சிவாஜி விவகாரம் | “அவர் மகாராஷ்டிர ஆளுநர் அல்ல… பணிவான பாஜக தொண்டர்” – சஞ்சய் ராவத் காட்டம்

மும்பை: “சத்ரபதி சிவாஜி மகாராஜாவைப் பற்றி பேசியதன் மூலம் மகாராஷ்டிகாரவில் ஆளுநர் பதவிக்கான கண்ணியம் முடிவுக்கு வந்துவிட்டது” என்று மகாராஷ்டிரா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் காட்டமாக விமர்சித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் அளித்த பேட்டி ஒன்றில், “நாங்கள் அவரை (பகத்சிங் கோஷ்யாரி) ஆளுநராக கருத தயாராக இல்லை. அவர் பாஜகவின் பணிவான தொண்டர். ஆளுநர் என்பவர் நடுநிலையோடு இருக்க வேண்டும். தன்னுடைய வார்த்தைகளிலும், நடத்தைகளிலும் … Read more

'இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்' – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உறுதி ஏற்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து மத்திய அரசு துறைகளையும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி பணி நியமன கடிதங்களை வழங்கினார். இந்த நிலையில், மத்திய அரசின் ரோஜ்கார் … Read more

குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் – முகமது ஷாரிக், ஈஷா மையத்தில் உள்ள சிலைக்கு குறி வைத்தாரா என்று போலிசுக்கு சந்தேகம்.!

மங்களுர் குக்கர் குண்டு வெடிப்புக்கு காரணமான முகமது  ஷாரிக், கோயம்புத் தூரில் தங்கி இருந்த போது ஈஷா மையத்திற்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் தனது வாட்ஸ் அப் அடையாளத்தில்  ஈஷா மையத்தில் உள்ள சிலையை வைத்து இருந்துள்ளதும் போலிஸ் விசாரணையில் கண்டறியப் பட்டு உள்ளது. இதனால் முகமது  ஷாரிக், ஈஷா மையத்தில் உள்ள சிலைக்கு குறி வைத்தாரா என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது. மேலும் முகமது ஷரிக், கோவை சிங்கா நல்லூரில் சில … Read more

ஜம்முவில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை சுட்டு வீழ்த்திய எல்லைப்பாதுகாப்பு படை

ஜம்மு: ஜம்முவில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை தடுக்கும் விதமாக ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் திவீர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு மாவட்டம் ஆர்.எஸ். புரா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று அதிகாலை 2.30 மணியளவில் எல்லைப்பாதுகாப்பு படையினர் … Read more

தத்துப்பிள்ளைகளுக்கும் பெற்றோரின் வேலையைப் பெற உரிமை உண்டு – கர்நாடகா உயர் நீதிமன்றம்

பெங்களூரு: பெற்ற குழந்தைகளைப் போல கருணை அடிப்படையில் பெற்றோர்களின் வேலையினை பெற தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உரிமை உண்டு என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பெற்ற குழந்தை தத்துக்குழந்தை என்று வேற்றுமை கடைபிடித்தால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்றும் கூறியுள்ளது. மறைந்த தந்தையின் வேலையை கருணையின் அடிப்படையில் தனக்கு வழங்க வேண்டும் என்று தத்துப்பிள்ளை ஒருவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவினை விசாரணை செய்த கர்நாடகா உயர் நீதிமன்ற டிவிசன் … Read more

'சாவர்க்கர் விவகாரத்தில் சமரசம் கிடையாது.. காங்கிரஸ் கூட்டணி தொடருமா..? – சஞ்சய் ராவத் விளக்கம்!

“வீர் சாவர்க்கர் விவகாரத்தில் சமரசம் கிடையாது. நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைத்துள்ளோம்,” என, சிவசேனா கட்சி மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள், மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. சுமார் இரண்டரை ஆண்டுகள் கூட்டணி ஆட்சி தொடர்ந்த … Read more

பைக் சாகசத்தின் போது சறுக்கி விழுந்து படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு..!

ஆந்திராவில், சமூக வலைதளங்களில் பதிவேற்ற பைக் சாகசத்தில் ஈடுபட்ட போது சறுக்கி விழுந்து காயமடைந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உய்யூர் புறவழிச் சாலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சாய் கிருஷ்ணா என்ற இளைஞர் பைக் சாகசத்தில் ஈடுபட்டதை அவரது நண்பர் வீடியோ பதிவு செய்தார். அப்போது நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து சறுக்கி விழுந்த சாய் கிருஷ்ணா, தலையில் படுகாயமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 10 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Source … Read more

அசாம் – மேகாலயா எல்லையில் நடந்த மோதலின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு..!!

திஸ்பூர்: அசாம் – மேகாலயா எல்லையில் நடந்த மோதலின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அசாம் – மேகாலயா எல்லையில் மேற்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் உள்ள முக்ரோ கிராமத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். ஒரு பிரிவினர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.

சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் நலனுக்காக அவசர சிகிச்சை மையம் திறப்பு!

சபரிமலை சன்னிதானம் திருமுற்றத்தில் ஐயப்ப பக்தர்களுக்கான அவசர சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுகளில் ஏறும் பக்தர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதை நோக்கமாக கொண்டு இந்த அவசர சிகிச்சை மையம் செயல்படுகிறது. சபரிமலை கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு தீபம் ஏற்றி மையத்தை திறந்து வைத்தார். மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி, தேவஸ்வம் போர்டு செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், செயலாளர் மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர். ஓ.வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சபரிமலை … Read more

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் ஒரு கைதி – சிறைத்துறை தகவல்

புதுடெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவருக்கு மசாஜ் செய்தவர் ஒரு கைதி என்றும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.47 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. போலி நிறுவனங்கள் பலவற்றை நடத்தி அதன்மூலம் நிதி … Read more