அரசின் நலத்திட்ட உதவியை பெறுவதற்கு ஆதார் கட்டாயம்

புதுடெல்லி: மத்திய மற்றும் மாநில அரசுகளின் நல உதவிகள், மானியங்களைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் அவசியம் என்று இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஆகஸ்டு 11- ம் தேதி அனைத்து மத்திய, மாநில துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுவரையில் அரசின் நல உதவிகள், மானியங்களைப் பெறுவதற்கு, ஆதார் அட்டை இல்லாத நபர், அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சமர்ப்பித்தால் போதுமானது. ஆதார் சட்டப்பிரிவு 7-ல் இதற்கு … Read more

சி.எம்-ஐயே தூக்கிட்டாங்க… மாஸ்டர் மைண்ட் பாஜக… சும்மா சீண்டி பார்த்த காங்கிரஸ்!

வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் முன்கூட்டியே தயாராக தொடங்கியுள்ளது பாஜக. அதற்கு முன்னோட்டமாக தான் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு, மத்திய தேர்தல் குழு ஆகியவற்றில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த விஷயம் கடந்த இரண்டு நாட்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து இரண்டு முக்கியமான தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். மத்தியப் பிரதேச மாநிலத்தில் … Read more

இப்படிப்பட்ட அரசியல் செய்வதற்கு வெட்கமில்லையா பிரதமரே… ராகுல் காந்தி தாக்கு

புது டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இன்று வியாழக்கிழமை, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஒரு ட்வீட் மூலம் குஜராத்தில் பில்கிஸ் பானோ வழக்கு தொடர்பாக பிரதமர் மோடியை குறிவைத்துள்ளார். குற்றவாளிகளுக்கு பாஜக ஆதரவு அளிப்பது பெண்கள் மீதான அக்கட்சியின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற அரசியலில் ஈடுபடுவதற்கு வெட்கப்படவில்லையா என்று … Read more

ராஜஸ்தானில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையிலிருந்து ரூ.11 கோடி நாணயங்கள் திருட்டு

ராஜஸ்தான்; மெஹந்திப்பூர் பாலாஜி என்ற இடத்திலுள்ள எஸ்பிஐ வங்கி கிளையிலிருந்த ரூ.11 கோடி நாணயங்கள் திருடப்பட்டன. ரூ.11 கோடி நாணயங்கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ராஜஸ்தான் ஐகோர்ட்டை எஸ்பிஐ நிர்வாகம் அணிகியுள்ளது. ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவை அடுத்து சி.பி.ஐ. நாணயத் திருட்டு தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

காஷ்மீர் பண்டிட்டை கொன்ற  தீவிரவாதியின் வீடு பறிமுதல் – பாதுகாத்த குடும்பத்தினர் கைது

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சுனில் குமார் பட் என்ற காஷ்மீர் பண்டிட்டை சுட்டுக் கொன்ற அடில் வானி என்ற தீவிரவாதியின் வீட்டை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் நேற்று பறிமுதல் செய்தது. ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பழத்தோட்டத்தில் பணியாற்றிய காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சுனில் குமார் பட் மற்றும் அவரது உறவினர் பிதாம்பர் நாத் பட் ஆகியோர் மீது, அடில் வானி என்ற உள்ளூர் தீவிரவாதி கடந்த 16-ம் தேதி துப்பாக்கி சூடு நடத்தினார். … Read more

டெல்லி தான் இதில் நம்பர் 1: இதுக்கு வெக்கப்படணும் சென்றாயன்!

உலகளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் நேற்று (ஆகஸ்ட் 17) வெளியிட்ட ஆய்வறிக்கையில் உலகளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் 7500க்கும் மேற்பட்ட நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்திய தலைநகர் டெல்லி தான் அதிக காற்று மாசுபாடுள்ள நகரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலும் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும் தாண்டி மிக மோசமான … Read more

புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா: மதுபிரியர்கள் குதூகலம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா நடைபெறவுள்ளது. புதுச்சேரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வாஸ்கோ மற்றும் fite n fusta  ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ‘PONDY FOOD FETE 2022’ என்ற நிகழ்ச்சிக்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. பழைய துறைமுக வளாகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த உணவு மற்றும் ஒயின் திருவிழாவில் மது பிரியர்களை குதூகலப்படுத்தும் விதமாக உள்நாட்டு மற்றும் … Read more

அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என ஐஜத எம்எல்ஏ பகிரங்க புகார்.. சிக்கலில் நிதிஷ் குமார்!

பீகார் மாநிலத்தில் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டுள்ளார் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி. இதனால் அம்மாநில அரசியலில் மீண்டும் குழப்பம் நிலவுகிறது. பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி உடனான முரண்பாட்டை தொடர்ந்து கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கமும் செய்யப்பட்டது. இந்நிலையில் … Read more

சிறைகளில் ஆங்கிலேயர் கால விதிமுறைகளுக்கு முடிவு – கைதிகளுக்கு புதிய வசதிகள் அளிக்க உ.பி. முதல்வர் யோகி ஒப்புதல்

புதுடெல்லி: உத்தரபிரதேச சிறைச்சாலைகளில் ஆங்கிலேயர் கால விதிமுறைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. கைதிகளுக்கு பல்வேறு புதிய வசதிகளை அளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உ.பி. சிறைச்சாலை நடைமுறைகளில் ஆளும் பாஜக அரசு பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. இதில் கடந்த 1941 முதல் பின்பற்றப்பட்டு வந்த சிறைச்சாலை விதிமுறைகள் கையேடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இனி அது, ‘உத்தரப்பிரதேச விதிமுறைகள் கையேடு 2022’ என்ற பெயரில் பின்பற்றப்பட உள்ளது. இதற்கான … Read more

வடகிழக்கில் மீண்டும் துவங்கிய சிஏஏ போராட்டம்!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இரு அவைகளிலும் நிறைவேறியுள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளாதால் சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு … Read more