பஞ்சாப் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. பஞ்சாப்பில்  ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை வாங்க பாஜ முயற்சி செய்து வருவதாக  முதல்வர் பகவந்த் சிங் மான் குற்றம்சாட்டினார்.  எம்எல்ஏக்களை வளைக்க பாஜ கட்சி தலா ரூ.25 கோடி ரூபாய் வரை தருவதாக கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், சட்டப்ேபரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வர் மான் முடிவு செய்தார். … Read more

6 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி: பீகார், மராட்டியம், அரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), முனுகோட் (தெலுங்கானா), கோலா கோக்ரநாத் (உ.பி.), தாம்நகர் (ஒடிசா), ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

நவீன வசதிகளுடன் உள்நாட்டில் தயாரான இலகு ரக ஹெலிகாப்டர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: விமானப்படையின் பலம் அதிகரிக்கும்

புதுடெல்லி: முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்களை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையின் பலம் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால், நாட்டின் விமானப்படை, ராணுவத்துக்கு வலுசேர்க்க அனைத்து காலநிலையிலும், இரவு நேரத்திலும் தாக்கும் திறன் கொண்ட 15 இலகு ரக ஹெலிகாப்டர்கள் ரூ.3,887 கோடி மதிப்பில் வாங்க ஒன்றிய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. … Read more

சித்தூர் காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்-3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. இதனால் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில்.இந்த கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் … Read more

புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்; ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

டெல்லி: அரசியல் ரீதியாக புதிய கல்விக் கொள்கையை எதிர்கட்சியினர் எதிர்ப்பதாக ஒன்றியகல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளது. உள்ளூர் மொழிகளில் பாடம் எடுக்கப்படும். மேலும் அரசு … Read more

திருப்பதியில் இன்று 7ம் நாள் பிரம்மோற்சவம்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி சூரிய பிரபை வாகனத்தில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 32 அடி உயர தங்க ரதம் மாட வீதிகளில் பவனி வந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். இந்த ரதத்தை பெண்கள் மட்டுமே இழுத்தனர். அப்போது … Read more

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடல் கண்ணூரில் இன்று தகனம்

திருவனந்தபுரம்: கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கோடியேரி பாலகிருஷ்ணன் (68). கடந்த வி.எஸ். அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை, சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். 3 முறை மாநில சிபிஎம் செயலாளராகவும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தார். இந்தநிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 1ம் தேதி இரவு காலமானார். இந்த தகவல் அறிந்ததும் மருத்துவமனையில் … Read more

தலைவர் தேர்தல்… தந்தை, மகனால் கேரள காங்கிரசில் கொந்தளிப்பு!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17 ஆம் தேதி (அக்.,17) நடைபெற உள்ளது. இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவும், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்பியுமான சசி தரூம் போட்டியிடுகின்றனர். தேர்தலில் இருவரும் இடையே நேரடி போட்டி நிலவுவதாக தெரிந்தாலும், கட்சியின் சீனியர்களில் பெுரும்பாலோரின் ஆதரவும், சோனியா குடும்பத்தின் ஆசியும் இருப்பதாக கூறப்படுவதால் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெறுவதும் அனேகமாக உறுதி என்று காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்பட்டு … Read more

பணமோசடி வழக்கில் ஆஜராக கர்நாடக காங். தலைவருக்கு சம்மன்: ராகுல் பேரணியில் பங்கேற்ற நிலையில் பரபரப்பு

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் சிக்கிய கர்நாடகா காங்கிரஸ் தலைவரை வரும் 7ம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடர்பான பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது. … Read more

ஊழல் ரேங்கிங்… கர்நாடகாவுக்கு முதல் இடம் கொடுத்த ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். தற்போது அந்தப் பாத யாத்திரை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இன்று மாலை பாண்டவர் புரத்தில் அவரது நடைபயணம் நிறைவடைந்தது. அப்போது பேசிய ராகுல்காந்தி, “நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகா பாஜக அரசு உள்ளத. சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரிடம் இந்த அரசு 40% கமிஷன் வசூலிக்கிறது . இது குறித்து கர்நாடக ஒப்பந்ததாரர்கள் பிரதமர் மோடிக்கு … Read more