70,000 ரூபாய் வரை ஆன்லைன் ரம்மியில் இழந்த வடமாநில இளம்பெண் தற்கொலை..!!

ஒரிசா மாநிலம் இந்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25). இவரது மனைவி ஸ்ரீதனா மாஞ்சி (22). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த தம்பதியினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊரில் இருந்து பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வந்தனர். அவர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்து உள்ள கரிவலம்வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினர். அஜய்குமார் மாண்டல் பெருமாள்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து … Read more

gujarat election 2022: கவலை தரும் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

நாடே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அனல் பறக்கும் தேர்தல் … Read more

மிட் டே மீல்ஸ் வேணுமா? ஆதார் கார்டு அவசியம்! ஆனால் ஸ்கூல்ல சேர அது தேவையில்ல

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில், பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை என மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அரசு கொடுக்கும் வசதிகளைப் பெற, மாணவர்கள் சரியான ஆதார் பதிவு வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. விரைவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு பெறும் மாணவர்களின் விவரங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும். அரசு உத்தரவின்படி 2013 ஜனவரி முதல் இந்த விதியை அமல்படுத்துவதுவதாக அரசு தெரிவித்துள்ளது. … Read more

அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் கேரளாவில் காவல் நிலையம் சூறை: உதவி கமிஷனர் உள்பட 30 போலீசார் காயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் கட்டப்பட்டு வரும் அதானி வர்த்தகத் துறைமுகத்திற்கு எதிரான மீனவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்ட லத்தீன் கத்தோலிக்க சபையின் தலைமையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் துறைமுகம் முன் நடந்த போராட்டத்தில் துறைமுக எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் நேரடி மோதலில் ஈடுபட்டனர். கல்வீச்சு மற்றும் தடியடியில் போலீசார் உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறையில் ₹2 … Read more

‘பொய்யர்களின் பிதாமகர் மோடி’- காங்கிரஸ் தலைவர் கடும் சாடல்.!

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 … Read more

காங்கிரசில் இணைந்த குஜராத் முன்னாள் அமைச்சர்: சித்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!

சூரத்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் அம்மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜவை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. … Read more

கணவரைக் கொன்று 10 துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்திய மனைவி, உதவிய மகன் கைது: டெல்லியில் இன்னொரு பயங்கரம்

புதுடெல்லி: டெல்லியில் கணவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை ஃப்ரிட்ஜில் வைத்து அப்புறப்படுத்திய மனைவியும், அதற்கு உடந்தையாக இருந்த மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா எனும் இளம்பெண்ணை அவருடன் சேர்ந்து வாழ்ந்துவந்த அஃப்தாப் என்ற இளைஞர் கொலை செய்து பின்னர் உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி அதனை ஃப்ரிட்ஜில் தேக்கிவைத்து அவ்வப்போது அவற்றை நாய்களுக்கு வீசியெறிந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியே விலகாத நிலையில், அதே பாணியில் கொலை செய்து … Read more

நீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே வலுக்கும் மோதல்; கடுமையாக சாடிய நீதிபதி.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. … Read more

இஸ்லாமிய வெறுப்பு உங்களுக்கு விளையாட்டா? – வகுப்பறையில் ஆசிரியருக்கு பாடம் எடுத்த மாணவர்

இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் எப்போதும், சிறுபான்மையினர் மீது ஒருவித அச்சுறுத்தல் மனப்பான்மை நீடித்துக்கொண்ட இருக்கிறது. அரசியல் காரணங்கள், வியாபார காரணங்கள் என அவர்கள் மீது கட்டமைக்கப்படும் கருத்துருவாக்கங்களுக்கு பல அடுக்குகளாக செயலாற்றுகின்றன.   சமீப காலங்களில், இஸ்லாமியர்கள், தலித்துகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் என்பது அளவிட முடியாத அளவில் உள்ளன. இருப்பினும், கடந்தாண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்பித்த தகவல்களின்படி, 2018ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டுவரை மட்டும், தலித்துகளுக்கு எதிராக நடந்த குற்றங்களின் … Read more

நாடு முழுவதும் பள்ளிகளில் 'சானிட்டரி நாப்கின்கள்' இருப்பதை கட்டாயமக்க கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: நாடு முழுவதும் பள்ளிகளில் ‘சானிட்டரி நாப்கின்கள்’ இருப்பதை கட்டாயமக்க கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்டவை கிடைக்காததன் காரணமாக இந்தியாவில் 23 லட்சம் பெண்கள் படிப்பினை இடைநிறுத்தம் செய்வதாகவும், அதனால், 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்க உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.