சிறுநீர் கழித்த விவகாரம் ஏர்இந்தியா முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்கலாம்: டாடா குழும தலைவர் வருத்தம்

மும்பை: விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்று டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் வருத்தம் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி சங்கர் மிஷ்ரா, பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து அநாகரீகமாக நடந்து கொண்டார். இந்த விவகாரம் 3 மாதங்களுக்கு பிறகு தெரிய வந்து அவர் தற்போது கைது … Read more

தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஜன.9) லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் … Read more

இந்தியா – பாக். எல்லையில் கண்காணிப்பு பணியில் ரேடார் பொருத்தப்பட்ட டிரோன்கள்.!

எல்லையில் சுரங்கம் அமைத்து பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுவுவதை தடுக்க, முதன்முறையாக எல்லை பாதுகாப்புப்படையினரால் ரேடார் பொருத்தப்பட்ட டிரோன்கள் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு பகுதியில் நிலத்தடி சுரங்கப்பாதைகளின் அச்சுறுத்தலை தொழில்நுட்ப ரீதியில் எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பி.எஸ்.எஃப். மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். தற்போது பயன்படுத்தப்படும் ரேடார்கள் இந்திய தயாரிப்பு என்றும், அவை வலுவான ரேடியோ அலைகளை வெளியிடுவதன் மூலம் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதைகள் இருப்பதை உறுதிசெய்து, அதன் நீளத்தை … Read more

பாஜ ஆளும் மாநிலத்திலும் நடை பயணத்திற்கு ஆதரவு: அரியானாவில் ராகுல் பேட்டி

கர்னல்: பாஜ ஆளும் மாநிலங்களிலும் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு அமோக ஆதரவு கிடைப்பதாக ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் பல்வேறு மாநிலங்களை கடந்து, அரியானாவில் கடந்த வியாழக்கிழமை நுழைந்தது. அங்கு, குருஷேத்ரா நகரில் கடும் குளிருக்கு மத்தியில் நேற்று காலை 6 மணிக்கு யாத்திரை தொடங்கியது. அப்போது வெறும் டிசர்ட் அணிந்தபடி குளிரில் நடந்து வந்த ராகுலை உற்சாகப்படுத்த இளைஞர்கள் பலரும் தங்களின் சட்டையை … Read more

முழு அதிகாரம் இல்லாததால் எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கைகளை… முதல்வர் ரங்கசாமி கவலை!

புதுச்சேரி முழுமையான அதிகாரம் உள்ள மாநிலம் அல்ல என்பதால் பேரவையில் எம்.எல்.ஏக்கள் கூறும் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது என முதல்வர் ரங்கசாமி கவலை தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பதாக அந்த தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஏனாமில் நடைபெற்ற கலாச்சார விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ரங்கசாமி பேசியபோது… எங்களது அரசை பொருத்தவரை மாநிலத்தின் எல்லா … Read more

என்ன மனுஷங்கடா நீங்க… அண்ணன் தம்பி போல் நினைத்து பழகிய 15 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..!!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மில்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது பழைய இரும்புக்கடையில் வேலை பார்த்து வந்த 27 வயது இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த இளைஞர் சிறுமியை ஒரு நாள் அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் யாருமில்லாததை பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது போல … Read more

ஜோஷிமத் நகர நிலவெடிப்பு பிரச்சினை குறித்து உத்தராகண்ட் முதல்வருடன் பிரதமர் ஆலோசனை

ஜோஷிமத்: ஜோஷிமத் நகர பிரச்சினை குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம், பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயிலாகும். வீடுகள், விடுதிகள், ஓட்டல்கள் உட்பட சுமார் 4,500 கட்டிடங்கள் ஜோஷிமத் நகரில் உள்ளன. சுமார் 30,000 பேர் வசிக்கின்றனர். கடந்த டிசம்பர் இறுதியில் ஜோஷிமத் நகரின் பல்வேறு வீடுகள், வணிக நிறுவன கட்டிடங்களில் மிகப்பெரிய … Read more

ஜோசிமத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகளில் திடீர் விரிசல்.. விரிசலை அடுத்து வீடுகளை விட்டு வெளியேறி வரும் ஜோசிமத் மக்கள்!

உத்தரகாண்ட்டின் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஜோசிமத் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் ஆபத்தானவை என்று அரசு அறிவித்ததையடுத்து, உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகின்றனர். அங்குள்ள சுமார் 4 ஆயிரம் வீடுகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டு படிப்படியாக மண்ணுக்குள் புதைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அடுத்து எங்கே குடிபெயர்வது என்று தெரியாமல் பரிதவிக்கின்றனர். இதனிடையே உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் … Read more

தேசிய கொடிக்கு பதில் காவி கொடி மெகபூபா பகல் கனவு காண்பதாக பாஜ பதிலடி

ஸ்ரீநகர்: தேசிய கொடிக்கு பதிலாக காவி கொடியை பாஜ மாற்றிவிடும் என கருத்து தெரிவித்த மெகபூபா முப்திக்கு பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது.  காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, ‘‘காஷ்மீரில் அரசியல் சாசனத்தை அழித்தது போல, ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியல் சாசனத்தையும் அழிக்க பாஜ தயாராகி வருகிறது. இப்படியே போனால் அவர்கள் தேசியக் கொடிக்கு பதிலாக காவிக் கொடியை பறக்கவிடுவார்கள்’’ என்றார். இதற்கு பதிலடி … Read more

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சூடானில் இந்திய பெண் போலீஸ் படை முகாம்

நியூயார்க்: கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் உள்ளது. இங்கிலாந்தும் எகிப்தும் இணைந்து அந்த நாட்டை ஆட்சி செய்து வந்தன. கடந்த 1956-ம் ஆண்டில் சூடான் விடுதலை அடைந்தது. அதன்பிறகு வடக்கு சூடான் பகுதி மக்களுக்கும் தெற்கு சூடான் பகுதி மக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டில் தெற்கு சூடான் தனிநாடாக உதயமானது. சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அப்யேய் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி … Read more