தொடர் மழையால் உத்திரமேரூர் பகுதியில் விவசாய பணிகள் ஜரூர்

உத்திரமேரூர்: சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் உத்திரமேரூர் பகுதியில் விவசாய பணிகள் ஜரூராக தொடங்கியுள்ளது. உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிதுள்ளது. குறிப்பாக உத்திரமேரூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த ெகாள்ளளவில் பாதியளவு நிரம்பியுள்ளது. தொடர்ந்து, பருவமழை தீவிரமடையும் நிலையில் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும். அதனால் விரைவில் ஏரி நிரம்பும் … Read more

இமாச்சல் தேர்தல் | “பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது காங்கிரஸின் வாடிக்கை” – பிரதமர் மோடி

மாண்டி (இமாச்சலப் பிரதேசம்): பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான இமாச்சலப் பிரதேசத்தின் ஷியாம் சரண் நேகி இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்தேன். அவர் தனது 106-வது வயதில் உயிரிழந்திருக்கிறார். முன்னதாக, தபால் வாக்கு … Read more

ஹிமாச்சல், குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி..! – கருத்துக்கணிப்பில் தகவல்!

ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், ஆளும் பாஜகவே மீண்டும் வெற்றி பெறும் என, கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 … Read more

குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் ஒதுக்கினால் டெல்லி அமைச்சர்கள் மீதான வழக்குகளை கைவிடுவதாக பாஜக பேரம்: கெஜ்ரிவால் பரபரப்பு புகார்

டெல்லி: குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடாமல் ஒதுக்கினால் டெல்லி அமைச்சர்கள் மீதான வழக்குகளை கைவிடுவதாக பாஜக பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். கெஜ்ரிவால் மீது மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்த நிலையில் பாஜக மீது கெஜ்ரிவால் புகார் கூறியுள்ளார். குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடாமல் ஒதுங்கினால் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயினை வழக்கில் இருந்து விடுவிப்பதாக பாஜக பேரம் பேசியது என அரவிந்த் கெஜ்ரிவால் … Read more

ஆளுநர்கள் திமுகவின் கைப்பாவையாக இருக்க வேண்டுமா? – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி

திமுகவின் கைப்பாவையாக ஆளுநர் இருக்க வேண்டும்; இல்லையெனில் ஆளுநரை மாற்றிவிட்டு அவர்களுக்கு ஏற்றவர்களை ஆளுநராக நியமிக்க வேண்டும் என கேட்பது நடக்காது என எல்.முருகன் கூறியுள்ளார். புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், ”புதுச்சேரி மாநில அரசின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு நிதியாக ரு.1,400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரியில் வேலை வாய்ப்பை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்கனவே 400 பேருக்கு காவல்துறையில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 10 ஆயிரம்பேருக்கு வேலை கொடுக்க முடிவுசெய்து … Read more

அரவிந்த் கேஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு பாஜக பிரமுகர் வைத்த பேனர்!

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் ஹிட்லருடன் ஒப்பிட்டு டெல்லி பாஜக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் தஜிந்திர பால் சிங் பக்கா. இவர், டெல்லியின் காற்று மாசு விவகாரம் குறித்து டெல்லி பாஜக அலுவலகம் முன்பு, அம்மாநில முதல்வர் கேஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒன்றை வைத்துள்ளார். அந்த போஸ்ட்டரில், ‘தான் வாழும் நகரினை விஷவாயு கிடங்காக மாற்றி வைத்திருக்கும் … Read more

ஷியாம் சரண் நேகியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் தலைமை தேர்தல் ஆணையர்!

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி காலமானார். அவருக்கு வயது 105. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்தரம் அடைந்த பிறகு முதல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவில், கின்னோர் மாவட்டத்தின் கல்பா கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி முதல் வாக்காளராகச் சென்று வாக்களித்து தனது ஜனநாயக் கடமையை ஆற்றினார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமையை அவர் பெற்றார். அன்று … Read more

முதல் வாக்காளரின் இறுதி ஊர்வலம் – நேரில் பங்கேற்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்

புதுடெல்லி: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகியின் இறுதி ஊர்வலத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பங்கேற்கிறார். சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகியின் இறுதி ஊர்வலம் இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான கல்பாவில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், அந்த கிராமத்திற்கு புறபட்டுள்ளார். நாடு சுதந்தரம் அடைந்த பிறகு முதல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 1952, … Read more

2 ரூபாய்க்கு மாட்டு சாணம் வாங்கப்படும் – காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி

இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி காங்கிரஸ் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மக்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என்பதை நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், … Read more

மாணவர் ஷாரோன் கொலைக்கு ஜோதிடர் கூறியதுதான் காரணமா?.. கிரீஷ்மா உள்பட 3 பேரிடம் கிடுக்கிப்பிடி

திருவனந்தபுரம்: கல்லூரி மாணவர் ஷாரோனை கொலை செய்ததற்கு மூடநம்பிக்கை தான் காரணம் என்று அவரது பெற்றோர் தெரிவித்திருந்ததால், அது உண்மைதானா? என்று கண்டறிவதற்காக கிரீஷ்மா, அவரது தாய் மற்றும் மாமாவிடம் ஒன்றாக விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் தீர்மானித்துள்ளனர். குமரி மாவட்டம், நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது காதலி கிரீஷ்மா, தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல்குமார் ஆகியோர் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். சிந்து மற்றும் … Read more