மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடக்கும்; பாக்., எண்ணில் இருந்து வந்த எச்சரிக்கை

2011 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் அப்படியான தாக்குதல் ஒன்று நடத்தப்படும் என பாகிஸ்தான் எண்ணில் இருந்து காவல்துறைக்கு வந்திருக்கும் எச்சரிக்கையால் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ராய்கட்டில் ஆயுதங்களுடன் படகு ஒன்று கரை ஒதுங்கிய ஒரு சில நாட்களுக்குள் வந்திருக்கும் இந்த செய்தி, மும்பை காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.  மகாராஷ்டிராவின் ராய்காட் கடல் பகுதியில் அண்மையில் மர்ம படகு ஒன்று … Read more

சமூக வலைதளத்தில் பெண்களின் பெயரில் கணக்கு தொடங்கி காமக் கதை, நிர்வாண வீடியோ அனுப்பி மோசடி: பணியாத நபர்களுக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

சண்டிகர்: சண்டிகரில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களின் பெயரில் கணக்கு ெதாடங்கி அதன் மூலம் காமக் கதைகளையும், நிர்வாண வீடியோக்களையும் அனுப்பி மிரட்டல் விடுத்த மூன்று பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவை மூலம் பெண்கள் பெயரில் கணக்கு தொடங்கி அதன் மூலம் ஆண்களை மயக்கி பணம் பறிக்கும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சண்டிகர் போலீசார் ‘நிர்வாண வீடியோ’ எடுத்து ஆண்களை மிரட்டி … Read more

ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸ் திடீர் ஆர்ப்பாட்டம்..!- சிபிஐ வழக்கு எதிரொலி..?

கடந்த சில தினங்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது டெல்லி அரசியல். தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் கல்வி கொள்கையை பாராட்டி கட்டுரை ஒன்று வெளிவந்ததற்காக டெல்லி கல்வி துறை அமைச்சரும் துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா கட்டம் கட்டப்பட்டதாக கூறியது அரசியல் வட்டாரம். இதனை அடுத்து அவர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்து அதிரடி சோதனைகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் பட்டியல் என சிலரின் பெயர்களை வெளியிட்டது … Read more

கணவன் நக்சல்களால் கொல்லப்பட்ட நிலையில் காதலுக்கு இடையூறாக இருந்த தாய் கழுத்து நெரித்துக் கொலை: காதலனுடன் சேர்ந்து பட்டதாரி மகள் வெறிச்செயல்

நாக்பூர்: மகாராஷ்டிராவில் காதலுக்கு இடையூறாக இருந்த காவல் துறை அதிகாரியான தாயை கழுத்து நெரித்துக் கொன்ற மகள் மற்றும் காதலனை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த சந்திர காந்த் அத்ரம் என்பவர் கடந்த 2000ம் ஆண்டு ஜூனில் நக்சல் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் கொலையான 5 நாட்களுக்கு பின்னர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி நிர்மலாவுக்கு, ஊர்மிளா அத்ரம் பிறந்தார். தற்போது ஊர்மிளா அத்ரம் 22 வயது பெண்ணாக … Read more

தெலுங்கானா முதல்வருக்கு சிபிஐ திடீர் அதரவு..?- பாஜகவுக்கு புதிய சிக்கல்..!

ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த காலத்திலிருந்து வெற்றிக்கொடியை நாட்டி வருபவர் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ். பல்வேறு எதிரிகள் சூழ்ந்த போதிலும் அசராமல் அவர்களை கையாண்டு வருகிறார். இந்நிலையில் எப்படியாவது பாஜக தெலுங்கானாவை கைப்பற்றிவிடவேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் உள்ளது. அதற்கான முயற்சியையும் பல்வேறு வகைகளில் எடுத்து வருகிறது. இந்த சூழலில் பாஜவை சிபிஐயும் எதிர்த்து வருகிறது. இது குறித்து பேசிய தெலுங்கானா சிபிஐ தலைவர் சடா வெங்கட் ரெட்டி “முனுகோடு இடைத்தேர்தலில் சந்திர சேகர … Read more

ஆணுடன் வாழ விருப்பமில்லை… தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை

பெங்களூரு: ஆணுடன் வாழ விருப்பமில்லை என்பதால் நடிகை கனிஷ்கா சோனி தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை கனிஷ்கா சோனி, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய கலாசாரத்தின் படி, திருமணம் என்பது அன்பு மற்றும் நேர்மையுடன் தொடர்புடையது. என்னை நானே திருமணம் செய்து கொண்டேன். எனது கனவுகள் அனைத்தும் நனவாகியுள்ளன. இந்த உலகில் என்னை மட்டுமே  நான் நேசிக்கிறேன். எனக்கு ஆண் துணை தேவையில்லை. … Read more

கொள்ளைக் கும்பல் தலைவர் கெஜ்ரிவால்: மத்திய அமைச்சர் தாக்கு!

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின், சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அடுத்ததாக கைது செய்யப்படலாம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை … Read more

லக்னோவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் பதிவால் மக்கள் பீதி

லக்னோ: லக்னோவில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று அதிகாலை 1.12 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர். நகரம் முழுவதும் ஒரே நிலநடுக்க பீதியாக இருந்தது. வீட்டிற்குள் இருந்த பொருட்களும் ஆங்காங்கே கீழே விழுந்ததால், என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் இதுவரை உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்து … Read more

பயணிகள் தகவல்களை விற்று ரூ.1000 கோடி திரட்ட திட்டம்? என்ன சொல்கிறது IRCTC?

பயணிகள் குறித்த தகவல் தொகுப்பை ஐஆர்சிடிசி வணிகரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. தங்களிடம் உள்ள பயனர்களின் மின்னணு தகவல் தொகுப்பை (User data) வணிகரீதியாக அளித்து வருவாய் ஈட்டும் வழிகள் குறித்து ஆலோசனை அளிக்க அண்மையில் ஐஆர்சிடிசி ஒப்பந்தப் புள்ளி கோரியது. பயணிகள் குறித்த தகவல் உள்பட ஐஆர்சிடிசி வசமுள்ள மின்னணு தகவல்களை பகிர்வதன் மூலம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

மதுபானக் கடை ஊழல் | பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் மணிஷ்: மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

”மதுபானக் கடை ஊழலில் மணிஷ் சிசோடியா தான் முதல் குற்றவாளி, கேஜ்ரிவால் கொள்ளைக்கூட்டத் தலைவர்” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று … Read more