ஜம்மு-காஷ்மீர் | புல்வாமா, சோபியானில் தியேட்டர்கள் திறப்பு

புல்வாமா: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா, சோபியான் பகுதிகளில் திரையரங்குகளை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் 1980-ம் ஆண்டுகளில் சில திரையரங்குகள் செயல்பட்டன. ஆனால், அவற்றின் உரிமையாளர்கள் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். காஷ்மீரில் தீவிரவாதம் பரவியதால் 1990-ம் ஆண்டுகளில் திரை அரங்குகள் மூடப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளை மீண்டும் திறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நகர் லால் சவுக் பகுதியில் இருந்த ரீகல் சினிமா தியேட்டர் மீது 1999-ல் கையெறி குண்டு வீசப்பட்டது. … Read more

கடைசி நேரத்தில் வராத பயணிகள் காலியான பெர்த் தகவலை உடனுக்குடன் தரும் கருவி: தினமும் 7,000 பேர் பலன்

புதுடெல்லி: ரயில் பயணத்தின் போதே காலியாக உள்ள பெர்த்துகள் குறித்த தகவலை வழங்கும் புதிய கையடக்க எச்எச்டி கருவியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், காத்திருப்பு மற்றும் ஆர்ஏசி பயணச்சீட்டு வைத்துள்ள 7,000 பயணிகள் பெர்த் பெற்று பலனடைந்து வருகின்றனர். ரயிலில் முன்பதிவு செய்த பயணச் சீட்டை வைத்துள்ள பயணிகள் கடைசி நிமிடத்தில் வரவில்லை அல்லது பயணத்தை ரத்து செய்தால், காலியான அவர்களின் பெர்த்தை உடனுக்குடன் காட்டக் கூடிய எச்எச்டி எனும் புதிய கருவியை ரயில்வே … Read more

கடந்த ஆண்டில் ஓணம் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்தபோதும் தொடர்ந்து ஆட்டோ ஓட்டும் கேரளவாசி

கொச்சி: கடந்த ஆண்டின் ஓணம் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்தபோதும் கேரளாவைச் சேர்ந்த பி.ஆர்.ஜெயபாலன் தொடர்ந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும்லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டின் ஓணம் லாட்டரியில் கொச்சியை அடுத்த மராடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பி.ஆர்.ஜெயபாலன் (58) முதல் பரிசை வென்றார். பரிசுத் தொகையான ரூ.12 கோடியில், 37 சதவீத வரி மற்றும் சர்சார்ஜ் ரூ.1.47 கோடி போக ரூ.6 … Read more

ஆபாச வீடியோ – மாணவியும் சிம்லா காதலனும் கைது

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஆபாச வீடியோவை காதலனுக்கு அனுப்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 60 க்கும் மேற்பட்ட மாணவிகளின் குளியல் வீடியோக்களை சக மாணவியே படம் எடுத்து தனது காதலனுக்கு அனுப்பியதாகக் கூறப்படுவது வெறும் புரளிதான் என்றும் ஆறேழு மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றும் சண்டிகர் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அமைதி காக்கும்படியும் விரிவான விசாரணை நடைபெறும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதியளித்துள்ளது. ஆயினும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்து நள்ளிரவில் … Read more

ரயில் மோதி இறக்கும் அபாயம் காட்டு யானைகளுக்கு 20 இடங்களில் கண்டம்: ரயில்வேக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் 20 இடங்களில் யானைகள் மீது ரயில்கள் மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டு உள்ளன.நாட்டின் பல பகுதிகளில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த ஜூலை மாதம், ஒன்றிய சுற்றுசூழல்  அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ‘கடந்த 3 ஆண்டுகளில் ரயிலில் அடிபட்டு 45 யானைகள் பலியாகி உள்ளன. ஒடிசாவில் 12 யானைகளும், மேற்கு வங்கத்தில் 11 யானைகளும் பலியாகி உள்ளன,’ என்று கூறப்பட்டது. இந்நிலையில், ரயிலில் … Read more

