பழைய ஓய்வூதியத் திட்டம் கேட்டு நாடாளுமன்றம் முற்றுகை – தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று 50 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2003 டிசம்பர் 22-ம் தேதி புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்துக்கு மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது. … Read more

குடியரசு தினத்தன்று வெளியிடப்பட உள்ளது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கோவிட் நாசி தடுப்பூசி..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கோவிட் நாசி தடுப்பூசி குடியரசு தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கிருஷ்ணா எல்லா, உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக், இந்தியாவில் முதன்முறையாக இன்ட்ராநேசல் கோவிட்-19 தடுப்பூசி iNCOVACC ஐ வருகிற 26ந்தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றார். இந்த தடுப்பூசி, அரசின் சார்பில் 325 ரூபாய் விலையிலும், தனியார் தடுப்பூசி மையங்களிடம் 800ரூபாய் விலையிலும் கிடைக்கும் என்றும் கூறினார். Source link

குஜராத் கலவரம் பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு தடை: டிவிட்டர் பகிர்வுகளும் அதிரடி நீக்கம்

புதுடெல்லி: குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பிபிசி எடுத்துள்ள ஆவணப்படம் குறித்த யூடியூப் வீடியோக்கள் மற்றும் டிவீட்டுக்கள் பகிர்வதை தடை செய்வதற்கான வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. குஜராத்தின் முதல்வராக பிரதமர் மோடி இருந்தபோது கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக பிபிசி ஊடகம் ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில் 2 பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதோடு, கலவரத்துடன் பிரதமர் மோடி தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. … Read more

சீன எல்லையில் பிரம்மாண்ட போர் பயிற்சி – இந்திய விமானங்கள், ஏவுகணைகள் குவிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில், சீன எல்லைக்கு அருகே இன்னும் சில நாட்களில் மிகப் பெரிய அளவில் போர் பயிற்சி மேற்கொள்ள இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை அடிக்கடி தலைதூக்குகிறது. 2017-ல் சீன எல்லையான டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது. இதை இந்திய வீரர்கள் தடுத்தபோது, இரு தரப்பு ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. உயர்நிலை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருதரப்பு ராணுவத்தினர் தங்கள் … Read more

பிறந்த நாள் கொண்டாடி நேதாஜியின் புகழை அபகரிக்க ஆர்எஸ்எஸ், பா.ஜ முயற்சி: மகள் அனிதா போஸ் குற்றச்சாட்டு

கொல்கத்தா: நேதாஜியின் கொள்கைகளுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் என் தந்தையின் புகழை சுரண்டவே அவரது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளது என நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளையொட்டி நாளை மேற்குவங்க மாநிலம் ஷாகித் மினார் மைதானத்தில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்ற உள்ளார். இதுகுறித்து  நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மகள் அனிதா போஸ் கூறியதாவது, ”அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும். அனைவரும் அமைதியாக வாழ வேண்டும் … Read more

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை – வீடியோக்களை நீக்க ட்விட்டர், யூடியூப் ஒப்புதல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன்படி ஆவண பட வீடியோக்கள், கருத்துகளை நீக்க சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதை ட்விட்டர், யூடியூப் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு வீடியோ, பதிவுகளை நீக்கி வருகின்றன. கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் … Read more

அந்தமானின் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்கள் பெயர்: பிரதமர் தலைமையில் நாளை விழா

புதுடெல்லி: அந்தமான் நிகோபாரில் உள்ள தீவுகளில் இதுவரை பெயரிடப்படாமல் உள்ள 21 பெரிய தீவுகள் புதிதாக பெயர்சூட்டப்பட உள்ளன. நாளை நடக்கும் விழாவில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துகொள்கிறார். விழாவில் இந்த  தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21  ராணுவ வீரர்களின் பெயர்கள் சூட்டப்படும்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் உமேஷ் யாதவிடம் ரூ.44 லட்சம் மோசடி: நிலம் வாங்குவதாக கூறி ஏமாற்றிய மேலாளர் மீது வழக்கு

நாக்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர  வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் உமேஷ் யாதவ். இவர், கோராடியில் வசித்து  வரும் தனது நண்பரான  தாக்கரே(37) என்பவரை மேலாளராக பணியமர்த்தி உள்ளார். இந்நிலையில் உமேஷ்யாதவ்  நிலம் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளார். அதற்காக ரூ.44 லட்சத்தை தனது  வங்கிக்கணக்கில் இருந்து தாக்ரேவின் வங்கிகணக்கிற்கு பரிமாற்றம்  செய்துள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட மேலாளர் தாக்ரே, தனது  பெயரிலேயே அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து உமேஷ் யாதவிற்கு தெரியவரவே, தாக்ரேவிடம் அந்த இடத்தை … Read more

கொல்கத்தா பேரணியில் பயங்கர வன்முறை; போலீஸ் தடியடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசை கண்டித்து போராட்டம் நடத்திய ஐஎஸ்எப்  தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். மேற்கு வங்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்  மதசார்பற்ற முன்னணி(ஐஎஸ்எப்) என்ற பெயரில் கட்சி தொடங்கப்பட்டது. இந்த கட்சிக்கு சட்டமன்றத்தில் ஒரே ஒரு எம்எல்ஏ உள்ளார்.சமீபத்தில் பங்கார் என்ற இடத்தில்  ஐஎஸ்எப் கட்சி அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதை கண்டித்து,ஐஎஸ்எப் தொண்டர்கள்  எம்எல்ஏ நவ்சாத் தலைமையில் நேற்று கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டத்தில் … Read more

வரலாற்றில் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவம் பங்கேற்பு: சிறப்பு விருந்தினராக அதிபர் சிசி வருகை

புதுடெல்லி: வரலாற்றில் முதல் முறையாக இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் சிசியும், குடியரசு தின அணிவகுப்பில் அந்நாட்டு ராணுவமும் பங்கேற்க இருப்பதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. வடஆப்ரிக்க நாடான எகிப்தின் அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி 3 நாள் அரசு முறைப் பயணமாக வரும் 24ம் தேதி டெல்லி வருகிறார். இந்த பயணம் தொடர்பாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எகிப்து அதிபர் … Read more