திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும், புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதாலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அந்த வகையில், புரட்டாசி மாதத்தின் 3ஆவது சனிக்கிழமையான இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க லட்ச கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 32 அறைகளும் நிரம்பிய நிலையில் நாராயண தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வரிசைகளும் நிரம்பியதால் தற்பொழுது பாபவிநாசம் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். … Read more

நாட்டில் இன்று 90-வது இந்திய விமான படை தினம்: விமான படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி பங்கேற்பு

சண்டிகர்: நாட்டில் 90-வது இந்திய விமான படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பஞ்சாப்பின் சண்டிகர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி கலந்து கொண்டார். டெல்லிக்கு வெளியே முதன்முறையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்ப்பது என்பது எங்கள் அனைவருக்கும் சவாலானது. ஆனால், இந்திய இளைஞர்களின் ஆற்றலை வார்த்தெடுத்து, தேச சேவைக்கான பணியில் அவர்களை வரைமுறைப்படுத்துவதற்கு எங்களுக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் … Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Source link

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்: நவம்பர் மாதம் 15ம் தேதி மாலை நடை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை  மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து  நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட இருக்கின்றனர். பின்னர்  டிசம்பர் 27ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். தொடர்ந்து மீண்டும்  வரும் டிசம்பர் 30ம் … Read more

இன்று இந்திய விமானப்படை தினம் – பிரதமர் மோடி வாழ்த்து..!!

1932 அக்., 8ல் ஆங்கிலேயரால் இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. இந்நாளை நினைவுபடுத்தும் விதமாக அக்.,8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திரம் பெறுவதற்கு முன் இரண்டாம் உலகப்போரில் இந்திய விமானப்படை ஈடுபட்டது. 1947ல் சுதந்திரம் பெற்ற பின், நான்கு முறை பாகிஸ்தானுடனும், ஒருமுறை சீனாவுடனும் இந்தியா போரில் ஈடுபட்டது. இப்போர்களில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியது. இயற்கை பேரழிவுகளின் போது, ஆபத்தான இடங்களில் இருந்து மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபடுகிறது. ஐ.நா., வின் அமைதிப்படையிலும் விமானப்படை … Read more

மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.. அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு..!

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் இந்த அகவிலைப்படி உயர்வானது அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த … Read more

வர்ணம், சாதி கோட்பாடுகளை முற்றிலுமாக தூக்கி எறிய வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

நாக்பூர்: வர்ணம், சாதி போன்ற கோட்பாடுகளை முற்றிலுமாக தூக்கி எறிய வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மேலும், இவற்றுடன் சாதி அமைப்புக்கு தற்போது எந்தத் தொடர்பும் இல்லை என்றார். டாக்டர் மதன் குல்கர்னி, ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் ரேணுகா போகரே எழுதிய வஜ்ரசூசி துங்க் என்ற புத்தக வெளியீட்டு விழா நாக்பூரில் நடந்தது. அந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய … Read more

இந்திய விமானப்படையின் 90வது நிறுவக நாள் இன்று! புதிய சீருடையை அறிமுகப்படுத்தியது IAF

புதுடெல்லி: இந்திய விமானப்படை நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. முப்படைகளில், இந்திய வான்வெளியைப் பாதுகாக்கும் இந்திய விமானப் படையானது, இயற்கைப் பேரிடர்களின் போது மீட்புப் பணிகளை மேற்கொண்டு மிகவும் முக்கிய பணியாற்றுகிறது. தேசத்தை காக்கும் இந்திய விமானப்படையின் (IAF) விமான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அக்டோபர் 8அம் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 8, 1932 இல் இந்திய விமானப்படை  நிறுவப்பட்டது. அந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும், இந்திய விமானப்படை தினம் அக்டோபர் … Read more

புரட்டாசி 3வது சனிக்கிழமை திருப்பதியில் குவியும் பக்தர்கள் : தரிசனத்துக்கு 56மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி  : திருப்பதி திருமலையில்  புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை என்பதால்  திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இலவச தரிசனத்திற்காக சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு வரை வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். எனவே பக்தர்கள்  தரிசனத்திற்காக 56 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலவச … Read more

40 வருஷமாச்சு ஒரு புகார் கூட வரல.. இந்தியாவில் இப்படியொரு கிராமமா? எப்படி சாத்தியமாச்சு!

பெட்டி கேஸ் முதல் புலப்படாத பல குற்ற வழக்குகள் நிலுவையில் இல்லாத காவல் நிலையங்களை காண்பதே அரிதாக விஷயம்தான். அதேபோல, எந்த ஒரு நாளும் ஒரு வழக்கும் பதியாமல் இருந்ததாக சரித்திரமே இருந்திருக்காது என்பதே பொதுவான கருத்தாக இருக்கும். ஆனால் இந்தியாவில் உள்ள இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாகவே எந்த குற்றமும் நிகழவில்லை என்றும் அது தொடர்பான ஒரு புகார் கூட பதிவாகவே இல்லையென்ற தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. தெலங்கானா மாநிலத்தின் கமாரெட்டி மாவட்டத்தின் … Read more