500 கிலோ கஞ்சாவை தின்று ஏப்பம் விட்ட எலிகள் – போலீஸ் வினோத விளக்கம்

உத்தரப் பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள ஷெர்கர் மற்றும் நெடுஞ்சாலை காவல் நிலையத்தின் கிடங்கில், 500 கிலோவிற்கு அதிகமான கஞ்சா பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, போதை மருத்துகள் மற்றும் உளவியல் மருந்துகள் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 586 கிலோ கஞ்சாவை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு மதுரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதாவது, ஒரு வழக்கில் 386 கிலோ  கஞ்சாவையும், மற்றொரு வழக்கில் 195 கிலோ கஞ்சாவையும் என மொத்தம் 586 கிலோ … Read more

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நவ. 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. விலங்குகளை முன்னிலைப்படுத்தி விளையாடப்படும் விளையாட்டுகள் விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகளை மீறுகின்றனவா? என கேள்வி எழுப்பப்பட்டது. பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார். ஜல்லிக்கட்டு, சக்கடி-க்கு ஆதரவாக தமிழ்நாடு, மராட்டிய அரசுகள் கொண்டு வந்த சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவையா? ஜல்லிக்கட்டை கலாச்சாரம் என … Read more

581 கிலோ கஞ்சாவை எலி தின்னுடுச்சு..! – கோர்ட்டில் சம்பவம் செய்த உபி போலீஸ்

உத்தர பிரதேச மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக, மதுரா காவல் துறையினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மதுரா காவல் துறை நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சாக்கள் கடத்தல்காரர்களிடம் … Read more

50 பயணிகளுடன் சென்ற கேரள அரசு பஸ்சை மறித்து யானை அட்டகாசம்: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருச்சூர் அருகே சாலக்குடி பகுதியில் கபாலி என்ற காட்டு யானை அடிக்கடி ரோட்டுக்கு வந்து வாகன ஓட்டிகளையும், பயணிகளையும் பயமுறுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் இந்த யானை 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு சென்ற தனியார் பஸ்சை தாக்க முயன்றது. அந்த யானையிடமிருந்து தப்பிப்பதற்காக டிரைவர் பஸ்சை வளைவான அந்த மலைப்பாதையில் மிகவும் சாகசமாக 8 கிமீ பின்னோக்கி ஓட்டிச் சென்றார். 8 கிமீ தூரம் வரை அந்த … Read more

உடல் முழுவதும் வெட்ட வெட்ட வளரும் முடி! அரியவகை நோயால் மீளா துயரத்தில் ம.பி. இளைஞர்!

werewolf syndrome என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபனின் புகைப்படம்தான் சமூக வலைதளங்களில் படு வைரலாகியிருக்கிறது. நோயின் பேருக்கு ஏற்றார் போல, அந்த வாலிபனின் முகம் உட்பட உடல் முழுவதும் முடிகளால் சுழப்பட்டிருக்கிறது. லலித் பதிடர் என்ற 17 வயது இளைஞனான அவர் மத்திய பிரதேசத்தின் நந்த்லேட்டா கிராமத்தைச் சேர்ந்தவராவார். லலித்தின் ஆறாவது வயதில் கண்டறியப்பட்ட இந்த அறியவகை நோய்க்கு மருத்துவத்தில் hypertrichosis என அழைக்கப்படுகிறது. hypertrichosis என்பது உடலின் பாகங்களில் அதிகளவில் … Read more

மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் அமைப்பு பொறுப்பேற்பு

கர்நாடகா: மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நவம்பர் 19-ல் மங்களூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. குக்கர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்ற இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் அமைப்பு குறித்து மங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

”ஆர்கானிக் Pad-களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்” – மாதவிடாய் குறித்த ஆய்வில் பகீர் தகவல்!

இந்தியாவில் பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களில் இதயக்குறைபாடுகள், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற தீவிர பிரச்னைகளை ஏற்படுத்தும் ரசாயனங்களை கொண்டிருப்பதாக தன்னார்வு அமைப்பு செய்த ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற தன்னார்வ அமைப்பு செய்த அந்த ஆய்வில், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 10 சாம்பிள்களில் (6 கனிமமற்ற மற்றும் 4 கனிமங்கள் நிறைந்த சானிட்டரி நாப்கின்கள்) phthalates and volatile ரசாயனங்கள் இருந்தது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை, `மென்சுரல் வேஸ்ட் 2022’ (மாதவிடாய்க்கால கழிவுகள் … Read more

மின்னல் வேகத்தில் தேர்தல் ஆணையர் நியமனம்: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

புதிய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக மத்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்த நிலையில், புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில், ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருப்பர். இவர்கள் பணி மூப்பின் அடிப்படையில் அந்தந்த பதவிகளில் நியமிக்கப்படுவர். அந்தவகையில், இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக … Read more

புதுச்சேரி – காலாப்பட்டு சிறையில் கைதி மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி – காலாப்பட்டு சிறையில் கைதி முழவன் என்பவர் மீது தண்டனை கைதியான குமரன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதி குமரன் நடத்திய தாக்குதலில் காயமடைந்த முழவனுக்கு சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்னாது இங்கேயுமா? ஏகப்பட்ட சலுகைகளுடன் இந்திய ஊழியர்களை வெளியேற்றும் அமேசான்

இந்திய ஊழியர்களை வெறுமனே பணிநீக்கம் செய்யாமல் பல்வேறு சலுகைகள் அடங்கிய VSP என்ற திட்டத்துடன் வெளியேற்றுகிறது அமேசான் நிறுவனம். ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கை தொடர்ந்து, உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவில் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது. செலவினங்களை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமேசான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது என அமேசான் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவிலும் அந்நிறுவனம் … Read more