பட்ஜெட் தொடருக்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றம்?

புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தலின் அரை இறுதி போட்டியாக இந்த ஆண்டு நடைபெற உள்ள 10 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் அமைந்துள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அமைச்சரவையை மாற்றி அமைக்க விரும்புகிறது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்கூட்டத் தொடருக்கு முன்பாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சமீபத்தில் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த குஜராத் மாநில பாஜக.வினருக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. … Read more

கொரோனா தொற்று: இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை அந்தந்த நாட்டு அரசுகள் முனைப்புடன் செயல்படுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. அதேசமயம், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், கொரோனாவின் புதிய திரிபுகளும் உருவாகி அச்சுறுத்தி வருகின்றன. அண்மையில் கூட, அதிவேகமாக பரவி … Read more

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்: தலைமை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று வந்த அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் கலந்து கொண்ட இரண்டுநாள் மாநாடு நேற்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு கலந்து கொண்டார். இந்நிலையில் இந்த மாநாடு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மாநாட்டில் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை மேலும் மேம்படுத்த வேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டும் என வலியுறுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் சன்னதியில் ஓய்வு பெற்ற பேராசிரியையின் சலங்கை ஒலி -மெய் சிலிர்த்த பக்தர்கள்

சபரிமலை சன்னதியில் 60 வயது ஓய்வு பெற்ற பேராசிரியையின்  பாரம்பரியமிக்க பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. திரளான ஐயப்ப பக்தர்கள் சுதியும் லயமும் சேர்ந்த சலங்கை ஒலி நாட்டியம் கண்டு மெய் சிலிர்த்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கரிக்கோடு பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி விஜயலட்சுமி. 60 வயது நிரம்பிய இவர் கொல்லம் டி.கே.எம். பொறியியல் கல்லூரியின் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியை ஆவார். இளமையிலேயே முறைப்படி பரதநாட்டியம் கற்ற காயத்ரி விஜயலட்சுமி, குடும்ப சூழல் காரணமாக … Read more

முதல் முறையாக இந்தியா – ஜப்பான் கூட்டு விமான பயிற்சி

முதல் முறையாக இந்தியா – ஜப்பான் கூட்டு விமான பயிற்சி வரும் 12ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, ஜப்பான் விமானப்படைகள் பங்கேற்கும் முதல் இருதரப்பு போர் விமான பயிற்சி வரும் 12ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, ஜப்பான் நாடுகளின் விமானப் படைகள் முதல் முறையாக ‘வீர் கார்டியன் 2023’ எனும் போர் விமானங்கள் கூட்டு பயிற்சியை நடத்த உள்ளன. ஜப்பானின் ஹைகுரி விமான தளத்தில் வரும் 12ம் தேதி தொடங்கும் இப்பயிற்சி வரும் 26ம் தேதி வரை … Read more

மென்பொருள் தயாரிப்பு மையமாக இந்தியா மாற வேண்டும்

இந்தியா மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த 7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இதில் டிஜிட்டல் நிர்வாகத்துறையில் சிறந்து விளங்கிய 22 அரசு நிறுவனங்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி, இந்தியா, மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும் என கூறினார். உலக அரங்கில் நாட்டின் மதிப்பை … Read more

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த வழக்கு – பெங்களூருவில் ஷங்கர் மிஸ்ரா கைது

பெங்களூரு: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த நவ. 26-ம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 72 வயது பெண்மணி ஒருவர் பயணித்தார். அவருடன் அதே விமானத்தில் பயணித்த ஷங்கர் மிஸ்ரா (32), 72 வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். முதலில் இப்பிரச்சினை இருதரப்பினர் இடையே பேசி தீர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து அந்தப் பெண்மணி, டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதினார். இதற்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை … Read more

மென்பொருள் தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்

புதுடெல்லி: மென்பொருள்  உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற முயற்சிக்க வேண்டும்’ என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அனைத்துப் படிநிலைகளிலும் சிறப்பாக செயல்படும் அரசு சார்ந்த  நிறுவனங்களுக்கு டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 7வது டிஜிட்டல் இந்தியா விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு 22 நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தொழில்நுட்பத்தை … Read more

எதிர்க்கட்சிகள் ஆதரவு இல்லாததால் மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் 3 நாளில் யாத்திரை முடிந்தது

புதுடெல்லி: தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். டிசம்பரில் டெல்லி அடைந்த பின் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பிறகு 9 நாள் இடைவெளிக்கு பின் ஜனவரி 3-ல் மீண்டும் தொடங்கியது. உ.பி.யில் நுழைந்த ராகுல், அதன் மேற்குப்பகுதி மாவட்டங்கள் வழியாக வெறும் 3 நாளில் கடந்துள்ளார். இம்மாநிலம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருப்பதுடன் அவரது முன்னாள் தொகுதியான அமேதி மற்றும் சோனியாவின் ரேபரேலியையும் … Read more

அரியவகை நோய் சிகிச்சைக்கு ரூ.50 லட்சம் அறிவிப்பால் யாருக்கும் பயன் இல்லை: ஒன்றிய அமைச்சருக்கு வருண் காந்தி கடிதம்

புதுடெல்லி: அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரூ.50 லட்சம் உதவித்தொகை திட்டத்தில் யாரும் பயனடையவில்லை என்று பாஜ எம்பி வருண் காந்தி கூறியுள்ளார். ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு வருண் காந்தி எம்பி கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை  அனைத்து வகையான அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சைக்கு ரூ.50 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை எந்த ஒரு நோயாளியும் … Read more