பீகாரில் 17 மாநகராட்சி, 68 நகராட்சிகளுக்கு 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

பாட்னா: பீகாரில் இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் – இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் வாக்குகள் 20ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் … Read more

‘ஃபேக் ஐடி’யால் வந்த வினை: கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்காவை அடுத்த வடசேரிகோணம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ். இவரது மகள் சங்கீதா (17). கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் சங்கீதாவும், பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த கோபு (20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, காதலர்களுக்கு இடையே சிறுசிறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. தனது காதலி வேறு யாருடனாவது பழகுகிறாரா? என்பதை அறிய வேண்டும் என்று எண்ணிய கோபு, கொடூர திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதன்படி கோபு, சமூகவலைதளத்தில் ‘அகில்’ என்ற பெயரில் … Read more

#JUST IN : பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபா மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து வருவதாகவும், அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தாய் ஹீராபென் மோடியை மருத்துவமனையில் சென்று பார்ப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  முன்னதாக செவ்வாய்க்கிழமை, கர்நாடகா மாநிலம் மைசூரில் … Read more

''ராவணனின் பாதையை பின்பற்றுகிறது பாஜக'': காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் விமர்சனம்

புதுடெல்லி: ராவணனின் பாதையை பாஜக பின்பற்றுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்து கடந்த திங்கள் கிழமை பேசிய சல்மான் குர்ஷித், வட இந்தியா குளிரில் நடுங்கும் நிலையில் வெறும் டி. ஷர்ட் மட்டும் அணிந்து கொண்டு ராகுல் காந்தி யாத்திரையை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். பகவான் ராமரைப் போல தெய்வீக குணத்துடன் ராகுல் காந்தி இருப்பதை இது காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். சல்மான் குர்ஷித்தின் இந்த … Read more

பயங்கரவாதிகள் – பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச்சண்டை.. பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை..!

ஜம்முவில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்முவின் புறநகர் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற டிரக்கை காவலர்கள் சோதனை செய்த போது, அதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். Source link

பிரதமர் மோடி தாயார் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

அகமதாபாத்: பிரதமர் மோடி தாயார் ஹீராபென் மோடி உடல்நிலை சீராக உள்ளதாக யு.என். மேத்தா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் பிரதமர் மோடி மருத்துவமனைக்கு சென்று தாயாரை சந்திப்பார் என கூறப்படுகிறது.

'எல்லா விதத்திலும் மக்கள் சிரமப்படுகின்றனர்'- மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

காங்கிரஸ் கட்சியில் 138-வது தொடக்க நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.விழாவில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து கார்கே பேசுகையில் , சுதந்திரத்திற்குப் பிறகு 75 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் பயணம் நவீன இந்தியாவின் கதையைச் சொல்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு வெற்றிகரமான மைல்கல்லிலும் காங்கிரஸின் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் வெற்றிகரமான மற்றும் வலுவான ஜனநாயக நாடாக மாறியது மட்டுமல்லாமல், சில தசாப்தங்களில் பொருளாதாரம், அணுசக்தி, ஏவுகணை மற்றும் மூலோபாய துறையில் … Read more

உம்மன் சாண்டி மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை: சிபிஐ

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என சிபிஐ தெரிவித்துள்ளது. 2012ல் கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகாரில் உண்மையில்லை என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. எனினும், … Read more

ஆமா, புல்லட்ட எங்கயா போடுற? குண்டு போட தெரியாத போலீஸ்… உ.பி.,யில் ஆடிப் போன டிஐஜி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் துப்பாக்கியில் தோட்டாவை லோட் பண்ண தெரியாமல் எஸ்.ஐ ஒருவர் உயர் அதிகாரியிடம் சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பெரிதும் வைரலாகி கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தின் சந்த் கபிர் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு டிஐஜி ஆர்.கே.பரத்வாஜ் திடீரென ஆய்விற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்களிடம் துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி கேள்வி எழுப்பினார். டிஐஜி திடீர் ஆய்வு பின்னர் அதனை பயன்படுத்திக் காட்டுமாறு உத்தரவிட்டார். அப்போது, எஸ்.ஐ ஒருவர் துப்பாக்கியை எடுத்து வந்தார். … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம்

டெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்கும் மக்கள் மற்றும் தலைவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 24ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டது. அதில் டெல்லி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கடித்ததில் குற்றச்சாட்டியுள்ளார். அடுத்தகட்ட … Read more