'என்னை விபச்சாரியாக்க முயல்கிறார்கள்' – கொலை செய்யப்பட்ட உத்தரகாண்ட் பெண்ணின் மெசேஞ் சிக்கியது…

உத்தரகாண்டின் பவுரி மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ் நகரில், பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவரின் புல்கித் ஆர்யா சொகுசு விடுதி ஒன்றை நடத்திவந்தார்.  அதில், 19 வயதான பெண் ஒருவர் வரவேற்பாளராக பணியாற்றியுள்ளார். அந்த பெண், அங்கிருந்த கால்வாய் ஒன்றிலிருந்து நேற்று காலை பிணமாக மீட்கப்பட்டார். முன்னதாக, சொகுசு விடுதிக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு ‘சிறப்பு சேவை’ செய்யக் கோரி விடுதி உரிமையாளரான புல்கித் வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை அவர் கொலை செய்ததாகவும் … Read more

8 சிறுத்தைகளை வனத்தில் விடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருகைக்காக 300 மரங்கள் வெட்டப்பட்டதா?… மத்திய பிரதேச வனத்துறை விளக்கம்

போபால்: மத்திய பிரதேச வனப்பகுதியில் 8 சிறுத்தைகள் விடப்பட்ட நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி வருகைக்காக 300 மரங்கள் வெட்டப்பட்டதாக வெளியான செய்தியை அம்மாநில வனத்துறை மறுத்துள்ளது. பிரதமர் மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதியன்று மத்திய பிரதேச மாநிலம் குனோ வனவிலங்குகள் சரணாலயத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர்,  நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளை, அந்த சரணாலயத்தில் விடுவித்தார். முன்னதாக பிரதமர் மோடி மற்றும் சுமார் 300 சிறப்பு விருந்தினர்களின் … Read more

ரியல் குந்தவியாக மாறிய மனைவி… கணவனுக்கு முன்னாள் காதலியுடன் திருமணம்.. சில்லுனு ஒரு சம்பவம்

ஆந்திர மாநிலம் திருப்பதி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். இவர் டிக்டாக்கில் பிரபலமாக வளம் வந்துள்ளார். அப்போது கடப்பாவை சேர்ந்த விமலா என்ற பெண்ணை டிக்டாக்கில் பார்த்து காதலித்துள்ளார். காலப்போக்கில் இருவரும் காதலிக்க தொடங்கி பின்னர் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துள்ளனர். இருவரும் அம்பேத்கர் நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில், திருமணத்துக்கு முன்பு கல்யாண் கடப்பாவை சேர்ந்த டிக்டாக் பிரபலம் நித்யஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து சில சிக்கல்களால் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த விவகாரம் விமலாவுக்கு தெரியாது. … Read more

கலவரத்தில் பலியானால் ரூ.5 லட்சம் இழப்பீடு; பாலியல் குற்றவாளிகளுக்கு இனிமேல் முன்ஜாமின் கிடையாது: உத்தரபிரதேசத்தில் புதிய சட்டங்கள் நிறைவேற்றம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் இனிமேல் பாலியல் குற்ற வழக்கில் கைதானவர்களுக்கு முன்ஜாமின் கிடைக்காது. கலவரத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் மற்றும் அதுதொடர்பான கொலைகள் நடக்காத நாட்களே இல்லை என்று சொல்லலாம். சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் கூட பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை. இந்நிலையில் உத்தரபிரதேச சட்டப் பேரவையில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து … Read more

தனி ஆளாய் பேருந்தை மறித்த டீச்சர்; குவியும் பாராட்டு!

கேரள மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் என்பது, அரசு பேருந்தில் அதற்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மூன்று மாத கால கட்டணம் செலுத்தி பஸ் பாஸ் கொடுப்பதும், தனியார் பேருந்தில் மாணவர்களின் அடையாள அட்டை மற்றும் பள்ளி சீருடை இருந்தாலே போதும். சாதாரண பயணச்சீட்டு கட்டணத்தில் இருந்து, பாதிக்கு மேலாக குறைக்கப்பட்டு பயண கட்டணம் வாங்கப்படுவது இதுவரையிலும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் பெரும்பாலான தனியார் பேருந்துகள் மாணவர்களை அதிகமாக ஏற்றினால், தங்கள் கலெக்ஷன் குறைந்து … Read more

பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூலை 12ம் தேதி நடந்த மோடி கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் சதி: பயிற்சி முகாம் நடத்திய கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது

புதுடெல்லி: நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை எடுத்த நடவடிக்கைக்கு மத்தியில், பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூலை 12ம் தேதி நடந்த பிரதமர் மோடி கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த பயிற்சி முகாம் நடத்திய கேரளாவை சேர்ந்த 4 பேரை அமலாக்கத்துறை கைது ெசய்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அசாம் உட்பட 13  மாநிலங்களில் நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), பாப்புலர்  பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட சில அமைப்புகளின் தொடர்புடைவர்களின் வீடு  … Read more

வேட்புமனு படிவம் பெற்று காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்த சசி தரூர்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு படிவத்தை சசி தரூர் பெற்றதை அடுத்து, அவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிட ராகுல் காந்தி மறுத்ததை அடுத்து, தான் போட்டியிடப் போவதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முதல்வருமான அஷோக் கெலாட் அறிவித்துள்ளார். வேட்புமனு என்றைக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை பிறகு அறிவிப்பதாகவும் அவர் கூறினார். மேலும், … Read more

விபச்சாரத்திற்கு உடன்படாத 19 வயது பெண் கொலை ..! – பாஜக மாநில தலைவர் மகன் கைது..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் விபச்சாரத்திற்கு உடன்படாத பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் அம்மாநில பாஜக தலைவர் மகன் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கில் பாஜக மாநில தலைவர் மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌரி மாவட்டத்திற்கு உட்பட மாவட்டத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அங்கீதா பண்டாரி (19 வயது) இளம் பெண் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு … Read more

மக்களிடம் வரிவசூல் செய்வதில் மோடி ஒரு ‘பிக்பாக்கெட்’

ஐதராபாத்: ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் மா.கம்யூ கட்சி சார்பில் தேசப் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது. இதில் மா.கம்யூ கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டு பேசுகையில், ‘ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஏழை மக்களிடம் இருந்து ஒன்றிய அரசு ரூ.2 லட்சம் கோடி வசூல் செய்கிறது. பிரதமர் மோடி ஒரு பிக்பாக்கெட்; அவர் ஜிஎஸ்டி முறையில் மக்களின் பாக்கெட்டில் ஓட்டை போடுகிறார். … Read more

ச்சைக்…! சட்டசபையில பாஜக எம்எல்ஏக்கள் செஞ்ச காரியத்தை பாருங்க!

உத்தர பிரதேச மாநிலத்தில், சட்டப்பேரவையில், பாஜக எம்எல்ஏக்கள் ஆன்லைன் ரம்மி விளையாடியதும், புகையிலை பொருட்களை பயன்படுத்தியதும் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், ஆளும் கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சபை நடவடிக்கையின் போது, பாஜக … Read more