பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம்!

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்களவை உறுப்பினர்கள் 17 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி திமுக எம்.பி.,யுமான கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. … Read more

சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே பெயரில் மகாராஷ்டிராவில் 700 சுகாதார மையம்: மும்பையில் மட்டும் 227 அமைக்கப்படுகிறது

மும்பை: சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே பெயரில் மும்பையில் 227 சுகாதார மையங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 700 சுகாதார மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மும்பை மாநகராட்சிக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதை பிடிப்பது தொடர்பாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர இன்று இரு பிரிவினரும் தசரா பேரணி நடத்துகின்றனர். இந்நிலையில் நேற்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மாநிலம் … Read more

நவராத்திரி நிகழ்ச்சியில் கல் எறிந்ததாக, இஸ்லாமியர்களை கட்டிவைத்து பிரம்பால் அடித்த போலீஸ்?

குஜராத்தின் கேடா மாவட்டத்தில் நவராத்திரி கர்பா நிகழ்ச்சியில் கற்களை வீசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட சில இஸ்லாமிய நபர்களை காவல்துறை அதிகாரிகள் கம்பத்தில் கட்டி பிரம்புகளால் தடியடி நடத்திய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவில் காவல்துறையின் செயலை குறித்து காவல்துறை தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. குஜராத்தின் உள்ளூர் செய்தி நிறுவமனான விடிவி ஊடகம், ’ கேடா மாவட்டத்தில் உந்தேலா கிராமத்தில் பொதுமக்கள் முன்னணிலையில், 10 – 11 இஸ்லாமிய நபர்களைக் கம்பத்தில் … Read more

திருமணத்திற்கு சென்றபோது சோகம்.. பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 32 பேர் பலி..!

உத்தரகாண்டில், திருமண விழாவில் பங்கேற்பதற்காக சுமார் 50 பேருடன் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் லால்தாங் பகுதியில் இருந்து பவுரி மாவட்டத்தில் உள்ள பிரோன்கால் பகுதிக்கு நேற்று பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பிரோன்காலில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 50-க்கும் மேற்பட்டவர் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், இரவு 7.30 மணியளவில் மலைப்பாங்கான பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது சிம்ரி என்ற இடத்தில் உள்ள வளைவில் திரும்பும்போது … Read more

மும்பை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு: மாணவர்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

மும்பை: மும்பை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் கோாிக்கையை ஏற்று 5வது செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மும்பை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் இந்த மாதம் 15ம் தேதி நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் தேர்வு எழுதியதால் போதுமான எழுத்துப்பயிற்சி தேவைப்படுகிறது. எனவே நேரடி எழுத்து தேர்வுக்கு தயாராக கூடுதல் … Read more

காஷ்மீர் என்கவுன்ட்டர் | சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து காஷ்மீர் கூடுதல் டிஜிபி கூறுகையில், “ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் மற்றும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி சோபியான் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. அந்தத் தகவலை அடுத்து சோபியான் மாவட்டத்தின் ட்ராச் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ் … Read more

இன்று முதல் 5 ஜி சேவை: நம்ம ஊருக்கு இல்லையா?

5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார். “முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நாடு முழுவதும் 5ஜி சேவை கொண்டு சேர்க்கப்படும்” என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகள், ராணுவத்தினர் இடையே மோதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 இடங்களில் நடந்த என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து டிராச், மொழு ஆகிய இடங்களில் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். டிராச் பகுதியில் வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த போது கட்டிடம் ஒன்றில் இருந்து சிலர் பாதுகாப்பு படையை நோக்கி சுட்டனர். ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 3 … Read more

உத்தர்காண்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி

உத்தர்காண்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகினர். அந்தப் பேருந்தில் 3 குழந்தைகள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் இருந்தனர். விபத்து குறித்து காவல்துறை தரப்பில், உத்தர்காண்டின் பவுரி கார்வால் மாவட்டத்தில் கல்யாண கோஷ்டி ஒன்றுடன் சென்ற பேருந்து ரிக்னிகால் பிரோகால் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது 500 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 25 பேர் உயிரிழந்தனர். 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிபி அசோக் குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் … Read more

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து விபத்து: மகனை பறி கொடுத்த தந்தை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு

மும்பை: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 7 வயது மகனை பறி கொடுத்த தந்தை, நுகர் வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். வசாயில் உள்ள ராம்தாஸ் நகரை சேர்ந்தவர் சர்பராஸ் அன்சாரி. கடந்த மாதம் 23ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் தனது வீட்டில் ஒரு அறையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை வைத்து சார்ஜ் போட்டிருந்தார். ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டிருந்த அறையில் இவரது 7 வயது மகன் சபீர் அன்சாரியும், அவரது பாட்டியும் தூங்கினர்.அதிகாலை சுமார் 5.30 … Read more