லடாக்கில் விமானப்படை உதவி 17,000 அடி உயர மலையில் சிக்கிய இஸ்ரேலியர் மீட்பு

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தளத்துக்கு லடாக்கின் மர்கா பள்ளத்தாக்கு அருகே உள்ள நிமலிங் முகாமில் இருந்து நேற்று அவசர அழைப்பு வந்தது. அதில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒருவர், அடார் ககானா மலை உச்சியில் சிக்கி இருப்பதாகவும் வாந்தி, ஆக்சிஜன் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, விங் கமாண்டர் ஆஷிஷ் கபூர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு, ஹெலிகாப்டரில் அங்கு சென்றது. அங்கு 16 ஆயிரத்து … Read more

காங். தலைவர் பதவி தேர்தல் நான் மட்டுமே அல்லமேலும் பலர் போட்டி: சசிதரூர் புதிய தகவல்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 22 வருடங்களுக்குப் பிறகு, அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. . இந்நிலையில், தலைவர் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பி.யுமான சசிதரூர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று சசிதரூர் அளித்த பேட்டியில், ‘தலைவர் பதவிக்கு போட்டி ஏற்படுவது கட்சிக்கு நல்லதுதான். காங்கிரஸ் என்றால் அது ஒரு தனி நபரை சார்ந்தது அல்ல. ஒரு குடும்பத்தில் இருந்து தலைவர் வர வேண்டுமா? … Read more

எம்டி படிப்புக்கு 19ல் கவுன்சலிங்

புதுடெல்லி:  முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் வரும் 19ம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முதுகலை மருத்துவ படிப்புக்கான (எம்டி) நுழைவுத் தேர்வு (நீட்-பிஜி) வழக்கமாக ஜனவரியில் நடத்தப்பட்டு, மார்ச்சில்  கவுன்சலிங் தொடங்கும். ஆனால், கொரோனா தொற்று மற்றும் கடந்தாண்டு சேர்க்கை செயல் முறை தாமதம் காரணமாக, இந்தாண்டு தேர்வு கடந்த மே 21ம் தேதிதான் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஜூன் 1ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் … Read more

“பணத்தின் மீதான மோகமே காரணம்” | சுகேஷின் குற்றங்களை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பழகினார் – அமலாக்கத்துறை

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகரின் குற்ற வரலாறுகளை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவருடன் பழகினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் இணைந்திருந்தது அமலாக்கத்துறை. இப்போது சுகேஷ் குற்றவாளி … Read more

ரூ.200 கோடி பண மோசடி நடிகை ஜாக்குலினுக்கு உயர் நீதிமன்றம் சம்மன்

புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான ரூ200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு டெல்லி நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு மோசடிகளில் சம்பந்தப்பட்டவர். இவர் திகார் சிறையில் இருந்தபடியே போன் மூலமாக தொழிலதிபர்களை மிரட்டி ரூ200 கோடி பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் … Read more

பாஜ இல்லாத இந்தியா சந்திர சேகர் அழைப்பு: பீகாரில் நிதிஷுடன் சந்திப்பு

பாட்னா:பாஜ இல்லாத இந்தியா’வை உருவாக்க, எதிர்க்கட்சிகள் ஓன்றிணைய வேண்டும்,’ என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் சமீபத்தில் பாஜ கூட்டணியை முறித்து கொண்டார். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளடன் இணைத்து, பீகாரில் புதிய ஆட்சியை அமைத்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ.வை தோற்கடிப்பதற்காகன வியூகங்களை அவர் வகுத்து வருகிறார். இந்நிலையில், பாஜ.வுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் தெலங்கானா முதல்வர் … Read more

தயாரிப்பாளர் ஆனார் ரம்யா

பெங்களூரு: தமிழில் பல படங்களில் நடித்துள்ள ரம்யா இங்கு ‘குத்து ரம்யா’ என்று அழைக்கப்படுகிறார். கன்னடத்தில் ‘திவ்யா ஸ்பந்தனா’ என்ற பெயரில் நடித்தார். ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்பி ஆனார். அரசியலுக்கு சென்ற பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். கடைசியாக கோடி ராமகிருஷ்ணா இயக்கிய ‘நாகராஹவு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் திரைத்துறைக்கு வருகிறார். இம்முறை அவர் தயாரிப்பாளராக வருகிறார். நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது … Read more

பிஹார் | பதவியேற்ற 15 நாளில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கார்த்திகேய சிங்

பாட்னா: பிஹாரில் பதவியேற்ற 15 நாளில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் கார்த்திகேய சிங். பிஹாரில் பாஜக.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தார். நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் கடந்த மாதம் 10-ம் தேதி பொறுப்பேற்றனர். இதன்பின் கடந்தமாதம் 16ம் தேதி பிஹார் அமைச்சரவை விரிவாக்கப்பட்டு 31 … Read more

பணம் மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு நீதிமன்றம் சம்மன்..!

பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வரும் செப்டம்பர் 26ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி கோடிக் கணக்கில் பணம் பறித்த வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர், அந்த பணத்தில் இருந்து ஜாக்குலினுக்கு 5 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. அதோடு ஜாக்குலினின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் சுகேஷ் சந்திரசேகர் பணம் கொடுத்ததாக தெரிவித்திருந்தது. கடந்த வாரம் இந்த … Read more

3 நாட்கள்.. 240 கி.மீ.. எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்து காருக்குள்ளே டேரா போட்ட ராஜநாகம்!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவரது காருக்குள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ராஜ நாகம் ஒன்று ஊர்ந்து சென்றதாக நம்பப்படுகிறது. அவர் மலப்புரம் சென்றிருந்த வேளையில் அங்குள்ள வழிக்கடவு சோதனைச் சாவடிக்கு அருகே கார் நிறுத்தப்பட்டிருந்தபோது காருக்குள் பாம்பு ஏறியதைக் கண்டதாக சுஜித் தெரிவித்தார். ஆனால் காருக்குள் எவ்வளவு தேடியும் சுஜித்தால் பாம்பை கண்டுபிடிக்க இயலவில்லை. பாம்பை வெளியே எடுக்க வனத்துறை அதிகாரிகளை அழைத்தார். அது என்ஜின் பேக்குள் நுழைந்து மற்றும் கார் … Read more