கலப்பட பால் விற்ற வழக்கில் 32 ஆண்டுக்கு பின் 6 மாத தண்டனை

முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் கபீர் சிங் என்பவர் கலப்பட பால் விற்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பால் ஆய்வக சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் அவர் கலப்பட பால் விற்றது உறுதியானது. இது தொடர்பாக உணவுப்பொருள் ஆய்வாளர் சுரேஷ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கபீர் மீது 1990ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி வழக்கு பதியப்பட்டது. இதனை விசாரித்த கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பிரசாந்த் குமார் கபீருக்கு 6 மாத சிறைத் தண்டனை, … Read more

காவல் துறை வேலைவாய்ப்புகளில் போலீஸாரின் வாரிசுகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: தமிழக போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல் துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் மன உறுதி, விசுவாசம், நேர்மையை ஊக்கப்படுத்தும் வகையில், போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல்துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனடிப்படையில், … Read more

71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல் அரசுப்பணி நியமன செயல்முறை ஒன்றிய அரசு சீர்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு ஒன்றிய அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி, ‘‘பாஜ ஆட்சியில் அரசுப்பணி ஆட்சேர்ப்பு செயல்முறை சீர் செய்யப்பட்டு, வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார். வரும் 2024ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்து, 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். இதைத் தொடர்ந்து, கடந்த … Read more

பணியாளர் தேர்வாணைய தேர்வை இனி தமிழில் எழுதலாம்: ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் குரூப் பி மற்றும் டி பிரிவு பதவிகளுக்கு  அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளின் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல்முறையாக எஸ்எஸ்சி நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் உள்பட 13 மொழிகளில் … Read more

பீகார் அரசுக்கு எதிரான மனு சாதிவாரி கணக்கெடுப்பு வழக்கை விசாரிக்க மறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் வருண்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. குறிப்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாடாளுமன்றத்தால் மட்டுமே செய்யக் கூடியதாகும். அதனால் சட்ட விதிமுறைகளை மீறி … Read more

லீனா மணிமேகலை கைது நடவடிக்கை உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: லீலா மணிமேகலையின் காளி ஆவணப்படத்துக்கு எதிராக டெல்லி, உபி, மபி, உத்தரகாண்ட் ஆகிய மாநில காவல் நிலையங்களில் கிரிமினல் சதி, வழிபாட்டு முறைகளில் குற்றத்தை தூண்டுதல், மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு  செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட எப்.ஐ.ஆர்களுக்கு எதிராக லீலா மணிமேகலை தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘லீலா மணிமேகலை … Read more

பிரதமர் மோடி அரசுக்கு எதிராக காங். குற்றப்பத்திரிக்கை

கதுவா: பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் குற்றப்பத்திரிக்கை தயாரித்துள்ளதாகவும், அதனை இன்று வெளியிடுவதாகவும் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘ராகுல்காந்தி தலைமையிலான ஒற்றுமை யாத்திரையானது பாஜ-ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துக்கு இடையேயான போராட்டமாகும். பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் குற்றப்பத்திரிக்கையை தயாரித்துள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையை டெல்லியில் சனிக்கிழமை(இன்று) … Read more

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து, கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி, டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த சங்கர் மிஸ்ரா என்பவர் போதையில் அருகில் அமர்ந்து இருந்த பெண் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க விமானப் போக்குவரத்து இயக்குனரக (டிஜிசிஏ) விதிகளின் கீழ், ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 உறுப்பினர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு சங்கர் மிஸ்ரா ஏர் இந்தியா விமானத்தில் செல்ல 4 … Read more

குழந்தை பிறந்தால் மகிழ்ச்சிதானே அடைவார்கள் – ஆற்றில் குதித்த தொழிலதிபர்! திருந்தாத சமூகம்!

தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்ததால், தொழிலதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வாசுதேவ் பாட்லே. தொழிலதிபரான வாசுதேவ் பாட்லேவுக்கு திருமணமாகி 6 மற்றும் 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே, பாட்லேயின் மனைவி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மனைவிக்கு மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் வாசுதேவ் மிகுந்த … Read more

ரோஜ்கர் மேளா திட்டத்தில் அரசுத்துறைகளில் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி..!

ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும்  பல்வேறு அரசுத்துறைகளில்  71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று வழங்கினார். ரோஜ்கார் மேளா திட்டத்தில் கடந்த அக்டோபர் மாதல் முதற்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கப்பட்டநிலையில், இன்று இரண்டாம் கட்டமாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து ஜூனியர் பொறியாளர்கள், லோகோ பைலட்கள், டெக்னீஷியன்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், … Read more