விபரீதமான திருமண நிகழ்வு… உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் 25 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலம் துமாகோட் அடுத்த பிரோகால் பகுதியில் நேற்று இரவு திருமண நிகழ்விற்காக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 45 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் ஒன்றாக திருமணத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் பவுரி கர்வால் பகுதி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதில் 25 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகின. சம்பவம் குறித்து தகவலறிந்து போலீசார், மாநில பேரிடர் மீட்பு படையினர் … Read more

வடகிழக்கு மாநில எல்லை வழியாக இந்தியாவுக்கு 23 கிலோ தங்கம் கடத்தல்: 4 பேர் கைது

டெல்லி: வடகிழக்கு மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் கடத்த முயன்ற 23.23 கிலோ தங்கம் பறிமுதல் செய்துள்ளனர். ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை தங்கத்தை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டன தங்கத்தின் மதிப்பு ரூ.11.65 கோடி என வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் வேண்டும்; கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

நாக்பூர்: மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். தசரா விழாவை ஒட்டி நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்த விழாவில் பேசிய மோகன் பாகவத், “இந்தியாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டமும் மதம் சார்ந்த சமமற்ற நிலையைத் தடுத்து கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதுமே ஆகும். இவை இரண்டும் அசட்டை செய்யாமல் உடனே கவனிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மதம் சார்ந்து மக்கள் … Read more

ராம்லீலா விழாவில் ஆபாச நடனம்… பொங்கி எழுந்த உத்தரப் பிரதேச போலீஸ்!

நவராத்திரியின் விஜய தசமி தினத்தன்று வட மாநிலங்களில் ராம்லீலா நிகழ்ச்சி நடைபெறும். ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரின் உருவ பொம்மைகளை ராமர் அம்பால் வதம் செய்து எரிக்கும் நிகழ்வே ராம்லீலா. இந்த  ராமாயண கதையை நாடகமாகவும் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்துவார்கள். இந்தாண்டும் ராம்லீலா விழாக்கள் பல்வேறு இடங்களில் கோலகலமாக கொண்டாடப்பட்டது.  அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்வு தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அங்கு ராம்லீலா நாடகத்தின் மேடையில், ஆபாசமான வகையில் சில நடனக் … Read more

அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி உயிரிழப்பு

அருணாச்சல பிரதேசம்: அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்துள்ளனர். தவாங் அருகே முன்னோக்கி பகுதியில் பறந்து கொண்டிருந்த ராணுவ விமானச் சீட்டா ஹெலிகாப்டர் காலை 10 மணியளவில் வழக்கமான பயணத்தின் போது விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகளும் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயமடைந்த விமானிகளில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவசேனா Vs சிவசேனா: மும்பையில் தசரா பேரணி மூலம் வலிமையைக் காட்ட இரு அணிகளும் தீவிரம்

மும்பை: சிவசேனா கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக, கட்சித் தொடங்கப்பட்டு 56 ஆண்டுகளில் முதல் முறையாக சிவசேனா பெயரில் புதன்கிழமை இரண்டு தசரா பேரணிகள் நடத்தப்படுகிறது. முன்னாள் முதல்வர் உத்தரவ் தாக்கரே, இந்நாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான இரண்டு அணிகளும் தங்களின் பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சிவசேனா கட்சி சார்பில் முப்பையில் தசரா பேரணி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக அக்கட்சி … Read more

சைபர் கிரைம் கும்பலுக்கு எதிராக பன்னாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ அதிரடி: நாடு முழுவதும் 115 இடங்களில் சோதனை

டெல்லி: இந்தியாவில் பதுங்கி சர்வதேச அளவில் கைவரிசை காட்டும் சைபர் கிரைம் கும்பலை பிடிக்க பன்னாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 115 இடங்களில் நடந்த சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகம் முழுவதும் மோசடிகளை அரங்கேற்றும் சைபர் கிரைம் கும்பல் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுக்கு கடும் சவாலாக உள்ளன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களும் விதவிதமான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஒரு … Read more

திருமணத்துக்கு சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 25 பேர் பலி.. உத்தரகாண்டில் துயரம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்வுக்குச் சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்த பெரும் துயர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பேர் கொண்ட பேருந்து ஒன்று பவுரி கர்வால் பகுதி வழியாக திருமணத்துக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது சிம்டி எனும் கிராமம் வழியாக சென்றபோது விபத்து நேர்ந்திருக்கிறது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்கிறது. பேருந்தில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியதை அடுத்து அலறியதால் அவர்களது குரல் கேட்டு … Read more

3டியில் சமந்தா படம்

மகாகவி காளிதாஸ் எழுதி உலகப்புகழ் பெற்ற ‘அபிஞான சாகுந்தலம்’ என்ற சமஸ்கிருத நாடகத்தை தழுவி உருவாக்கப்படும் படம், ‘சாகுந்தலம்’. இது தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில், வரும் டிசம்பர் 4ம் தேதி திரைக்கு வரும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. காரணம், இப்படத்தை முழுமையாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி முடித்த பிறகே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. சகுந்தலை, … Read more

16-ம் தேதி முதல் செல்போன் பயன்படுத்தக்கூடாது.. இயக்குநர் அதிரடி உத்தரவு..!

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளி நோயாளிகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது: “புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான வெளிநோயாளிகள் வருகின்றனர். இவர்களை பற்றிய விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதன் காரணமாக, பதிவு செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டு, நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. … Read more