டிராக்டர் மீது லாரி மோதி 5 ஐயப்ப பக்தர்கள் பலி: 10 பேர் படுகாயம்

திருமலை: ஐயப்பசுவாமி படி பூஜையில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது டிராக்டர் மீது லாரி மோதியது. இதில் 5 ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர். 10க்கும் அதிகமான பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். ராங்ரூட்டில் டிராக்டர் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் முனகல அருகே உள்ள சாகர் கால்வாயின் இடது கரையில் ஐயப்பசுவாமி கோயில் உள்ளது. சனிக்கிழமையான நேற்றிரவு ஐயப்பசுவாமிக்கு மகாபடி பூஜை நடந்தது. இந்த பூஜையில் அப்பகுதி பக்தர்கள் மற்றும் முனகல கிராமம் உட்பட … Read more

நொய்டாவில் நாய், பூனைகளை பதிவு செய்யாமல் வளர்த்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் – இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவிப்பு

நொய்டாவில் நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகளை பதிவு செய்யாவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் புறநகர் பகுதியான உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வீடுகளில் வளர்க்கும் நாய், பூனையை வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு இல்லாமல் வளர்ப்போருக்கு 10 ஆயிரம் ரூபாயும், குறிப்பிட்ட காலத்தில் தடுப்பூசி, கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளவில்லையெனில், மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமென, இந்திய விலங்கு நல வாரியத்தின் நொய்டா பிராந்தியம் அறிவித்துள்ளது. … Read more

இந்தாண்டில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து 266 ‘ட்ரோன்’கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவல்: பிஎஸ்எப் டைரக்டர் தகவல்

புதுடெல்லி: இந்தாண்டு மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் 266 ட்ரோன்கள் ஊடுருவியதாக எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார். பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பஞ்சாப் மற்றும் ஜம்மு எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது ஆளில்லா விமானங்களில் ஊடுருவல் அதிகமாக உள்ளது. அவ்வப்போது இந்திய பாதுகாப்பு படையினர் அந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினாலும் கூட, பாகிஸ்தானில் இருந்து மேலும் மேலும் ட்ரோன்கள் பறக்கவிடப்படுகின்றன. அந்த ட்ரோன்களில் வெடிபொருட்களும், ரகசிய பொருட்களும் இந்திய எல்லையில் இருக்கும் … Read more

இப்படியும் நடக்குது ஊருக்குள்ள! பணத்திற்காக புது மனைவியை வேறொருவருக்கு விற்ற கணவர்!

தன்னுடைய மனைவியை வேறொரு நபருக்கு கணவரே விற்ற அதிர்ச்சி சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நார்லா பகுதியை சேர்ந்தவர் கிரா பெருக் (வயது 25). இவர் சமீபத்தில்தான் பூர்ணிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கிரா பெருக் தனது மனைவி பூர்ணிமாவை அழைத்துக்கொண்டு வேலை தேடி செல்வதாகக் கூறி டெல்லிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வேறொரு நபருக்கு பூர்ணிமாவை, தன்னுடைய மனைவி என்று கூட பாராமல் பணத்திற்காக விற்றுள்ளார் … Read more

இமாச்சலில் தேர்தலில் 75% வாக்குப்பதிவு: வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து திடீர் சர்ச்சை

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் நேற்று நடந்த தேர்தில் 75% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தை விதிமுறை மீறி தனியார் வாகனத்தில் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர். நேற்றிரவு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘இமாச்சல் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நடந்த … Read more

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 2 நாட்களாக காத்திருக்கும் பக்தர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 2 நாட்களாக காத்திருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாளான நேற்றும், இன்றும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று (சனி) 73,323 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 41.041 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.20கோடியை காணிக்கையாக செலுத்தினர். நேற்று தரிசனம் செய்யாத பக்தர்கள் இன்று 2வது நாளாக காத்திருக்கின்றனர். இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வைகுண்டம் கியூ … Read more

கிழக்கு லடாக்கில் சீனாவின் அச்சுறுத்தல்; நிலைமை கட்டுக்குள் உள்ளது ஆனால் கணிக்க முடியாதது!: இந்திய ராணுவ தளபதி பரபரப்பு பேட்டி

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் சீனாவின் அச்சுறுத்தல் இருப்பதாகவும், ஆனால் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக இந்திய ராணுவ தளபதி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கிழக்கு லடாக் பிரச்னை குறித்து பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 30 மாதமாக இந்த பதற்றம் தொடர்கிறது. இதுகுறித்து இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறுகையில், ‘இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில், டெம்சோக் மற்றும் டெப்சாங் எல்லைப் பிரச்னைகள் குறித்து … Read more

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 7 சதவீதத்துக்கும் கீழ் சரிவு: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல்

டெல்லி: நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில், 7 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். அக்டோபர் மாதத்துக்கான சில்லரை விலை பணவீக்கம் குறித்த தரவுகள், நாளை வெளியாக உள்ளன. இந்தநிலையில், இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம் செப்டம்பரில் 7.41% ஆக உயர்ந்தது. இது அக்டோபரில் 7% க்கும் கீழே குறையும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். செப்டம்பர் மாத பணவீக்க உயர்வுக்கு, உணவு … Read more

அடுத்த 4 நாட்களுக்கு கன மழை… கேரளாவிற்கு ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்!

தமிழகத்தை போலவே கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளா முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக தமிழக – கேரளா எல்லை மாவட்டமான இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, … Read more

'கிட்னியை காணவில்லை' அதிர்ச்சியடைந்த நோயாளி… மௌனம் காக்கும் மருத்துவர்கள்!

உத்தரப் பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் சிறுநீரக பாதிப்பு காரணமாக 53 வயதான சுரேஷ் சந்திரா என்பவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாகவும், அதனை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   இதற்கு ஒப்புக்கொண்ட சுரேஷிற்கு, சிறுநீரக கல் நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின், அவர் வீட்டில் ஓய்வில் இருந்தபோது, அவருக்கு வயிற்றுக்கடியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவருக்கு அல்ட்ராசவுண்ட் … Read more