வாட்ஸ் அப் வழக்கு ஜன.17ல் விசாரணை

புதுடெல்லி: வாட்ஸ்அப் நிறுவனத்தின் கொள்கைகள், தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக பயனாளிகள் தங்களது அழைப்புகள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், வீடியோ உள்ளிட்ட தகவல்களை அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தி வருகிறது. இது தனிமனித சுதந்திரம், பேச்சுரிமைக்கு எதிரானது,’ என்று எதிர்ப்பு தெரிவித்து 2 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கேஎம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு … Read more

சிம் கார்டு வாங்க போலி ஆவணங்களை வழங்கினால் ஓராண்டு சிறை

புதுடெல்லி: சிம் கார்டு மற்றும் ஓடிடி சேவைகளுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வழங்கினால் ஓராண்டு சிறை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்க இந்திய தொலைத்தொடர்பு வரைவு மசோதா 2022-ன் விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களிடையே ஆன்லைன் மூலமாக மோசடியில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று, சட்டவிரோதமான காரியங்களும் தொலைத்தொடர்பு சேவையை அடிப்படையாக கொண்டே அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, இதுபோன்ற பல்வேறு மோசடி நிகழ்வுகளிலிருந்து … Read more

ஜல்லிக்கட்டு வழக்கு 3 வாரத்தில் அறிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜல்லிகட்டு தொடர்பான வாதங்களை அடுத்த மூன்று வாரத்தில் அனைத்து தரப்பினரும் அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை ஒன்றிய அரசு நீக்கியதால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 2 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் … Read more

குஜராத் மாநிலத்தில் ரூ.8,600 கோடி மதிப்பிலான திட்டங்களை மோடி தொடங்கிவைத்தார் – சூரத் நகரில் வைர ஆராய்ச்சி மற்றும் வணிக திட்டம்

சூரத்: குஜராத் மாநிலத்தில் ரூ.8,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சூரத் நகரில் வைர ஆராய்ச்சி மற்றும் வணிக திட்டம் (ட்ரீம் சிட்டி) தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். வைர நகரம் என அழைக்கப்படும் சூரத் நகருக்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சூரத் நகரில் லிம்பயத் என்ற இடத்தில் … Read more

தலிபான் பாணியில் படுகொலை

உத்தர பிரதேச மாநிலம், மீரட் அருகே உள்ள கஜூரி  கிராமத்தில் 22 வயதுள்ள தீபக் தியாகி என்ற வாலிபர், தலிபான் தீவிரவாதிகள் பாணியில் தலை துண்டித்து  கொல்லப்பட்டு உள்ளார். தலையில்லா உடம்பு மட்டுமே மீட்கப்பட்டு உள்ளது. தலை எங்கே என்று தெரியவில்லை. இது தொடர்பாக 6 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலையால் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பறக்கும் ரயிலில் சாசகம் என்ற பெயரில் உயிருக்கு உலை வைக்கும் வேலையில் ஈடுபட்ட வீடியோ வைரல்..!!

சென்னையில் பள்ளி செல்லும் மாணவர்கள் சிலர் ரயில் மற்றும் பேருந்தில் தொங்கியபடி அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. சாசகம் என்ற பெயரில் உயிருக்கு உலை வைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபடுவது வைரல் வீடியோவாக வருகிறது. ரயிலின் மேற்கூரையில் ஏறி பயணம் செய்வது, ரயில் பெட்டிகளில் கால்களைத் தொங்க விட்டுக் கொண்டு பயணம் செய்வது, பேருந்தில் தரையில் கால்கள் உரச பயணம் செய்வது என மாணவர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை பூங்கா ரயில் … Read more

திருமணம் ஆகாத பெண்களுக்கும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உள்ளது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில், 25 வயதான, திருமணமாகாத பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஒருமித்த உறவின் விளைவாக தான் கர்ப்பம் அடைந்ததாகவும், 23 வாரங்கள் மற்றும் 5 நாட்களான கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்குமாறும் கோரினார். ஆனால், அவருக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கில் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது: அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கு … Read more

பாப்புலர் பிரன்ட் டிவிட்டர் முடக்கம்

புதுடெல்லி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் 8 கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில்,, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ5.2 கோடி நஷ்டஈடு செலுத்த உத்தரவு: பாப்புலர் பிரன்ட் நிர்வாகிகள் கைதை கண்டித்து, கேரளாவில் இந்த அமைப்பினர் சில தினங்களுக்கு … Read more

பட்டினி, வேலையின்மை கொண்ட நாடு இந்தியா: ஒன்றிய அமைச்சர் கட்கரி சர்ச்சை

நாக்பூர்: நமது நாடு பட்டினி, வேலையின்மை, உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஏழை மக்கள் வாழும் பணக்கார நாடு என்று ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ராஷ்ட்ரிய சேவா சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கட்கரி பேசியதாவது: உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா. ஏழை மக்கள் தொகை … Read more

ஜம்மு காஷ்மீரில் 2 பேருந்துகளில் குண்டுவெடிப்பு: பாக்.கிற்கு எதிராக போராட்டம்

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 பேருந்துகளில் அடுத்தடுத்து குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 2 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு தோமைல் சவுக்கில் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்து சில … Read more