பாலியல் ஆற்றலுக்காக கழுதை இறைச்சி பதுக்கலா? – கூண்டோடு கைப்பற்றிய ஆந்திர போலீஸ்!

ஆடு, கோழி போன்றவற்றின் இறைச்சியை சாப்பிடுவதை போல கழுதையின் இறைச்சியை சாப்பிடுவது சமீப காலமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருவதாக செய்திகள் உலா வருகின்றன. எருமைப்பால், ஆட்டுப்பால், பசும் பாலுக்கு நிகராக கழுதைப் பாலுக்கு கிராக்கி அதிகரித்திருக்கிறது. இதனால் கழுதைப் பண்ணைத் தொழில் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. ஏனெனில் கழுதைப் பால் குடிப்பதனால் சில உடல்நல நன்மைகளும், கழுதையின் இறைச்சியை சாப்பிடுவதால் பாலியல் ரீதியான ஆற்றல் பெருகுவதாகவும் நம்பப்படுவதால் கழுதையை பதுக்குவதாகவும் சட்டவிரோதமாக அதன் இறைச்சி … Read more

பிரதமரின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் 280 இடங்களில் தொழிற்பயிற்சி மேளா

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் நேரடி செயல் முறை பயிற்சிகளை ஊக்குவிக்க திறன் இந்தியா திட்டத்தை (ஸ்கில் இந்தியா மிஷன்) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன் ஒரு … Read more

பாதுகாப்புப் படையினர் நடத்திய பயங்கரவாத வேட்டையில் குண்டு பாய்ந்து ராணுவ நாய் பலத்த காயம்..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் ராணுவ மோப்ப நாய் பலத்த காயமடைந்தது. டாங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவ்விடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், ராணுவ மோப்ப நாய் ஜூம் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த மோதலில், மறைந்திருந்த பயங்கரவாதிகள் நாயை நோக்கி இருமுறை சுட்டதில் படுகாயமடைந்தது. பயங்கரவாத வேட்டையில் தோட்டாக்கள் ஏந்தி திறம்பட செயல்பட்ட ராணுவ மோப்ப நாய் … Read more

கர்நாடகாவில் கொட்டும் மழையில் நனைந்தபடி ராகுல் காந்தி நடைப்பயணம்: செல்லும் இடம்தோறும் உற்சாக வரவேற்பு..!

பெங்களூரு: கர்நாடகாவில் இன்றும் மழையில் நனைத்தவாறு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ஒற்றுமை நடைபயணத்தை தொடர்ந்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். அவரது இந்த பயணம் கன்னியாகுமரி, கேரளா, வழியாக கடந்த 30ம் தேதி கர்நாடகாவை அடைந்தது. சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டல்பேட்டை வழியாக மைசூரு, மாண்டியாவில் பயணத்தை தொடர்ந்த ராகுல் இன்று காலை சித்திரதுர்கா மாவட்டம் … Read more

ஆம் ஆத்மிமீது பிரதமர் மோடி மறைமுக விமர்சனம் ஏன்?

பரூச்: நகர்ப்புற நக்சல்கள் தங்களுடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டு குஜராத்துக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார். குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் நாட்டின் முதலாவது மிகப்பெரிய மருத்துவ பூங்காவுக்கு நேற்று அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது: நகர்ப்புற நக்சல்கள் தங்களது புதிய தோற்றத்தில் மாநிலத்துக்குள் நுழைய முயன்று வருகின்றனர். இப்போது அவர்கள் உடைகளை மாற்றியுள்ளனர். அந்த நகர்ப்புற நக்சல்கள், ஆற்றல் மிக்க நமது இளைஞர்களை தவறாக வழி நடத்துகின்றனர். நமது அப்பாவி இளைஞர்களின் … Read more

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இன்று 80வது பிறந்தநாளை ஒட்டி நள்ளிரவில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்.!

இந்தி திரையுலக சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 80வது பிறந்த நாளை ஒட்டி நள்ளிரவில் மும்பை வீட்டிற்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். கடந்த 1942ஆம் ஆண்டு அக்கோடபர் 11ஆம் தேதி பிறந்த அமிதாப் பச்சன், இந்தி திரையுலகில் நுழைந்து கொடி கட்டிப் பறந்து சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். தாதா சாகேப் விருது, பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அமிதாப் பெற்றுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 1,957 பேருக்கு கொரோனா… 08 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 1,957 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,16,394 ஆக குறைந்தது. * புதிதாக 08 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

இந்தியாவில் பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக்கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

`நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்ற வழக்கறிஞர், இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் கோரிக்கைகள் ஏற்க கூடியதுதான். ஆனால் இதனை தேசிய குழந்தைகள் நல ஆணையத்திடம் சென்று முறையிடுங்கள் எனக் கூறினர். அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் … Read more

நேதாஜி, மவுலானா என்று அழைக்கப்பட்ட முலாயம் சிங் யாதவின் அரசியல் வாழ்க்கை

புதுடெல்லி: சுதந்திரத்துக்கு பிறகு நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். அவரது பாதையில் பல தலைவர்கள் உருவானார்கள். அவர்களில் உ.பி.யில் இந்திய சோஷலிச கட்சி பெயரில் அரசியலில் ஈடுபட்ட ராம் மனோகர் லோகியாவும் ஒருவர். இவரது செயல்பாடுகள் மற்றும் சமூகநீதிக் கருத்துகளால் கவரப்பட்டு அரசியலில் குதித்தவர்தான் முலாயம் சிங் யாதவ். உ.பி.யின் எட்டாவா மாவட்டத்தின் சைஃபை எனும் கிராமத்தில் சுதார்சிங், மூர்த்தி தேவி எனும் விவசாயத் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக … Read more

இலவச பைக்குகள்- 3 விமான நிலையங்கள் கட்டப்படும் என்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்பாளரின் நம்ப முடியாத தேர்தல் வாக்குறுதி..!

அரியானா மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அளித்துள்ள நம்ப முடியாத தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய போஸ்டர் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் என்ற வேட்பாளர் தமக்கு வாக்களித்தால் இலவச பைக்குகள் வழங்கப்படும் என்றும் கிராமத்தில் 3 விமான நிலையங்கள் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்து போஸ்டர் ஒட்டியுள்ளார். அவரது இந்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற முடியாதவையாக இருந்தாலும் கூட அவருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பது … Read more