7 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்: கொலீஜியம் பரிந்துரை!

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உட்பட ஏழு உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றத்தின், கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. கொலீஜியம் என்பது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இந்தத் தேர்வுக் குழுவின் பணி, உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதும், மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிப்பதும் ஆகும். இந்நிலையில் இன்று, சென்னை உயர் … Read more

நடிகை சமந்தா, மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி

ஐதராபாத்: நடிகை சமந்தா, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், கடந்தாண்டு தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு முழு வீச்சில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக புஷ்பா படத்திற்காக அவர் நடனம் ஆடிய ‘‘ஊ சொல்றியா” பாடல் … Read more

மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: என்ஐஏவிடம் ஒப்படைக்க கர்நாடகா முடிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். அந்த ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில், முகமது ஷரீக், தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டது, போலி ஆதார் அட்டை மூலம் சிம் கார்டு வாங்கியது, ஷிமோகாவில் குண்டை வெடிக்க செய்து ஒத்திகையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மங்களூரு போலீசார் வழக்குப்பதிவு … Read more

Gujarat Election: குஜராத் கல்வித்துறையில் நவீன மாற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்!

குஜராத் மாநிலத்தில், பாரதிய ஜனதா தலைமையிலான அரசு கல்வித் துறையில் நவீன மற்றும் அறிவியில் சார்ந்த மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் … Read more

பொன்மாணிக்கவேலிடம் சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக பொன் மாணிக்கவேலின் மேல்முறையீட்டு மனு விவகாரம் தொடர்பாக மனுதாரர், தமிழக அரசு மற்றும் எதிர்மனுதாரர் சிபிஐ ஆகியோர் 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என தெரிவித்தனர்.  சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து, பலகோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த காதர்பாட்சா பணியிடை நீக்கம் … Read more

உடலுறவின்போது வலிப்பு ஏற்பட்டு இறந்த தொழிலதிபர்; கணவன் உதவியுடன் உடலை சாலையில் வீசிய பெண்!

பெங்களூருவில் உடலுறவின்போது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த 67 வயது காதலனின் உடலை கணவனின் உதவியுடன் சாலையில் வீசிய 35 வயது பெண் போலீசாரின் விசாரணையில் சிக்கியுள்ளார். நவம்பர் 17ஆம் தேதி ரோஸ் கார்டன் பகுதியில் ஜே.பி நகரில் சாலையோரத்தில் 67 வயதுடைய ட்ரான்ஸ்போர்ட் பிசினஸ்மேனின் சடலம் கிடந்தது கண்டறியப்பட்டது. அந்த நபரின் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால் இறப்பில் சந்தேகம் இருப்பதாக இறந்தவரின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய சட்டப்பிரிவு 174சி-இன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய … Read more

மராட்டியதுக்கு ஒரு அங்குல நிலம் கூட கொடுக்க மாட்டோம் – பசவராஜ் பொம்மை சவால்

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே உள்ள பெலகாவி எல்லை பிரச்சினையானது கடந்த 1960 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்தே இருந்து வருகிறது. பெலகாவியில் உள்ள சுமார் 80 மராத்தி மொழி பேசும் கிராமங்களை மகாராஷ்டிரா விட்டுக்கொடுக்க விரும்பாத நிலையில், கர்நாடகா அதற்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசின் கோரிக்கையை ஏற்று கடந்த 1957 ஆண்டு ஜூன் மாதம் பெலகாவியை மறுசீரமைப்பது குறித்து முடிவெடுக்க மத்திய அரசு மகாஜன் குழுவை அமைத்தது. குழு … Read more

கொரோனாவை தொடர்ந்து உலகம் சந்திக்கும் அடுத்த தொற்று நோய் என்ன?..மருத்துவ விஞ்ஞானிகள் ஆலோசனை

புதுடெல்லி: கொரோனாவைத் தொடர்ந்து உலகம் சந்திக்கப்போகும் அடுத்த பெருந்தொற்று என்ன என்பது குறித்து மருத்துவ விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்துகின்றனர். உலகம் முழுவதும் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப நோய்களின் வளர்ச்சியும் தீவிரமடைந்து வருகிறது. அவற்றை கண்டுபிடிக்கவும் அதற்கான மருந்துகளை உருவாக்கி நோய்களை கட்டுப்படுத்துவதிலும் உலக சுகாதார அமைப்பு பெரும் பங்காற்றி வருகிறது. உலகளாவிய முதலீடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு, குறிப்பாக தடுப்பூசிகள், சோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் வழி காட்ட உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். … Read more

மறதி நோயால் முகவரி தெரியாமல் 16 ஆண்டுகள் சுற்றி அலைந்த கேரள ராணுவ வீரர்! சோகமான பின்னணி!

கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக தனது ஓய்வூதிய பலன்களை பெறாமலே இருந்தது தற்போது தெரிய வந்திருக்கிறது. அவரைப் பற்றிய விவரங்களை அறிய பாதுகாப்பு ஓய்வூதிய வழங்கும் அலுவலகம் (DPDO) மேற்கொண்ட நடவடிக்கையில், அந்த நபர் ஆலப்புழா மாவட்டத்தின் மன்னார் பஞ்சாயத்தைச் சேர்ந்த பாவுக்கார பகுதியைச் சேர்ந்த ஏ.ஜி.சசீந்திரன் (70) என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என மனோரமா செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர் கடந்த ஜூன் 2007ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றதற்கான … Read more

உ.பி.யில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு: கைதாகிறார் டிக்கெட் பரிசோதகர்

பெரேலி: உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் டிக்கெட் பரிசோதகரை கைது செய்ய தனிப்படை விரைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த சோனு சிங் கடந்த 17 ஆம் தேதி அசாம் திப்ருகர் புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். அப்போது பெரேலி ரயில் நிலையம் நடை மேடை 2-ல் ஓடும் ரயிலில் இருந்து சோனு சிங் தள்ளிவிடப்பட்டார். இது குறித்து … Read more