நமது தேச விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் தேசத்திற்கான கனவை நினைவுக்குவோம்: பிரதமர் மோடி

டெல்லி: நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் இந்த குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறோம். இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி நமது தேச விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் தேசத்திற்கான கனவை நினைவுக்குவோம் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தத் தருணம் சிறப்பானது. காரணம் நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் … Read more

மாப்பிள்ளைக்கு இப்படியொரு குறையா? – ஷாக்கான மணப்பெண்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

மணமகனுக்கு 10 ரூபாய் நோட்டை எண்ணத் தெரியவில்லை எனக் கூறி திருமணத்தையே மணப்பெண் நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கிறது. விநோத காரணங்களை குறிப்பிட்டு திருமணங்களை நிறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் ஃபருக்காபாத் பகுதியைச் சேர்ந்த ரீட்டா சிங் என்ற பெண் கடைசி நேரத்தில் தன்னுடைய திருமணத்தை நிறுத்தி பரபரப்பை கிளப்பியிருக்கிறார். திருமணத்துக்கான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மாப்பிள்ளையின் நடத்தை வித்தியாசமாக இருந்ததைக் கண்ட திருமண புரோகிதர் (Priest) … Read more

சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நினைவாக்குவோம்: பிரதமர் மோடி ட்வீட்

புதுடெல்லி: நாடு 74வது குடியரசு தின விழாவைக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அந்த வாழ்த்தில், “குடியரசு தின வாழ்த்துகள். இந்தத் தருணம் சிறப்பானது. காரணம் நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் இந்த குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறோம். இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி நமது தேச விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் தேசத்திற்கான கனவை நினைவுக்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் … Read more

ஏலத்துக்கு வரும் ஜெயலலிதாவின் பொருட்கள் என்ன? பெங்களூரு சிவில் கோர்ட் உத்தரவு

பெங்களூரு: கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்களை ஏலம் விடும் விவரங்களை வெளியிட வேண்டும் என்று பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை இல்லத்தில் இருந்து 1996ம் ஆண்டு டிச.11ம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட காலணிகள், புடவைகள், கண்ணாடிகள், டீப்பாய், டேபிள், சால்வைகள் உள்ளிட்ட … Read more

பிரபல தமிழ் பாடகி, ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளருக்கு பத்ம விருதுகள்!!

மத்திய அரசு நேற்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது. அதில், கலைத்துறை சேவைக்காக தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். ஆர்.ஆர்.ஆர் திரைப்பட இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நீண்ட காலமாக திரைத்துறையில் இருந்தாலும் கூட, தற்போது தான் பல்வேறு அங்கீகாரங்கள் கிடைக்கின்றன. அண்மையில் இவர் கோல்டன் குளோப் விருது பெற்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் … Read more

குஜராத் கலவரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பு

கோத்ரா: குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு பெரும் கலவரம் வெடித்தது. பஞ்ச்மஹால் மாவட்டத்தில் திலோல் கிராமத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 ஆண்டுகள் கழித்து முகேஷ் பர்வாத், கில்லோல் ஜானி, அசோக்பாய் படேல், நிரவ்குமார் படேல் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். … Read more

முலாயம் சிங், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷண்; தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருது: 106 பேர் பட்டியலில் இடம்; ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 106 பேருக்கு பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதில், முலாயம் சிங் யாதவ், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷண் விருதும், தமிழகத்தை சேர்ந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருதும், மேலும் 5 தமிழர்களுக்கு பத்ம ஶ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, மருத்துவம், சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த … Read more

பட்ஜெட்டுக்கு முந்தைய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு வழக்கமாக நடைபெறும் அல்வா தயாரிக்கும் விழா கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அல்வா தயாரிக்கும் விழாவை இன்று நடத்த நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. பட்ஜெட் தயாரிப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதை குறிக்கும் வகையில் இந்த அல்வா தயாரிப்பு விழா நடத்தப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடாயில் அல்வாவை கிளறி சக அமைச்சக பணியாளர்களுக்கு இன்று பரிமாற உள்ளார். நாடாளு … Read more

Republic Day 2023: இந்திய தேசிய கொடியை வடிவமைத்த சிப்பாய்..! யார் தெரியுமா அவர்?

Republic Day 2023: நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவரும், தமிழ்நாட்டில் ஆளுநரும் கொடியேற்றி குடியரசு தின விழாவை சிறப்பிக்க இருக்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தருணத்தில் தேசியக்கொடி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம். இந்தியாவின் தேசியக்கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா. பிரிட்டீஷ் ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்தவர்.  பிங்காலி வெங்கையா பிறந்தது ஆந்திர மாநிலம், மலிச்சிப்பட்டனத்தில். 1876 ஆம் ஆண்டு … Read more

அகமதாபாத்தில் காவல்துறைக்கு ரயில் நிலையம், பேருந்து நிலையத்தைத் தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல்..!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காவல்துறைக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததையடுத்து இரவு முழுக்க போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். நகரம் முழுவதும் வாகனசோதனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அகமதாபாத் ரயில் நிலையத்தைத் தகர்க்கப் போவதாக கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து ரயில் நிலையத்தில் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். மிரட்டல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதே போன்று உத்தரப்பிரதேசம் லக்னோ ரயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கும் … Read more