நள்ளிரவில் இது தேவையா? வெற்றிலை பாக்கு பிரியருக்கு ஒரு நொடியில் நேர்ந்த பரிதாபம்!

ஹைதராபாத்தில் வெற்றிலை பாக்கு போட்டு துப்பியபோது கால்தவறி 3வது மாடியிலிருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். காந்தி நகர் பகுதியிலுள்ள பண்டமாய்சம்மா நகரைச் சேர்ந்தவர் சிந்தாலா ஆனந்த் குமார்(42). தினக்கூலி தொழிலாளரான இவர், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3வது தளத்தில் 2BHK வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ஆனந்துக்கு வெற்றிலை பாக்கு பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு 2.30 மணியளவில் உள்ளூர் கடையில் வாங்கி வெற்றிலை பாக்கை வீட்டிற்கு வெளியே நின்று சாப்பிட்டுள்ளார். … Read more

தமிழ் படங்களை தயாரிக்கிறார் தோனி

மும்பை: தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை தயாரிக்க கிரிக்கெட் வீரர் தோனி முடிவு செய்திருக்கிறார். கிரிக்கெட் அகாடமியை அடுத்து பள்ளிக்கூடம் நடத்துவது, திரைப்பட தயாரிப்பு ஆகியவற்றிலும் தோனி தடம் பதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ‘தோனி என்டெர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஏற்கனவே, ‘தி ரோர் ஆப் தி லயன்’ என்கிற ஆவணப் படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம், இனி நேரடி திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ், … Read more

குடிநீருக்காக உயிரை பணயம் வைத்த உ.பி முதியவர்! இடுப்பளவு சகதியில் சிக்கிய பரிதாபம்!

உத்தரபிரதேசத்தில் முதியவர் ஒருவர் சகதியில் மாட்டிக்கொண்டு உயிர்பிழைக்க போராடும் வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாக பரவிவருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மக்கள் குடிநீருக்காக போராடி வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடியோவில் ஆற்றுப்பகுதிக்கு அருகே முதியவர் ஒருவர் இடுப்பளவு சகதியில் மாட்டியுள்ளார். அமிழும் அவருக்கு மற்றொரு நபர் நீண்ட தடிமனான மரக்குச்சியை நீட்டி அதை பிடித்து மேலே வருமாறு கூறுகிறார். அந்த முதியவரின் அருகே சில்வர் பாத்திரம் ஒன்றும் இருக்கிறது. … Read more

சுவிஸ் வங்கி கணக்கு 4ம் பட்டியல் வெளியானது

புதுடெல்லி: சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள், நிறுவனங்கள் குறித்த 4வது பட்டியலை அந்நாடு வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்திய தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஒன்றிய அரசுக்கும், சுவிட்சர்லாந்து அரசுக்கும் இடையே தன்னிச்சை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி சுவிட்சர்லாந்தின் பெடரல் வரி நிர்வாகம், அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் உட்பட பிற நாடுகளை சேர்ந்தவர்களின் கணக்கு … Read more

கேரளா: கோவில் பிரசாதத்தை மட்டும் உண்டு உயிர்வாழ்ந்த புகழ்பெற்ற “சைவ” முதலை காலமானது

கேரளாவின் காசர்கோடு ஸ்ரீ ஆனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலில் பிரசாதத்தை மட்டும் உண்டு உயிர்வாழ்ந்து வந்த புகழ்பெற்ற ‘சைவ’ முதலையான “பபியா” நேற்று தனது 75வது வயதில் காலமானது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் முக்கிய ஈர்ப்பாக பபியா முதலை திகழ்ந்து வந்தது. “கோவிலில் வழங்கப்படும் பிரசாத்தை சாப்பிட்டு மட்டுமே பபியா உயிர்வாழ்ந்து வந்தது. ஒரு நாளைக்கு இரண்டு முறை கோவில் பிரசாதம் வழங்கப்படும். கோவில் வளாகத்திற்குள் பாபியாவின் புகைப்படங்கள் பரவலாகப் பரப்பப்பட்டன. பாபியா எப்படி கோவில் குளத்திற்கு வந்தது … Read more

நாட்டிலேயே இங்கு தான் ஊழலே; வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி!

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி பாதயாத்திரையை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளாவில் 19 நாட்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 30ம் தேதி ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை சாம்ராஜ்பேட்டை மாவட்டம் குண்டலுப்பேட்டை வழியாக கர்நாடகா மாநிலம் வந்து சேர்ந்தது. அங்கு, ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நஞ்சன்கூடு, மைசூரு, மண்டியா வழியாக பாதயாத்திரை துமகூரு மாவட்டத்திற்கு வந்தது. இந்நிலையில் … Read more

சித்தூர் அருகே காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

*5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் சித்தூர் : சித்தூர் அருகே காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. இதனால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில் ஆகும். இந்த கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் … Read more

உ.பி: வன்கொடுமையால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு தீவைத்த குற்றவாளியின் தாய், சகோதரி!

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இளைஞரின் தாயும் சகோதரியும் சிறுமியை ஏமாற்றிக் கூட்டிச்சென்று தீவைத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமைகள் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சிறுமிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உத்தரபிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 25 வயது இளைஞர் ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்படவே, அவருடைய தாயார் … Read more

திருமலை செல்லும் வழியில் மலைக்குன்றின் மீது ஏழுமலையானின் உருவம் தென்படுவதாகக்கூறி மாலை அணிவித்து வழிபடும் மக்கள்

திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் வழியில் உள்ள மலைக்குன்றின் மீது ஏழுமலையானின் உருவம் தென்படுவதாகக்கூறி அங்கு வழிபடுவதை பக்தர்கள் சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சிலரோ அதீத பக்தி காரணமாக சுமார் 3,000 அடி உயர மலைக்குன்றின் மேல் ஆபத்தான முறையில் கயிறு கட்டி ஏறி ஏழுமலையான் உருவத்திற்கு பிரமாண்ட மாலை அணிவித்து அந்த காணொலியை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். Source link

அரசு ஊழியர்கள் தொடர்பான பொதுநல வழக்கின் மேல்முறையீடு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: அரசு ஊழியர்கள் தொடர்பான ெபாதுநல வழக்கு தொடர்பான மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ெசன்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘அரசுத்துறையில் பணியில் உள்ளவர்கள் லஞ்சம் பெறுவதை தடுக்க அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி … Read more