சிக்கிமில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம்

கேங்டாக்: சிக்கிமில் உள்ள மேல் ரிம்பி பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேற்கு சிக்கிம் மாவட்டத்தின் யாங்தாங் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது சேறும், பாறைகளும் அவர்களின் வீட்டைத் தாக்கின. அவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், நான்காவது நபர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தார். ஹியூம் நதியின் மீது தற்காலிக மரப் பாலம் அமைத்து காயமடைந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக மூத்த … Read more

சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்: துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிஜப்பூரில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் இரண்டு மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிகள், பிற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. மேலும், துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (வியாழக்கிழமை), சத்தீஸ்கரின் கரியாபந்தில் பாதுகாப்புப் படையினர் 10 … Read more

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்: நிகழ்ச்சியில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு

புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்றது கவனம் பெற்றது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினமா செய்தார். இதை அடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாராஷ்டிர ஆளுநராக … Read more

தெலங்கானாவில் தொடர் கனமழை மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. ஹைத​ரா​பாத் போன்ற நகரங்​களில் தொடர் மழை​யால் மக்​களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. சாலைகளில் மழை நீர் ஆங்​காங்கே தேங்​கிய​தில் முக்​கிய சாலைகள் உட்பட பல இடங்​களில் வெள்​ளம் போல் காட்​சி​யளிக்​கிறது. இதனால் வாகன ஓட்​டிகள் மிக​வும் அவதிக்​குள்​ளாகி உள்​ளனர். விஜய​வாடா – ஹைத​ரா​பாத் தேசிய நெடுஞ்​சாலை​யில் மழை … Read more

புலியைப் பிடிக்காததால் கிராம மக்கள் ஆத்திரம்: கர்நாடகாவில் 7 வனத் துறையினர் கூண்டில் அடைப்பு

பெங்களூரு: கர்​நாட​கா​வில் உள்ள பந்​திப்​பூர் அரு​கே​யுள்ள வனப்​பகு​தி​யில் புலியை பிடிக்​காமல் அலட்​சி​ய​மாக செயல்​பட்​ட​தாக, வனத்​துறை​யினர் 7 பேரை கூண்​டில் அடைத்து கிராம மக்​கள் எதிர்ப்பை வெளிப்​படுத்​தினர். கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ்நகர் மாவட்​டத்​தில் பந்​திப்​பூர் தேசிய வனவிலங்கு காப்​பகம் அமைந்​துள்​ளது. இந்த காப்​பகத்தை சுற்​றி​யுள்ள கிராமங்​களில் கடந்த 6 மாதங்​களில் 20க்​கும் மேற்​பட்ட ஆடு, மாடு​களை புலி, சிறுத்​தைகள் பிடித்து தின்​ற​தால் கோபம் அடைந்​தனர். அதேவேளை​யில் புலிகளை பிடிக்​காமல் வனத் துறை​யினர் அலட்​சி​ய​மாக செயல்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் நேற்று … Read more

இண்டியா கூட்டணி எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி

புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இண்டியா கூட்டணியில் உள்ள 315 எம்.பி.க்களும் இந்த தேர்தலில் வாக்களித்தனர். ஆனால் இந்த அணியில் உள்ள 15 எம்.பி.க்கள், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்ததால் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு என்பதால், யார் அணி மாறி … Read more

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்

லக்னோ: பிஹாரில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் அவமதிக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உ.பி.யில் அவர் செல்லவிருந்த சாலையில் அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் உ.பி.யின் ரேபரேலி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று தனது தொகுதிக்கு பயணம் மேற்கொண்டார். முன்னதாக அவர் ரேபரேலி செல்லவிருந்த சாலையில் உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் பாஜகவினர் போராட்டம் … Read more

இரும்பு தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங். எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா கைது

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் கார்​வார்- அங்​கோலா சட்​டபேர​வைத் தொகு​தி​யின் காங்​கிரஸ் எம்​எல்ஏ சதீஷ் கிருஷ்ணா மீது கடந்த 2010-ம் ஆண்டில் 1.25 லட்​சம் டன் இரும்​புத் தாது சட்ட விரோத​மாக ஏற்​றுமதி செய்​ததாக வழக்கு தொடரப்​பட்​டது. இவ்வழக்கை பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் விசா​ரித்து அபராதம் விதித்​தது. இதையடுத்து சதீஷ் கிருஷ்ணா மீது அமலாக்​கத்​துறை கடந்த மாதம் வழக்​குப்​ப​திவு செய்​தது. இவ்​வழக்கு தொடர்​பாக அமலாக்​கத்​துறை மேற்​கொண்ட விசா​ரணை​யில், சதீஷ் கிருஷ்ணா வரு​மான ம‌ற்​றும் துறை​முக அதி​காரி​களின் ஒத்​துழைப்​புடன் ரூ.86.78 … Read more

இதுவரை குடியரசு துணைத் தலைவராக பெண் இல்லை: முஸ்லிம்களுக்கு 3 முறை வாய்ப்பு

புதுடெல்லி: நாடு சுந்​திரம் அடைந்த பிறகு 1952-ல் நாட்​டின் முதல் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெற்​றது. இதில் சோவி​யத் ஒன்​றி​யத்​தின் தூத​ராக இருந்த தமிழ​ரான சர்​வபள்ளி ராதாகிருஷ்ணன் போட்​டி​யின்றி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். 1957-ல் இரண்​டாவது முறை​யாக இப்​ப​தவிக்கு போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்ட அவர், 1962-ல் குடியரசுத் தலை​வர் பதவியை​யும் அடைந்​தார். 1962-ல் நடந்த குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் பிஹார் ஆளுநர் ஜாகிர் உசேன் காங்​கிரஸ் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டு வெற்றி பெற்றார். சர்​வபள்ளி ராதாகிருஷ்ணனை போலவே ஜாகிர் … Read more

நகர்ப்புற வளர்ச்சியில் புனே நகரம் முதலிடம்: மூன்றாவது இடத்தில் சென்னை

புதுடெல்லி: நகரங்​களில் கட்​டிடங்​கள் அதி​கரிக்​கும் அளவை செயற்​கைக்​கோள் படங்​களை கொண்டு கணக்​கிட்டு ‘ஸ்​கொயர் யார்ட்​ஸ்’ என்ற ரியல் எஸ்​டேட் இணை​யதளம் ஒன்று ‘சிட்​டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்​பில் ஆய்வு ஒன்றை நடத்​தி​யுள்​ளது. இதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: இந்​திய நகரங்​களில் மகா​ராஷ்டிரா மாநிலத்​தில் உள்ள புனே நகரம் கடந்த 30 ஆண்​டு​களில் மிகப் பெரிய வளர்ச்​சியை எட்​டி​யுள்​ளது. நகர்ப்​புற எல்லை பல திசைகளில் விரிவடைந்​து, தற்​போது நகர்ப்​புற வளர்ச்​சி​யில் நாட்​டில் முதல் இடத்தை பிடித்​துள்​ளது. இரண்​டாவது இடத்தை பெங்​களூரு … Read more