கல்யாணத்திற்கு கண்டிஷன் போட்ட ராகுல் காந்தி.!

வருகிற 2024ம் ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அக்கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது … Read more

பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 99 வயதான ஹீரா பென்னிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக, அம்மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், குஜராத்திற்கு வருகை தந்த பிரதமர், மருத்துவமனைக்கு சென்று, தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பிரதமரின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனையடைந்ததாகவும், அவர் நலம்பெற விழைவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். … Read more

நீட் விலக்கு மசோதா குறித்து உள்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் 2 துறைகள் வெவ்வேறான பதில்..!

டெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு தமிழக அரசு அனுமதி கோருவது தேசிய இறையாண்மைக்கு எதிரானதா? என உள்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் 2 துறைகள் வெவ்வேறான பதில் அளித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வெவ்வேறான பதில் அளித்துள்ளது. நீட் விலக்கு மசோதா இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கு எதிரானது இல்லை என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. என குறிப்பிட்டுள்ளது.

Rewind 2022 | அரசியல் முகம்: மம்தா பானர்ஜி – விமர்சனங்களுக்கு அப்பால்…

2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் வரிசையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குறித்த விரைவுப் பார்வை இது. ‘வங்கத்து பெண் புலி’ அரசியலில் அதிரடி காட்டும்போதெல்லாம் மம்தா பானர்ஜியை இப்படித்தான் உள்ளூர் பத்திரிகைகள் விமர்சிக்கின்றன. நல்ல ஓவியர், கவிதாயினி, இசைக்கருவிகள் வாசிக்கும் திறன் பெற்றவர் என்றிருந்தாலும் அதிரடி முடிவுகள், துணிச்சலான பேச்சுக்கள், வளைந்து கொடுக்காத தன்மை என்று கவனம் ஈர்க்கிறார் மம்தா பானர்ஜி. இந்தியாவின் முதல் … Read more

பிரதமர் மோடிக்கு எனது ஆதரவு உள்ளது; ராகுல் காந்தி ஆறுதல்.!

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5ம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, டிசம்பர் 1ம் தேதி முதல்கட்ட தேர்தலும், டிசம்பர் 5ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டு டிசம்பர் 8ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன பாஜக 156 … Read more

ஆந்திர மாநிலம் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லூர் மாவட்டம் கந்துக்கூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Rewind 2022 | அரசியல் முகம்: ராகுல் காந்தி – யாத்திரை வியூகம்!

2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் வரிசையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி குறித்த விரைவுப் பார்வை இது. இந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதில் போட்டியிடவில்லை. அது காங்கிரஸ் அனுதாபிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு முன்னதாகவே இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. தமிழகத்தின் கன்னியாகுமரியில் தனது … Read more

உடைத்து வீசப்பட்ட இயேசு சிலை; பிறந்த 3வது நாளிலேயே கொடூரம்!

இயேசு பிறந்த டிசம்பர் 25ம் தேதி, ‘கிறிஸ்துமஸ்’ பண்டிகையாக உலகம் முழுவதும் அமைந்துள்ள தேவாலயங்களில் மிகவும் கோலாகலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது. முன்னதாக 24ம் தேதி இரவு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இத்தாலி நாட்டில் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் போப் பிரான்ஸில் தலைமையில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் 7000க்கு மேற்பட்டோர் கூடி இருந்த நிலையில் குழந்தை இயேசுவின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அப்போது, சிறப்பு பாடல்கள் பாடி, அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். … Read more

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அண்டை நாடான சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதன்பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மியான்மரில் இருந்து டெல்லி வந்த 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுபோல கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று … Read more

கொல்கத்தாவில் நாளை மறுநாள் தேசிய கங்கா கவுன்சில் கூட்டம்: 5 மாநில முதல்வர்களை சந்திக்கும் மோடி

கொல்கத்தா: கொல்கத்தாவில் நாளை மறுநாள் தேசிய கங்கா கவுன்சில் கூட்டம் நடைபெறுவதால், பிரதமர் மோடியை 5 மாநில முதல்வர்கள் சந்திக்கின்றனர். தேசிய கங்கா கவுன்சிலின் தலைவர் பிரதமர், அதன் பிரதிநிதிகள் மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் ஆவர். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி கான்பூரில் தேசிய கங்கா கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் இரண்டாவது முறையாக வரும் 30ம் தேதி (நாளை மறுநாள்) கொல்கத்தாவில் தேசிய கங்கா … Read more