இந்தியாவில் ஒரே நாளில் 4,912 பேருக்கு கொரோனா… 38 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 4,912 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,63,337ஆக உயர்ந்தது. * புதிதாக 38 பேர் … Read more

கழிவறையை வெறுங்கைகளால் சுத்தம் செய்த பாஜக எம்.பி.

ரேவா: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக எம்.பி. ஒருவர் கழிவறையை வெறுங்கைகளால் சுத்தம் செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா தொகுதி பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா. இவர் அண்மையில் அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில் மரம் நடும் விழாவிற்குச் சென்றார். கட்கரி பெண்கள் பள்ளி என்ற அந்தப் பள்ளியின் கழிவறைகளையும் அவர் சோதனை செய்தார். அப்போது கழிவறைகள் மிகவும் அசுத்தமாக இருந்ததைப் பார்த்த அவர் வெறுங்கைகளாலேயே அதனை சுத்தம் செய்தார். பாஜக … Read more

பெண் பத்திரிகையாளருக்கு மிரட்டல் பிரபல கேரள நடிகர் மீது போலீஸ் வழக்கு பதிவு

திருவனந்தபுரம்: மலையாள யூடியூப் சேனலை சேர்ந்த பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக பேசி மிரட்டிய குற்றச்சாட்டில், பிரபல மலையாள இளம் நடிகர் ஸ்ரீநாத் பாசி மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீநாத் பாசி. இவர் முதன் முதலாக நாயகனாக நடித்த சட்டம்பி என்ற படம் நேற்று வெளியானது. இவர்  ஒரு மலையாள யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சேனலை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பேட்டி எடுத்தார். … Read more

ரூ.120 கோடியில் பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணிகள் – ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

குப்பம்: ஆந்திராவில் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது குப்பம் தொகுதி. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 33 ஆண்டுகளாக இத்தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் குப்பம் தொகுதிக்கு ஒருநாள் பயணமாக முதல்வர் ஜெகன்மோகன் நேற்று வந்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெகன் பேசியதாவது: சந்திரபாபு நாயுடு தனது ஆட்சியில், மத்திய அரசே தனது பேச்சை கேட்டுதான் நடப்பதாக மார்தட்டிக் கொண்டார். ஆனால் அவரது சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் சாலைகள், … Read more

அந்தமான் நிக்கோபார் தீவில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

அந்தமான்: அந்தமான் நிக்கோபார் தீவில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபர் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 431 கி.மீ. தென்கிழக்கே இன்று அதிகாலை 2.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 75 கி.மீ. ஆழத்தில் உருவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் … Read more

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொன்ற பாஜக தலைவர் மகன்: உத்தராகாண்டில் பகீர்!

இளம்பெண்ணை கடத்தி கொன்ற வழக்கில் உத்தராகாண்ட் மாநிலத்தின் மூத்த பா.ஜ.க. தலைவரான வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா முதல் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் 18ம் தேதி காணாமல் போனதாக கருதப்பட்ட 19 வயது இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு உத்தராகாண்ட் மாநிலத்தில் பூதாகரமாகியிருக்கிறது. அதன்படி அங்கிதா பந்தாரி என்ற அந்த பெண் ரிஷிகேஷின் லக்ஸ்மன் ஜுலா என்ற பகுதியில் புல்கித் ஆர்யா நடத்தும் ரிசார்ட்டில் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றி வந்தார். சம்பவம் நடந்த … Read more

கேதார்நாத், பத்ரிநாத் வளர்ச்சி திட்டம் குறித்து ட்ரோன்கள் மூலம் பிரதமர் மோடி ஆய்வு

புதுடெல்லி: கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ட்ரோன்கள் மூலம் ஆய்வு நடத்தினார். உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி புனித தலங்கள் அமைந்துள்ளன. இந்த புனித தலங்களின் மேம்பாட்டில் பிரதமர் மோடி அக்கறை காட்டி வருகிறார். அவரின் முயற்சியால் கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கேதார்நாத் கோயிலில் மருத்துவமனை, புதிய பாலம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன. பத்ரிநாத் கோயிலில் “பத்ரிநாத் மாஸ்டர் பிளான்” திட்டம் … Read more

Viral News: கணவனுக்கு முன்னாள் காதலியுடன் திருமணம் செய்து வைத்த காதலி!

ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர், எந்த ஒரு பெண்ணுமே செய்யத் துணையாத ஒரு செயலை செய்துள்ளார்.ஆம் அவர் தனது கணவரை அவரது முன்னாள் காதலியுடன் சேர்த்து வைத்துள்ளார். கேட்பதற்கு திரைப்படக் கதை போல் உள்ளதா.. ஆனால், இது உண்மை சம்பவம். ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கல்யாண். டிக் டாக் மூலம் பிரபலமான அவர், சில ஆண்டுகளுக்கு முன் கடப்பாவைச் சேர்ந்த விமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின் இருவரும் டிக் டாக் வீடியோக்களில் நடித்து … Read more

கடற்படைக்கு 35 பிரம்மோஸ் வாங்க முடிவு: ரூ1700 கோடியில் ஒப்பந்தம்

புதுடெல்லி, செப். 24: கடற்படைக்கு ரூ.1,700 கோடி செலவில் 35 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளும் நவீனமயங்கள், கூடுதல் ஆயுதங்களுடன் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு, வெளிநாடுகளில் இருந்தும் நவீன ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் எஸ்-400 போன்ற ஏவுகணை தடுப்பு சாதனங்களும் இதில் அடங்கும். இந்நிலையில், கடற்படைக்கு 35 கூடுதல் பிரம்மோஸ் ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளன. இந்திய – ரஷ்யா கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கப்படுகிறது. இது, சூப்பர்சோனிக் … Read more

கேரளாவில் பிஎஃப்ஐ போராட்டத்தில் வன்முறை – உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகங்கள், நிர்வாகிகளின் இல்லங்களில் நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கேரளா உட்பட 15 மாநிலங்களை சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பிஎஃப்ஐ நேற்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. எனினும் கேரளாவில் நேற்று அனைத்துக் கடைகளும் திறந்திருந்தன. அரசு பேருந்துகளும், ஆட்டோ, டாக்ஸிகளும் வழக்கம்போல் … Read more