டெல்லி – பாட்னா ‘இன்டிகோ’ விமானத்தில் மது அருந்திய 2 பேர் கைது..!

டெல்லியிலிருந்து பாட்னா சென்ற இண்டிகோ விமானத்தில் மது அருந்திய 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர். உள்ளூர் விமானங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இரு பயணிகளும் விமானத்தில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. விமான சிப்பந்திகள் கண்டித்ததை அடுத்து இருவரும் மன்னிப்பு கடிதம் ஒப்படைத்தனர். கட்டுப்பாடு அறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் இருவரும் பாட்னா விமான நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர். Source link

இந்தியா ஒரு வரலாற்று அணுகுமுறையை எடுத்துள்ளது 17வது பிரவாசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சியில் ஒன்றிய சுகாதார அமைச்சர் பேட்டி

மத்திய பிரதேசம்: ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம் போன்ற நவீன மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் கலவையுடன் ஒருங்கிணைந்த சுகாதாரப் பாதுகாப்பு விருப்பங்களை வழங்கும் இந்தியா ஒரு இலக்காக இருப்பதால் மட்டுமே இது சாத்தியமானது என்று ஒன்றிய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். ஆயுஷ்மான் பாரதத்தின் நான்கு முக்கிய தூண்களில் கட்டப்பட்ட வலுவான சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்தியா ஒரு வரலாற்று அணுகுமுறை மற்றும் முழுமையான அணுகுமுறையை எடுத்துள்ளது, அதாவது இந்தியா நீண்ட காலம் … Read more

மதமாற்றம் தொடர்பான வழக்கில் மனுதாரரையே நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி

’மதமாற்றம் தொடர்பான வழக்கில் பெயரையும் மாற்றி, மனுதாரரையும் நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ’நாடு முழுவதும் கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க வேண்டும்’ என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அமர்வு முன்பு இன்று (ஜனவரி 9) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் வழக்கறிஞர் குமணன், ”இந்த … Read more

தமிழக மின்சார வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணை…!

நீலகிரியில் மின் வேலியில் சிக்கி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 75 லட்சம் ரூபாய் அபராதத்தை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் சேரம்பாடி என்ற இடத்தில் மின்சார வேலியில் சிக்கி யானை, நான்கு காட்டுப் பன்றிகள், ஒரு கீரிப்பிள்ளை, 3 நாகப்பாம்புகள், ஒரு காகம் உள்ளிட்டவை உயிரிழந்தன. இந்நிலையில், இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. … Read more

இந்தியாவில் 'லேப்ராஸ்கோபிக்' சிகிச்சையின் தந்தை: டாக்டர் டெம்டன் எரிக் மும்பையில் காலமானார்

மும்பை: மனிதர்களின் உள் உறுப்புகள் பாதிக்கப்படும் போது, உடலை அறுக்காமல் சிறு துளையிட்டு கணினி மூலம் திரையில் பார்த்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதை லேப்ராஸ்கோபிக் (Laparoscopic) அல்லது சாவி துளை அறுவை சிகிச்சை (keyhole surgery) என்கின்றனர். இந்நிலையில் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் தந்தை என்று இந்தியாவில் டாக்டர் டெம்டன் எரிக் உத்வாடியா போற்றப்பட்டார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

ஒருநாள் அன்னபிரசாத திட்டத்திற்கு ரூ.33 லட்சம் நன்கொடை வழங்கலாம்.! திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு அழைப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கும் ஒருநாள் நன்கொடை திட்டத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி அன்ன பிரசாத அறக்கட்டளையை ஏற்கனவே தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒருநாளுக்கு அன்ன பிரசாதம் வழங்க ₹33 லட்சம் நன்கொடையாக வழங்கலாம். இந்த ெதாகையில் காலை உணவுக்கு ₹7.70 லட்சமும், மதிய உணவுக்கு ₹12.65 லட்சமும், இரவு உணவிற்கு ₹12.65 … Read more

’நான் மட்டும் கல்லூரியில் படித்திருந்தால்’.. கௌதம் அதானி பகிர்ந்த சுவாரஸ்ய பின்னணி!

”முறையாக கல்வி பயின்றிருந்தால், அது தமக்கு உதவியிருக்கும்” என்று இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் அதானி குழுமத் தலைவருமான கெளதம் அதானி தெரிவித்துள்ளார். இவர், உலகின் பணக்கார பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். விரைவில் ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க்கின் இடத்திற்கு வந்துவிடுவார் எனக் கூறப்படுகிறது. எலான் மஸ்க் தற்போது 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், குஜராத்தில் வித்யா மந்திர் அறக்கட்டளையின் 75வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கெளதம் … Read more

வளர்ச்சிக்கான முகம் மேற்கு வங்கம் – மம்தா பானர்ஜி!….

வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி 20 கூட்டமைப்பின் நிதிசார் கூட்டத்தில் கலந்து கொண்டார். மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது என்று அவர் கூறினார். மாநில அரசு 12 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளது என்று கூறிய அவர், வங்காளத்தின் மொத்த … Read more

வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு

இந்தூர்: மத்திய பிரதேசம் இந்தூரில் புலம்பெயர்ந்தோருக்கான பிரவாசி பாரதிய திவஸ் 17-வது மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் சிவகுமார் வரதராஜு நாயுடு உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் முன்னிலையில் ஜெய்சங்கர் கூறியதாவது. இந்தியாவில் வணிகம் தொடங்குவதற்கு வழிமுறைகள் மிகவும் எளிதாக்கப்பட்டு வருகின்றன. இதனால், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் நிறைய புதுமையான கண்டுபிடிப்புகள், புத்தாக்க தொழில்கள் வரவுள்ளன. வரலாற்று ரீதியிலான நெருக்கமான உறவை இந்தியாவும், மலேசியாவும் … Read more

பிரியாணி சாப்பிட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் – ‘எலி பேஸ்ட்’ சாப்பிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி..!

கேரளாவில், ஆன்லைனில் பிரியாணி வாங்கி சாப்பிட்டு கல்லூரி மாணவி அஞ்சுஸ்ரீ உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், காதலன் உயிரிழந்த வருத்தம் தாங்காமல் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. காசர்கோட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆன்லைனில் மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். 4 பேர் நலமாக இருக்க, அஞ்சுஸ்ரீக்கு மட்டும் உடல்நலன் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தரமற்ற பிரியாணியை சாப்பிட்டு அஞ்சுஸ்ரீ உயிரிழந்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உணவகத்திற்கு சீல் … Read more