மோர்பி தொங்கு பால விபத்து – குஜராத் மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

அகமதாபாத்: மோர்பி தொங்கு பால விபத்து தொடர்பாக, தாமாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்த குஜராத் உயர்நீதிமன்றம், விபத்து தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நூறாண்டு பழமையானதொங்கு பாலம் ஒன்று புனரமைக்கப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், பயன்பாட்டுக்கு வந்த 4 நாட்களிலேயே அந்த பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். துருப்பிடித்த, பழைய கேபிள் வயர்கள் மற்றும் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேருக்கு கொரோனா; புதிய உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,62,141பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக தொற்றால் யாரும் உயிரிழக்காத நிலையில் இதுவரை … Read more

மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை – மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியின் சவாலா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 2012-ம் ஆண்டு காணாமல் போனார். பின்னர் பல்வேறு துண்டுகளாக வெட்டப்பட்ட அவரது உடல் ஹரியாணாவின் ரோதை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் … Read more

பாஜ மீது பிரியங்கா தாக்கு எரிபொருள் நிரப்ப மறந்த இரட்டை இன்ஜின் அரசு

உனா: ‘இமாச்சல பிரதேசத்தில் பாஜவின் இரட்டை எஞ்சின் அரசானது எரிபொருள் நிரப்புவதற்கு மறந்துவிட்டது’ என்று பாஜ தலைமையிலான மாநில அரசை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் வருகின்ற 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார். உனாவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், … Read more

'நான் சிவனேனுதானே இருந்தேன்' – மதுபோதையில் பெண்ணை சரமாரியாக தாக்கிய 4 பெண்கள்

தாக்குதலுக்கு ஆளான பெண், தன்னை எந்த காரணமும் இல்லாமல் 4 பெண்களும் தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் 4 பெண்கள் குடிபோதையில் மற்றொரு பெண்ணை சரமாரியாகத் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 4) அன்று நள்ளிரவு 1 மணியளவில் நடந்ததாக தெரிகிறது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கும் பெண்கள் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பெண்கள் அந்த … Read more

37 ஆண்டு பணியாற்றியதை மறக்க முடியாது – இன்று ஓய்வுபெறும் தலைமை நீதிபதி யு.யு.லலித் பெருமிதம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றியதை மறக்க முடியாதது என்று ஓய்வு பெறும் தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பதவியேற்றார். அவரின் பணிக் காலம் இன்றுடன் (நவ. 8) நிறைவடைகிறது. ஆனால் இன்று குருநானக் ஜெயந்தியையொட்டி, உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு நேற்று கடைசி பணி நாளாக அமைந்தது. இதையொட்டி, அவர் தலைமையில் கூடும் சிறப்பு … Read more

இன்று சந்திர கிரகணம்: ரத்த நிலா எங்கெல்லாம் தெரியும்? எத்தனை மணிக்கு பார்க்கலாம்?

சந்திர கிரகணம் இன்று (நவம்பர் 8) நிகழ்கிறது. இதனை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம். ஆனால் முழு சந்திர கிரகணத்தை அனைவராலும் பார்க்க முடியாது. குறிப்பாக நாட்டின் கிழக்கு பகுதிகளில் முழு மற்றும் பகுதி வடிவ கிரகண நிலைகளை பார்க்கலாம். இன்றைய தினம் கிரகணம் ஏற்படும் போது நிலா சிவப்பு நிறத்தில் மாறக்கூடும். இந்திய நேரப்படி நிலவின் புறநிழல் பகுதியின் தொடக்கம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். இதையடுத்து முழு சந்திர கிரகணம் … Read more

இரு பெண்களை உயிரோடு புதைக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம்..! நில அபகரிப்பு கும்பல் அட்டூழியம்

தங்கள் நிலத்துக்காக போராட்டம் நடத்திய இரு பெண்கள் மீது மண் கொட்டி உயிருடன் புதைத்து கொலை செய்ய முயன்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹரிபுரம் கிராமத்தில் இந்த படுபயங்கர சம்பவம் அரங்கேறி உள்ளது இந்த சேர்ந்த தாலம்மா,சாவித்திரி ஆகியோருக்கு சொந்தமான வீட்டுமனையை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் ஆகிய 3 பேர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. தங்கள் வீட்டுமனையை திரும்ப தரக் … Read more

தமிழக ஆளுநர் விவகாரம் அரசியலமைப்பை யார் மீறினாலும் தண்டனை: பெங்களூருவில் சபாநாயகர் அப்பாவு பேட்டி

பெங்களூரு: சிறந்த சட்டசபை எது என்பதை தேர்ந்தெடுப்பதற்கான விதிகள் வகுக்கும் சபாநாயகர்களின் குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. விதான சவுதாவில் நடந்த இக்கூட்டத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு உள்பட 6 மாநில சபாநாயகர்கள் பங்கேற்றனர். பின்னர் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது: சிறந்த சட்ட பேரவை எது என்பதை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் வரையறுக்கப்படும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணி முடிந்த பிறகு நடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அறிக்கை ஒப்படைக்கப்படும். தமிழக … Read more

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணியத் தடை!!

தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதித்து அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிவதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி ஆண்கள் இனி சட்டை மற்றும் பேண்ட் அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை மற்றும் சல்வார்-கமீஸ் அணியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் பிஸ்வஜித் டைமாரியின் … Read more