ஒன்றிய அரசு தன் கையிருப்பில் இருந்து 15 லட்சம் டன் கொண்டை கடலையை மாநிலங்களுக்கு விநியோகிக்க திட்டம்..!!

டெல்லி: ஒன்றிய அரசு தன் கையிருப்பிலிருந்து 15 லட்சம் டன் கொண்டை கடலையை மாநிலங்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசு கொள்முதல் செய்த விலையைவிட கிலோவுக்கு ரூ.8 குறைத்து மாநிலங்களுக்கு கொண்டை கடலை வழங்கப்படும். ஒன்றிய அரசு தரும் கொண்டை கடலையை மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டம், மதிய உணவு திட்டத்துக்கு பயன்படுத்தலாம்.

சைலண்ட் மோடில் இருந்து திடீரென விழித்த அன்னா ஹசாரே… கெஜ்ரிவாலின் தூக்கம் கலைக்க கடிதம்!

அன்னா ஹசாரே… பத்து ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நபர். தமது உண்ணாவிரத போராட்டங்களின் மூலம் காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசை கதிகலங்க வைத்த காந்தியவாதி. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளை மக்களே நேரடியாக தண்டிக்க வகை செய்யும் ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இவரது இந்த கோரிக்கையை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு நிராகரித்ததையடுத்து, 2011 ஆம் ஆண்டு … Read more

சிபிஐ சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பாஜக பயன்படுத்துகிறது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றசாட்டு

டெல்லி: சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பா.ஜனதா பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்- மந்திரியுமான மணிஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது. அவர் மீது வழக்கும் பதிவாகி இருந்தது. அவரது வங்கி லாக்கரையும் சி.பி.ஐ. நேற்று சோதனை செய்தது. டெல்லி அரசியலில் சி.பி.ஐ. … Read more

பாஜகவை அதன் பாணியிலேயே அடிக்கும் கெஜ்ரிவால்!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காவிக் கொடியை பறக்க விட்டு பலம்வாய்ந்த அரசியல் சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது. இதற்காக அக்கட்சி மேற்கொண்ட செயல்திட்டங்கள் ஏராளம். எட்டு ஆண்டுகளை கடந்து மத்தியில் அசுர பலத்துடன் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், 2024 தேர்தலிலும் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என அமித் ஷா சூளுரைத்துள்ளார். அதேசமயம், பாஜகவை வீழ்த்த பல்வேறு வியூகங்களையும் எதிர்க்கட்சிகள் வகுத்து வருகின்றன. ஆனால், அவை எதுவுமே இதுவரை பலனளிக்கவில்லை. மாறாக, பாஜகவின் … Read more

மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது டெல்லி: இந்தியாவில் மற்ற மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை நீட்டிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (செவ்வாய்கிழமை) கூறியுள்ளது. நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏஎஸ் ஓகா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு மதம் மாறிய எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்ற வழக்கின் மனு விசாரணை வந்தது. அந்த மனு மீதான 3 வாரங்களுக்குள் மத்திய அரசு … Read more

கட்சி விரோத செயல்களில் ஈடுபடும் அமரீந்தரின் மனைவியை நீக்க வேணும்; பஞ்சாப் காங். மாநில கமிட்டி தீர்மானம்

சண்டிகர்: கட்சி விரோத செயல்களில் ஈடுபடும் அமரீந்தர் சிங் மனைவி பிரனீத் கவுரை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார். சமீபத்தில் நடந்த பஞ்சாப் பேரவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைத்து அமரீந்தர் சிங்கின் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் அமரீந்தர் சிங்கும் தோற்றார். இவரது மனைவி பிரனீத் … Read more

ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் குறைவாக மதிப்பெண் போட்ட பள்ளி ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த மாணவர்கள்..!!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் குறைவாக மதிப்பெண் போட்டதால் பள்ளி ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து மாணவர்கள் தாக்கினர். செய்முறை தேர்வில் குறைவான மதிப்பெண் போட்டதால் பாடங்களில் தோல்வியை தழுவியதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். செய்முறை தேர்வு மதிப்பெண்ணை தலைமை ஆசிரியர் கணக்கிடாததே மாணவர்களின் தோல்விக்கு காரணம் என பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

கள்ளநோட்டுகள் அதிகரிப்பு! 2021ல் கைப்பற்றப்பட்ட போலி நோட்டுகளில் 60% 2000 தாள்கள்!

NCRB Data: கடந்த 2021 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல், சுமார் 60 சதவீதம் ரூபாய் 2,000 மதிப்புடையவை என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Record Bureau) தெரிவித்துள்ளது. அதாவது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ரூ.20.39 கோடி மதிப்புள்ள 3,10,080 போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ.12.18 கோடி மதிப்புள்ள 60,915 நோட்டுகள் ரூ.2,000 மதிப்பிலானவை என்று … Read more

உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் பூஜைகளை நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி!

உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் பூஜைகளை நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, அங்கு சிலை நிறுவப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பெங்களூரு சாம்ராஜ் நகரில் உள்ள ஈத்கா மைதானம் யாருக்கும் சொந்தம் என வக்பு வாரியத்துக்கும், மாநில வருவாய்த் துறைக்கும் இடையே எழுந்த பிரச்சனையால், அங்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பெங்களூருவைப் போல உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்திலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கக்கோரிய வழக்கை நள்ளிரவில் விசாரித்த … Read more

மதம் மாறிய தலித்களுக்கு இடஒதுக்கீடு சலுகை குறித்து ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: இந்து, புத்தம் மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்த தலித்களுக்கு வழங்கப்படும் எஸ்சி இட ஒதுக்கீட்டு சலுகைகளை பிற மதங்களுக்கு மாறிய தலித்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரும் பொதுநலன் மனு மற்றும் கிறிஸ்துவ தலித்களுக்கும் எஸ்சி இட ஒதுக்கீட்டு சலுகைகளை வழங்க கோரும் மனு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்கே கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், இட ஒதுக்கீடு சலுகைகள் தொடர்பாக … Read more