”மங்களூருவில் நடந்தது விபத்தல்ல.. பயங்கரவாத தாக்குதல்” – கர்நாடக DGP அறிவிப்பால் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கங்கநாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரோடி பகுதியில் உள்ள உள்வட்ட சாலையில், நேற்று (நவ.,19) மாலை சென்று கொண்டிருந்த ஆட்டோவில் பயணியின் பையிலிருந்த பார்சல் ஒன்று திடீரென வெடித்து சிதறி அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதில் ஆட்டோ ஓட்டுநரும், ஆட்டோவில் சென்ற பயணியும் படுகாயமடைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு … Read more

ம.பி. பாஜக எம்எல்ஏவின் காரை வழிமறித்து ரூ.30 ஆயிரம் பாக்கியை கேட்ட டீக்கடைக்காரர்

சீஹோர்: மத்தியபிரதேச மாநிலத்தின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரான கரண் சிங் வர்மா, தற்போது இச்சாவர் தொகுதியில் (முன்பு சீஹோர்) பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் இவர் அண்மையில் சீஹோர் மாவட்டம் இச்சாவர் தொகுதிக்கு காரில் வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ஒருவர் காரை வழிமறித்தார். காரை டிரைவர் நிறுத்தியபோது, எம்எல்ஏவிடம் சென்ற டீக்கடை உரிமையாளர் 2018-ம்ஆண்டு முதல் டீக்கடையில் சாப்பிட்டுவிட்டு தராமல் சென்ற ரூ.30 ஆயிரம் பாக்கி பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். … Read more

புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்

புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையராக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயலை, தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985-ம் ஆண்டு ஐஎஸ்எஸ் அதிகாரி அருண் கோயல். இவர் மத்திய அரசு செயலாளராக பணியாற்றியுள்ளார். … Read more

சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அதிகாலை 3 மணிக்கே நடை திறப்பு: 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருப்பதால், காலையில் கோயில் நடை ஒரு மணி நேரம் முன்னதாகவே திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதால், நடை திறந்த 16ம் தேதி மாலை முதலே சபரிமலையில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் … Read more

அடுத்த அதிர்ச்சி..!! ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல, பயங்கரவாதிகள் தயாரானதற்கான அடையாளம்

கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடிது சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் பார்வையிட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து … Read more

பேட்டரியுடன் ப்ரெஷர் குக்கர் பறிமுதல்; மங்களூரு சம்பவம் தீவிரவாத செயல்: கர்நாடக டிஜிபி தகவல்

மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று மாலை ஆட்டோ ஒன்றில் நடந்த வெடிவிபத்து தற்செயலானது அல்ல அது தீவிரவாதச் செயல் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில், மத்திய புலன் விசாரணை அமைப்புகள் மாநில காவல்துறைக்கு விசாரணையில் உதவி வருவதாக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடகா டிஜிபி தனது ட்விட்டர் பக்கத்தில், “உறுதியாகிவிட்டது. நடந்தது விபத்து அல்ல. அது தீவிரவாத செயல். பலத்த சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் … Read more

டெல்லி அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

புதுடெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருநபர் கால்களை அழுத்தி, மசாஜ் செய்து விடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதியப்பட்டது. அவரை கடந்த மே 30ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில், திகார் … Read more

திகார் சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்தருக்கு மசாஜ் – பிசியோதெரபி சிகிச்சை என ஆம் ஆத்மி விளக்கம்

புதுடெல்லி: திகார் சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யப்படும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது. இது பிசியோதெரபி சிகிச்சை என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. டெல்லி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.47 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. போலி நிறுவனங்கள் பலவற்றை நடத்தி அதன்மூலம் நிதி மோசடியில் … Read more

கர்நாடகாவில் பயங்கரவாத தாக்குதல்: காவல்துறை அதிர்ச்சி தகவல்!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அதில் பயணம் செய்த ஒருவர் என இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மங்களூருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பயணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் உயர் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்றும், காஸ் … Read more

இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மறைந்த நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன்,’ என்று பதிவிட்டுள்ளார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, … Read more