தாயாரின் உடலை தோளில் சுமந்து தூக்கிச் சென்ற பிரதமர் மோடி.. சோகத்துடன் தகன மேடையை சுற்றிவந்து கண்ணீர் அஞ்சலி..

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் காலமானார்.  தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி, மிக உருக்கத்துடன் இறுதிச்சடங்குகளை செய்து தகன மேடையில் எரியூட்டினார்.  100 வயதான ஹீராபென் மோடி, வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமையன்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்று இன்று அதிகாலை காலமானார். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். … Read more

அகிலேஷ் – அழைப்பில்லை; மாயாவதி – சஸ்பென்ஸ்: ராகுல் நடைபயணத்திற்கு ஸ்மிருதிக்கு அழைப்பு: சூடுபிடிக்கும் அமேதி தொகுதி அரசியல்

லக்னோ: ராகுலின் நடைபயணத்தில் பாஜக அமைச்சர்  ஸ்மிருதி இரானிக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், உத்தரபிரதேச அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைபயணம் வரும் 3ம் தேதி மீண்டும் டெல்லியில் இருந்து தொடங்குகிறது. அன்றைய தினம் காசியாபாத் வழியாக உத்தரபிரதேசத்திற்குள் நடைபயணம் நுழைகிறது. இந்த நடைபயணத்தில் கலந்து கொள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ்  கட்சித் தலைவர் மாயாவதி, ராஷ்ட்ரிய லோக் தளத் … Read more

ரிஷப் பந்த் விரைந்து நலம் பெற பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கிய தகவலை அறிந்து வேதனை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதோடு அவர் விரைந்து குணம் பெற வேண்டும் என பிரதமர் மோடி பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே காலை 5.30 மணி அளவில் நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த … Read more

ஜாதிப்பெயர் கொண்ட பள்ளிகளின் பெயர் மாற்றம்; பஞ்சாப் அரசு அதிரடி.!

பள்ளிக் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் ஆணை பிறப்பித்த சில வாரங்களுக்குப் பிறகு, பஞ்சாப் அரசாங்கத்தால் ஜாதிக் குறிகளைக் கொண்ட 56 அரசுப் பள்ளிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உட்பட 56 அரசுப் பள்ளிகளின் பெயர்களை பள்ளிக் கல்வித்துறை மாற்றியுள்ளது. அவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு, பள்ளி அமைந்துள்ள கிராமம் அல்லது அறியப்பட்ட ஆளுமை, தியாகி அல்லது உள்ளூர் ஹீரோவின் பெயர் மாற்றப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் … Read more

ஆபத்தான நிலையில் கட்டிப்பிடித்துக்கொண்டு ஜாலிய பைக்கில் பயணித்த ஜோடி கைது

Couple Viral Video: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளம் பெண் ஒருவர் ஓடும் பைக்கில் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்துக்கொண்டு பைக் ஓட்டும் தனது காதலனை கட்டிப்பிடித்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து இந்த விவகாரம் விசாகப்பட்டினம் போலீசாரின் கவனத்திற்கு சென்றது அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இளம் பெண்ணின் பெயர் கே ஷைலஜா (19) மற்றும் அவரின் காதலன் பெயர் அஜய்குமார் (22) என அடையாளம் காணப்படுள்ளனர். இருவர் மீதும் போலீசார் … Read more

விடுதியில் வழங்கிய உணவில் நச்சுத்தன்மை 125 மெடிக்கல் மாணவர்களுக்கு வயிற்றுவலி: மருத்துவமனையில் அட்மிட்

நாசிக்: நாசிக்கில் விடுதியில் வழங்கிய உணவில் நச்சுத்தன்மை இருந்ததால் 125 மருத்துவ மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் இகத்புரி அடுத்த எஸ்.எம்.பி.டி  இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள், அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்ட உணவில் விஷத் தன்மை இருந்ததால், மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. அதனால், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர்; அவர்களில் 55 பேர் தற்போது மருத்துவமனையில் … Read more

ஜெய் ஸ்ரீராம் கோஷத்தால் டென்ஷன்! மேடைக்கு செல்ல மறுத்த மம்தா-வந்தே பாரத் நிகழ்வில் சர்ச்சை

ஹவுரா – நியூ ஜல்பாய்குரி வரையான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தாயாரின் மறைவு காரணமாகத் திட்டமிட்டபடி மேற்கு வங்கம் செல்ல இயலாத காரணத்தினால் நாட்டின் ஏழாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்யை கானொளி மூலம் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நியூ ஜல்பைகுரிக்கு கொடியேற்றப்பட்ட இடத்திலிருந்து மேடைக்கு வர மறுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் … Read more

ரிஷப் பண்ட் நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து..!

ரிஷப் பண்ட்டின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் … Read more

பீலேவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது…மோடி இரங்கல்!….

கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலேவின் உடல்நலம் கடந்த சில நாட்களாக பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் … Read more

2 கோடி கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது சீரம்

புதுடெல்லி: மத்திய அரசுக்கு 2 கோடி டோஸ் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது. இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகார இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசுக்கு 2 கோடி டோஸ் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் இலவசமாக வழங்க … Read more