“ராகுல் காந்தி ஒரு போலி காந்தி” – பசவராஜ் பொம்மை

பெங்களூரு: “ராகுல் காந்தி ஒரு போலி காந்தி” என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு ஒரு ஊழல் அரசு என்றும், 40 சதவீத கமிஷன் வாங்கும் அரசு என்றும் இந்திய ஒற்றுமைப் பயணத்தின்போது ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இதனை பாஜக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுமே ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறி இருந்தார். கர்நாடகாவில் … Read more

பண்பலை வானொலி கொள்கை நெறிமுறைகளில் திருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்!

தனியார் பண்பலை மூன்றாம் கட்ட கொள்கை வழிகாட்டு நெறிமுறைகள் என்று குறிப்பிடப்படுகின்ற தனியார் முகமைகள் மூலம் பண்பலை வானொலி ஒலிபரப்பு சேவைகள் மூன்றாம் கட்டம் என்பதன் விரிவாக்கம் குறித்த கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள சில அம்சங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உரிம காலமான 15 ஆண்டுகளில் ஒரே நிர்வாகக் குழுமத்திற்குள் பண்பலை வானொலி அனுமதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்கான மூன்றாண்டு … Read more

உத்தராகண்ட் மாநிலத்தில் திரௌபதியின் தண்டா 2 என்ற மலை சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கிய 10 பேர் பலி: 11 பேரை தேடும் பணி தீவிரம்

டேராடூன் : உத்தராகண்ட் மாநிலத்தில் திரௌபதியின் தண்டா 2 என்ற மலை சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 10 மலையேறும் பயிற்சி பெறுபவர்கள் உயிரிழந்துள்ளனர். 8 பேரை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர், மேலும் மேலும் 11 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். பனி சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில மீட்பு படையினர் மற்றும் இந்திய விமான படையின் 2 சீட்டா ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.  பனி சரிவில் சிக்கிய அனைவரும் நேரு … Read more

ஜம்மு காஷ்மீரில் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது: அமித் ஷா

ஜம்மு: ஜம்மு காஷ்மீரை மூன்று குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு திங்கள்கிழமை சென்ற அமித் ஷா, இன்று காஷ்மீர் எல்லைப்புர மாவட்டமான ராஜோரியில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் அங்கு நடந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின் … Read more

PFI உடன் 873 கேரள காவல் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா… உண்மை என்ன!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ( PFI) என்ற தீவிரவாத அமைப்பை மத்திய அரசு தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கேரள காவல் துறையில் உள்ள குறைந்தது 873 அதிகாரிகளுக்கு PFI அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலானாய்வு அறிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது. PFI உடன் தொடர்புடைய கேரள காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை NIA செவ்வாய்க்கிழமை மாநில காவல்துறையிடம் … Read more

பல்வேறு மாநிலங்களில் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது இந்திய விமான நிலைய ஆணையம்

டெல்லி: இந்திய விமான நிலைய ஆணையம், மேற்குவங்கம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், அந்தமான் &நிகோபார் தீவுகள் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பதவிகளுக்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. அந்த பணிகளுக்கு aai.aero என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங். வாக்குகளை கவரும் ஆம் ஆத்மி? குஜராத், இமாச்சலில் மீண்டும் பாஜக! கருத்துகணிப்பு முடிவு

ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது சக்தியாக உருவெடுத்தாலும், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியை கைப்பற்றும் என விரைவில் அறிவிக்கப்படவுள்ள சட்டசபை தேர்தல்கள் தொடர்பான கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத இறுதியில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் மீண்டும் பாஜக? 182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில், பாஜக 135 முதல் 143 தொகுதிகள் வரை … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல் – வழிகாட்டு நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை ஒட்டி வழிகாட்டு நெறிமுறைகளை அக்கட்சி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற இருக்கிறது. வரும் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கேவும், சசி தரூரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். 9,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை கட்சியின் அதிகாரபூர்வ தேர்தல் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் … Read more

என் ரூட்டே வேற… பெரிய சம்பவத்திற்கு ரெடியான சசிதரூர்- காங்கிரஸில் புதிய ட்விஸ்ட்!

நாட்டின் மூத்த அரசியல் கட்சியாக திகழும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ஆம் தேதி நடக்கவுள்ளது. 19ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான போட்டியில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவர் மட்டுமே நிற்கின்றனர். இவர்களில் மூத்த தலைவராக இருக்கும் கார்கேவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் முழு மூச்சாக போட்டியில் … Read more

சிறுபான்மை நலத்துறையை நீக்க திட்டமா? ஒன்றிய அரசு பதில்

புதுடெல்லி: சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தை நீக்குவதற்கான திட்டம்  எதுவும் பரிசீலனையில் இல்லை என்று ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தை ரத்து செய்துவிட்டு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துடன் இணைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒன்றிய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘அதுபோன்ற முன்மொழிவு எதுவும் பரிசீலனையில் இல்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளது.  சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை … Read more