இவிஎம் இயந்திரங்களில் சின்னத்துக்கு பதில் வேட்பாளர் படம் வைக்க கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) அரசியல் கட்சிகளின் சின்னத்துக்குப் பதில், வேட்பாளரின் புகைப்படம், விவரங்களை வைக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல்களின் போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் இடம்பெறும். இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத் யாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறும்போது, ‘‘வாக்குப் பதிவு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்களுக்குப் பதில், வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் … Read more

வீடியோ ஆதாரங்களை தெலுங்கானா முதலமைச்சர் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு

தெலுங்கானா: தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக பேரம் பேசியதாக எழுந்த புகாரில் வீடியோ வெளியிடப்பட்டது. வீடியோ ஆதாரங்களை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதில் இந்தியா புதிய உச்சம் தொட்டுள்ளது: டிஆர்டிஓ தலைவர்

புதுடெல்லி: எதிரி ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிப்பதில் இந்தியா புதிய உச்சம் தொட்டிருப்பதாக டி.ஆர்.டி.ஓ தலைவர் சமிர் காமத் தெரிவித்துள்ளார். 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் AD-1 ஏவுகணை சோதனை, ஒடிசா கடற்பகுதியில் நேற்று நடத்தப்பட்டு, சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுடெல்லியில் இன்று (நவ. 3) செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஓ -வின் தலைவர் சமிர் காமத் கூறியதாவது: “2 ஆயிரம் … Read more

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 2000ம் ஆண்டில் டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதியானது. லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி ஆரிஃபின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2014ல் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் முகமது ஆரிஃப் மறு ஆய்வு மனுதாக்கல் செய்திருந்தார்.

சாட்டையால் அடித்தக்கொண்ட ராகுல் காந்தி!!

ராகுல் காந்தி தற்போது தெலங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். நேற்று அவர் ஐதராபாத்தில் தனது ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். அந்த பயணத்தில் ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆதரவையும், தனது தந்தை வைகோ சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரும் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ருத்ராராமில் இருந்து ராகுல் காந்தி இன்று 57ஆவது நாளாக பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். ஆந்திரா, தெலங்கானா, … Read more

சாட்டையால் அடித்தக்கொண்ட ராகுல் காந்தி!!

ராகுல் காந்தி தற்போது தெலங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். நேற்று அவர் ஐதராபாத்தில் தனது ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். அந்த பயணத்தில் ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆதரவையும், தனது தந்தை வைகோ சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரும் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ருத்ராராமில் இருந்து ராகுல் காந்தி இன்று 57ஆவது நாளாக பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். ஆந்திரா, தெலங்கானா, … Read more

இடைத்தேர்தலில் வாக்களிக்க ஒரு கிராம் தங்க காசு கேட்டு கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்

நல்கொண்டா: தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், முனுகோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இத்தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருந்த ராஜகோபால் ரெட்டி, திடீரென பாஜகவில் இணைந்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ராஜகோபால் ரெட்டி தற்போது பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இத்தேர்தலில், பாஜக, காங்கிரஸ் மற்றும் டிஆர்எஸ் கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. முனுகோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக … Read more

விவசாய வேலைக்காக டிராக்டரில் சென்ற போது ஏற்பட்ட விபரீதம்.. சம்பவ இடத்திலேயே 6 பெண் கூலித்தொழிலாளர்கள் பலி..!

ஆந்திர மாநிலத்தில் டிராக்டர் மீது மின்கம்பி விழுந்ததில் 6 பெண் கூலித்தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அனந்தபூர் மாவட்டத்திலுள்ள தர்காஹொன்னூரை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் விவசாய வேலைக்காக டிராக்டரில் சென்ற போது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து டிராக்டர் மீது விழுந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்,படுகாயமடைந்த மூன்று பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. சம்பவம் குறித்து அனந்தபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். Source link

ஆந்திராவில் டிராக்டர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப சாவு

அனந்தபூர்: ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்காஹொன்னூரை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், விவசாய பணிக்காக டிராக்டரில் புறப்பட்டனர். வழியில், எதிர்பாராத விதமாக உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து டிராக்டரில் விழுந்தது. இதில், கூலி தொழிலாளர்கள் மீது மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே 6 பேர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். இதையறிந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதற்கிடையில், அனந்தபூர் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு … Read more

நிலக்கரி சுரங்க முறைகேடு: ‘முடிந்தால் கைது செய்யுங்கள்’ – ஜார்க்கண்ட் முதல்வர் சவால்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அளித்திருந்த நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நிலக்கரி சுரங்கங்களுக்கான உரிமங்களை முறைகேடாக வழங்கியதாகவும், கருப்பு பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் படி ஹேமந்த் சோரனுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல், ‘முடிந்தால் என்னை அமலாக்கத்துறை கைது … Read more