பிரசாந்த் கிஷோர் பிளானும், பாஜக சீக்ரெட் ஆபரேஷனும்- ராஜிவ் ரஞ்சன் பகீர்!

ராகுல் காந்தியின் ”இந்திய ஒற்றுமை பயணம்” (Bharat Jodo Yatra) தலைப்பு செய்தியாக மாறிய நிலையில், பிகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் பாத யாத்திரை பேசுபொருளாக மாறியுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லப் போவதாகவும், அதற்காக பிகார் முழுவதும் 3,500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். இதற்காக காந்தி ஜெயந்தி நாளில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். பிரசாந்த் கிஷோரின் பாத யாத்திரை குறித்து அரசியல் கட்சிகள் பெரிதாக வாய் திறக்கவில்லை. ஆனால் … Read more

மும்பை டூ அகமதாபாத் செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் இண்டிகோ விமானத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அந்த விமானத்தின் சேவை பாதிக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், ‘இண்டிகோ விமானம் 6இ 6045-ஐ வெடிகுண்டு வைத்துள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக மும்பை காவல்துறையிடம் புகார் அளித்தனர். அவர்கள், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506பி-ன் படி வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து அந்த விமானத்தை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் … Read more

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிஜூ ஜனதா தளம் எம்எல்ஏ மரணம்

புவனேஸ்வர்: பிஜூ ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிஜய் ரஞ்சன் சிங் பரிஹா இன்று புவனேஸ்வரில் காலமானார். ஒடிசா மாநிலம் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிஜய் ரஞ்சன் சிங் பரிஹா (65) என்பவர் கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். … Read more

4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக்கணினியை ரூ.15,000 விலையில் விற்பனைக்கு விட முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் திட்டம்..!!

டெல்லி: 4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக்கணினியை ரூ.15,000 விலையில் விற்பனைக்கு விட முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் கொடிகட்டி பறந்து வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் குறைந்த விலையில் மின்னணு சாதனங்களை சந்தைப்படுத்தும் ஜியோ நிறுவனம் தற்போது புதிதாக மடிக்கணினி ஒன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான குவால்காம் மற்றும் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து மடிக்கணினியை தயாரிக்கிறது. ஜியோ மடிக்கணினிக்கான சிப்களை … Read more

ஜம்மு-காஷ்மீரில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்

ஜம்மு-காஷ்மீர், உதம்பூரில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர். பயணிகள் பேருந்து மௌங்ரி, கோர் கலியில் இருந்து உதம்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது மன்சார் மோர் என்ற இடத்தில் சாலையில் கவிழ்ந்திருந்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.   Source link

கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது ஒரு சலுகையே தவிர உரிமை அல்ல: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது ஒரு சலுகையே தவிர உரிமை அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எப்.சி.டி.எல். நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் 1995 ஏப்ரலில் பணியின்போது உயிரிழந்தார். ஊழியரின் மனைவி வேறொரு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் கருணை அடிப்படையில் வேலை தரப்படவில்லை ஊழியர் இறக்கும்போது அவரது மகள் சிறுமியாக இருந்துள்ளார்.மகள் பெரியவரானதும் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார். எப்சிடிஎல் நிறுவன ஊழியர் இறந்து 24 ஆண்டுகளுக்கு பின் … Read more

பீகார், மராட்டியம், அரியானா உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: பீகார், மராட்டியம், அரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மராட்டியம், பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் … Read more

செயலிழந்த மங்கள்யான் செயற்கைக்கோள்: என்ன காரணம்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-25 ராக்கெட் மூலம், சுமார் ரூ.450 கோடி செலவில் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் வின்கலம் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ‘மங்கள்யான்’ செயற்கைகோள் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் … Read more

திருப்பதி ஏழுமலையான்கோயிலில் 2வது நாளாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உதய்உமேஷ்லலித் தனது குடும்பத்தினருடன் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். அங்கு அவரை ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா, கலெக்டர் வெங்கடரமணா, இணை கலெக்டர் பாலாஜி, சித்தூர் மாவட்ட முதன்மை நீதிபதி பீமாராவ் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். தொடர்ந்து, திருமலை … Read more

Breaking: பெய்ஜிங் சென்ற ஈரான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: களத்தில் இறங்கிய IAF

டெஹ்ரானில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்குச் சென்ற மஹான் ஏர் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அந்த விமானம் டெல்லி ஏடிசியை தொடர்பு கொண்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த விமானம் இந்திய வான்வெளியை விட்டு வெளியேறியது. இந்த திடீர் நெருக்கடிக்கு எதிர் நடவடிக்கையாக, இந்திய விமானப்படை (IAF) பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமானத் தளங்களில் இருந்து அதன் சுகோய் Su-30MKI போர் விமானங்களைக் கொண்டு அந்த … Read more