இந்திய விமானப்படையில் புதிய படைப்பிரிவுக்கு ஒப்புதல்.. புதிய உடை அறிமுகம்

இந்திய விமானப்படையில் டிரோன்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை கையாள முதல்முறையாக தனிப்பிரிவு ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் விமானப்படை வீரர்களுக்கு புதிய உடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேய காலனியாதிக்கத்தின்போது, பிரிட்டனின் ராயல் ஏர்போர்ஸ் விமானப்படைக்கு உறுதுணையாக, கடந்த 1932ம் ஆண்டு இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. இந்த தினம், இந்திய விமானப்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 90ம் ஆண்டு விமானப்படை கொண்டாட்ட நிகழ்ச்சியையொட்டி சண்டிகரில் நடைபெற்ற விமானப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பில் பங்கேற்று, விமானப்படை … Read more

தடையை மீறி இயக்கினால் வாகனங்கள் பறிமுதல்: ஓலா, உபருக்கு எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டும் அதை மீறி இயங்கி வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்  என்று அதிகாரிகளுக்கு ேபாக்குவரத்து அமைச்சர் பி.ஸ்ரீராமுலு  உத்தரவிட்டார். இது குறித்து பெங்களூரு விதானசவுதாவில்  செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘மாநிலத்தில் இயங்கிவரும் ஓலா, உபர் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் பொதுமக்களிடம் அதிகம் கட்டணம் வசூலித்து  வஞ்சித்து வருவதாக அரசின் கவனத்திற்கு வந்தது. பயணிகளிடம் எவ்வளவு கட்டணம்  வசூலிக்க வேண்டும் என்று அரசு கட்டண … Read more

ஹரியாணா நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் பலமுறை தரமற்ற மருந்து தயாரித்தது கண்டுபிடிப்பு

புதுடெல்லி: ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் கடந்த 3 மாதங்களில் இருமல் மருந்து குடித்த 66 குழந்தைகள் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்தன. இதற்கு இந்திய நிறுவனமான மெய்டன் பார்மா சூட்டிக்கல்ஸ் தயாரித்த 4 இருமல் மருந்துகள் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்நிறுவனம் மீது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணையை தொடங் கியது. தற்போது இந்நிறுவனத் துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மக்களிடையே இருமல் மருந்து குறித்து அச்சம் ஏற்பட்ட நிலை … Read more

மும்பையில் ரூ500 கோடி கோகைன் சிக்கியது

மும்பை: மும்பை நவசேவா துறைமுகத்தில் கப்பலில் இருந்து இறக்கப்பட்ட கன்டெய்னர் ஒன்றை  மும்பை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திறந்து சோதனை செய்தனர். அப்போது, அதில் ரூ.500 கோடி மதிப்புள்ள 50 கிலோ கோகைன் போதை பொருள் இருந்தது. இந்த கப்பல்  தென்னாபிரிக்காவில்  இருந்து பச்சை ஆப்பிள், பேரிக்காயை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. இந்த பழங்களுக்கு இடையேதான் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் இருந்து கப்பலில் ஆரஞ்சு பழங்களில் 198 கிலோ … Read more

ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் 21 வயதுக்கு முன்பே பெண்களுக்கு திருமணம் – மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

ராஞ்சி: ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு 21 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் கடந்த 2020-ம் ஆண்டு 84 லட்சம் பேரிடம் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில் பெண்களின் திருமண வயது, கருத்தரிப்பு, இறப்பு உட்பட பல தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இதன் அறிக்கை கடந்த … Read more

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனம்: ஆன்லைனில் முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருட மண்டல பூஜை கால தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளதால் தினமும் எத்தனை பக்தர்கள் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். இதற்கிடையே ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 22ம் தேதி வரை நடை திறந்திருக்கும். இதற்கான ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியுள்ளது. ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடைந்த பின்னர் சித்திரை ஆட்டத் திருநாளுக்காக வரும் 24ம் தேதி மாலை கோயில் நடை … Read more

பல உயிர்களை காப்பாற்றிய மும்பையின் ஹீரோ விபத்தில் பலி; சுங்க ஊழியருக்கு நேர்ந்த சோகம்!

மும்பையின் பாந்த்ரா – ஒர்லி சீ லிங்க் மேம்பால பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கார் வெடித்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற வேண்டுமென கடல்வழி மேம்பால சுங்கச்சாவடி ஊழியர்களும், ஆம்புலன்ஸும் விரைந்தது. இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிக் கொண்டிருந்த போது அவ்வழியே தாறுமாறாக வந்த கார் ஒன்று ஆம்புலன்ஸ் மற்றும் அங்கிருந்த கார்கள் மீது மோதியதால் மீண்டும் பெரும் விபத்து நேர்ந்தது. இதில், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர், சுங்கச்சாவடி ஊழியர்கள் நால்வர் … Read more

27 வகை நறுமணம் வீசும் பட்டுப்புடவை – நெசவு தொழிலாளியை பாராட்டிய தெலங்கானா அமைச்சர்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம், சாய் நகர் பகுதியை சேர்ந்த பட்டுப்புடவை நெசவு தொழிலாளி விஜய். இவர் 27 வகையான நறுமணங்கள் வீசும் புதிய ரக பட்டுப்புடவையை தயாரித்துள்ளார். இந்த பட்டுப்புடவையை தெலங்கானா அமைச்சர்கள் கே. டி.ராமாராவ், ஹரீஷ் ராவ் ஆகியோர் ஹைதராபாத்தில் நேற்று பார்வையிட்டனர். பட்டுப்புடவையை பார்த்து வியந்த அவர்கள் அதனை தயாரித்த விதம் குறித்து கேட்டறிந்தனர். இது குறித்து நெசவு தொழிலாளி விஜய் கூறியதாவது: இதற்கு அமைச்சர் கே.டி. ராமாராவ், ‘சிரி … Read more

தமிழக அரசு காட்டிய பாதை; கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு 24% உயர்வு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பெங்களூரு: கர்நாடகாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 24 சதவீதமாக உயர்த்த முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த  அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் வாழும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின  வகுப்பினரின் தற்போதுள்ள இட  ஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற  நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு ஆய்வு செய்து  அரசிடம் கொடுத்த அறிக்கையில், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியின வகுப்பினருக்கான … Read more

நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில்!!

அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலில் மீண்டும் ஒரு முறை கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நேற்று காலை 6 மணி அளவில் புறப்பட்டது. ரயில் சுமார் 90 கிமீ பயணத்திற்குப் பின் குஜ்ரா என்ற ரயில் நிலையத்தை அடைந்த போது சக்கரத்தில் கோளாறு இருந்தது தெரியவந்தது. சக்கரங்களில் பேரிங் கோளாறு இருந்தது பணி புரியும் கேட்மேனால் கண்டுபிடிக்கப்பட்டது. அதிவேக வண்டிகளில் இந்த … Read more