சபரிமலையில் குவியும் ஐயப்பன் பக்தர்கள்: 12 நாட்களில் எவ்வளவு வருவாய் தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை ரூ.52 கோடியே 55 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்வம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட கடந்த 16 ஆம் தேதி முதல் தற்போது வரையிலான 12 நாட்களில் ரூ.52 கோடியே 55 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் கிடைத்துள்ளது,’ என தேவஸ்வம் போர்டு தலைவர் கே.ஆனந்த கோபன் தெரிவித்துள்ளார். இதில் சபரிமலை பிரசாதங்களான அப்பம் மூலம் ரூ.2.58 … Read more

மெஹ்பூபா முஃப்தியின் அரசு வீட்டை காலி செய்ய நோட்டிஸ்; காஷ்மீரில் பரபரப்பு.!

மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா முஃப்தி இன்று இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘ ஜம்மு மற்று காஷ்மீரில் எத்தனை ராணுவ வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டாலும் மத்திய அரசுக்கு கவலை இல்லை என தெரிவித்து வருகிறது. மாநிலத்தை இரண்டாக பிரிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை அதிக அளவில் ராணும் குவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை எந்தவிதமான நேர்மறை விளைவுகளும் ஏற்படவில்லை. காஷ்மீர் பிரச்சனை முடிந்துவிட்டதா? … Read more

பிரபலத்தின் BMW கார் மோதி சைக்கிளில் சென்றவர் பலி…

சுபேந்து சாட்டர்ஜி (50) டெல்லி மஹிபால்பூர் மேம்பாலம் அருகே இன்று சைக்கிளில் சென்றுகொண்டிரு்தார். அப்போது, அவ்வழியாக வந்த BMW கார், சைக்கிளில் பலமாக மோதியுள்ளது.  இதில், சாட்டர்ஜி பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  சாட்டர்ஜி, குருகிராம் பகுதியில் வசித்து வந்துள்ளார். அங்கிருந்து டெல்லியின் தௌலா குவான் பகுதிக்கு அவர் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கார் … Read more

சிறு குற்றங்களுக்காக அடைக்கப்பட்ட சிறை கைதிகளை பற்றி சிந்தியுங்கள்!: நீதிபதிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற ஆடிட்டோரியத்தில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். முதலில் ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்திய ஜனாதிபதி முர்மு, பின்னர் இந்தியில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். அவர் இந்தியில் பேசுகையில், ‘சிறிய கிராமத்திலிருந்து இங்கு வந்துள்ளேன். ஆசிரியர், டாக்டர், வக்கீல் ஆகியோரை நாம் கடவுளாக கருதுவதைப் பார்த்திருக்கிறோம். அறிவைக் கொடுப்பது ஆசிரியர்; உயிரைக் காப்பாற்றுவது  மருத்துவர்; நீதி வழங்குவது வழக்கறிஞர்கள். ஆகவே இவர்கள் மூவரும் கடவுளின் அடையாளமாக … Read more

மத்திய பிரதேசம்: பட்டப்பகலில் துணிகரம் – துப்பாக்கி முனையில் 16 கிலோ தங்கம் கொள்ளை

மத்திய பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில், திரைப்பட பாணியில் தனியார் கோல்டு லோன் பைனான்ஸ் நிறுவனத்தில் 16 கிலோ தங்கம், ரூ.3.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்னி ரங்கநாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பார்கவானில் அமைந்துள்ள தங்கக் கடன் நிறுவனத்திற்கு, நேற்று காலை 10.30 மணி அளவில், முகக்கவசம் அணிந்தபடி வந்த 6 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் 16 கிலோ தங்கம் ரூ.3.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்த ஊழியர்களையும் … Read more

இந்த வாகனங்கள் சபரிமலைக்கு வர தடை!!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வரும், பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்தனர். இதுவரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிமுதல் காலை 9 மணி வரை மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனிடையே … Read more

குஜராத் பாலம் இடிந்து விழுந்ததை போல் இன்றும் ஒரு சம்பவம்; பலர் படுகாயம்.!

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பல்ஹர்ஷா எனும் இடத்தில் உள்ள நடைமேம்பாலம் இன்று மாலை உடைந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றுக்கு மேல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட்ட தொங்கு நடை பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கினர். தீபாவளி பண்டிகையை கொண்டாடி கொண்டு இருந்ததால் பாலத்தில் … Read more

சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கு; நடிகை ஜாக்குலினின் வாக்குமூலம் பதிவு: டிச. 12ம் வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் ெதாடர்புடைய பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த 15ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடிகை   ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு … Read more

ராஜஸ்தானில் ஒற்றுமை யாத்திரையை சுமூகமாக நடத்த முடியுமா?.. ராகுலுக்கு காத்திருக்கும் சவால்!

ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் ‘பாரத் ஜோடோ’ யாத்திரை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தை கடந்து ராஜஸ்தான் மாநிலத்தில் நுழையும் என காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் யாத்திரையை சுமூகமாக நடத்த முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையில் கோஷ்டி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பைலட்டின் ஆதரவாளர்கள் யாத்திரைக்கு சிக்கல்களை ஏற்படுத்துவார்கள் என … Read more

பெட்ரோல் இல்லாமல் நின்ற ஆம்புலன்ஸ்… நோயாளி பலி!!

மருத்துவமனைக்கு செல்லும்போது பாதி வழியிலேயே ஆம்புலன்ஸ் பெட்ரோல் இல்லாமல் நின்றதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியை சேர்ந்த தேஜியா (40) என்பவருக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அவர் மயக்கம் அடைந்ததால் பதற்றம் அடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தனர். வீட்டிற்கு வந்த ஆம்புலன்ஸ் நோயாளிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் டானாபூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென நின்றது. டீசல் இல்லாததால் ஆம்புலன்ஸ் நின்றது தெரியவந்தது. … Read more