அடுத்த சுதந்திர தினத்தில் ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயக்கப்படும் ரயில் சேவை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது. உலக அளவில் ரயில்களை கட்டமைப்பதில் இந்தியா சிறந்துவிளங்குகிறது. ரயில் தயாரிப்பில் அடுத்த பெரிய நிகழ்வாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் வரும் சுதந்திர தின நாளான 2023 ஆக. 15-ல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் கடந்த மாதத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் … Read more

வீரம் இந்தி ரீமேக்கில் சல்மான்கான் ஜோடியாக பூஜா ஹெக்டே

மும்பை: கடந்த 2014ல் சிவா இயக்கத்தில் அஜித் குமார், தமன்னா நடிப்பில் ரிலீசான படம், ‘வீரம்’. இப்படம் 2017ல் தெலுங்கில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘கட்டமராயுடு’ என்ற பெயரிலும்,  2019ல் கன்னடத்தில் தர்ஷன், சனா திம்மய்யா நடிப்பில் ‘ஒடேயா’ என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தை இந்தியில் சல்மான்கான் ரீமேக் செய்வதாகவும், பிறகு அந்த முடிவை  மாற்றிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சல்மான்கான் தயாரித்து நடிக்கும் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற படம், … Read more

7 மொழிகளில் வெளியாகிறது உபேந்திரா, கிச்சா சுதீப் நடிக்கும் கப்ஜா

பெங்களூரு: கன்னடப் படவுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப். தற்போது அவர்கள் இணைந்து நடித்துள்ள படம், ‘கப்ஜா’. இது கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, மலையாளம், ஒரியா ஆகிய 7 மொழிகளில் திரைக்கு வருகிறது. கேங்ஸ்டர் வித் ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் உருவான இப்படத்தை சித்தேஸ்வரா என்டர்பிரைசஸ் சார்பில் ஆர்.சந்திரசேகர் தயாரித்து இருக்கிறார். முக்கிய வேடங்களில் ஸ்ரேயா, முரளி சர்மா, ஜான் கொக்கேன், நவாப்ஷா, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, கோட்டா சீனிவாசராவ், கபீர் … Read more

தமன்னா பட நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்கு

ஐதராபாத்: தென்னிந்திய மொழிகளுடன் இந்தியிலும் நடித்து வரும் தமன்னா, தற்போது ‘பப்ளி பவுன்சர்’ படத்தில் நடித்துள்ளார். இது வரும் 23ம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்நிலையில், தனது சமூக வலைத்தளங்களில் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வரும் தமன்னா, ‘பப்ளி பவுன்சர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி யில் பங்கேற்க ஐதராபாத்துக்கு வந்தார். அப்போது அவரை போட்டோ எடுக்க பத்திரிகையாளர்களும், போட்டோ கிராபர்களும் போஸ் கொடுக்கும் படி கேட்டனர். ஆனால், தமன்னாவின் பாதுகாவலர்கள் அவர்கள் கோரிக்கையை … Read more

அத்தனையும் உள்நாட்டு தொழில்நுட்பம் சீனா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க புதிய ஹெலிகாப்டர்: அடுத்த மாதம் 3ல் விமானப்படையில் சேர்ப்பு

புதுடெல்லி: முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டரை அடுத்த மாதம் 3ம் தேதி விமானப்படையில் இந்தியா சேர்க்கிறது. பாகிஸ்தான், சீனாவால் எல்லைகளில் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இவற்றுக்கு பதிலடி கொடுப்பதற்காக ராணுவத்தை முழுவீச்சில் ஒன்றிய அரசு பலப்படுத்தி வருகிறது. குறிப்பாக, வெளிநாட்டு இறக்குமதிகளை குறைத்து, ‘ஆத்மநிர்பார்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் போர் விமானங்கள், ஏவுகணைகள், நவீன துப்பாக்கிகள் போன்றவற்றை தயாரித்து படைகளில் சேர்த்து வருகிறது. இந்நிலையில், … Read more