பாலியல் பலாத்காரத்தில் கர்ப்பம் ஆனதால் மாணவியை விஷம் கொடுத்து கொன்று கிணற்றில் வீசியெறிந்த ஆசிரியர் கைது

போபால்: மத்திய பிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்தில் கர்ப்பமடைந்த மாணவியை விஷம் கொடுத்து கொன்று கிணற்றில் வீசி எறிந்த ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஹோல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் ஆசிரியர் சிவேந்திரா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழகி வந்தார். பின்னர் அந்த மாணவியை பாலியல் பலாதகாரம் செய்தார். இந்த விஷயத்தை அந்த மாணவி தனது பெற்றோரிடம் … Read more

24 வயது நடிகை மாரடைப்பால் மரணம்!!

பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா (24) தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்துள்ள ‘ஜியோன்கதி’ என்ற தொடர் பெங்காலி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனதை தொடர்ந்து, கடந்த 2015ஆம் ஆண்டு இவரது கால் எலும்பில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இவருக்கு கீமோதெரபி அளிக்கப்பட்டு, 2016ஆம் ஆண்டு அந்த நோயிலிருந்து மீண்டார். கடந்த ஆண்டு இவரது நுரையீரலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கும் … Read more

3 ஆண்டுகளில் பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் 67% சரிவு: ஆர்டிஐ தகவல்

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பிரதமரின் கிசான் திட்ட பயானாளிகள் எண்ணிக்கை 67% சரிந்துள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது. 2019 தேர்தலுக்கு முன்னர் பாஜக தான் அறிவித்த மெகா திட்டமாக பறைசாற்றிக் கொண்ட திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டின் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை தலா ரூ 2,000 வீதம் என, மூன்று … Read more

2வது திருமணம் செய்து கொண்டதால் தம்பதிக்கு செருப்பு மாலை; சிறுநீரை குடிக்க வைத்த கொடூரம்: ராஜஸ்தான் சமுதாய பஞ்சாயத்தில் தீர்ப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இளைஞனுக்கும், அவரது மனைவிக்கும் செருப்பு மாலை அணிவித்து சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரின் மதோராஜ்புரா பகுதியை சேர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. அந்த வீடியோவில், திருமணமான தம்பதிக்கு செருப்பு மாலை அணிவித்து, அவர்களுக்கு பாட்டிலில் நிரப்பட்ட சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம், கடந்த மூன்று … Read more

கர்நாடகா ஆட்டோ குண்டு வெடிப்பில் தீவிரவாதிகளின் சதி அம்பலம்..கோவை சம்பவத்துடன் தொடர்பு.?

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் இருந்து 370 கிமீ தொலைவில் உள்ள மங்களூருவில் நேற்று மாலைஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அதில் பயணம் செய்த ஒருவர் என இருவர் படுகாயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பில் காயமடைந்த ஷரீக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வகுப்பு வாத கலவரங்கள் அதிகம் நடைபெறும் கடற்கரை நகரமான மங்களூருவில் சம்பவம் நடைபெற்றுள்ளதாலும், மேலும் கோவை கார் வெடிப்பு சமீபத்தில் நடந்துள்ளதாலும், தற்போதய ஆட்டோ வெடிப்பு சம்பவம் மிகுந்த முக்கியத்துவம் … Read more

சத்ரபதி வீர சிவாஜியுடன் ஒப்பீடு; மாணவர்களின் ‘ரோல் மாடல்’ அமைச்சர் நிதின் கட்கரியா? ஆளுநரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

அவுரங்காபாத்: சத்ரபதி வீர சிவாஜியுடன் ஒப்பிட்டும், மாணவர்களின் ‘ரோல் மாடல்’ நிதின் கட்கரி என்று மகாராஷ்டிரா ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாநில ஆளுநர் கோஷ்யாரி, ஒன்றிய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். தொடர் அவர் பேசுகையில், ‘நாங்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது உங்களுக்குப் பிடித்த ஹீரோ, … Read more

முதல் நிதியாண்டிலேயே இத்தனை கோடிகள் நஷ்டமா!.. ஜெப்டோ நிறுவனத்தின் தொடக்கம் எப்படி?

முதல் நிதியாண்டிலேயே ஜெப்டோ நிறுவனம் ரூ.390.4 கோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஜெப்டோ (Zepto), மளிகைப் பொருள்களை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யும் ஓர் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆகும். இளம் தொழில்முனைவோர்களான ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா ஆகிய இருவரும் இந்த நிறுவனத்தை கடந்த 2021 செப்டம்பரில் தொடங்கினார்கள். இந்த ஆண்டு 2022 ஏப்ரல் மாதம் தான் அந்த நிறுவனம் செயல்படத் தொடங்கியது. ஆனால், ஆரம்பித்த ஆறே மாதங்களுக்குள் இந்த நிறுவனம் … Read more

சர்ச்சையில் சிக்கியுள்ள இளம் பெண் மேயர்!!

இந்தியாவின் இளம் வயது மேயர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் மாநகராட்சியின் கீழ் 295 தற்காலிக பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களின் பட்டியலை தருமாறு கேட்டு மாவட்ட செயலாளர் ஆனாவூர் நாகப்பனுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக மேயர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சியை சேர்ந்த இளைஞர் காங்கிரசார், பா.ஜ.க. யுவ மோர்ச்சா அமைப்பினர் தொடர் … Read more

சாலை விபத்தில் இளம் பெண் பத்திரிகையாளர் பலி!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளம் பெண் பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈ.டி.வி பாரத் தொலைக்காட்சியில் நிவேதிதா சூரஜ் (26) என்ற இளம்பெண் துணை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று தனது தோழி சோனாலி சாவ்ரே என்பவருடன் அதிகாலை 5 மணியளவில் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது பாக்யலதா பகுதியில் உள்ள ஹயாத் நகரில் அலுவலகப் பேருந்து ஏறும் இடத்திற்குச் செல்வதற்காக சாலையைக் கடந்தபோது வேகமாக வந்த கார் அவர்கள் இருவர் மீதும் … Read more

ஒன்பது பேர் அடுத்தடுத்து பலி… அதிர்ச்சியில் உறைந்திருக்கும் மும்பை… காரணம் இதுதான்!

கடந்த 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளில் ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் வாட்டி வதைத்து வந்தது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பல்லாயிரகணக்கான உயிர்கள் கொரோனாவுக்கு பலியாகின. பொது முடக்கம், தடுப்பூசி என தொடர் நடவடிக்கைகள் மூலம் உலக அளவில் தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்பாடா… கொரோனா அலை ஒரு வழியாக ஓய்ந்தது என உலக மக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்பரவிய குரங்கு அம்மை அந்நாட்டு … Read more