திரிபுராவில் பாஜ எம்எல்ஏ திடீர் விலகல்

அகர்தலா: திரிபுராவில் பாஜ தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பாஜவை சேர்ந்த எம்எல்ஏ பர்பா ேமாகன் ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார். 2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கர்பூக் தொகுதியில்வெற்றி பெற்ற இவர், சபாநாயகர் ரத்தன் சக்ரவர்த்தியிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால், பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. திரிபுராவில் கடந்த 4 ஆண்டுகளில் பாஜ.வில் இருந்து வெளியேறும் 4வது எம்எல்ஏ இவராவார். இவர் … Read more

கனடாவில் வெறுப்பு தாக்குதல் அதிகரிப்பு; இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை: தூதரகத்தில் பதிவு செய்ய அறிவுரை

புதுடெல்லி: ‘கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான இனவாத, வெறுப்புணர்வு தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அங்கு செல்லும்  மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,’ என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக  ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பு வருமாறு: கனடாவில் வெறுப்புத் தாக்குதல்கள், பிரிவினைவாத வன்முறைகள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக விசாரித்து உரிமை நடவடிக்கை எடுக்கும்படி கனடா அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், குற்றவாளிகள் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த … Read more

மும்பை சிவாஜி பார்க்கில் தசரா பேரணி | உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு நீதிமன்றம் அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் ஒவ்வோர் ஆண்டும் மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் சிவசேனா கட்சி சார்பில் தசரா பேரணி நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் அம்மாநிலத்தில் நடத்த அரசியல் கொந்தளிப்பால், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடந்த கிளர்ச்சிக்கு பின்னர் சிவசேனா கட்சி இரண்டு அணிகளாக பிரிந்தது. இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான சிவசேனாவும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் அக்கட்சியின் பாரம்பரிய தசரா பேரணியை சிவாஜி பார்க்கில் நடத்த அனுமதி கேட்டு … Read more

வெறும் கையால் டாய்லெட்டை கழுவிய பாஜ எம்பி

போபால்: பிரதமர் மோடியின் பிறந்தநாள் கடந்த 17ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை 2 வாரத்திற்கு கொண்டாடுவதற்கு பாஜ ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 15 நாட்களுக்கு பொதுமக்கள் சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்தியப் பிரதேசத்தில் பாஜ.வின் இளைஞர் பிரிவு சார்பில் தூய்மைப்படுத்தும் பணிகள் செய்யப்படுகிறது. இதில், கட்காரி பெண்கள் பள்ளியில் ரேவா தொகுதி பாஜ எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா, கழிவறையை வெறும் கையால் சுத்தம் செய்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பள்ளி கழிவறையை … Read more

தந்தை, மகள் மீது தாக்குதல்; அரசு போக்குவரத்துக்கு விளம்பரங்கள் நிறுத்தம்: நகைக்கடை நிறுவனம் அதிரடி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே மலையின் கீழ் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமனன். சில  தினங்களுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் மகள் ரேஷ்மாவுக்கு பஸ் பாஸ் வாங்க காட்டாக்கடை அரசு பஸ் டெப்போ சென்றார். அப்போது கல்லூரியில் இருந்து சான்றிதழ் வாங்கி வரும்படி டெப்போ ஊழியர்கள் கூறினர். இது தொடர்பாக டெப்போவில் இருந்த  ஊழியர்களுக்கும், பிரேமனனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, திடீரென அவரை டெப்போ ஊழியர்கள் தாக்கினர். தடுத்த ரேஷ்மாவுக்கும் அடி விழுந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் … Read more

’’எனது இறப்புச் சான்றிதழை காணவில்லை’’ – இணையத்தை தெறிக்கவிட்ட விசித்திர விளம்பரம்!!

உலகம் முழுவதும் இணையங்களில் விசித்திரமான தகவல்களுக்கு பஞ்சமே இல்லை எனலாம். சமையல் டிப்ஸ், விலங்குகளின் க்யூட் சேட்டைகள், வித்தியாசமான திருமணங்கள் என தினசரி ஏதாவது ஒன்று வந்து நம்மை பிரம்மிப்படைய வைக்கும் அல்லது சிரிப்பூட்டும். அதுபோல ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அது ஒரு செய்தித்தாள் விளம்பரம். ஐபிஎஸ் அதிகாரி ரூபின் ஷர்மா விளம்பரம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு நபர் தனது இறப்புச் சான்றிதழை தொலைத்துவிட்டதாக … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு..! – தொற்று நிலவரம் முழு விபரம்..!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு முந்தைய தினத்தை விட சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளி ஆகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உலக மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் இன்னும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிந்து விடாத நிலையில் மக்கள் இன்னும் அச்ச உணர்விலேயே இன்னும் வாழ்ந்து கொண்டு உள்ளனர். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு … Read more

சித்தூர் கொங்காரெட்டிப்பள்ளியில் அண்ணா கேன்டீன் திறப்பு விழா-எம்எல்சி பங்கேற்பு

சித்தூர் : சித்தூர் கொங்காரெட்டிப்பள்ளியில் நேற்று நடந்த அண்ணா கேன்டீன் திறப்பு விழாவில் எம்எல்சி துரைபாபு பங்கேற்றார். சித்தூர் கொங்காரெட்டிப்பள்ளி பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் அண்ணா கேன்டீன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. எம்எல்சி துரைபாபு தலைமை தாங்கி கேன்டீனை திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: முன்னாள் முதல்வர் சந்திரபாபு கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநிலம் பிரிவினை தொடர்ந்து மாநில முதல்வராக பதவியேற்றார். பதவியேற்ற உடன் மக்களின் நலனை கருத்தில் கொண்டு … Read more

இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக வேலையின்மை..? தமிழகத்தின் நிலை என்ன?

நாட்டிலேயே அதிகபட்சமாக ஹரியானாவில் 37.3 சதவீதமாக உள்ள வேலைவாய்ப்பின்மை, குறைந்தபட்சமாக சத்தீஸ்கரில் 0.4 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறித்த புள்ளி விவரங்களை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) என்ற தனியார் அமைப்பு, மாநிலம் வாரியாக வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை 37.3 சதவீதமாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 32.8 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 31.4 சதவீதமாகவும் ஜார்க்கண்ட்டில் 17.3 சதவீதமாகவும் உள்ளது. கேரளாவில் 6.1 சதவீதமாக உள்ள வேலையின்மை … Read more

பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

கோவை: என்ஐஏ சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை நாடு முழுவதும் ஃபாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதிற்கு கண்டனம் தெரிவித்து கேரளாவில் அந்த அமைப்பு இன்று காலை தொடங்கி முழு அடைப்பு … Read more