300 யூனிட் இலவச மின்சாரம், மோடி மைதான பெயர் மாற்றம்: குஜராத்தில் காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகள்

அகமதாபாத்: அகமதாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள நரேந்திர மோடி மைதானத்தின் பெயர் சர்தார் படேல் மைதானம் என மாற்றப்படும் என்று குஜராத் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 என இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதன் முதல் … Read more

மத்திய பிரதேசத்தில் அட்டகாசம்; இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு தாக்குதல்: நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

உஜ்ஜைனி: மத்தியபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை கட்டர் இயந்திரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இவ்விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் பத்நகர் அடுத்த இங்கோரியா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை, கட்டர் இயந்திரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு கட்டையால் அவரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அடிதாங்காமல் கதறும் இளைஞர், ‘இனிமேல் தவறு செய்யமாட்டேன்’ என்று அலறுகிறார். இவ்விகாரம் ெதாடர்பாக போலீசார் எவ்வித நடவடிக்கையும் … Read more

சத்ரபதி சிவாஜியின் வாளை இந்தியாவிற்கு கொண்டுவர முயற்சி; ரிஷி சுனக் உதவுவாரா?

இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாளை மீட்டுத் தருமாறு மகாராஷ்டிர அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக மாநில கலாசாரத் துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார். ‘2024ல் சிவாஜி மகாராஜின் முடிசூட்டு விழாவான, 350வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவோம். அப்போது அவரது `ஜகதம்பா வாளை’ இங்கிலாந்தில் இருந்து கொண்டு வர விரும்புகிறோம். அந்த வாள் சிவாஜி மகாராஜாவால் தொடப்பட்டது. எனவே இது எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது” என மாநில கலாசாரத் துறை … Read more

“உலகம் நெருக்கடியை சந்திக்கிறது… ஆனால், இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது” – பிரதமர் மோடி

விசாகப்பட்டினம்: உலகம் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சாலை விரிவாக்கம், எண்ணெய், எரிவாயு உள்பட பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.12) விசாகப்பட்டினத்தில் தொடங்கி வைத்தார். மேலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது: “விசாகப்பட்டினம் துறைமுகம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. இங்கிருந்து … Read more

'கொள்ளை அடிக்கும் குடும்ப ஆட்சி..! – கேசிஆர் அரசை கிழித்து தொங்க விட்ட பிரதமர் மோடி!

தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக சாடி உள்ளார். தென்னிந்திய மாநிலங்களில், பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று, கர்நாடக மாநிலத்தின் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்றிரவே ஆந்திர மாநிலத்திற்கு சென்றார். இன்று காலை ஆந்திர மாநிலத்தின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் செல்லும் வழியில், ஐதராபாத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் வந்தார். அங்கு ஏற்பாடு … Read more

மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி மேலாளர் தலைமறைவு

காசியாபாத்: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவியை அதே பள்ளியின் மேலாளர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பள்ளியின் மேலாளரான ஷஹாதத் என்பவர், பள்ளி நேரம் முடிந்ததும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். பள்ளி மேலாளரின் அத்துமீறலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, நடந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் … Read more

மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தமிழில் கற்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அமித் ஷா வேண்டுகோள்

சென்னை: மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தமிழில் கற்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது: “நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை … Read more

இமாச்சலப் பிரதேச தேர்தல் 2022: வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இமாச்சலப் பிரதேச தேர்தலுக்காக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 28.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவுக்கு 50,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிகளுக்கு 25,000 … Read more

இரண்டு ஆண்டுகளுக்குள் ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவத் திட்டம்.. சீனா முட்டுக்கட்டை

ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையை இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறுவ திட்டமிட்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு சீனா முட்டுக்கட்டை விதிப்பதாக இரண்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பன்னாட்டு நிறுவனங்கள் மீது வைரஸ் தொற்று தொடர்பாக சீனா அரசு சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதைத் தொடர்ந்து ஃபாக்ஸ்கான் நிறுவனம் அந்நாட்டு தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. இதன் காரணமாக தனது ஐ போன் 14 சரக்குகள் சப்ளையைக் குறைத்துக் கொள்ள வேண்டிய … Read more

கேரளாவில் 4 நாள் பலத்த மழை: இடுக்கிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கையும், கொல்லம், எர்ணாகுளம் உள்பட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளா முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் … Read more