'டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலக வேண்டும்' – காங்கிரஸ் கடும் சீற்றம்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். டெல்லியில் மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 30 இடங்களில் 14 மணி நேரம் நடந்த இந்த சோதனை மாலை நிறைவடைந்தது. இந்த சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் விவரங்கள் குறித்து எந்தத் தகவலும் … Read more

'மணிஷ் சிசோடியா பற்றி முழுநீள முதற்பக்க கட்டுரை முற்றிலும் நடுநிலையானது' – நியூயார்க் டைம்ஸ் விளக்கம்

மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு நவ.16-ல் அறிமுகப்படுத்தியது. அதன்படி, மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. டெல்லி முழுவதும் 849 விற்பனை நிலையங்களில் சில்லறை … Read more

டேராடூனில் மேகவெடிப்பு… உறைய வைத்த அதிகாலை; அவசரமாய் ஓடிய மக்கள்!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அடுத்த சார்கெட் கிராமத்தில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் திடீரென மேகவெடிப்பு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர் மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. ஏற்கனவே நல்ல மழை பெய்து கொண்டிருக்கையில் மேகவெடிப்பு நிகழ்வு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விடாமல் கொட்டித் தீர்த்து வரும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேகவெடிப்பு குறித்து தகவல் கிடைத்ததும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். சார்கெட் கிராமத்தில் சிக்கிக் … Read more

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் இருப்பது ஏன்?..பொதுமக்கள் கேள்வி..!!

டெல்லி: கச்சா எண்ணெய் விலை சரிந்திருக்கும் போதிலும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் இரு தினங்களுக்கு முன்பு முதல்முறையாக 91.51 அமெரிக்க டாலர் வரை கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இது 95 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. … Read more

உ.பி. | மதுரா கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நெரிசல்: மூச்சுத்திணறி இருவர் பலி, 6 பேர் கவலைக்கிடம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவிலுள்ள பாங்கே பிஹாரி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், மூச்சுத்திணறி இருவர் பலியானதுடன் 6 பேர் நிலை கவலைக்கிடமாகி விட்டது. நேற்று நாடு முழுவதிலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. கிருஷ்ணரின் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுராவிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இங்குள்ள பிருந்தாவனின் பாங்கே பிஹாரில் கோயிலும் மிகவும் பிரபலமானது. இதன் உள்ளே நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பக்தர்கள் குவியத் துவங்கினர். இக்கோயிலினுள் இடமும் சற்று … Read more

டெல்லி துணை முதலமைச்சர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பதவி விலகக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதிய கலால் வரி கொள்ளை தொடர்பாக மணீஷ் சிசோடியா வீட்டில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியது.

3500 கிலோ வெடி பொருள்கள்… தகர்க்க தயாராகும் நொய்டா இரட்டைக் கோபுரங்கள்

நொய்டாவில் உள்ள சூப்பர் டெக்ஸ் என்ற பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் வரும் 28ஆம் தேதி வெடி வைத்து தகர்க்கப்பட உள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ‘சூப்பர் டெக்ஸ்’ என்ற பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் உள்ளன. இதில் ‘அபெக்ஸ்’ என்ற கட்டடம் 32 மாடிகளுடன் 328 அடி உயரமும், ‘செயான்’ என்ற கட்டடம் 31 மாடிகளுடன் 318 அடி உயரமும் உடையது. இந்த இரண்டு கோபுரங்களும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கட்டடங்களை இடிக்க … Read more

திருப்பதியில் பசவராஜ் பொம்மை சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று காலை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி.சுப்பா ரெட்டி வரவேற்றார். இருவரும் சுவாமி தரிசனம் செய்த பின்னர் அவர்களுக்கு, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவிக் கப்பட்டது. இதனை தொடர்ந்து, திருமலையில், கர்நாடக மாநில அரசு சார்பில் ரூ.200 கோடி செலவில் கட்டப்பட்டு வரும், சத்திரத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநில … Read more

1.33 கோடி பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள்; 3 ஆண்டுகளுக்கு இன்டர்நெட் வசதியும் இலவசம்: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அதிரடி..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 1 கோடியே 33 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்தார். அதன்படி சிரஞ்சேவி சுகாதார காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 33 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படவிருக்கிறது. இலவச ஸ்மார்ட் போன்களுடன் 3 ஆண்டுகளுக்கு … Read more

பிரதமர் மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறாக ட்வீட்- காவலர் சஸ்பெண்ட்

பிரதமர் மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதற்காக கான்பூர் குற்றப்பிரிவு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் அஜய் குப்தா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகள் வெளியிட்டு வந்ததாகத் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்  ஆகியோரை குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த தகவல் காவல்துறை … Read more