தெலங்கானாவில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 25 மாணவிகள்… ரசாயன வாயு கசிவு தான் காரணமா ?

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து திடீரென ரசாயன வாயு கசிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மூச்சு திணறலில் 25 மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மாணவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரசாயன வாயு கசிந்தது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட … Read more

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு தண்டனை – டெல்லி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: உலகம் முழுவதும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியுடன் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வகை செய்யும் 3-வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. தீவிரவாதத்துக்கு நிதி இல்லை என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க நாளான நேற்றைய நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மாநாட்டில் அவர் பேசியதாவது: தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட … Read more

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரின் மசில் செக்டார் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 3 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா செக்டாரின் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி அருகே உள்ள மசில் செக்டார் பகுதியில் நேற்று மாலை திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 3 வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி புதைந்தனர். தகவல் அறிந்த மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 3 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். … Read more

இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது..!!

இந்தியாவில் முதல் முறையாக ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ (Vikram-S) நவம்பர் 18-ம் தேதி விண்வெளிக்கு செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இந்தப்பணிக்கு ‘பிரரம்ப்’ என பெயரிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் தயாரித்த ராக்கெட்டை நேற்று (நவ. 18) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட் … Read more

இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது..!!

இந்தியாவில் முதல் முறையாக ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ (Vikram-S) நவம்பர் 18-ம் தேதி விண்வெளிக்கு செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இந்தப்பணிக்கு ‘பிரரம்ப்’ என பெயரிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் தயாரித்த ராக்கெட்டை நேற்று (நவ. 18) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட் … Read more

நவீன இந்தியாவின் சிற்பி

இந்திய – ரஷ்ய நாடுகளுக்கு இடையே உணர்வுப்பூர்வமான நட்புறவு நீண்டகாலமாக நீடித்து வருகிறது. இந்த நல்லுறவுக்கு அடித்தளமிட்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு. ரஷ்ய புரட்சியால் ஈர்க்கப்பட்டவர் நேரு. சோசியலிஸ்ட் சித்தாந்தங்களிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர். அதன் தாக்கமே 1927-ம் ஆண்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தினவிழாவில் தனது தந்தை மோதிலால் உடன் நேருவை பங்கேற்க வைத்தது. மேலும், 1953-ம் ஆண்டு இந்தியா சோவியத் கலாச்சார நட்புறவு கழகத்தை உருவாக்கிய டாக்டர் … Read more

திருப்பதியில் அதிகாலையில் சென்னை எக்ஸ்பிரசில் திடீர் தீயால் பரபரப்பு

திருமலை: திருப்பதியில் அதிகாலையில் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீயால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றுமுன்தினம் புறப்பட்டது. நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், திருப்பதி மாவட்டம் கூடூர் ரயில் நிலைய சந்திப்பு இடையே வந்தது. அப்போது, ரயிலில் உள்ள பேன்ட்ரி(சமையல் செய்யும்) பெட்டியில் பயணிகளுக்கு தேவையான காலை உணவு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்த பெட்டியில் … Read more

 சபரிமலையில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்: முன்பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டதால், நடை திறந்த முதல் நாளிலேயே  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். கார்த்திகை 1ம் தேதியான நேற்று முன்தினம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். 2வது நாளாக நேற்றும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. நேற்றைய தரிசனத்திற்காக 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இது தவிர நிலக்கல், திருவனந்தபுரம், குமுளி உள்பட … Read more

வாரணாசியில் ஒருமாதம் நடக்க உள்ள காசி தமிழ் சங்கமம் இன்று தொடக்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு

வாரணாசி: வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான பழமையான கலாசார தொடர்பை மீண்டும் புதுப்பிக்கவும், கொண்டாடவும் ‘காசி தமிழ் சங்கமம்’ விழா உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஒன்றிய கலாசாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய அமைச்சகங்களும் உத்தரப்பிரதேச அரசும் செய்துள்ளன. … Read more

உச்ச நீதிமன்றத்தில் இந்தியில் வாதாடிய நபரால் பரபரப்பு: நீதிபதிகள் தடுத்து நிறுத்தினர்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தனிநபர் மனு ஒன்றை விசாரணைக்கு எடுத்தது. அப்போது மனுதாரரான சங்கர் லால் சர்மா என்பவர், அவரது தரப்பு கோரிக்கையை இந்தியில் வாதங்களாக முன்வைத்தார். தனது பிரச்னைகள் குறித்து பல நீதிமன்றங்களை நாடிய பின்னர் எங்கும் தீர்வு கிடைக்காத காரணத்தினால் தான் உச்ச நீதிமன்றத்தை நாடியதாக அவர் நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘உச்ச நீதிமன்றத்தை பொருத்தமட்டில் வழக்காடு … Read more