நிலத்தகராறு ஒன்றரை வயது குழந்தை கொலை!….3 பேர் கைது

பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் நிலத் தகராறில் ஒன்றரை வயது குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் நிலத் தகராறில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பெண் ஒருவர், தனது ஒன்றரை வயது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் சண்டையின்போது, குழந்தை தரையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ஆனால் எதிர்தரப்பினர் கற்கள் மற்றும் தடிகளால் தாக்கியதால் குழந்தை உயிரிழந்ததாக அவரது … Read more

மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம்…உச்சநீதிமன்றம் கருத்து!….

ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பணம், பரிசுப்பொருள் ஆகியவற்றைக் கொடுத்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆ.ர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதில் நேற்று நடந்த விசாரணையின் போது இந்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து. … Read more

உ.பி.யில் ஓடிடி திரைப்படம், தொடர்களுக்கு ரூ.1 கோடி அரசு மானியம் – முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய திட்டம்

புதுடெல்லி: உ.பி.யை பாலிவுட் நகரை மிஞ்சும்வகையில் மாற்றும் முயற்சி எடுக்கப்படுகிறது. இதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு புதிய திரைப்பட கொள்கையை அறிவித்திருந்தது. ஏற்கெனவே, டெல்லி அருகிலுள்ள நொய்டாவில் ரூ.10,000 கோடி செலவில் திரைப்பட நகரம் தயாராகி வருகிறது. இதன் உள்ளே வருபவர்கள் தங்களின் 80 சதவீத பணிகளை முடிக்கும் வகையில் இது அமைய உள்ளது. அந்த வகையில், தற்போது பிரபலமாகி வரும் ஓடிடி தொழிலை ஊக்குவிக்கவும் உ.பி. அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. இதன்படி ஓடிடியில் … Read more

Dense Fog: குளிர் கால மூடுபனியினால் தத்தளிக்கும் தலைநகர் டெல்லியின் மக்கள்

நியூடெல்லி: டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியினால் புலப்பாடு மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்களின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படும் நிலை தொடர்கிறது. குளிர் காலத்தில் தத்தளிக்கும் தலைநகர் டெல்லியில் இன்று (ஜனவரி 11, புதன்கிழமை) குறைந்தபட்ச வெப்பநிலையில் சிறிதளவு உயர்வு இருந்தாலும், அடர்ந்த பனிமூட்டம் போக்குவரத்தை வெகுவாக பாதித்துள்ளது. டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் பகுதியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  … Read more

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 10 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்..!

டெல்லி: கடும் பனிமூட்டத்தால் டெல்லியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் காலை வேளையில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர். அதுமட்டுமில்லாமல், சிறிது தொலைவு மட்டுமே சாலைகள் தெரிவதால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி  வாகன ஓட்டிகள்  செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், பனியின் … Read more

பயணிகளை மறந்து பறந்த விமானம்!….

பெங்களூர் விமான நிலையத்தில் 54பயணிகளை ஏற்றாமல் கவனக்குறைவாக விமானம் புறப்பட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு நேற்று முன்தினம் கோ பர்ஸ்ட் விமானம் புறப்பட்டது. ஆனால் விமானத்திற்காக காத்திருந்த 54 பயணிகளை ஏற்றாமல் கவனக்குறைவாக விமானம் டெல்லி புறப்பட்டு சென்றது.   54 பயணிகளை ஏற்றாமல் சென்ற சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களும் பணிநீக்கம் … Read more

காங்கிரஸாரின் உள்ளடி வேலைகளுக்கு அஞ்சி மீண்டும் தொகுதி மாறினார் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான‌ சித்தராமையா மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு வந்தார். கடந்த 2013 தேர்தலிலும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் வென்று முதல்வர் ஆனார். ஆனால் 2018-ம் ஆண்டு தேர்தலின்போது சித்தராமையா அந்த தொகுதியில் போட்டியிட்ட போது காங்கிரஸாரே அவருக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்தனர். இதனால் அவர் சாமுண்டீஸ்வரி, பாதாமி தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் அடுத்த தேர்தலில் சித்தராமையா மீண்டும் பாதாமி தொகுதியில் போட்டியிட … Read more

பெங்களூர் அருகில் உள்ள ஐபோன் கட்டமைக்கும் தொழிற்சாலையை வாங்குகிறது டாட்டா குழுமம்..!

பெங்களூர் அருகே உள்ள தைவான் ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான ஐபோன் கட்டமைக்கும் தொழிற்சாலையை விலைக்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 128 பில்லியன் டாலர் மதிப்புடைய டாட்டா குழுமம் ஐ போன் உற்பத்தி செய்ய தைவான் விஸ்ட்ரன் கார்ப்பரேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை மார்ச் 31 ம் தேதியுடன் நிறைவு பெற்று ஏப்ரல் முதல் டாட்டா நிறுவனம் உற்பத்தியை தொடங்க உள்ளது. பெங்களூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தொழிற்சாலை … Read more

ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் தலைவர்கள் விரைவில் இந்தியா வருகை

புதுடெல்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அப்துல் பட்டா இந்த மாதம் இந்தியா வருகின்றார். இதேபோல் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் அடுத்த மாதம் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசி மார்ச்சில் இந்தியாவிற்கு வருகை புரிய உள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் மார்ச் முதல் வாரத்தில் இந்தியா வரலாம்  என தகவல்கள தெரிவிக்கின்றன. எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உற்பத்தி, சுகாதாரம் உள்ளிட்ட … Read more

வங்கதேசத்திலிருந்து மிசோரமில் குவியும் அகதிகள் – எல்லையில் உணவு, குடிநீர் இன்றி பரிதவிப்பு

புதுடெல்லி: மியான்மர், வங்கதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் குவிந்து வருகின்றனர். தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கதேச அகதிகள் மிசோரமில் தஞ்சம் கோரி எல்லையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் உணவு, குடிநீர் இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் குகி – சின் என்ற பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் இந்த பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மரிலும் இதே பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் கணிசமாக … Read more