: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு நாள் நிகழ்வில் கலந்து கொள்ள 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. திமுக, திரிணாமுல், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நாய் குரைத்ததால் கோஷ்டி மோதல் – பெண் பலி!….

உத்தரபிரதேசத்தில் நாய் குரைத்ததால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். உத்தரபிரதேச மாநிலத்தின் பைரியா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நாய் குரைத்ததால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 6 பேர் காயம் அடைந்தனர்.   மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் லால் முனி என்ற 50 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் … Read more

இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் – சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் உறுதி

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அவர் பேசியதாவது: வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்ட நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். உலக பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமாக ஜொலிக்கிறது … Read more

விஐபிக்களுக்கான ஹஜ் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு – சிறுபான்மைத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவிப்பு!

உயர்மட்ட அரசியலமைப்பு பதவிகள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கான ஹஜ் இட ஒதுக்கீடுட்டை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சிறுபான்மைத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் விஐபி கலாச்சாரம் நடைமுறைக்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள ஹஜ் கமிட்டிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  Source link

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நிறைவு: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; பொதுக்குழு தீர்மானமின்றி ஓ.பி.எஸ்சை நீக்கியது எப்படி?; எடப்பாடி தரப்புக்கு நீதிபதி சரமாரி கேள்வி

புதுடெல்லி: நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானமே இல்லாதபோது அவரை எப்படி நீக்கினீர்கள் என எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்புக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வியெழுப்பியுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று ஐந்தாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக கட்சி … Read more