வரும் 26ம் தேதி மைசூருவில் நடக்கிறது நடிகருடன் ஹரிப்பிரியா காதல் திருமணம்

பெங்களூரு: கன்னட முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹரிப்பிரியாவுக்கும், பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள கன்னட நடிகரும், பின்னணி பாடகருமான வசிஷ்டா சிம்ஹாவுக்கும் வரும் 26ம் தேதி மைசூருவில் திருமணம் நடக்கிறது. கடந்த 2007ல் துளு மொழி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், ஹரிப்பிரியா. இதையடுத்து கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களில் நடித்தார். தமிழில் கரணுடன் ‘கனகவேல் காக்க’, அர்ஜூனுடன் ‘வல்லக்கோட்டை’, சேரன் மற்றும் பிரசன்னாவுடன் ‘முரண்’, சசிகுமாருடன் ‘நான் மிருகமாய் மாற’ ஆகிய படங்களில் … Read more

திருமலையில் தங்கும் அறைகளின் வாடகை உயர்வு

திருமலை: திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 7,000 அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது. இந்நிலையில் கவுஸ்தபம், நந்தகம், பாஞ்ச ஜன்யம், வகுலமாதா தங்கும் அறைகள் ரூ. 600 லிருந்து ரூ. 1000 ஆக வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. இம்மாதம் 1ம் தேதி முதல் நாராயணகிரி தங்கும் விடுதிகளில் ரூ. 150-ல் இருந்து ரூ. 750 ஆக வாடகை உயர்த்தப்பட்டு உள்ளது. நாராயணகிரி- 4 விடுதிகளில் ஒவ்வொரு அறையும் ரூ.750-ல்இருந்து ரூ. 1,700 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கார்னர் சூட் வாடகை ரூ. … Read more

திருப்பதியில் கட்டணம் உயர்வு: பக்தர்கள் ஷாக்!

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. அந்த வகையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்க வசதியாக திருமலையில் 7,000 அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. அறைகளின் வசதிக்கு ஏற்ப அதற்கான வாடகை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இதனிடையே, சேதமடைந்த அறைகள் ரூ.110 கோடி செலவில் திருமலை தேவஸ்தானம் சார்பில் அண்மையில் சீரமைக்கப்பட்டன. இந்த நிலையில், திருப்பதி திருமலையில் பக்தர்கள் தங்கும் அறைகள் … Read more

ஆண்ட்டிகளை குறிவைக்கும் சீரியல் கில்லர்… இதுவரை 3 கொலை – அச்சத்தில் மக்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் வசிப்பவர்கள், வயதான பெண்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தும் கொலைகாரன் அலைந்து திரிவதால் பீதியிலும் அச்சத்திலும் சிக்கித் தவிக்கின்றனர். கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வயதான பெண்களைக் குறிவைத்து அவர்களைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கொலையாளியைத் தேட 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று பாராபங்கி காவல்துறை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர், மேலும் தொடர்ந்து கொலைகளை செய்பவர் என கூறப்படும் நபர் … Read more

முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்: 2 கட்டங்களாக நடக்கிறது

பாட்னா: பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார். பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை இருந்து வருகிறது. இதற்காக அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு பணியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் நேற்று தொடங்கி வைத்தார்.  இந்த கணக்கெடுப்பு பணிக்காக பீகார் அரசு ரூ.500 கோடியை ஒதுக்கி உள்ளது. இதன்படி, … Read more

இரண்டாவதும் பெண் குழந்தையா? தாய் எடுத்த கொடூர முடிவு – மகாராஷ்டிராவில் பயங்கரம்!

இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் ஏமாற்றமடைந்த தாய் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்  லத்தூர் அருகே உள்ள உஸ்மானாபாத்தில் வசித்துவரும் 25 வயதான பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அந்த பெண் இரண்டவதாக கர்ப்பமானாதை அடுத்து, தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் அவர் இருந்துள்ளார். இந்த நிலையில் பிரசவ வலி எடுத்து அந்தப் பெண் காசர் ஜவாலா கிராமத்தில் உள்ள … Read more

கேரளா | ஆன்லைனில் ஆர்டர் செய்து பிரியாணி சாப்பிட்ட 19 வயது மாணவி உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆன்லைனில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார். காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் அனுஸ்ரீ பார்வதி (19). இவர்காசர்கோடு மாவட்டம் மஞ்சீஸ்வரத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி அவரது குடும்பத்தினர் ஆன்லைன் வாயிலாக பிரியாணி வாங்கினர். இந்த பிரியாணியை அனுஸ்ரீ, அவரது தாய் அம்பிகா, தம்பி ஸ்ரீகுமார் மற்றும் 2 உறவினர்கள் சாப்பிட்டனர். அவர்கள் அனைவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உள்ளூர் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை … Read more

பூமிக்குள் புதையும் ஜோஷிமத்: என்ன காரணம்? – மத்திய அரசு நிபுணர் குழு அமைப்பு!

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் ஆங்காங்கே நிலவெடிப்புகள் ஏற்பட்டு, சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் 600 கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. மேலும், ஜோஷிமத் நகரில் உள்ள ஒரு கோயில் இடிந்து விழுந்துள்ளது. ஜோஷிமத் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள கர்ணபிரயாக் நகரிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் விரிசல் விழுந்த தங்களது வீடுகளை … Read more

திறப்பு விழா தேதி அறிவிப்பு அயோத்தி ராமர் கோயில் பூசாரியா அமித்ஷா?: கார்கே காட்டமான கேள்வி

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா தேதி அறிவித்த அமித்ஷா கோயில் பூசாரியா என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.அயோத்தி  ராமர் கோயிலின் கட்டுமான பணி முடிந்து 2024 ஜனவரி 1ம் தேதி கோயில்  திறக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  கூறினார். இதுதொடர்பாக ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர்  சம்பத் ராய்  அளித்த பேட்டியில், ‘அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தியன்று கோயில் கருவறையில் ராமர்  சிலை நிறுவப்படும். தொடர்ந்து … Read more

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் தாயாரை சுட்ட 16 வயது சிறுமி – கைதுசெய்து போலீசார் விசாரணை

தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு முன் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞரின் தாயாரை, 16 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பஜன்பூரா சுபாஷ் மொகலா பகுதியில் 50 வயது பெண் ஒருவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் இவரது கடைக்கு வந்த 16 வயது சிறுமி ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அந்த 50 … Read more