பிரதமர் மோடி – எகிப்து அதிபர் பேச்சுவார்த்தை.. 5 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் எல் சிசி, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் எகிப்து அதிபருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி – அதிபர் எல் சிசி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே சைபர் பாதுகாப்பு, கலாசாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 5 … Read more

உ.பி-யில் 11 போலி ஹோமியோபதி கல்லூரிகள்: உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 11 போலி ஹோமியோபதி கல்லூரிகள் செயல்பட்டு வந்ததால், அந்த கல்லூரிகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 234 கல்லூரிகளில் ஹோமியோபதி பார்மசி டிப்ளமோ (டி.எச்.பி)  பட்டம் வழங்கப்படுகிறது. இந்த கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்று வருகின்றனர். ஆனால் மேற்கண்ட கல்லூரிகள் சில போலியாக செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. அதனால் உத்தரபிரதேச ஹோமியோபதி மருத்துவ வாரியம், மேற்கண்ட அனைத்து கல்லூரிகளையும் தணிக்கைக்கு உட்படுத்தியது. அதன்படி … Read more

ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 50 நகரங்களில் 5-ஜி சேவை..!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 5ஜி சேவைகள் அறிமுகமாகியுள்ள நகரங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டாவை 1 ஜிபிபிஎஸ் பிளஸ் வேகத்தில் அனுபவிக்க கூடுதல் கட்டணமின்றி நேற்று முதல் வழங்கப்படுகிறது. இந்த புத்தாண்டில் அனைத்து ஜியோ பயனரும், ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் சேவைகளை அனுபவிக்கும் வகையில், 5ஜி சேவைகள் வழங்குவதை விரைவு படுத்தியுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்திற்குள், … Read more

மக்களே, சரியாக திட்டமிட்டுக்கோங்க.. நாளை முதல் 5 நாள் வங்கிகள் செயல்படாது..!

நாளை முதல் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப போதுமான முன்னேற்பாட்டுடன் தங்கள் நிதி பரிமாற்றங்களை சரியாக திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழா மற்றும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக நாளை முதல் வங்கிகள் இடையில் ஒருநாள் வெள்ளிக் கிழமை தவிர ஐந்து நாட்களுக்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி … Read more

பணமோசடி வழக்கில் திரிணமூல் காங். செய்தித் தொடர்பாளர் சாகெட் கோகலே கைது – அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகெட் கோகலேவை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. மக்களிடம் இருந்து திரட்டிய பணத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி குஜராத் போலீசாரால் சாகெட் கோகலே கைது செய்யப்பட்டார். அகமதாபாத் சிறையில் உள்ள அவர் பணமோசடி வழக்கின் கீழ் தற்போது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, சாகெட் கோகலேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் … Read more

Budget 2023: நடுத்தர வர்க்கம் மகிழும் வகையில் வரி அடுக்கில் மாற்றம் இருக்குமா..!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்படும்  விரிவான பட்ஜெட், முதலீடுகள், உற்பத்தி மற்றும் கிராமப்புற பொருளாதாரத்திற்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கும். பட்ஜெட் இந்தியாவின் நடுத்தர வர்க்கம், விவசாயிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கலாம். பல்வேறு துறைகளின் சமீபத்திய பட்ஜெட் 2023 எதிர்பார்ப்புகளுக்கான சில முக்கிய அம்சங்கள் மீழே கொடுக்கப்பட்டுள்ளன: தனிப்பட்ட வரி செலுத்துவோர், நேரடி வரி … Read more

இங்கிலாந்தில் ஆன்லைன் பாதுகாப்பு மசோதா நிறைவேறுமா?

இங்கிலாந்தில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஆன்லைன் பாதுகாப்பு சட்ட மசோதாவை விரைந்து நிறைவேற்ற பிரதமர் ரிஷிசுனக்கிற்கு அவரது கன்சர்வேடிவ் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இணையதளங்களை பயன்படுத்தும் குழந்தைகளை ஆபாச வெப்சைட்டுகளிலிருந்து பாதுகாக்க வலைதளங்கள் மிகவும் வலுவான வயது சோதனைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்த சட்ட மசோதா வலியுறுத்துகிறது. Source link

இளைஞர்களின் நேர்மையான கருத்துகள்தான் என்னை இரவு பகலாக உழைக்க வைக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: இளைஞர்களின் நேர்மையான கருத்துகள்தான் என்னை இரவு பகலாக உழைக்க வைக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த விழாவில் என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இளைஞர்களின் வெற்றி இந்தியாவின் வெற்றியாகவே பார்க்கப்படும் எனவும் மோடி கூறினார்.

இந்தியா – எகிப்து இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து: இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி – எகிப்து அதிபர் அல் சிசி முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே இன்று பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். குடியரசு தின சிறப்பு விருந்தினராக புதுடெல்லி வந்துள்ள எகிப்து அதிபர் அல் சிசி, பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, … Read more

திருப்பதி லட்டு கவுன்ட்டரில் மெகா கொள்ளை… ஆடிப் போன தேவஸ்தானம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். சாமி தரிசனம் ஒருபுறம் என்றால் லட்டு வாங்க அலைமோதும் கூட்டம் மறுபுறம். விடுமுறை நாட்களில் சொல்லவே தேவையில்லை. திருமலை முழுவதும் பக்தர்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். திருப்பதி என்றால் லட்டுக்கு தனிச்சிறப்பு உண்டு. லட்டு கவுன்ட்டர்கள் அதன் தயாரிப்பு முறை, சுவை என ஒவ்வொன்றும் பிரத்யேகமாக இருக்கும். வேறெங்கும் அப்படி இருக்காது. இதற்காக பிரத்யேக கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு டிக்கெட் விற்பனை … Read more