'தேர்தல் வெற்றியை மட்டும் யோசிக்காதீங்க.!' – மேயர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

“தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் யோசிக்கக் கூடாது,” என, பாஜக மேயர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில், பாஜக மேயர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு இன்று காலை துவங்கியது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து, பாஜக ஆளும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின், 118 மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டை ‘வீடியோ கான்பரன்ஸ்’ … Read more

ஸ்ரீநகரின் பழமையான ஏரியை தனி ஆளாக சுத்தம் செய்யும் மாணவி: விஞ்ஞானியாக விரும்புவதாக பேட்டி

காஷ்மீர்:  ஸ்ரீநகரின் தால் ஏரியை தனி ஆளாக படகில் சென்று சுத்தம் செய்யும் மாணவி ஜன்னத்தை பலரும் பாராட்டுகின்றனர். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரின் மிகவும் பழமையான தால் ஏரியை சுத்தம் செய்யும் பணியை பத்து வயதான மாணவி ஜன்னத் என்பவர் ஒற்றை ஆளாக மேற்கொண்டு வருகிறார். இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்ரீநகரின் மிகவும் பிரபலமான அடையாளமாக கருதப்படுவதால் ஏரியை சுத்தம் ெசய்யும் ஜன்னத்தை பலரும் பாராட்டுகின்றனர். ஏரிக்குள் படகில் … Read more

`இன்னும் எத்தனை பலிகளோ..?’- சைரஸ் மிஸ்திரி விபத்து நிகழ்ந்த இடத்தில் தொடரும் உயிரிழப்புகள்

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் உயிரை பறித்த விபத்து குறித்து நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். சைரஸ் மிஸ்திரி இறப்புக்குப்பின், அந்த விபத்து நடந்த இடம் குறித்து பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் அண்மையில் வெளிவந்த ஒரு தகவலின்படி, 2022-ல் மட்டும் சைரச் மிஸ்திரி வாகனம் விபத்துக்குள்ளான இடத்தில் அதேபோல பல நூறு விபத்துகள் நிகழ்ந்துள்ளதாம். மும்பை – அகமதாபாத் இடையேயான நெடுஞ்சாலையில் தானே மற்றும் பால்கர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே உள்ளது … Read more

ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள திரையரங்குகள்!

ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, INOX நிறுவனம் வடிவமைத்துள்ள ஒரு மல்டிபிளக்ஸ் பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள், இனி திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டு களிக்கலாம். ஆம்… முப்பது வருடங்களுக்கு பிறகு அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இனி நாட்டின் மற்ற பகுதியில் உள்ள மக்களை போல, அவர்களும், மல்டிபிளெக்ஸில் திரைப்படத்தைப் பார்த்து, அனுபவிக்க முடியும். அனைத்து காஷ்மீரிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், முப்பது வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீநகரில் பள்ளத்தாக்கில் முதல் மல்டிபிளக்ஸ் திறக்கப்பட்டது. … Read more

விதிமுறை மீறி கட்டப்பட்ட ஒன்றிய பாஜக அமைச்சரின் பங்களாவை இடிக்க உத்தரவு: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

மும்பை: விதிமுறை மீறி கட்டப்பட்ட ஒன்றிய பாஜக அமைச்சரின் பங்களாவை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒன்றிய பாஜக அமைச்சர் நாராயண் ரானேயின் ‘ஆதீஷ்’ பங்களா, கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. அதையடுத்து  மும்பை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பங்களாவை ஆய்வு செய்தது. ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டதால், நாராயண் ரானேவுக்கு எதிராக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. மேற்கண்ட நோட்டீசை … Read more

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டாரா? மது போதை காரணமா?

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் குடிபோதையில் இருந்ததால் லுப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 11ம் தேதி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டார். மாநாடு முடிந்து 18ம் தேதி லுப்தான்சா விமானத்தில் மீண்டும் டெல்லிக்கு திரும்பி ஆம் ஆத்மி தேசிய கூட்டத்தில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதல்வர் பகவந்த் சிங் அன்று லுப்தான்சா விமானத்தில் டெல்லி திரும்பவில்லை. … Read more

உ.பி-யில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்ட சம்பவம்: வலுக்கும் விமர்சனம்

சஹாரான்பூர்: சஹாரான்பூர் மாவட்டத்தில், கபடி வீராங்கனைகளுக்கு கழிவறைப் பகுதியில் வைத்து உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராலாகி, எதிர்கட்சிகளின் கண்டனத்துக்குள்ளாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரான்பூர் மாவட்டத்தில், செப்.16-ம் தேதி நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கபடி போட்டியின்போது அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், கழிப்பறையின் வாசல் ஒன்றில் சிறுநீர் கழிக்கும் கோப்பைகளுக்கு அருகில் சாதம், குழம்பு வகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனைத் … Read more

கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு வினியோகம்? – உ.பி.,யில் அவலம்!

உத்தர பிரதேச மாநிலத்தில், கபடி வீரர்களுக்கு கழிப்பறையில் உணவு வினியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் சஹாரன்பூரில், கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்று உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு, கழிவறையில் இருந்து உணவு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. … Read more

நொய்டாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நொய்டாவில் செக்டார் 21 என்ற இடத்தில் இன்றுகாலை குடியிருப்பு பகுதி ஒன்றில் தூய்மை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த நிலையில் சுமார் 13 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 நான்கு தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். Source link

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு சுவாமி வீதி உலாவிற்கு தயாராகி வரும் யானை, குதிரை, காளைகள்-யானைகள் மிரளாமல் இருக்க கேரள நிபுணர் குழுவினர் வருகை

திருமலை :  திருப்பதி கோயில் பிரமோற்சவத்தை முன்னிட்டு சுவாமி வீதி உலாவிற்கு யானை, குதிரை, காளைகள் தயாராகி வருகிறது. மேலும், பக்தர்கள் கூட்டத்தை பார்த்து யானைகள் மிரளாமல் இருக்க அவற்றை கட்டுப்படுத்த கேரள நிபுணர்கள் குழுவினர் வந்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இந்த 9 நாட்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 16 வாகனங்களில் பக்தர்களுக்கு அருள் … Read more