பாஜக ஆட்சி மன்றக் குழு மாற்றத்தின் எதிரொலி – ம.பி., ராஜஸ்தானில் புதிய தேர்தல் வியூகம்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு டிசம்பரில் ம.பி. மற்றும் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 2024 மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் திட்டத்துடன் இந்த 2 மாநில தேர்தலுக்காக பாஜக பல புதிய வியூகங்களை அமைத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தேசிய அளவில் பாஜக ஆட்சி மன்றக் குழுவில் பல மாற்றங்களை செய்தது. பாஜக ஆளும் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி மன்றக் குழுவில் இருந்தார். கடந்த … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 11,539 பேருக்கு கொரோனா… 43 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 11,539 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,39,429 ஆக உயர்ந்தது. * புதிதாக 43 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

59 வயதான தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்

திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் மாவட்டம், கோலாழி பகுதியைச் சேர்ந்தவர் ரதிமேனன் (59). இவரது கணவர் மேனன் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு ப்ரீத்தி, பிரசீதா என இரு மகள்கள் உள்ளனர். ப்ரீத்திக்கு திருமணமாகி இங்கிலாந்தில் வசித்து வருகிறார். தனது தாய் கணவரை இழந்து, தனிமையில் தவிப்பதைப் பார்த்த இளைய மகள் பிரசீதா அவருக்கு மறுமணம் செய்துவைக்க முடிவு செய்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தாயை சம்மதிக்க வைத்தார். இதைத்தொடர்ந்து ரதிமேனனுக்கும், மண்ணுத்தி பாட்லிக்காடு பகுதியைச் … Read more

கர்நாடக முதலமைச்சர் பதவி: டி.கே.சிவகுமாருக்கு குமாரசாமி ஆதரவு!

கர்நாடக மாநில முதலமைச்சராக, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி பெறும் பட்சத்தில், அவருக்கு ஆதரவு அளிப்பேன் என, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் தற்போதே தொடங்கி விட்டது எனக் கூறலாம். ஆட்சியை தக்க வைக்க வேண்டும் … Read more

மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக நோட்டீஸ் பிறப்பித்தது லுக் அவுட்

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு  லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுவிற்பனை கொள்கை முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

'இந்தியாவுடன் நிரந்தர அமைதியை விரும்புகிறோம்' – பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

இந்தியாவுடன் நிரந்தர அமைதியை பாகிஸ்தான் விரும்புவதாகவும், காஷ்மீர் பிரச்னைக்கு போர் தீர்வாகாது என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை உறுதிசெய்யும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370-ஐ பிரதமர் மோடி தலமையிலான இந்திய அரசு நீக்கியது. இதன் மூலம், காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு, அது இந்தியாவின் மத்திய ஆட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இருந்தும் தொடர்ந்து காஷ்மீர் எல்லை பகுதிகளில் … Read more

விவசாய நிலங்களை கார்ப்பரேட் வசமாக்க திட்டம் – பாஜக மீது சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. இதில், நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஹைதராபாத்திலிருந்து முனுகோடு பகுதிக்கு சுமார் 5 ஆயிரம் கார்கள் மூலம் பிரம்மாண்ட ஊர்வலமாக தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் சந்திரசேகர ராவ் பேசியதாவது: கிருஷ்ணா நதி நீதி பங்கீடு குறித்து இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. முனுகோடுவில் எப்போதுமே பாஜகவிற்கு டெபாசிட் கூட வந்தது இல்லை. இம்முறை பாஜகவிற்கு … Read more

சட்ட அமைச்சருக்கு கைது, வாரன்ட் நிதிஷ் குமாருக்கு காங்கிரஸ் நெருக்கடி; கூட்டணியில் குழப்பம்

பாட்னா: நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டவரை சட்ட அமைச்சராக நியமித்தது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ், துணை முதல்வர் தேஜஸ்வி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன. பீகாரில் பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மெகா கூட்டணியுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக நிதிஷ், துணை முதல்வராக தேஜஸ்வி … Read more

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நெரிசல் – உ.பி.யின் மதுரா கோயிலில் பக்தர்கள் 2 பேர் உயிரிழப்பு

மதுரா: உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் கடவுள் கிருஷ்ணர் பிறந்தார் என நம்பப்படுகிறது. இங்குள்ள கிருஷ்ணர் கோயிலான பாங்கே பிஹாரி கோயில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர். நேற்று அதிகாலையில் மங்கள ஆரத்தி நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஜபல்பூரை சேர்ந்த 65 வயது பக்தர் ஒருவரும் நொய்டாவை சேர்ந்த 55 வயது பெண் … Read more

உலகின் பெரிய பணக்கார கடவுள் திருப்பதி ஏழுமலையானுக்கு 1,128 இடங்களில் சொத்துகள்; 10 டன் தங்கம், ரூ.8,500 கோடி தங்க பிஸ்கட்

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு நாடு முழுவதும் 1,128 சொத்துகள், 10 டன் தங்கம், ரூ.8,500 கோடிக்கு தங்க கட்டிகள் உள்ளன. உலகின் பெரிய பணக்கார கடவுள் யார் என்றால் அது திருப்பதி ஏழுமலையான்தான். இவரை தரிசிக்க உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் குவிகின்றனர். அவர்கள் பணம், தங்கம், சொத்துகளாக காணிக்கை செலுத்துகின்றனர். தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.300 கோடி நன்கொடையும் கிடைக்கிறது. பக்தர்கள் வழங்கிய 10 டன் தங்கம் தேவஸ்தான வங்கியிலும்,  பல்வேறு வங்கிகளில் ரூ.8,500 கோடி … Read more