உ.பி.,யில் துர்கா பூஜை பந்தலில்  தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி, 60 பேர் காயம்

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம், படோகியில் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ஞாயிற்றுகிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வடமாநிலங்களில் நவராத்திரி வாரத்தில் பொது இடங்களில் பந்தல் அமைத்து அதில், துர்கா தேவி சிலையை வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் துர்கா பூஜைக்காக பந்தல் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் படோயி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தல் ஒன்றில் ஞாயிற்றுக்கிழை … Read more

பொதுமக்களுக்கு குவாட்டர், உயிர் கோழி இலவசம்… சம்பவம் செய்த டிஆர்எஸ் கட்சிக்காரர்!

மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்களில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் முக்கியமானவராக திகழ்கிறார். 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா். அதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சித் தலைவா்களை சந்தித்து தொடர் ஆலோசனைகளையும் ராவ் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், சந்திரசேகர் ராவ் தேசிய அளவில் புதிய கட்சியை துவங்க உள்ளதாகவும், அக்கட்சியின் பெயரை தசரா பண்டிகையையொட்டி நாளை … Read more

தாஜ்மகாலை மிஞ்சிய மாமல்லபுரம்! – இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக வகைப்படுத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தை காண வந்த வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை காண வந்த வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமானது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெளியிட்ட இந்திய சுற்றுலாப் புள்ளிவிவரம் 2022 தெரிவித்துள்ளது. இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021-22 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள மாமல்லபுரத்திற்கு 1,44,984 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வந்துள்ளனர். … Read more

பாலியல் வழக்கில் சிறுவர்களை பெரியவர்களாக கருதி தண்டனை!!

பாலியல் வழக்கில் சிக்கிய சிறுவர்களை பெரியவர்களாகக் கருதி தண்டனை வழங்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 28ஆம் தேதி, 17 வயது சிறுமி தனது நண்பருடன் பார்ட்டிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த சிலர் சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறிவிட்டு, கடத்திச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 6 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டது. இந்த ஆறு பேரில் ஐந்து பேர் 18 வயது நிரம்பாதவர்கள். இவர்களில் ஒரு … Read more

குறைந்த விலையில் அறிமுகமாக உள்ள ஜியோ லேப்டாப்!!

ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. அதை தொடர்ந்து அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் “ஜியோபுக்” என்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோபுக் எனப்படும் பட்ஜெட் விலையிலான இந்த லேப்டாப்களில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப்கள் 4ஜி வசதியுடன் இருக்கும் என்றும், இதன் விலை இந்திய விலையில் ரூ. 15,000 ரூபாய் இருக்கலாம் எனவும் … Read more

1990-களில் இருந்தது போலவே பிஹார் ஏழ்மையான மாநிலமாக உள்ளது – பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

பாட்னா: “கடந்த 1990-களில் இருந்தது போலவே பிஹார் மாநிலம் ஏழ்மையான மிகவும் பின்தங்கிய மாநிலமாகவே இருக்கிறது. இங்கு எதுவும் மாறிவிடவில்லை” என்று பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். ஐ பேக் நிறுவனரும், அரசியல் வியூகருமான பிரசாந்த் கிஷோர், மாநிலத்தின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் அமைந்துள்ள பிஹாரின் காந்தி ஆஸ்ரமத்தில் இருந்து, தனது 3,500 கி.மீ. யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான நேற்று தனது யாத்திரையின் முதல் நாளில் மாநிலத்தில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து … Read more

2000, 500, 200… ரூ.8 கோடி மதிப்புள்ள நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை!

ஆந்திராவில் புகழ் பெற்ற வாசவி கன்யாக பரமேஸ்வரி தேவி கோயில் 135 ஆண்டுகள் பழமையான கோவில். மிகவும் பிரசித்திபெற்ற இக்கோவிலில் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்படும் வரும் பாரம்பரிய நிகழ்வு எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விஷேச நாட்களில் கோவிலை மலர்களால் அங்கலரித்து நாம் பார்த்திருப்போம் ஆனால் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்திருந்தால்? பார்ப்பவர்களில் கண்களைக் கவரும் வகையில் இக்கோவிலில் தங்கம் மற்றும் ரூபாய் நோட்டுகளால் கோவிலின் சுவர் முழுக்க அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள கோயிலில் அம்மனுக்கு நவராத்திரி … Read more

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!!

12 வயது சிறுவன் ஒருவன் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உக்ஹைதி என்ற பகுதியில் 5 வயது சிறுமி தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் சிறுவன் அந்த சிறுமியை தனியே ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட … Read more

திருமணம் நடக்காததால் ஆத்திரம்… பூசாரியின் காதை கடித்த இளைஞர்!!

மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த லக்ஷ்மி காந்த் சர்மா என்பவருக்கு விபுல், அருண் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் நீண்ட காலம் திருமணம் தள்ளிச் சென்றுள்ளது. இதனால் மன வருத்தம் அடைந்த லக்ஷ்மி காந்த் சிலரின் அறிவுரையை அடுத்து, வீட்டில் பூஜை நடத்த ஏற்பாடு செய்தார். மகன்களுக்கு விரைவாக திருமணம் நடக்க வேண்டும் என்ற நோக்கில் ராஜஸ்தானின் கோட்டா என்ற பகுதியைச் சேர்ந்த குஞ்ச்பீகாரி சர்மா என்ற புரோஹிதரை அழைத்து தனது வீட்டில் பூஜை செய்துள்ளார். பூஜை … Read more

சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை – சிறுவர்களின் விளையாட்டுக்கு மோடி பாராட்டு

புதுடெல்லி: சமஸ்கிருத மொழியில் கிரிக்கெட் வர்ணனை செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் வைரலாகியுள்ள சிறுவர்களின் கிரிக்கெட் ஆட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் குறித்த எத்தனையோ வீடியோக்கள் வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. எனினும், பழமையான, பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியில் வர்ணனை செய்யப்பட்ட கிரிக்கெட் வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். பெருங்களூருவில் குடியிருப்புப் பகுதி ஒன்றின் வீதியில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கிரிக்கெட் விளையாட்டை சிறுவன் … Read more