ஊழியர்கள் க்ரீன் கார்டு பெறுவதை முடக்கிய கூகுள்..!

கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்து வருவதோடு, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் ஊழியர்கள் அமெரிக்காவின் க்ரீன் கார்டு பெறுவதற்கான செயல்முறையை முடக்கி வருவது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிற்கு பணிக்குச் செல்வோர் அந்நாட்டின் பிரேம் எனப்படும் தொழிலாளர் துறையின் சான்றிதழைப் பெற வேண்டும். இந்நிலையில், பிரேம் தொடர்பாக ஊழியர்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும், இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம் என்று ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. … Read more

கேரளாவில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாமிநாதன் நேரில் ஆய்வு..!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்தில் இன்று (23.01.2023) பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வின்போது, செய்தி … Read more

போதையில் பெங்களூரு உணவகத்தில் பிரியாணி ஆர்டர் செய்த மும்பை பெண்! எகிறிய பில்; க்ளைமேக்ஸ்?

போதையில் இருந்த மும்பை பெண் ஒருவர் பெங்களூருவிலுள்ள ஒரு பிரபல பிரியாணி உணவகத்தில் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு உணவும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. என்ன மும்பையில் வசிக்கும் பெண்ணுக்கு பெங்களூருவில் இருந்து உணவு டெலிவரி செய்யப்பட்டதா! ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா! வாருங்கள் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். இந்தியாவை பொருத்தவரை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளில் டாப் லிஸ்ட்டில் இருப்பது பிரியாணிதான். இதனை கடந்த ஆண்டு சொமேட்டோ தரவுகளும் உறுதிசெய்திருக்கிறது. மேலும் ஸ்விக்கியிலும் கடந்த … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக ‘துல்லியத் தாக்குதல்’ நடத்தியற்கு ஆதாரம் இல்லை: திக்விஜய் சிங்

ஜம்மு: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தியற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”பாகிஸ்தானுக்குள் சென்று சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொய்களின் உதவியுடன் பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த நாடு நம் அனைவருக்குமானது என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். புல்வாமா … Read more

‘கோயில்களில் மணி அடித்தவர்கள்..’- உ.பி. முதல்வரை பொளந்த பீகார் அமைச்சர்.!

பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் கடந்த ஜனவரி 11ம் தேதி நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே ஆற்றிய உரையில், ‘‘ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்ட ராமசரித்மானஸ் கவிதை சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது. ராம்சரித்மனாஸின் சில பகுதிகள் மீண்டும் குறிப்பிட்ட சாதியினருக்கு பாகுபாடு காட்டுகிறது. ராம்சரித்மனாஸுக்கு ஏன் எதிர்ப்பு வந்தது? கல்வியைப் பெற்ற பின் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பாம்புகளைப் போல ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும் என்று அது கூறுகிறது. ‘ராம்சரித்மனாஸ்’ மற்றும் ‘மனுஸ்மிருதி’ சமூகத்தை … Read more

கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் விரைவில் நலம் பெற வேண்டி சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மகாகாளீஸ்வரர் கோயிலில் பிரார்த்தனை

உஜ்ஜைன்: கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விரைவில் நலம் பெற வேண்டி இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உஜ்ஜைனில் உள்ள மகாகாளீஸ்வரர் கோயிலில் பிரார்த்தனை செய்தனர்  செய்தனர்.   இந்தூரில் நாளை நடைபெற உள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி, 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் மிகவும் பிரசித்தி … Read more

"எனக்கு இரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் தருவேன்!" – நேதாஜியும், உலகப் பயணங்களும்!

சுபாஷ் சந்திர போஸ் 23 ஆம் தேதி, ஜனவரி மாதம் 1897 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயம், ஒரிசா மாநிலம் கட்டாக்கில் ஒரு பெரிய செல்வச்செழிப்பான பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் “ஜானகிநாத் போஸ்” தாயின் பெயர் “பிரபாவதி” ஆவார். இவர்கள் இருவருக்கும் ஒன்பதாவது மகனாக இவர் பிறந்தார். ஆங்கிலோ சென்ட்ரிக் கல்வியை ஆரம்பகாலமாகப் பெற்றார் சுபாஷ். இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வ பக்தி மிக்கவராகவும் … Read more

“அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன்” – மகாராஷ்ட்டிர ஆளுநர் அறிவிப்பு

மும்பை: அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக விரும்பவதாகவும், இதனை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்திருப்பதாகவும் மகாராஷ்ட்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மும்பை வந்திருந்தபோது, அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். எஞ்சி இருக்கும் எனது வாழ்வை படிப்பது, எழுதுவது உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அன்பையும் பரிவையும் தொடர்ந்து … Read more

மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்க கோஷ்யாரி வலியுறுத்தல்

மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்குமாறு பகத் சிங் கோஷ்யாரி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடி மும்பை வந்தபோது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலக ஆளுநர் கோஷ்யாரி விருப்பம் தெரிவித்ததாகவும், எஞ்சியுள்ள வாழ்க்கையை எழுதவும், படிக்கவும், சமூக செயல்பாடுகளில் ஈடுபடவும் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு; 3 நீதிபதிகள் அமர்வுக்கு விரைவில் ஒப்புதல்: சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அறிவிப்பு

புதுடெல்லி: கடந்தாண்டு பிப். 5ம் தேதி கர்நாடக அரசு, கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்த‌து. இதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. இதற்கிடையே இந்த தடையை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு, ‘ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே, கல்வி நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்’ என்று உத்தரவிட்டது. இதை … Read more