ரூபே கிரெடிட் கார்டு , யுபிஐ பண பரிவர்த்தனைகள் – மத்திய அமைச்சரவையில் முக்கிய முடிவு

ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகளை (நபரிலிருந்து வணிகருக்கு) மேம்படுத்துவதற்கான ஊக்கத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஏப்ரல் முதல் ஓராண்டு காலத்திற்கு ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகளை (நபரிலிருந்து வணிகருக்கு) மேம்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான ஊக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம் யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்திற்கு 2022 … Read more

உத்தராகண்டில் ஜோஷிமத்தை தொடர்ந்து கர்ணபிரயாக் நகரிலும் வீடுகளில் பெரிய அளவில் விரிசல்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக வீடுகளிலும் சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறிது சிறிதாக அந்நகரம் பூமிக்குள் புதைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உத்தராகண்டின் கர்ணபிரயாக் நகரில் உள்ள பகுகுணா நகரிலும் சுமார் 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசிடம் உள்ளூர் நகராட்சி உதவி கோரியுள்ளது. பகுகுணா நகரில் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பிற … Read more

ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சுக்கு குவியும் கண்டனம்.!

டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் அதன் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, “எளிய உண்மை இதுதான், ஹிந்துஸ்தான் ஹிந்துஸ்தானமாக இருக்க வேண்டும். இன்று பாரதத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாம் பயப்பட ஒன்றுமில்லை. ஆனால் அதே நேரத்தில், முஸ்லீம்கள் மேலாதிக்கம் என்ற ஆவேசப் பேச்சுக்களை கைவிட வேண்டும். ‘நாங்கள் உயர்ந்த இனம். ஒரு முறை இந்த மண்ணை ஆண்டோம், மீண்டும் ஆள்வோம். எங்களுடைய பாதை மட்டுமே சரியானது. நாங்கள் … Read more

திருடனால் கத்தியால் குத்தப்பட்ட காவலர் உயிரிழப்பு..!

டெல்லியில் பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில் திருடனால் கத்தியால் குத்தப்பட்டு போலீஸ்காரர் உயிரிழந்தார். காவலரான 57 வயது ஷியாம்பு தயாள், ஜனவரி 4ம் தேதி மயாபுரியில் செல்போன் திருட்டு சம்பந்தமாக அனிஷ்ராஜ் என்பவனை விசாரணைக்காக அழைத்துச்சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென எடுத்து, போலீஸ்காரரின் உடலில் 12 இடங்களில் அனிஷ்ராஜ் குத்தினான். அந்த காவலர் போராடிய நிலையில், பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷியாம்பு 4 நாட்களுக்குப் பிறகு இறந்தார். தப்பியோடிய அனிஷ்ராஜ் … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒன்றிய அரசு பின்வாங்குவது ஏன்? லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திரும்பும் பொதுப்பிரிவினர்

புதுடெல்லி: பீகாரை போன்று நாடு முழுவதும் ஜாதி வாரிய கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரி வரும் நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தில் இருந்து ஒன்றிய அரசு பின்வாங்கி வருகிறது. இது வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திரும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கி தற்போது இந்தியாவில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முதன் முதலாக கடந்த 1888ம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள் … Read more

பெண்ணை ம.பி போலீஸார் இழுத்துச் சென்றனரா? வைரல் வீடியோவின் உண்மை நிலை என்ன?

மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவரை, போலீஸார் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா பகுதியில் உள்ள பாரி கா புரா கிராமத்தில் வசித்துவரும் சாஹேப் சிங் மீது, பணத் தகராறு தொடர்பாக அவருடைய சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சாஹேப் சிங் வீட்டுக்கு காவல் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது, வீட்டிற்குள் இருந்த சாஹேப் சிங்கை காவல்துறையினர் வெளியே அழைத்துள்ளனர். ஆனால், … Read more

பெங்களூருவில் மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாய், குழந்தை உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூருவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து எச்ஆர்பிஆர் லே-அவுட் வரை தூண் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 40 அடி உயர தூண்: இந்நிலையில் நேற்று காலையில் நாகவாரா என்ற இடத்தில் கட்டப்பட்டு வந்த 40 அடி உயர தூண் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சாலையில் மோட்டார் பைக்கில் பயணித்த லோஹித் (32), அவரது மனைவி தேஜஸ்வினி (28), அவரது மகன் … Read more

200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம்; கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்குறுதி.!

கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்காரணமாக பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கர்நாடகாவில் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்திற்கு அடித்தளமாக அமையும். கட்சி அளிக்கத் திட்டமிட்டுள்ள ஐந்து பெரிய வாக்குறுதிகளில் இதுவே முதன்மையானது. அக்கட்சியின் இரண்டாவது பெரிய தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதியை … Read more

உலக பொருளாதாரத்தில் பிரகாசமான இடமாக இந்தியா திகழ்கிறது – பிரதமர் மோடி

உலக பொருளாதாரத்தில், இந்தியாவை பிரகாசமான இடமாக சர்வதேச நாணய நிதியம் பார்ப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தின் இந்தூரில் நடைபெறும், ஏழாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பேசிய பிரதமர், பிற நாடுகளை காட்டிலும், சர்வதேச சிக்கல்களை கையாளக்கூடிய வகையில் சிறந்த இடத்தில் இந்தியா உள்ளதாக, உலக வங்கி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். இது இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என Morgan Stanley நிறுவனம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார். Source link

ஜம்மு – காஷ்மீரில் மலைச்சரிவில் தவறி விழுந்து 3 ராணுவ வீரர்கள் மரணம்

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில் மலைச்சரிவில் தவறி விழுந்து 3 வீரர்கள் மரணமடைந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் மச்சால் செக்டரில் உள்ள மலைப் பகுதியில் சினார் கார்ப்ஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில்  மூன்று ராணுவ வீரர்கள் திடீரென மலைப்பகுதியின் சரிவில் தவறி விழுந்தனர். எதிர்பாராத விதமாக அவர்கள் மூன்று பேரும் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் … Read more