தீவிரவாத இயக்கங்களில் சேராத காஷ்மீரின் 5 மாவட்ட இளைஞர்கள்

பாரமுல்லா: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பிறகு, தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீவிரவாதத்தை கைவிடுபவர்களின் மறுவாழ்வுக்கு திட்டங்கள், தீவிரவாத பின்னணி உள்ளவர்களுக்கு அரசு வேலை மறுப்பு போன்ற பல திட்டங்களுக்கு பலன் கிடைத்து வருகிறது. அதன்படி, தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 10 மாவட்டங்களில் குப்வாரா, கந்தர்பால், பந்திபோரா, பாரமுல்லா, அனந்தநாக் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து ஒரு இளைஞர் கூட தீவிரவாத இயக்கங்களில் இந்த … Read more

பெருமளவு குறைந்தது கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 343 பேருக்கு கொரோனா உறுதி.! ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த பல வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: இந்தியாவில் மேலும் 343- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை … Read more

சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருதுக்கு 128 பேர் தேர்வு

புதுடெல்லி: கடந்த 2019, 2020 மற்றும் 2021-ம்ஆண்டுகளில் இசை, நடனம், நாடகம், பாரம்பரிய இசை/நடனம்/நாடகம், பொம்மை கலை துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பை அளித்த வெற்றியாளர்கள் 128 பேருக்கு அகாடமி புரஸ்கார் விருதுகளை சங்கீத நாடக அகாடமி நேற்று அறிவித்தது. மேலும், கலைத்துறையில் சிறந்து விளங்கிய 10 பிரபலங்களை அகாடமி கலைஞர்களாகவும், சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழு அறிவித்துள்ளது. புரஸ்கார் விருது பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், அகாடமி கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு, தாமிர பத்திரம் … Read more

சபரிமலையில் கடந்த 16-ம் தேதி முதல் தற்போது வரை அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருவனந்தபுரம்: கேரளா சபரிமலையில் கடந்த 16-ம் தேதி முதல் தற்போது வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சனிக்கிழமை நேற்று மட்டும் 78,148 பேர் தரிசனம் செய்த நிலையில் இன்று காலை வரை 31,895 பேர் தரிசனம் செய்து வருகின்றனர்.

கடமையை செவ்வனே செய்ய வேண்டும் – அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

புதுடெல்லி: தனிநபர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் தங்கள் கடமையை செவ்வனே செய்ய வேண்டும். அப்போதுதான் நாட்டை வளர்ச்சியின் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நவீன இந்தியா குறித்து கனவு கண்ட அம்பேத்கரையும் அவரோடு இணைந்து அரசியல் சாசனத்தை வரையறுத்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். மும்பை தீவிரவாத … Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கிய முக்கிய செய்தி, கட்டாயம் படிங்க

மோடி அரசு: ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு ஒரு பெரிய செய்தியை வழங்கியுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவச ரேஷன் வசதியை அளித்து வருகின்றன, ஆனால் விநியோகஸ்தர் எடையை விட குறைவாக வழங்குகிறார் என்றால், இப்போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அந்தவகையில் இனி ரேஷன் கடையில் டீலர்கள் எடைக்கு குறைவான ரேஷன் பொருட்களை வழங்கினால், உடனடியாக உங்கள் மாநிலத்தின் இலவச எண்ணில் புகார் செய்யலாம். ஆம், அதற்காக இலவச ஹெல்ப்லைனை … Read more

குருவாயூர் கோயிலில் திடீரென பாகனை தூக்கிவீசி தாக்க முயன்ற யானை

திருவனந்தபுரம்: குருவாயூர் கோயிலில் திடீரென பாகனை தாக்க முயன்ற யானை தூக்கிவீசிய நிலையில் வேட்டி மட்டும் தும்பிக்கையில் சிக்கிய நிலையில் யானை பாகன் ராதாகிருஷ்ணன் நூலிழையில் உயிர் தப்பினார்.அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோயில் வளாகத்தில் நடந்த திருமண வீடியோ சூட்டில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.

சபரிமலையில் பக்தர்களுக்காக ஆயுர்வேத மருத்துவமனை

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் செயல்படும் ஆயுர்வேத மருத்துவமனை, உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் பக்தர்களுக்கு சேவையாற்றி வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் உடல்நல பாதிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவிரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலக்கல்லில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம்ஆண்டு முழுவதும் செயல்படுகிறது. பம்பை, சந்திதானம் பகுதிகளில் நவீன வசதிகளுடன்கூடிய மருத்துவமனைகள் செயல்படுகின்றன. பம்பை முதல் சன்னிதானம் வரையிலான பாதையில் அவசர உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மலையேறும்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் பக்தர்களுக்கு இந்த மருத்துவமனைகள், மையங்களில் சிகிச்சை … Read more

சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்; இன்று 92 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்று 92 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை திறந்த 16ம் தேதி முதல் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். வரும் நவம்பர் 30ம் தேதி வரை 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் … Read more

'ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகுதான்' -ராம்தேவின் கருத்துக்கு மஹுவா மொய்த்ரா கண்டனம்

‘ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகாக தெரிகிறார்கள்’ என்ற ராம்தேவ் பாபாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் நடந்த விழா ஒன்றில் யோகா குரு ராம்தேவ் பாபா கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய ராம்தேவ் பாபா, ‘பெண்கள் சேலையில் அழகாக இருக்கிறார்கள். சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள். ஆனால் என் பார்வையில், அவர்கள் ஒன்றும் அணியாவிட்டாலும் அழகாகத் தெரிகிறார்கள்’ என்று … Read more