பயணிகளை மறந்து பறந்த விமானம்!….

பெங்களூர் விமான நிலையத்தில் 54பயணிகளை ஏற்றாமல் கவனக்குறைவாக விமானம் புறப்பட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு நேற்று முன்தினம் கோ பர்ஸ்ட் விமானம் புறப்பட்டது. ஆனால் விமானத்திற்காக காத்திருந்த 54 பயணிகளை ஏற்றாமல் கவனக்குறைவாக விமானம் டெல்லி புறப்பட்டு சென்றது.   54 பயணிகளை ஏற்றாமல் சென்ற சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களும் பணிநீக்கம் … Read more

காங்கிரஸாரின் உள்ளடி வேலைகளுக்கு அஞ்சி மீண்டும் தொகுதி மாறினார் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான‌ சித்தராமையா மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு வந்தார். கடந்த 2013 தேர்தலிலும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் வென்று முதல்வர் ஆனார். ஆனால் 2018-ம் ஆண்டு தேர்தலின்போது சித்தராமையா அந்த தொகுதியில் போட்டியிட்ட போது காங்கிரஸாரே அவருக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்தனர். இதனால் அவர் சாமுண்டீஸ்வரி, பாதாமி தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் அடுத்த தேர்தலில் சித்தராமையா மீண்டும் பாதாமி தொகுதியில் போட்டியிட … Read more

பெங்களூர் அருகில் உள்ள ஐபோன் கட்டமைக்கும் தொழிற்சாலையை வாங்குகிறது டாட்டா குழுமம்..!

பெங்களூர் அருகே உள்ள தைவான் ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான ஐபோன் கட்டமைக்கும் தொழிற்சாலையை விலைக்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 128 பில்லியன் டாலர் மதிப்புடைய டாட்டா குழுமம் ஐ போன் உற்பத்தி செய்ய தைவான் விஸ்ட்ரன் கார்ப்பரேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை மார்ச் 31 ம் தேதியுடன் நிறைவு பெற்று ஏப்ரல் முதல் டாட்டா நிறுவனம் உற்பத்தியை தொடங்க உள்ளது. பெங்களூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தொழிற்சாலை … Read more

ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் தலைவர்கள் விரைவில் இந்தியா வருகை

புதுடெல்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அப்துல் பட்டா இந்த மாதம் இந்தியா வருகின்றார். இதேபோல் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் அடுத்த மாதம் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசி மார்ச்சில் இந்தியாவிற்கு வருகை புரிய உள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் மார்ச் முதல் வாரத்தில் இந்தியா வரலாம்  என தகவல்கள தெரிவிக்கின்றன. எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உற்பத்தி, சுகாதாரம் உள்ளிட்ட … Read more

வங்கதேசத்திலிருந்து மிசோரமில் குவியும் அகதிகள் – எல்லையில் உணவு, குடிநீர் இன்றி பரிதவிப்பு

புதுடெல்லி: மியான்மர், வங்கதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் குவிந்து வருகின்றனர். தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கதேச அகதிகள் மிசோரமில் தஞ்சம் கோரி எல்லையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் உணவு, குடிநீர் இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் குகி – சின் என்ற பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் இந்த பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மரிலும் இதே பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் கணிசமாக … Read more

350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் பிருத்வி -2 ஏவுகணை சோதனை வெற்றி..!

பிருத்வி-II ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது. ஒடிசாவின் கடற்கரைப் பகுதியான சந்திப்பூரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை இந்தியாவின் அணுசக்தி தடுப்பில் ஒருங்கிணைந்த பகுதி என்றும், சோதனையின் போது துல்லியமாக அதன் இலக்கை தாக்கியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்வி-II ஏவுகணை சுமார் 350 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.  Source link

பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. பிப்ரவரி முதல் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்று முதல் பாண்லே பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு..!!

புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே, உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்கிறது. கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர். அதேநேரத்தில் பால் பற்றாக்குறையால் வெளிமாநிலங்களில் இருந்து பாலை பாண்லே கொள்முதல் செய்து வருகிறது. தற்போது பாண்லே பால் விநியோகம் சீராக இல்லாததால் போராட்டமும் அதிகரித்தது. அத்துடன் பாண்லே நிர்வாக குளறுபடிகளால் சிக்கலில் உள்ளது. இச்சூழலில் பாலின் கொள்முதல் விலையை ரூ. 34-ல் இருந்து ரூ.37 ஆக உயர்த்தி முதல்வர் … Read more

இவர்களுக்கு பொங்கல் பரிசு வங்கி கணக்கில் தான்

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அனைத்து குடும்ப அட்டைதரர்களுக்கும் இலவசப் பரிசுத் தொகுப்பு வழக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில் புதுச்சேரியில் 500 ரூபாய் மதிப்பிலான 10 பொருட்களை இலவசமாக வழங்கிட புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக பச்சரிசி, வெள்ளம், உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட இந்த 10 பொருட்கள் இருக்கக்கூடிய 500 ரூபாய் மதிப்பிலான இந்த தொகுப்பை … Read more

மருத்துவ செலவுக்கு அரசு பணத்தை செலவழிக்காத பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: பிரதமராக பதவியேற்ற பின்னர் மருத்துவ செலவுக்கு அரசு பணத்தை பிரதமர் மோடி செலவழிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் பிரஃபுல் சர்தா என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு பிரதமரின் மருத்துவ செலவு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இது குறித்து பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில் இருந்து இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. பிரதமராக 2014-ல் பதவியேற்றுக் கொண்ட பின்னர் தனக்கு ஏற்படும் மருத்துவ … Read more