குடியரசு தின விழாவை நடத்தியே தீர வேண்டும் – தெலங்கானா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஹைதராபாத்: தெலங்கானாவில் ஆளுநரை தவிர்க்க கரோனா பாதிப்பை காரணம் காட்டி, குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது. ஆனால் குடியரசு தின விழாவை ஆளுநர் தலைமையில் நடத்தியே தீரவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கும் (கேசிஆர்) இடை யில் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. தெலங்கானா அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடைபெறும். ஆளுநரும் … Read more

Republic Day 2023: ‘ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்’ அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்ச்சியில் முழக்கம்

குடியரசு தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் ராணுவ வீரர்கள் பீட்டிங் தி ரிட்ரீட் விழாவை நடத்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையொட்டி, இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் அமோக உற்சாகம் காணப்பட்டது. அதாவது, குடியரசு தினத்தை முன்னிட்டு, பஞ்சாபில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் பீட்டிங் தி ரிட்ரீட் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் குழுமியிருந்தவர்கள் தேசபக்தியுடன் ‘பீட்டிங் தி ரிட்ரீட்’ விழாவில் கலந்து கொண்டனர். … Read more

கோதுமை, கோதுமை மாவு 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் விலை அதிகரிப்பு..!

கோதுமை மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றின் விலை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக அதிகரித்துள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசுக் கிடங்குகளில் இருந்து 30 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைச்சரவைக் குழு ஆலோசித்த பின்னர் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய உணவுக் கழகத்தில் இருந்து கோதுமை இ-ஏலம் மூலமாக இன்னும் ஒருவாரத்தில் விற்பனை தொடங்கும். மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு இரண்டு மாதங்களில் … Read more

901 பேருக்கு வீரதீர செயல்களுக்கான போலீஸ் விருது: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டின் 74வது குடியரசு தினத்தையொட்டி 901 போலீசாருக்கு வீரதீர செயல்களுக்கான விருதை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஒன்றிய ஆயுதப்படை போலீஸ் மற்றும் மாநில போலீஸ் துறையில் வீரதீர செயல்கள் புரிந்த காவலர்களுக்கு குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி விருது வழங்குவது வழக்கமாகும். இந்தாண்டு வீரதீர செயல்களுக்கான போலீஸ் விருதுக்கு உள்துறை அமைச்சகம் 901 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக சிஆர்பிஎப்.ஐ சேர்ந்த 48 போலீசார், மகாராஷ்டிராவில் 31, ஜம்மு காஷ்மீரில் 25, ஜார்கண்ட்டில் 9, … Read more

குடியரசு தினத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி தெரியுமா ?

குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த நாளில் குடியரசு தினத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துக் கொள்வோம். 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி காலை 10.18 மணி முதல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 6 நிமிடங்களுக்கு பிறகு ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இது தான் உலகிலேயே மிகவும் நீளமான அரசியல் அமைப்புச் சட்டமாகும். இந்திய சட்ட அமைப்பு அமலுக்கு வருவதற்கு … Read more

இன்று செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு..!!

தலைநகர் டெல்லியில் இன்று 74-வது குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். டெல்லியில் உள்ள செங்கோட்டையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றுகிறார். பிறகு இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் முப்படைகளின் அணிவகுப்புகளைப் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் எகிப்து அதிபருடன் பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டில் தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. … Read more

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் | அனுமதியின்றி திரையிடும் மாணவர்கள் – அரசியல் ஆயுதமாக்கும் எதிர்க்கட்சிகள்

புதுடெல்லி: பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிரான எந்த சாட்சியமும் இல்லை என்று கூறி அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்தும் உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இந்நிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யு) நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிட இருப்பதாக மாணவர் பேரவை தலைவர் அயிஷா கோஷ் … Read more

Republic Day 2023: குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் நாட்டின் மிகப்பெரிய 5 ஆயுதங்கள்

Republic Day 2023: இந்தியாவின் 74வது குடியரசு தினத்தன்று, ஆயுத விஷயத்தில் இந்தியா எவ்வளவு தன்னிறைவு பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்வோம். குறிப்பாக, இந்தியாவிடம் இருக்கும் இந்த ஐந்து உள்நாட்டு ஆயுதங்கள், எதிரி நாடுகளை எப்போதும் கதி கலங்க வைக்கும்.  பீரங்கி துப்பாக்கி தனுஷ் நாட்டின் மிக நீண்ட தூர பீரங்கி துப்பாக்கி ‘தனுஷ்’. 13 டன் எடை கொண்ட இந்த ஹோவிட்சர் துப்பாக்கி எந்த காலநிலையிலும் சுடக்கூடியது. இதன் ஃபயர்பவர் 36 கிமீ முதல் 60+ … Read more

தெலுங்கானாவில் குடியரசு தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கொரோனா தொற்றுப் பரவலை காரணம் காட்டி குடியரசு தின அணிவகுப்பை தெலுங்கானா அரசு ரத்து செய்துள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி குடியரசு தின அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது வெளியில் குடியரசு தின அணிவகுப்பு நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வு, கொரோனா பரவல் நெறிமுறையை அமல்படுத்துவதற்கான எந்த உத்தரவையும் மாநில அரசாங்கம் சமர்பிக்கவில்லை என்று கூறி, அதை … Read more

முறைகேடு குற்றச்சாட்டு அதானி குழும பங்குகள் மதிப்பு ரூ.46,000 கோடி சரிந்தது

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று சரிவு ஏற்பட்டது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 774 புள்ளிகள் சரிந்து 60,205 ஆகவும், தேசிய பங்குச்சந்தைக் குறியீடு நிப்டி 226 புள்ளிகள் சரிந்து 17,892 ஆகவும் இருந்தது. நேற்றைய பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள்தான் கடும் சரிவை சந்தித்தன. ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்த நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாகமேற்கொண்ட ஆய்வில், அதானி குழும நிறுவனர் மற்றும் தலைவர் … Read more