13 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்டதுபோல் மும்பையை மீண்டும் தாக்குவோம்: பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டலால் பீதி

மும்பை: ‘மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த பயங்கரமான தீவிரவாத தாக்குதலைப் போன்ற மற்றொரு தாக்குதல் நடத்தப்படும்’ என பாகிஸ்தான் எண்ணிலிருந்து மிரட்டல்கள் வந்திருப்பதால், மும்பையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கடலோ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறை ஒர்லி பகுதியில் இயங்கி வருகிறது. இங்குள்ள, வாட்ஸ் அப் ஹெல்ப்லைன் எண்ணுக்கு பாகிஸ்தான் தொலைபேசி எண்ணிலிருந்து நேற்று முன்தினம் சில குறுந்தகவல்கள் வந்துள்ளன. அதில், ‘மும்பையில் 26/11 போன்ற … Read more

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு: 19 பேர் உயிரிழப்பு; 5 பேர் மாயம்

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர் என அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் சுதேஷ் குமார் மோக்தா தெரிவித்துள்ளார். மாண்டி, காங்க்ரா மற்றும் சாம்பா மாவட்டங்களில் அதீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், இதுவரை 36 வானிலை தொடர்பான சம்பவங்கள் அம்மாநிலத்தில் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாண்டி மாவட்டம் … Read more

உரசிய பாஜக; உச்சந்தலையில் கை வைத்த ஆம் ஆத்மி!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரது தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு மக்கள் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு உள்ளது. இந்நிலையில் டெல்லியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கி … Read more

ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் கட்டணம்? ரிசர்வ் வங்கியின் முடிவால் பயனர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ (Unified Payment Interface) மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தது. இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடி பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடியும் நெகிழ்ச்சியுடன் தமது … Read more

இமாச்சலப் பிரதேச வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு

சிம்லா: கடந்த 24 மணி நேரத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 22 பேர் பலியாகினர். 5 பேர் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் சுதேஷ் குமார் மோக்தா கூறுகையில், “மாநிலத்தில் அதிகபட்சமாக, மண்டி, கங்ரா, சம்பா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மழைத் தொடர்பாக 36 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மழை காரணமாக, மண்டியிலுள்ள மண்டி … Read more

“கடவுள் நம்முடன் இருக்கிறார்” – அர்விந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை ..!!

கடந்த சில தினங்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது டெல்லி அரசியல். தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் கல்வி கொள்கையை பாராட்டி கட்டுரை ஒன்று வெளிவந்ததற்காக டெல்லி கல்வி துறை அமைச்சரும் துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா கட்டம் கட்டப்பட்டதாக கூறியது அரசியல் வட்டாரம். டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மீது, மதுபான உரிமம் சார்ந்த முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மனிஷ் சிசோடியாவின் வீடு … Read more

வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம்: 4 காமக்கொடூரன்கள் கைது

திருவனந்தபுரம்: வீட்டில் தனியாக இருந்த பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருவனந்தபுரம் மாவட்டம் சிறையின்கீழ் அருகே உள்ள அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி. அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாக ஒழுங்காக பள்ளிக்கு செல்லவில்லை. இந்த மாணவியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த வகுப்பு ஆசிரியை விசாரித்த போது திடுக்கிடும் தகவல் … Read more

உ.பி: இயர்போன் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தில் சென்ற 3 பேர் ரயில்மோதி உயிரிழப்பு

இயர்போன் மாட்டிக்கொண்டு வெவ்வேறு தண்டவாளங்களில் நடந்துசென்ற 3 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு பேர் பதோஹி ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். மற்றொரு நபர் அஹிமன்புர் ரயில்நிலையத்தில் அடிபட்டு உயிரிழந்தார். இதில் மூன்று பேரும் இரவு உணவுக்குப்பிறகு சிறிது நடந்து சென்றவர்கள் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதோஹி ரயில்நிலைய ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அவுட்போஸ்ட் பொறுப்பாளர் அஷோக்குமார் … Read more

சுரங்க குத்தகை வழக்கால் பதவிக்கு ஆபத்து; ஜார்கண்டில் ஹேமந்த் சோரனின் மனைவியை முதல்வராக்க திட்டம்?.. எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தால் பரபரப்பு

ராஞ்சி: சுரங்க குத்தகை வழக்கால் ஹேமந்த் சோரன் பதவிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது மனைவியை மாநில முதல்வராக்க ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. ஜார்கண்ட் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் மீது ராஞ்சியின்  வெவ்வேறு காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் சுரங்க குத்தகை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையை தேர்தல் … Read more

"வேலையில்லை! உணவில்லை"- குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தந்தை

தந்தையே தனது 11 மாத குழந்தையை கால்வாயில் வீசிக் கொன்ற கொடூர சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்ட முகேஷ் பெர்வால், தனது தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மனைவி உஷா, குழந்தை ராஜ்வீரையும் ராஜஸ்தானுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் திடீரென தந்தை ஏற்றுக்கொள்ளமாட்டார் எனக்கூறி மனைவியை ஓரிடத்தில் இருக்குமாறு கூறிவிட்டு குழந்தையை மட்டும் தூக்கிச் சென்ற முகேஷ், குழந்தையை … Read more