உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்பு!

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்க உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 49 ஆவது தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய அலுவல் பணிகள் நேற்றுடன் முடித்து வைக்கப்பட்டன. இதை அடுத்து, புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் 9 ஆம் தேதி நாளை (புதன் கிழமை) பதவியேற்க உள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் … Read more

Video : 'தள்ளு… தள்ளு.. தள்ளு' – பழுதான வண்டியை நகர்த்த உதவிய மத்திய அமைச்சர்!

ஹிமாச்சல் பிரதேசத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹிமாச்சலில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு தலைவர்களும் அங்குதான் முகாமிட்டுள்ளனர்.  அந்த வகையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரும், ஹிமாச்சல் பிரதேசத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பிலாஸ்பூர் நகரில் இன்று அவர் பரப்புரை செய்துவந்தார். அப்போது, குறுகலான சாலை ஒன்றில் பேருந்து ஒன்று சிக்கியதால் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராமப்பகுதியின் அந்த  குறுகலான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, … Read more

2022 டிசம்பர் 1 முதல் ஜி20-யின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ள இந்தியா : பிரதமர் மோடி லோகோ வெளியீடு

டெல்லி: 2022 டிசம்பர் 1 முதல் ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. பிரதமர் மோடி அதற்கான லோகோ வெளியிட்டார். நாடு முழுவதும் பல இடங்களில் வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்த உள்ளது. ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது வரலாற்று தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகை ஒன்றிணைத்து கொண்டு வரும் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையை லோகோவில் உள்ள தாமரை குறிக்கிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, … Read more

ஹால் டிக்கெட்டில் நடிகை புகைப்படம்… விண்ணப்பதாரர் அதிர்ச்சி!

கர்நாடக மாநில அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் நடத்த உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க லட்சகணக்கானோர் விண்ணப்பித்து தேர்வை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், விண்ணதார்களுக்கு தேர்வு அறை நுழைவுச் சீட்டுகள் (ஹால் டிக்கெட்) அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு பெண் விண்ணப்பதாரருக்கு வந்துள்ள ஹால்டிக்கெட் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஹால்டிக்கெட்டில் அவரது புகைப்படத்துக்கு பதிலாக, பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் புகைப்படம் இடம்பெற்றிருந்ததுதான் … Read more

இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது

இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. முழு சந்திரன் தோன்றும் நாளில், சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால், சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்திய நேரப்படி, பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி, 5.12 மணி வரை முழுமையாக மறைக்கப்பட்ட நிலையிலும், மாலை 6.19 மணி அளவில் பகுதி அளவிலும் சந்திரகிரகணம் காணப்படும். … Read more

முறையாக மருந்து சாப்பிட்டும் முடி உதிர்வது குறையாததால் வாலிபர் தற்கொலை: டாக்டர் மீது புகார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே அத்தோளி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். அவரது மகன் பிரசாந்த் (26). ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு தலை முடி கொட்டத் தொடங்கியது. பல டாக்டர்களை பார்த்து சிகிச்சை பெற்றும் எந்த பலனும் ஏற்படவில்லை. இந்தநிலையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 6 வருடமாக கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தார். அங்குள்ள ஒரு டாக்டர் கொடுத்த … Read more

காதலுக்கு கண்ணில்லை… மாணவியை திருமணம் செய்து கொள்ள ஆணாக மாறிய ஆசிரியை…!

ராஜஸ்தானில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்தவர் மீரா. பள்ளியில் உடற்கல்வி வகுப்புகளின் போது மீரா மாணவி கல்பனாவை சந்தித்துள்ளார். அப்போது அவர் கல்பனா மீது காதல் கொண்டார். பள்ளி காதல் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், கல்பனாவை திருமணம் செய்துக்கொள்ள தான் ஆணாக மாற மீரா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ளார். “காதலில் எல்லாம் நியாயமானது. அதனால் தான் நான் என் பாலினத்தை மாற்றிக் கொண்டேன்” என்று ஆணாக மாறி ஆரவ் என்று … Read more

Love Is Love: மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய ஆசிரியை!

ராஜஸ்தான் மாநிலத்தில், மாணவியை திருமணம் செய்து கொள்ள ஆசிரியை ஒருவர், ஆணாக மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்தவர் மீரா. பள்ளியில் உடற்கல்வி வகுப்புகளின் போது மாணவி கல்பனா என்பவரை ஆசிரியை மீரா சந்தித்துள்ளார். அப்போது அவர், கல்பனா மீது காதல் கொண்டார். பள்ளி காதல் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், மாணவி கல்பனாவை திருமணம் செய்து கொள்ள, ஆணாக மாற, ஆசிரியை … Read more

குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் தாம் தூக்கில் தொங்கி விடவும் தயார்-கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்திய சுகேஷ் சந்திரசேகர்

பல கோடி ரூபாய் மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சுகேஷ் சந்திரசேகர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். வழக்கறிஞர் மூலம் டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ஆம் ஆத்மி கடசி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் மூலம் கெஜ்ரிவால் பணம் திரட்டியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ள சுகேஷ். விசாரணையில் … Read more

வேட்புமனு தாக்கல் விவகாரம் ஆளும் பாஜகவின் கோரிக்கை நிராகரிப்பு: தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி

புதுடெல்லி: பொது விடுமுறை நாளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி ஆளும் பாஜகவின் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 12ம் தேதி பொது விடுமுறை நாள் (இரண்டாவது சனிக்கிழமை) என்பதால், அன்றைய தினம் வேட்பு மனுக்கள் பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் வேட்பு மனு தாக்கலை ஏற்க வேண்டும் என்று ஆளும் பாஜக தலைமை தேர்தல் ஆணையத்திடம் … Read more