ஜம்முவில் சோகம்: சிலிண்டர் வெடித்து பெண், குழந்தை பரிதாப பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டம் புஃப்லியாஸ் பகுதியில் உள்ள சண்டிமார் கிராமத்தில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்தது. இதில் சுவர்கள் இடிந்து நொறுங்கியது. வீட்டில் இருந்த 35 வயது பெண், 3 வயது குழந்தை, தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். மற்றொரு குழந்தை காயமடைந்தது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படை வீரர்களும் வந்து தீயை அணைத்தனர். சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீஸ் தந்த அறிக்கையால் அதிர்ந்து போன நீதிமன்றம்..581 கிலோ கஞ்சாவை எலி சாப்டிருச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மட்டும் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சாக்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தல்காரர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள … Read more

Mangaluru Blast: மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு: இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் பொறுப்பேற்பு!

மங்களூரில் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில், கடந்த சனிக்கிழமை மாலை, ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கர்நாடக மாநில காவல் துறையினர், ‘இந்த விபத்து சாதாரணது அல்ல என்றும், திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாதச் செயல் என்றும்’ தெரிவித்தனர். இதை அடுத்து ஆட்டோவில் குக்கர் வெடி குண்டு வெடித்துச் சிதறும் வீடியோ … Read more

500 கிலோ கஞ்சாவை தின்று ஏப்பம் விட்ட எலிகள் – போலீஸ் வினோத விளக்கம்

உத்தரப் பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள ஷெர்கர் மற்றும் நெடுஞ்சாலை காவல் நிலையத்தின் கிடங்கில், 500 கிலோவிற்கு அதிகமான கஞ்சா பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, போதை மருத்துகள் மற்றும் உளவியல் மருந்துகள் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 586 கிலோ கஞ்சாவை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு மதுரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதாவது, ஒரு வழக்கில் 386 கிலோ  கஞ்சாவையும், மற்றொரு வழக்கில் 195 கிலோ கஞ்சாவையும் என மொத்தம் 586 கிலோ … Read more

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நவ. 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. விலங்குகளை முன்னிலைப்படுத்தி விளையாடப்படும் விளையாட்டுகள் விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகளை மீறுகின்றனவா? என கேள்வி எழுப்பப்பட்டது. பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார். ஜல்லிக்கட்டு, சக்கடி-க்கு ஆதரவாக தமிழ்நாடு, மராட்டிய அரசுகள் கொண்டு வந்த சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவையா? ஜல்லிக்கட்டை கலாச்சாரம் என … Read more

581 கிலோ கஞ்சாவை எலி தின்னுடுச்சு..! – கோர்ட்டில் சம்பவம் செய்த உபி போலீஸ்

உத்தர பிரதேச மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக, மதுரா காவல் துறையினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மதுரா காவல் துறை நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சாக்கள் கடத்தல்காரர்களிடம் … Read more

50 பயணிகளுடன் சென்ற கேரள அரசு பஸ்சை மறித்து யானை அட்டகாசம்: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருச்சூர் அருகே சாலக்குடி பகுதியில் கபாலி என்ற காட்டு யானை அடிக்கடி ரோட்டுக்கு வந்து வாகன ஓட்டிகளையும், பயணிகளையும் பயமுறுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் இந்த யானை 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு சென்ற தனியார் பஸ்சை தாக்க முயன்றது. அந்த யானையிடமிருந்து தப்பிப்பதற்காக டிரைவர் பஸ்சை வளைவான அந்த மலைப்பாதையில் மிகவும் சாகசமாக 8 கிமீ பின்னோக்கி ஓட்டிச் சென்றார். 8 கிமீ தூரம் வரை அந்த … Read more

உடல் முழுவதும் வெட்ட வெட்ட வளரும் முடி! அரியவகை நோயால் மீளா துயரத்தில் ம.பி. இளைஞர்!

werewolf syndrome என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபனின் புகைப்படம்தான் சமூக வலைதளங்களில் படு வைரலாகியிருக்கிறது. நோயின் பேருக்கு ஏற்றார் போல, அந்த வாலிபனின் முகம் உட்பட உடல் முழுவதும் முடிகளால் சுழப்பட்டிருக்கிறது. லலித் பதிடர் என்ற 17 வயது இளைஞனான அவர் மத்திய பிரதேசத்தின் நந்த்லேட்டா கிராமத்தைச் சேர்ந்தவராவார். லலித்தின் ஆறாவது வயதில் கண்டறியப்பட்ட இந்த அறியவகை நோய்க்கு மருத்துவத்தில் hypertrichosis என அழைக்கப்படுகிறது. hypertrichosis என்பது உடலின் பாகங்களில் அதிகளவில் … Read more

மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் அமைப்பு பொறுப்பேற்பு

கர்நாடகா: மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நவம்பர் 19-ல் மங்களூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. குக்கர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்ற இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் அமைப்பு குறித்து மங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

”ஆர்கானிக் Pad-களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்” – மாதவிடாய் குறித்த ஆய்வில் பகீர் தகவல்!

இந்தியாவில் பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களில் இதயக்குறைபாடுகள், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற தீவிர பிரச்னைகளை ஏற்படுத்தும் ரசாயனங்களை கொண்டிருப்பதாக தன்னார்வு அமைப்பு செய்த ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற தன்னார்வ அமைப்பு செய்த அந்த ஆய்வில், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 10 சாம்பிள்களில் (6 கனிமமற்ற மற்றும் 4 கனிமங்கள் நிறைந்த சானிட்டரி நாப்கின்கள்) phthalates and volatile ரசாயனங்கள் இருந்தது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை, `மென்சுரல் வேஸ்ட் 2022’ (மாதவிடாய்க்கால கழிவுகள் … Read more