“எவ்வளவு காலம் கரோனா, உக்ரைனுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பீர்கள்” – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: கரோனா, உக்ரைன் போன்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் எவ்வளவு காலம்தான் ஒளிந்துகொண்டிருப்பீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் வானொலி உரையைச் சுட்டிக்காட்டி பேசினார். 2022 மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருந்ததாகவும் நரேந்திர மோடி கூறியதை சுட்டிக்காட்டிய கவுரவ் வல்லப், “பட்டினி குறியீட்டில் இந்தியா … Read more

OBC இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் நடத்த தடை – முதல்வர் ஆதித்யநாத்துக்கு பின்னடைவு!

உத்தர பிரதேச மாநிலத்தில், ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது எனக் கூறி அம்மாநில அரசின் அறிவிப்பை, அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, நான்கு மாநகராட்சி … Read more

திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்: தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் அறிவிப்பு

திருப்பதி: “ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்’ என்று தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார்.

போனில் பேச மறுத்ததாக கூறி இளம்பெண்ணை 51 முறை குத்தி கொன்ற கொடூர இளைஞர்!

சத்தீஸ்கரில் தன்னிடம் பேச மறுத்த 20 வயது பெண்ணை 51 முறை ஸ்க்ரூட்ரைவரால் குத்தி கொலைசெய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம், கோப்ரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜாஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த குற்றவாளி, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்துள்ளார். அப்போது தினமும் அந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண்ணிடம் நட்புகொண்டார். பின்னர் அங்கிருந்து வேலை நிமித்தமாக அகமதாபாத் சென்ற அந்த நபர், தொடர்ந்து அந்த பெண்ணிடம் செல்போனில் … Read more

மைசூரு அருகே சாலை விபத்து: பிரதமர் மோடியின் சகோதரர் குடும்பத்தினருக்கு லேசான காயம்

மைசூரு: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார், கர்நாடகாவின் மைசூரு அருகே விபத்துக்குள்ளானதில் அவர்கள் காயமடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரரான பிரஹலாத் மோடி, மகன், மருமகள், பேரக்குழந்தை ஆகியோருடன் மைசூரு அருகே காரில் சென்றுள்ளார். காரை வேறு ஒருவர் ஓட்டி உள்ளார். பந்திபூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார், இன்று (டிச. 27) நண்பகல் 1.30 மணி அளவில் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியது. விபத்து நேரிட்டபோது … Read more

விபத்தில் சிக்கிய மோடியின் தம்பி; பாஜ வட்டாரத்தில் பரபரப்பு!

இந்திய பிரதமராக இருப்பவர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி (Narendra Damodardas Modi). மேலும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராகவும் பிரதமர் மோடி இருந்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தார். தாமோதர் தாஸ் முல்சந் மோடி மற்றும் கீரபேன் தம்பதிக்கு பிறந்த 6 குழந்தைகளில் நரேந்திர மோடி 3வது குழந்தையாக பிறந்தவர். நரேந்திர மோடி ஏற்கனவே அக்டோபர் 7, 2001 முதல் மே 22, 2014 வரை … Read more

மும்பையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அம்மை நோயின் பாதிப்பு அதிகரிப்பு..!

மும்பையில் அம்மை நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இங்கு அம்மை நோய் பரவி வருகிறது. மகராஷ்ட்ரா மாநிலம் முழுவதும் தொற்று எண்ணிக்கை 1, 162 ஆக உள்ளது. இதில் மும்பையில் மட்டும் அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 514 ஆக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக இருந்தது. அம்மை நோயால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப் படுவதாகவும், தும்மல் மற்றும் இருமல் மூலம் பரவும் … Read more

இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகளுக்கு ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம்

டெல்லி: இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகளுக்கு ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் அளித்துள்ளது. அரசின் அங்கீகாரத்தை அடுத்து நாட்டில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மின்னணு விளையாட்டும் போட்டியாக கருதப்படும் என்று கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்து புதன்கிழமை வீடு திரும்புகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (புதன்கிழமை) டிஸ்சார்ஜ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 63 வயதாகும் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மதியம் 12 மணிக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் … Read more

பீகாரில் தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக திருமணம் செய்து கொண்ட மகள்

பீகார்: தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது மகள் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் கயா பகுதியை சேர்ந்த பூனம் இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இதனை இடையே அவரது மகள் ஷாந்தினிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. தனது கண்முன்னேயே தனது மகளின் திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்புவதாக பூனம் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதை அறிந்த ஷாந்தினி தாயின் ஆசையை … Read more