வரும் 19ம் தேதி ஜே.பி.நட்டா முன்னிலையில் புதிய கட்சியை பாஜகவில் இணைக்கும் அமரீந்தர் சிங்: பஞ்சாப் அரசியலில் அடுத்த திருப்பம்

பாட்டியாலா: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனது புதிய கட்சியை வரும் 19ம் தேதி பாஜகவுடன் இணைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று  மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால் அப்போதைய முதல்வர் அமரீந்தர் சிங் கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதன்பின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்த அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் (பிஎல்சி) … Read more

சிறுதானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்: எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளிலும், பிற நாடுகளிலும் சிறுதானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) 22-வது உச்சி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதன் விவரம்: “இந்த ஆண்டின் சவால் மிக்க உலக, பிராந்திய சூழலுக்கு இடையே எஸ்சிஓ-வுக்கு சிறப்பான தலைமை வகித்த (உஸ்பெகிஸ்தான்) அதிபர் மிர்சியோயேவுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை … Read more

தண்ணீர் குடித்து வருவதற்குள் அதிர்ச்சி; போர்வெல் குழியில் விழுந்த சிறுமி மீட்பு: ராஜஸ்தானில் மீட்பு குழுவினர் அதிரடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் போர்வெல் குழிக்குள் விழுந்த சிறுமியை மீட்புக் குழுவினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர். ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் ஜஸ்சா படா கிராமத்தை சேர்ந்த அங்கிதா (2) என்ற சிறுமி தனது வீடு அருகே இருந்த 200 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட மூடப்பட்ட ஆழ்துளை கிணறு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக, அந்த சிறுமி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார். நீண்ட நேரமாக சிறுமி காணாதது குறித்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து வரும் … Read more

திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின், தனது கணவன் ஒரு பெண் என்பதை கண்டறிந்த மனைவி!

குஜராத்தில் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின், தனது கணவன் ஒரு பெண் என்பதை மனைவி கண்டுபிடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் வசிக்கும் 40 வயதான பெண் ஒருவர், கோத்ரி காவல்நிலையத்தில் தனது கணவன் மீது கொடுத்துள்ள புகார் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. 2014 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்தவர் ஒரு பெண் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு மோசடி புகார் தொடர்ந்துள்ளார் அந்த பெண். அந்த புகாரில், “எனது முதல் கணவர் … Read more

செப்.19-ல் பாஜகவில் இணைகிறார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக இருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங், வரும் 19-ம் தேதி பாஜகவில் இணைய இருக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான அம்ரிந்தர் சிங், இரு முறை பஞ்சாப் முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவர், பாஜகவின் அருண் ஜெட்லியை எதிர்த்துப் போட்டியிட்டு ஒரு லட்சத்து 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2015-ம் ஆண்டு பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். இவரது … Read more

அடுக்குமாடி குடியிருப்பின் சமையலறையில் இன்டர்நெட்டில் பார்த்து கஞ்சா செடி வளர்ப்பு: க.காதலியுடன் இன்ஜினியர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் சமையல் அறையில் கஞ்சா செடி வளர்த்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர், அவரது கள்ளக்காதலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் கஞ்சா, பிரவுன்சுகர், எம்டிஎம்ஏ உள்பட போதைப்பொருள் விற்பனையும், பயன்பாடும் கடுமையாக அதிகரித்து வருகிறது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பை … Read more

பாம்பு கடித்த மகள்களை சாமியாரிடம் அழைத்துச்சென்ற பெற்றோர்! மூடநம்பிக்கையால் நேர்ந்த துயரம்

ராஜஸ்தானில் நள்ளிரவில் பாம்புக் கடியைக் குணமாக்க மருத்துவமனைக்கு பதிலாகத் தனது பெண் பிள்ளைகளைச் சாமியாரிடம் அழைத்துச் சென்றதால் அந்த 2 பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், இரவு நேரத்தில் இரண்டு சிறுமிகள் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, அவர்களை விஷப்பாம்பு கடித்துள்ளது. அலறியடித்து எழுந்த சிறுமிகள் உடனே மயக்கமடைந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், இருவரையும் தூக்கிச்சென்று, அலிபூர் கிராமத்தில் உள்ள பக்த வாலா பாபாவிடம் குணமடைய வேண்டியுள்ளனர். விஷப்பாம்பு கடித்தவர்களுக்கு அடுத்த 3 மணி … Read more

மத்தியில் ஆட்சி அமைத்தால் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நிதிஷ் குமார் உறுதி

பாட்னா: பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆகஸ்டில் இந்த கூட்டணி முறிந்தது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் கைகோத்த ஐக்கிய ஜனதா தளம் புதிய கூட்டணி அரசை அமைத்தது. அந்த கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகவும் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். கூட்டணி மாறிய பிறகு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் முதல்வர் நிதிஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அண்மையில் … Read more

சர்ச்சையான அணிந்துரை: மோடி நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காத இளையராஜா!

டெல்லியில் ‛அம்பேத்கரும் மோடியும்’ என்ற புத்தகத்தை குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். இந்த புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய இளையராஜா, விழாவில் பங்கேற்கவில்லை. தலைநகர் டெல்லியில் ‘புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் சார்பில், ‘அம்பேத்கரும் மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற ஆங்கில புத்தகம் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த புத்தகத்திற்கு பிரபல இசை அமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா அணிந்துரை எழுதி இருந்தார். புத்தகத்தில், அம்பேத்கரின் … Read more

பல்கலை கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு; தீப்பந்தம் ஏந்தி மாணவர்கள் போராட்டம்: பிரியங்கா காந்தி, அகிலேஷ் ஆதரவு

அலகாபாத்: கட்டண உயர்வை கண்டித்து அலகாபாத் பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்திற்கு பிரியங்கா காந்தி, அகிலேஷ் ஆதரவு அளித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் சேர்க்கை, தேர்வு போன்றவற்றிக்கான கட்டணத்தை சமீபத்தில் உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த போராட்டத்தின் போது கல்லூரி வளாகத்தில் தீப்பந்தம் ஏந்தியும், கட்டண உயர்வுக்கு எதிராகவும், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்ேபாது இரண்டு மாணவர்களின் … Read more