சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்க ‘வியத்தகு இந்தியா’ பெயரில் மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்

புதுடெல்லி: சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்க ‘வியத்தகு இந்தியா’ என்ற சர்வதேச சுற்றுலா பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலாத் துறை செயலர் அர்விந்த் சிங் இதுகுறித்து கூறியதாவது: இந்திய சுற்றுலாத் துறையை மேம்படுத்த ‘வியத்தகு இந்தியா’ என்ற முழக்கத்துடன் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டில் உருவான கரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய சுற்றுலாத் துறை முழுவதுமாக முடங்கிப் போனது. ஆனால், கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, … Read more

டெல்லியை அடுத்து குஜராத்திலும் 12 பேரை சஸ்பெண்ட் செய்த பாஜக: தேர்தல் கலாட்டா

அகமதாபாத்: தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக மனுதாக்கல் செய்த  12 கிளர்ச்சியாளர்களை பாஜக இடைநீக்கம் செய்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில், டிசம்பர் 1ம் தேதி வாக்குக்ப்பதிவு நடைபெறவிருக்கும் முதல் கட்ட தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடும் ஏழு பிஜேபி தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது. குஜராத் பாஜக இப்போது தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் மேலும் 12 தலைவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. இவர்கள் இரண்டாம் கட்டமாக டிசம்பர் … Read more

மராட்டிய மாநிலம் நாசிக் அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவு

நாசிக்: மராட்டிய மாநிலம் நாசிக் அருகே அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நாசிக்கில் இருந்து 89 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவாகியுள்ளது.  

புத்தம் புது சிம்பொனி விரைவில் வெளியாகிறது – இசைஞானி இளையராஜாவின் நேர்காணல்

புதுடெல்லி: இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவின் புதிய சிம்பொனி இசை விரைவில் வெளியாகவுள்ளது. ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும் ஆற்றல் இருப்பதில்லை என்ற தவறானக் கருத்து மேற்கத்திய இசை வல்லுநர்களிடம் இருந்தது. அதை மாற்றிக் காட்டியவர் இசைஞானி இளையராஜா. லண்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டுஇயங்கிவரும் உலகப் புகழ்பெற்ற ‘ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா’ குழுவினர் இசைக்கும் வண்ணம் தனது முதல் சிம்பொனி இசைக் கோர்வையை படைத்து, அவர்களை இசைக்கவும் வைத்து சாதனை படைத்தார். … Read more

மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: ‘மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதன் கூட்டம் டெல்லியில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு … Read more

2019-ம் ஆண்டில் இந்தியாவில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழப்பு – லான்செட் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக லான்செட் ஆய்வு கூறுகிறது. தி லான்செட் என்ற மருத்துவ இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதில்கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டில் சர்வதேச அளவில் இஸ்கெமிக் இதய நோய்க்கு அடுத்தபடியாக மனித உயிரிழப்புக்கு பாக்டீரியா தொற்று 2-வது முக்கிய காரணமாக இருந்துள்ளது. உலகம் முழுவதும் அந்த ஆண்டில் 33 வகை பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் … Read more

ஜம்மு சர்வதேச எல்லையில் 2 ஊடுருவல்கள் முறியடிப்பு: ஒருவர் சுட்டுக்கொலை; 5 தீவிரவாதிகள் கைது

ஜம்மு: ஜம்முவின் சர்வதேச எல்லையில் 2 ஊடுருவல்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர். இதில், ஊடுருவிய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஆர்எஸ்.புராவில் அர்னியா சர்வதேச எல்லை பகுதியில் நேற்று முன்தினம் இரவு  2.30 மணியளவில் மர்மநபர் நடமாட்டம் தெரிந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த நபரை எச்சரித்துள்ளனர். அவர் சர்வதேச எல்லையை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளார். கட்டுப்பாடு வேலியை … Read more

 நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருவதால் நேற்று முதல் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாலையில் 4 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வார நாட்களில் தினமும் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து  வருகின்றனர். வார இறுதி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது. திங்கட்கிழமையான நேற்று முன்தினமும் மிக … Read more

உ.பி.யில் ஆசம் கானுக்கு நெருக்கமான ஃபசகத் அலி கான் பாஜகவில் இணைந்தார்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் ராம்பூர் தொகுதி எம்எல்ஏவுமான ஆசம் கானுக்கு அவதூறு வழக்கில் கடந்த மாதம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் காலியான ராம்பூர் தொகுதிக்கு டிசம்பர் 5-ம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆசம் கானுக்கு நம்பிக்கைக்குரியவரும் ஊடகப் பொறுப்பாளருமான ஃபசகத் அலி கான் என்கிற ஷானு நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்தார். ராம்பூர் தொகுதிக்கான சமாஜ்வாதி வேட்பாளராக … Read more

பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி முதல்வர் உள்பட 4 ஆசிரியர்கள் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே திருப்பூணித்துறையில் தனியார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி உள்ளது. சில தினங்களுக்கு முன், இந்த பள்ளியில்  படிக்கும் பிளஸ் 1 மாணவியை  கிரண் (51) என்ற ஆசிரியர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கலைவிழாவில் பங்கேற்பதற்காக தனது பைக்கில் அழைத்து சென்றார். கலைவிழா முடிந்து இரவில் பைக்கில் திரும்பினர்.  அப்போது மாணவியிடம் ஆசிரியர் கிரண் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி … Read more