காஷ்மீர் என்கவுன்ட்டர் | சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து காஷ்மீர் கூடுதல் டிஜிபி கூறுகையில், “ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் மற்றும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி சோபியான் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. அந்தத் தகவலை அடுத்து சோபியான் மாவட்டத்தின் ட்ராச் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ் … Read more

இன்று முதல் 5 ஜி சேவை: நம்ம ஊருக்கு இல்லையா?

5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார். “முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நாடு முழுவதும் 5ஜி சேவை கொண்டு சேர்க்கப்படும்” என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகள், ராணுவத்தினர் இடையே மோதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 இடங்களில் நடந்த என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து டிராச், மொழு ஆகிய இடங்களில் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். டிராச் பகுதியில் வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த போது கட்டிடம் ஒன்றில் இருந்து சிலர் பாதுகாப்பு படையை நோக்கி சுட்டனர். ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 3 … Read more

உத்தர்காண்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி

உத்தர்காண்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகினர். அந்தப் பேருந்தில் 3 குழந்தைகள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் இருந்தனர். விபத்து குறித்து காவல்துறை தரப்பில், உத்தர்காண்டின் பவுரி கார்வால் மாவட்டத்தில் கல்யாண கோஷ்டி ஒன்றுடன் சென்ற பேருந்து ரிக்னிகால் பிரோகால் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது 500 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 25 பேர் உயிரிழந்தனர். 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிபி அசோக் குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் … Read more

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து விபத்து: மகனை பறி கொடுத்த தந்தை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு

மும்பை: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 7 வயது மகனை பறி கொடுத்த தந்தை, நுகர் வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். வசாயில் உள்ள ராம்தாஸ் நகரை சேர்ந்தவர் சர்பராஸ் அன்சாரி. கடந்த மாதம் 23ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் தனது வீட்டில் ஒரு அறையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை வைத்து சார்ஜ் போட்டிருந்தார். ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டிருந்த அறையில் இவரது 7 வயது மகன் சபீர் அன்சாரியும், அவரது பாட்டியும் தூங்கினர்.அதிகாலை சுமார் 5.30 … Read more

கர்நாடக வனப் பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த தமிழக டாக்டர்!!

கர்நாடக வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்ததாக தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் உட்பட மூன்று பேரை கர்நாடக வனத் துறையினர் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் அடுத்த ஏரிக்காடு பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து (27). இவர் தனது நண்பர்களான நல்லாம்பட்டியைச் சேர்ந்த டாக்டர் கவின்குமார் (27) மற்றும் விக்னேஷ் (25) ஆகியோருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன் உடன் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு… மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அளிக்க மாநில அரசு ஆலோசித்து வந்தது. வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை வருவது கவனிக்கத்தக்கது. இதுதொடர்பாக மும்பையில் ஆலோசனை நடத்திய மாநில அமைச்சரவை, 100 ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஒருமனதாக முடிவு செய்தது. இதில் ஒரு … Read more

உத்தராகண்ட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து: 25 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தராகண்ட்டின் மலை மாவட்டமான பவுரி கார்வாலில் நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 46 பயணிகளுடன் சென்ற இந்த பேருந்து துமாகோட் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. அப்போது பேருந்து பல முறை உருண்டதால் அதில் இருந்த மக்கள் அலறினர். இதனை தொடர்ந்து மலை கிராமத்தினர் அளித்த தகவலை அடுத்து விரைந்து வந்த பேரிடர் மேலாண்மை படையினர் இரவு … Read more

பணபரிவர்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட் நீதிபதி என்.ஜே.ஜம்தார் நேற்று உத்தரவிட்டார். ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத் துறை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கு வசதியாக இந்த தீர்ப்பை 13ம் தேதிவரை அமல் செய்யக் கூடாது என்றும் நீதிபதி தடை விதித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவர் அனில் தேஷ்முக். இவர் … Read more

”370-ஐ நீக்கினால் ரத்த ஆறுதான் ஓடும் என்றார்கள்.. ஆனால்” – காஷ்மீரில் அமித்ஷா பேச்சு

ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கினால் ரத்த ஆறு ஓடும் என சிலர் கூறிய நிலையில், மோடி என்ற முழக்கம் மட்டுமே தற்போது எதிரொலிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள அமித்ஷா, வைஷ்ணவி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர், ரெஜோரி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் கற்களுக்கு பதிலாக தற்போதுபுத்தகங்கள் மற்றும் மடிக்கணினிகளை வைத்திருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM