வெளியான அதிர்ச்சி வீடியோ..!! ஈடிவி பாரத் உதவி ஆசிரியர் கார் விபத்தில் சிக்கி பலி..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நிவேதிதா சூரஜ். கடந்த 19-ம் தேதி கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சூரஜ் – பிந்து தம்பதியின் மகள் நிவேதிதா. இவர் ஊடகத்துறையில் பட்டம் பெற்றவர். 2021-ம் ஆண்டு மே மாதம் ஐதராபாத்தில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தின் கேரள பிரிவில் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். இவர் ஐதராபாத்தின் பாக்யலதா பகுதியில் தங்கி … Read more

அரசு உத்தரவிட்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறும் பணியை முடிக்க தயார்: இந்திய ராணுவம்

பூஞ்ச்: அரசு உத்தரவிட்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறும் பணியை முடிக்க ராணுவம் தயாராக இருக்கிறது என்று வடக்கு மண்டல ராணுவத் தளபதி லெப். ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து உபேந்திர திவேதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவதுதான் இந்தியாவின் இலக்கு என கடந்த அக்டோபர் 27ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது குறித்து … Read more

மேகாலயா – அசாம் எல்லையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு.. 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு..!

மேகாலயா – அசாம் மாநில எல்லையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் வனத்துறை அதிகாரி உள்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மாநில எல்லையில், அசாம் வனத்துறையினருக்கும், மேகாலயாவின் Mukroh கிராமவாசிகளுக்கும் இடையே மோதல் மூண்ட நிலையில், அசாம் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் மேகாலயாவை சேர்ந்த 5பேரும், அசாம் வனத்துறை அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், மேகாலயாவின் 7 மாவட்டங்களில், காலை … Read more

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கு, பாஜக தேசிய பொதுச்செயலாளருக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: தெலங்கானா போலீஸ் நடவடிக்கை

ஐதராபாத்: தெலங்கானானில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், துஷார் வெள்ளப்பள்ளி, ஜக்குசாமி ஆகியோருக்கு எதிராக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த நிலையில், மேற்கண்ட மூன்று பேருக்கும் எதிராக தெலங்கானா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் மூவரும் விசாரணைக்கு ஆஜராகாததால் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பி.எல்.சந்தோஷ், துஷார் வெள்ளப்பள்ளி, ஜக்குசாமி … Read more

கள்ளக் காதலர்களை உல்லாசம் அனுபவிக்க வைத்து வெட்டிக் கொலை செய்த சாமியார்..!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் கோகுண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கேலா பவுடி காட்டில் இளைஞர் மற்றும் இளம் பெண்ணின் உடல்கள் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டன. இது, கள்ளத்தொடர்பு அல்லது கவுரவக் கொலையாக இருக்கும் என போலீசார் நினைத்தனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார். அந்தப் பகுதியில் நடமாடிய பாலேஷ் குமார் என்ற சாமியாரை பிடித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, இருவரையும் கொலை செய்ததை அவர் … Read more

ஆஸ்திரேலியாவுடனான தடையற்ற வர்த்தகத்தால் இந்திய தொழில்துறைக்கு மிகப் பெரிய வாய்ப்பு: பியூஷ் கோயல்

புதுடெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய தொழில்துறைக்கு மிகப் பெரிய வாய்ப்புகளை அளிக்கும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் காரணமாக, இந்தியாவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என அந்நாடு நம்பிக்கையுடன் உள்ளது. தற்போது, ஆட்டு இறைச்சி, … Read more

ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்த நபர் ‘போக்சோ’ வழக்கு குற்றவாளி என தகவல்..!

திகார் சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்த நபர், பாலியல் வன்கொடுமை புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சத்யேந்தர் ஜெயின் சிறையில் மசாஜ் செய்வதுபோன்ற வீடியோ வெளியான நிலையில், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக, துணை முதல்வர் மணிஷ் சிசியோடியா தெரிவித்திருந்தார். இந்நிலையில், மசாஜ் செய்தவரின் பெயர் ரிங்கு என்றும், போக்சோ வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், சத்யேந்தர் ஜெயினின் அறைக்கு அருகே … Read more

2 குழந்தைகளின் தந்தையாக இருந்து கொண்டு ‘மேட்ரிமோனி’ மூலம் பெண்களின் வாழ்க்கையில் விளையாடியவன் சிக்கினான்; ‘பிடெக்’ படித்ததாக கூறி பலரிடம் மோசடி

லக்னோ: மேட்ரிமோனி இணையதளம் மூலம் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாண்ட மோசடி குற்றவாளியை உத்தரபிரதேச போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆஷியானா பகுதியை சேர்ந்த ஹரிஓம் துபே என்ற சஞ்சய் சிங் என்பவர், தனக்கான வரன் தேடி ஆன்லைன் திருமண வெப்சைட்டில் (மேட்ரிமோனி திருமண தகவல் மையம்) பதிவு செய்திருந்தார். பிளஸ் 2 வரை படித்த இவர், தனது கல்வித் தகுதியை பிடெக் என்று குறிப்பிட்டிருந்தார். இவரது விபரங்களை அறிந்த பீகாரை சேர்ந்த … Read more

Morbi Tragedy: மோர்பி பால விபத்து: 3,165 டிக்கெட்டுகள் விற்பனை.. துருபிடித்த கேபிள்கள் – ஷாக் தகவல்கள்!

குஜராத் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்கு உள்ளான நாளன்று, 3,165 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட தகவல் தடயவியல் விசாரணையில் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்கே, 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விபத்துக்கு உள்ளானது. கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணி அளவில், தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தில் இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் … Read more

மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லை பிரச்சனை – 2 அமைச்சர்களை நியமித்தது மகாராஷ்டிரா அரசு..!

கர்நாடகத்துடன் நிலவி வரும் எல்லை பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, 2 அமைச்சர்களை மகாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது. மகாராஷ்டிராவுக்கும், அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கும் இடையே எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில், எல்லை பிரச்சனையில் சட்ட மற்றும் இதர விஷயங்களை ஒருங்கிணைக்க, பாஜகவைச் சேர்ந்த உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் சம்புராஜே தேசாய் ஆகியோரை நியமித்துள்ளதாக, மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. Source link