பிரபல யூடியூபர் சாலை விபத்தில் உயிரிழப்பு – அதிர்ச்சியில் சப்ஸ்கிரைபர்ஸ்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா சாலை விபத்தில் உயிரிழந்தார்.   மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா. பப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்காக டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் இவர் ‘Skylord’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். இவருடைய சேனலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 1.64 மில்லியன் பேர் ‘ஸ்கைலார்டு’ சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இந்த … Read more

சோனியா ஆதரவு பெற்ற வேட்பாளர் யார்? காங்கிரஸ் தலைவர் தேர்தல் மனுத்தாக்கல் இன்று நிறைவு: கெலாட் விவகாரத்தில் 2 நாளில் முடிவு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கிறது. இதில், கட்சி மேலிடத்தின் விருப்பமான வேட்பாளராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால்,  முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்று கெலாட் திட்டவட்டமாக கூறி விட்டார். மேலும், அவருக்கு ஆதரவாக  90 ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்து உள்ளனர். இதனால், ராஜஸ்தான் அரசியல் நிலவரம் … Read more

பெங்களூரில் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் ஹெலிகாப்டர் சேவை

பெங்களூரில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஹெலிகாப்டர் பயண சேவை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ‘பிளேட் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு நகருக்குள் மட்டுமே பயணம் செய்யும் வகையில் ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ‘பிளேட் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த சேவை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து HAL பகுதி வரையில் இருக்கும் … Read more

குஜராத்தில் திறப்பு விழாவிற்கு முன்பே சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த புதிய பாலம்!!

குஜராத் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று, திறப்பதற்கு முன்பே இடிந்து சீட்டுக்கட்டுப்போல் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் மிக முக்கிய மாவட்டமான ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போர்சாத் சவுக்கில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்டி யாத்ரா மார்க் என்ற இடத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்தநிலையில், நேற்று திடீரென இடிந்து சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி … Read more

நடனம் ஆடவில்லை எனக்கூறி மாணவர்களை வகுப்புக்குள் வைத்து பூட்டி கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

6ஆம் வகுப்பு மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து பூட்டி, மரக்குச்சியால் சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார் ஜார்க்கண்ட் ஆசிரியர் ஒருவர். இதில் காயமடைந்த 13 மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விகாஸ் சிரில் என அறியப்படும் அந்த ஆசிரியரின் சொல்லுக்கு ஏற்ப நடனம் ஆட மறுத்துள்ளனர் அந்த மாணவர்கள். அதனால் ஆசிரியர் அவர்களிடம் கோபத்தைக் காட்டவே அதுகுறித்து பள்ளியின் பிரின்ஸ்பலிடம் மாணவர்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் மாணவர்களுடைய பேச்சை கேட்பதற்கு பதிலாக … Read more

பிஹார் | சானிட்டரி நாப்கின் கேட்ட மாணவியிடம் கடுமையாக பேசிய ஆட்சியர்: வலுக்கும் கண்டனம்

பாட்னா: பிஹாரில் அரசிடம் சானிட்டரி நாப்கின் கேட்ட பள்ளி மாணவியிடம் கடுமையாக பேசிய மாவட்ட ஆட்சியருக்கு கண்டனங்கள் வலுத்ததைத் தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். பிஹாரின் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வு ஒன்றில், மாவட்ட ஆட்சியரான ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். அவரிடம் பள்ளி மாணவி ஒருவர், “அரசு எங்களுக்கு குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத், “அரசு சார்பில் ஏற்கெனவே சீருடைகள், உதவித் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் மூன்றாவது நாள் முத்து பந்தல் வாகனத்தில் ஸ்ரீ தேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் மூன்றாவது நாள் முத்து பந்தல் வாகனத்தில் ஸ்ரீ தேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளினார் மலையப்ப சுவாமி திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்ம வாகனத்தில் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலீத்தார். மூன்றாவது நாளான இன்று இரவு முத்து எப்படி பரிசுத்தமானதோ அதை போன்று நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் … Read more

”இந்தியாவின் இந்தப்பகுதியில் கனடா மக்கள் எச்சரிக்கையாக இருங்கள்” – கனடா அரசின் எச்சரிக்கை

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்திய மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என கனடா அரசு அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடா அரசு இணையத்தளத்தில் பயண அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி கனடாவை சேர்ந்தவர்கள் இந்தியா சென்றால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய 10 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளுக்கு பயணிப்பதை தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் அப்பகுதிகளில் கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் இருக்கும் அபாயம் இருக்கிறது. மேலும் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் செல்லும் … Read more

தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார்..!!

தேசிய மகளிா் ஆணையத்தின் முதல் தலைவராக இருந்தவருமான ஜெயந்தி பட்நாயக் நேற்று காலமானாா். அவருக்கு வயது 90. ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ.பி.பட்நாயக்கின் மனைவியான ஜெயந்தி பட்நாயக் , கட்டாக் மற்றும் பொ்ஹாம்பூா் தொகுதிகளில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு 4 முறை தோ்வு செய்யப்பட்டார். தேசிய மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். வயது மூப்பு தொடா்பான பிரச்னைகளால் பாதிக்கபட்டிருந்த அவருக்கு கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. … Read more

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் மத ரீதியிலான பாரபட்சம் காட்டக் கூடாது: திருமாவளவன்

சென்னை: “மத ரீதியாக பாரபட்சம் பார்த்து பயங்கரவாதத்தை அணுகினால், அது இந்த நாட்டின் பாதுகாப்புக்குக் கேடாகவே முடியும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளை பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் ஒன்றிய பாஜக அரசு தடை செய்திருப்பது இந்தியாவில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதற்கு சான்றாக உள்ளது. சனாதனப் பயங்கரவாத அமைப்புகளைத் தடை … Read more