உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் முயற்சியில் இந்தியா பங்காற்ற தயாராக உள்ளது: உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: எந்தவொரு அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது என உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கூறியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகளுடன் போராடி வரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷ்யா படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் … Read more

அபாய பலகையைப் பொருட்படுத்தாமல் அருவியில் குளித்த 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

திருவனந்தபுரம் கல்லார் வட்டக்காயத்தில் அருவியில் குளிக்கச்சென்ற 5 பேரில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லார் அருவியில் பொழுது போக்கிற்காக 5 இளைஞர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அருவியில் குளிப்பது தொடர்பாக அங்கு அபாய பலகை வைக்கப்பட்டுள்ளதை அவர்கள் பொருட்படுத்தாமல் குளிக்கச் சென்றுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் அபாய பகுதி எனக் கூறிய போதும் அதனை ஏற்க மறுத்து நீரில் இறங்கியுள்ளனர். அப்போது அருவியில் தண்ணீர் அதிக அளவு வந்ததால், நிலை தடுமாறி 5 … Read more

போலீஸ் வேடத்தில் மாமூல் வசூல்… மடக்கிப்பிடித்த நிஜ போலீஸ்!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியைச் சேர்ந்த முகேஷ் யாதவ் (23) என்பவர் 120 கிலோ உடல் எடை கொண்டவர். இவர் பிழைப்புக்காக விபரீத முடிவெடுத்து தற்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார். தனது தோற்றத்திற்கு ஏற்ப போலீஸ் உடை ஒன்றை தைத்து போட்டுக்கொண்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் களமிறங்கினார். தனக்கென போலி ஆதார் கார்டு, போலீஸ் ஐடி கார்டு போன்ற ஆவணங்களையும் தயாரித்துள்ளார். போலி போலீசாக ரோந்துக்கு சென்று வாகனங்களை மடக்கி பிடித்து அபராத தொகை, மாமூல்களை வாங்கியுள்ளார். அத்துடன் … Read more

லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் பலி!!

குஜராத் மாநிலத்தில் கண்டெய்னர் லாரி – ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். வதோதரா மாவட்டம் அடுத்த தர்ஜிபூரா பகுதியில் ஆட்டோ – கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 7 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

உ.பி.,யில் துர்கா பூஜை பந்தலில்  தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி, 60 பேர் காயம்

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம், படோகியில் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ஞாயிற்றுகிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வடமாநிலங்களில் நவராத்திரி வாரத்தில் பொது இடங்களில் பந்தல் அமைத்து அதில், துர்கா தேவி சிலையை வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் துர்கா பூஜைக்காக பந்தல் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் படோயி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தல் ஒன்றில் ஞாயிற்றுக்கிழை … Read more

பொதுமக்களுக்கு குவாட்டர், உயிர் கோழி இலவசம்… சம்பவம் செய்த டிஆர்எஸ் கட்சிக்காரர்!

மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்களில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் முக்கியமானவராக திகழ்கிறார். 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா். அதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சித் தலைவா்களை சந்தித்து தொடர் ஆலோசனைகளையும் ராவ் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், சந்திரசேகர் ராவ் தேசிய அளவில் புதிய கட்சியை துவங்க உள்ளதாகவும், அக்கட்சியின் பெயரை தசரா பண்டிகையையொட்டி நாளை … Read more

தாஜ்மகாலை மிஞ்சிய மாமல்லபுரம்! – இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக வகைப்படுத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தை காண வந்த வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை காண வந்த வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமானது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெளியிட்ட இந்திய சுற்றுலாப் புள்ளிவிவரம் 2022 தெரிவித்துள்ளது. இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021-22 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள மாமல்லபுரத்திற்கு 1,44,984 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வந்துள்ளனர். … Read more

பாலியல் வழக்கில் சிறுவர்களை பெரியவர்களாக கருதி தண்டனை!!

பாலியல் வழக்கில் சிக்கிய சிறுவர்களை பெரியவர்களாகக் கருதி தண்டனை வழங்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 28ஆம் தேதி, 17 வயது சிறுமி தனது நண்பருடன் பார்ட்டிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த சிலர் சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறிவிட்டு, கடத்திச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 6 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டது. இந்த ஆறு பேரில் ஐந்து பேர் 18 வயது நிரம்பாதவர்கள். இவர்களில் ஒரு … Read more

குறைந்த விலையில் அறிமுகமாக உள்ள ஜியோ லேப்டாப்!!

ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. அதை தொடர்ந்து அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் “ஜியோபுக்” என்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோபுக் எனப்படும் பட்ஜெட் விலையிலான இந்த லேப்டாப்களில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப்கள் 4ஜி வசதியுடன் இருக்கும் என்றும், இதன் விலை இந்திய விலையில் ரூ. 15,000 ரூபாய் இருக்கலாம் எனவும் … Read more

1990-களில் இருந்தது போலவே பிஹார் ஏழ்மையான மாநிலமாக உள்ளது – பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

பாட்னா: “கடந்த 1990-களில் இருந்தது போலவே பிஹார் மாநிலம் ஏழ்மையான மிகவும் பின்தங்கிய மாநிலமாகவே இருக்கிறது. இங்கு எதுவும் மாறிவிடவில்லை” என்று பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். ஐ பேக் நிறுவனரும், அரசியல் வியூகருமான பிரசாந்த் கிஷோர், மாநிலத்தின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் அமைந்துள்ள பிஹாரின் காந்தி ஆஸ்ரமத்தில் இருந்து, தனது 3,500 கி.மீ. யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான நேற்று தனது யாத்திரையின் முதல் நாளில் மாநிலத்தில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து … Read more