குஜராத் தேர்தல், டி20 உலகக்கோப்பை – பரபரப்பான சூதாட்டச் சந்தை.. விறுவிறுப்பான உளவுத்துறை

போலீசார் மற்றும் உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பையும் மீறி, குஜராத் சட்டசபை தேர்தல் மற்றும் கிரிக்கெட் உலகக் கோப்பை பந்தயங்கள் மீது சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களிலே விறுவிறுப்பாக சூதாட்டம் நடைபெற்று வருகிறது என்றும், குஜராத் சட்டமன்றத் தேர்தல் மீது மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பந்தயம் கட்டப்பட்டுள்ளது எனவும் உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் … Read more

மசூதியில் காவி கொடி ஏற்றியதால் மோதல்: பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிப்பு..!

தத்தா ஜெயந்தி விழாவையொட்டி, சிருங்கேரி டவுனில் உள்ள மசூதியில் காவி கொடி ஏற்றியதால் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்ட சிருங்கேரி டவுன் பகுதியில் வருகிற 13-ம் தேதி தத்தா ஜெயந்தி விழாவை இந்து அமைப்பினர் கொண்டாட உள்ளனர். இதற்காக, டவுன் முழுவதும் காவி கொடிகள் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் வெல்கம் கேட் அருகே ஸ்ரீராமசேனை அமைப்பை சேர்ந்த … Read more

கவுதம் நவ்லகாவை வீட்டுச் சிறையில் வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: மாவோயிச அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள கவுதம் நவ்லகாவை வீட்டுச் சிறையில் வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாவோயிச அமைப்புடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு மகாராஷ்ட்ராவின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுதம் நவ்லகா, தன்னை வீட்டுச் சிறையில் வைக்க அனுமதிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு, 70 … Read more

லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி மீது கடும் நடவடிக்கை: எடியூரப்பா வலியுறுத்தல்!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் முருகமடம் உள்ளது. இதன் மடாதிபதியாக லிங்காயத் சமூக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு உள்ளார். லிங்காயத் மடங்களை ஆன்மிகப் பள்ளிகளாக மாற்றியதில் பிரபலமான இவர், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக, மடத்தின் விடுதியில் தங்கி 10ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட அந்த மாணவிகள் அங்கிருந்து தப்பித்து, மைசூரில் உள்ள என்.ஜி.ஓ., அமைப்பின் தஞ்சமடைந்தனர். அந்த அமைப்பினர், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு இது … Read more

மும்பையில் 30 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க விடுவதற்கு தடை: போலீசார் உத்தரவு!

மும்பை: மும்பையில் 30 நாட்களுக்கு டிரோன் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக 30 நாட்களுக்கு டிரோன் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் இந்த தடை உத்தரவு இன்று மும்பை காவல்துறையால் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நவம்பர் 13 முதல் டிசம்பர் 12 வரை அமலில் இருக்கும். இது குறித்து மும்பை காவல்துறை பிறப்பித்த உத்தரவில் கூறப்படுள்ளதாவது, விவிஐபிகளை குறிவைத்தும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை … Read more

குஜராத் தேர்தல் | ஆற்றில் குதித்து உயிர்களைக் காப்பாற்றிய ‘மோர்பி ஹீரோ’வுக்கு பாஜகவில் சீட்

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் மோர்பி பால விபத்தின்போது ஆற்றில் குதித்து பல உயிர்களைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ கண்டிலாலா அம்ருதியாவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைகு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் முடிவு டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என்று மும்முனைப் போட்டி … Read more

'தந்தைக்கு உதவுவதில் பெருமை' – லாலு பிரசாத்துக்காக சிறுநீரகத்தை தானம் செய்யும் மகள்!

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்காக, அவரது மகள் ரோஹினி ஆச்சார்யா சிறுநீரக தானம் செய்ய முன்வந்துள்ளார். பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 74, கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். கால்நடை தீவன ஊழல் வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், தற்போது ஜாமினில் வெளியில் உள்ளார். சிறுநீரகப் பிரச்னை காரணமாக … Read more

குஜராத் தேர்தலுக்காகவே சிஏஏவை பயன்படுத்துகிறது பாஜக: மேற்குவங்க முதல்வர் மம்தா தாக்கு

கொல்கத்தா: மேற்கு வங்காளம், கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: தேர்தல் வரும் போது எல்லாம் பா.ஜ.க. சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவோம் என்று பேசுகிறது. அடுத்த மாதம் குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இன்றும் ஒன்றரை ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. எனவே பா.ஜ.க. மீண்டும் சி.ஏ.ஏ.வை பற்றி பேசுகிறது. நாட்டின் குடிமக்கள் யார் என்று முடிவு செய்வதற்கு பா.ஜ.க. யார்? மதுவா சமூகத்தினர் இந்தியாவின் குடிமக்கள் ஆவார்கள். பா.ஜ.க. … Read more

மாநிலங்களவை அலுவல் குழுக்கள் மாற்றி அமைப்பு

புதுடெல்லி: மாநிலங்களவைக்கு 12 அலுவல் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் நேற்று முன்தினம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அலுவல் ஆலோசனைக் குழு, விதிமுறைகள் குழு, உரிமைக் குழு ஆகிய மூன்றுக்கும் தலைவராக மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு உறுதிமொழிக் குழு மீண்டும் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன், அப்பதவியை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் வகித்தார். மனுக்கள் குழு தலைவராக பிஜு ஜனதா தளம் கட்சியின் சுஜித்குமார் … Read more

உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறை: தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் புதிய வழக்குகளை குறிப்பிட்ட கிழமைகளில் பட்டியலிடும் புதிய நடைமுறையை செயல்படுத்தும்படி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு பிறப்பித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் ரிட், மேல்முறையீடு, இடையீட்டு மனு மற்றும் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்ற பதிவாளர் முதலில் பரிசீலிப்பார். இதைத் தொடர்ந்து, அம்மனுவில் பிழை ஏதும் இல்லாத பட்சத்தில், தலைமை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் அந்த மனுக்களை பரிசீலிக்கும் தலைமை நீதிபதி, அம்மனுக்களை உரிய … Read more