ஷியாம் சரண் நேகியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் தலைமை தேர்தல் ஆணையர்!

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி காலமானார். அவருக்கு வயது 105. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்தரம் அடைந்த பிறகு முதல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவில், கின்னோர் மாவட்டத்தின் கல்பா கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி முதல் வாக்காளராகச் சென்று வாக்களித்து தனது ஜனநாயக் கடமையை ஆற்றினார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமையை அவர் பெற்றார். அன்று … Read more

முதல் வாக்காளரின் இறுதி ஊர்வலம் – நேரில் பங்கேற்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்

புதுடெல்லி: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகியின் இறுதி ஊர்வலத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பங்கேற்கிறார். சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகியின் இறுதி ஊர்வலம் இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான கல்பாவில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், அந்த கிராமத்திற்கு புறபட்டுள்ளார். நாடு சுதந்தரம் அடைந்த பிறகு முதல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 1952, … Read more

2 ரூபாய்க்கு மாட்டு சாணம் வாங்கப்படும் – காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி

இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி காங்கிரஸ் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மக்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என்பதை நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், … Read more

மாணவர் ஷாரோன் கொலைக்கு ஜோதிடர் கூறியதுதான் காரணமா?.. கிரீஷ்மா உள்பட 3 பேரிடம் கிடுக்கிப்பிடி

திருவனந்தபுரம்: கல்லூரி மாணவர் ஷாரோனை கொலை செய்ததற்கு மூடநம்பிக்கை தான் காரணம் என்று அவரது பெற்றோர் தெரிவித்திருந்ததால், அது உண்மைதானா? என்று கண்டறிவதற்காக கிரீஷ்மா, அவரது தாய் மற்றும் மாமாவிடம் ஒன்றாக விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் தீர்மானித்துள்ளனர். குமரி மாவட்டம், நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது காதலி கிரீஷ்மா, தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல்குமார் ஆகியோர் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். சிந்து மற்றும் … Read more

பெண்களுக்கு மாதம் ரூ.1,500 – இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது. இமாச்சப் பிரதேச சட்டப்பேரவைக்கு இந்த மாதம் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தில் தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை (நவ.5) சிம்லாவில் உள்ள மாநில கட்சித் தலைமை அலுவலகத்தில் … Read more

வெறி கொண்டு துரத்திய குரங்கு கூட்டம்… மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த நபர்!

உத்திரப்பிரதேசம் பரேலியில், நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், 40 வயதுடைய விவசாயி, தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருக்கையில், குரங்குகள் கூட்டம் துரத்தியதில்,  மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்தார். தன்னைத் தாக்கிய குரங்குகளின் கூட்டத்திடமிருந்து தப்பிக்க முயன்றபோது தவறுதலாக மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்தார்.  இறந்த நபர் முகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடனடியாக பரேலி நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். … Read more

குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் இருக்க பாஜக பேரம் பேசியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு

டெல்லி: குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் இருக்க பாஜக பேரம் பேசியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு தெரிவித்துள்ளனர். ஆம்ஆத்மி போட்டியிடாமல் ஒதுங்கினால் டெல்லி அமைச்சர்கள் மீதான வழக்குகளை கைவிடுவதாக பாஜக பேரம் பேசியுள்ளனர் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளனர். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயினை வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் பாஜக பேரம் பேசியுள்ளது.

கொசுக்களை பாட்டிலில் அடைத்து நீதிமன்றத்துக்கு வந்த கேங்க்ஸ்டர்; என்ன காரணம்?

முப்பை நீதிமன்றத்தில், சிறை கைதி கொசு வலை கேட்ட கோரிக்கை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மும்பையின் பிரபல கேங்ஸ்டரான தாவூத் இப்ராகிம் கூட்டாளியான இஜாஸ் லக்டவாலா கைது செய்யப்பட்டு கடந்து இரண்டு வருடமாக தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதால் பல முயற்சிகள் எடுத்தும், இவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் தலோஜா சிறையில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கொசு வலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மாவட்ட செஷ்ன்ஸ் … Read more

டெல்லி காற்று மாசு | தேர்தல் இலவசங்களை அறிவிப்பதில்தான் முதல்வர் தீவிரமாக இருக்கிறார் – கெஜ்ரிவாலை விமர்சித்த மத்திய அமைச்சர்

புதுடெல்லி: டெல்லியில் நிலவும் காற்று மாசினை போக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும், அவரது கவனம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் இலவசங்களை அறிவிப்பதில்தான் இருக்கிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விமர்சித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டெல்லியில் உள்ள மக்கள் உடனடியாக முகக்கவசம் அணிந்து காற்று மாசிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அரவிந்த் … Read more

தலைகீழாகத்தான் நிற்பேன்: திருமண போட்டோ ஷூட் அலப்பறைகள்!

பழைய நினைவுகளை நினைவூட்டும் பொக்கிஷமாக புகைப்படங்கள் இருந்தன. பிரிண்ட் போட்டு ஆல்பமாக வீட்டு அலமாரியில் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பார்த்து மகிழ்வது வழக்கம். ஆனால், நிலை மாறி, இன்றைய நவீன உலகில், போகிற போக்கில் செல்பி எடுத்து விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புகைப்பட உலகில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறிப்பாக திருமண போட்டோக்களில் அதிகம் எதிரொலித்து வருகிறது. 1970களுக்கு முன்பெல்லாம் திருமண வீடுகளில் போட்டோ எடுக்கும் நிகழ்வு அரிதாகவே இருந்தது. 1990களுக்கு பின்னர், திருமண வீடுகளில் … Read more