டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் சிறப்பு உணவு – சொகுசாக வாழ்வதாக பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் சிறப்பு உணவு வழங்கப்படுவது குறித்த வீடியோ தற்போது வைரலாகி உள்ள நிலையில், அவர் தண்டனை பெறுவதற்குப் பதிலாக சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.47 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. போலி நிறுவனங்கள் பலவற்றை … Read more

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனம்; திருப்பதி கோயில் முக்கிய அறிவிப்பு!

திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவசமாக ஏழுமலையானை தரிசனம் செய்யும் விதமாக, டோக்கன் வினியோகம் செய்யும் பணிகள் 6 மாதத்திற்கு பிறகு திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் கடந்த 1ம் தேதி மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 12ம் தேதி திருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் வினியோகம் செய்யப்படும் கவுண்டர்களில் பக்தர்களிடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், இலவச தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் திருப்பதி மலைக்கு நேரடியாக சென்று இலவசமாக ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு … Read more

அரசு வேலை தேடுவோரின் கவனத்திற்கு! ரயில்வே அமைச்சர் முக்கிய அறிவிப்பு

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, மத்திய அரசு மாதந்தோறும் 16 லட்சம் பேருக்கு வேலை தருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு வழங்கும் திட்டங்களின் பலன்கள் அனைவருக்கும் கிடைத்து வருகிறது என்பதையும் அஷினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுமட்டுமின்றி, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வாய்ப்புகள் நிறைந்த எரிசக்தி ஆதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். உண்மையில், அஜ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீதுள்ள வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பாலாஜி சார்பில் வக்கீல் பாலாஜி ஸ்ரீனிவாசன், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் கடந்த 10-ந்தேதி ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தவறாக … Read more

”டெலிவரி பாய்ஸா? இந்த லிஃப்ட்ல போகாதீங்க” – மார்டன் பாகுபாடும்.. நெட்டிசன்ஸின் கொதிப்பும்!

உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு எதிராக குடியிருப்புவாசிகள் பலரும் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாவது உண்டு. அந்த வகையில், ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஊழியர்கள் தங்களது அப்பார்ட்மென்ட்டில் உள்ள லிஃப்டில் செல்லக் கூடாது நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்த புகைப்படத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த போஸ்ட்டில், ஸ்விக்கி, ஸொமெட்டோ உட்பட எந்த டெலிவரி ஊழியர்களும் லிஃப்டை பயன்படுத்தக் … Read more

7-வது முறையாக சொந்த தொகுதியில் வெற்றி பெற்ற நேபாள பிரதமர்: அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஷேர் பகதூர் தியூபா வெற்றி

நேபாளம் : நேபாள நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்று இருக்கும் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியூபா அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றன. அந்த வகையில் 110 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையானது திங்கள் கிழமை … Read more

தமிழக – கேரள எல்லை வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா – இளம்பெண் உட்பட மூவர் கைது

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சொகுசு காரில் கஞ்சா கடத்திய வழக்கில் இளம்பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி கலால்துறை சோதனைச் சாவடியில் கேரள கலால்துறை ஆய்வாளர் ஜார்ஜ் ஜோசப், கலால்துறை பெண் அலுவலர் ஸ்டெல்லா உம்மன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழகத்தில் இருந்து வந்த சொகுசு காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது அதில், அரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரையும் கஞ்சாவையும் … Read more

மங்களூருவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம்; காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம்

மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தமனை நேரில் சந்தித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஆறுதல் கூறினார்.

காரியம் முதல் அஸ்தி கரைப்பு வரை: இந்தியாவில் இறுதிச் சடங்குகளும் கார்ப்பரேட் வசமாகிறதா?

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி டெல்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த trade fair-ல் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வெவ்வேறு விதமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்றிருக்கின்றன. வித்தியாசமான முன்னெடுப்புகளை கொண்ட நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றிருக்கும் நிலையில், தனித்துவமாக இருக்கும் மும்பையைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் மட்டும் பலரது கவனத்தையும் ஈர்த்ததோடு சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது. அது என்னவெனில், நமக்கான இறுதிச் சடங்கை முன்பதிவு செய்து … Read more

குஜராத் தேர்தல் பரப்புரைக்காக சிறுமியை பயன்படுத்திய பிரதமர் மோடி: தேர்தல் விதியை மீறியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

காந்திநகர் : தேர்தல் பரப்புரைக்காக சிறுமியை பயன்படுத்திய பிரதமர் மோடிக்கு எதிராக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக பா.ஜ.க. வெளியிட்ட வீடியோவில் பிரதமர் மோடியின் அருகில் நின்றிருக்கும் சிறுமி ஒருவர் தனது குஜராத்தி மொழியில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், மோடியையும், பா.ஜ.க-வையும் புகழ்ந்து பேசிய சிறுமியின் கழுத்தில் பாஜக-வின் அடையாள சின்னத்துடன் கூடிய துப்பட்டா இருந்தது. ராமர் கோயில் உள்ளிட்ட பல விஷயங்கள் … Read more