ரூ.11 லட்சம் காருக்கு சர்வீஸ் சார்ஜ் 22 லட்சமா? -போலோ ஷோரூமின் ரசீதால் நொந்துப்போன கஸ்டமர்

பெங்களூருவில் நிகழ்ந்த பெரு வெள்ளத்தை கண்டு கர்நாடகா மட்டுமல்லாமல் நாடே பெரும் அதிர்ச்சிக்கு ஆளானது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொழிந்த மழையால் ஐ.டி. நகரம் நீரில் மூழ்கியது பெங்களூரு வாசிகளை பெருமளவில் பாதிக்கச் செய்தது. அதிலும் வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்களை மீட்டு அவற்றை சரிசெய்ய பெங்களூரு மக்கள் படாத பாடு படவேண்டியதாய் போனது. ஆகையால் ஆடி, லெக்ஸஸ் போன்ற ஃப்ரீமியம் கார் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்திருந்தது. ஆனால் அதே பெங்களூருவைச் சேர்ந்த … Read more

புதுச்சேரியில் மின் தடையை கண்டித்து புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டம் வாபஸ்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் தடையை கண்டித்து புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 5 மணி நேரமாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வந்த நிலையில் மின் விநியோகம் வழங்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

’நாளை ஆணுறை கேட்பீர்கள்…’ ஐஏஎஸ் அதிகாரி பேச்சால் சர்ச்சை – தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

பீகாரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தில் இயக்குநராக இருப்பவர் , ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர், ”அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்” என்ற கருத்தரங்கில் பங்கேற்றுக் கலந்துரையாடினார். இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுரிடம் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கேட்டனர். அதில் ஒரு மாணவி, ‘’அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. ஆனால் எங்களுக்கு சானிட்டரி நாப்கின்களை ரூ.20 முதல் 30 ரூபாயில் ஏன் வழங்க முடியவில்லை? என்று கேள்வி கேட்டார். … Read more

63 ஸ்பூனா…! வயிறா இல்லை வேற எதாவதா – அதிர்ந்த டாக்டர்கள்

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் விஜயகுமார் (32) என்பவர், தீவிர வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, மீரட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த பார்த்த மருத்துவர்கள், அவரின் வயிற்றில் ஏராளமான ஸ்பூன்களை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.  அவருக்கு, 2  மணிநேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரின் வயிற்றில் இருந்து தலைகள் இல்லாத 63 ஸ்பூன்களை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். மேலும், … Read more

திருப்பதியில் பிரமோற்சவ 3ம் நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் ேகாயில் பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான நேற்று மதியம் ரங்கநாதர் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக ஜப்பானில் இருந்து ஆப்பிள், மஸ்கட்டில் இருந்து திராட்சை, கொரியாவில் இருந்து பேரிக்காய், தாய்லாந்தில் இருந்து மாம்பழங்கள் மற்றும் அமெரிக்காவில் இருந்து செர்ரி பழங்கள் வரவழைக்கப்பட்டு மலையப்ப சுவாமிக்கு அலங்காரம் … Read more

தேசிய விளையாட்டு போட்டி – குஜராத்தில் இன்று தொடக்கம்

அகமதாபாத்: 36-வது தேசியவிளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் இன்று தொடங்குகின்றன. வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். போட்டிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது. சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு தேசிய விளையாட்டு போட்டி நடைபெறுவதால் இந்தத் தொடர் வீரர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியை இன்று மாலை … Read more

அடுத்து ஆணுறை கேட்பீங்க: பெண் ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சை பேச்சு!

பீகார் மாநிலத்தில் ‘அதிகாரம் பெற்ற மகள்கள்; வளமான பீகார்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுருடன் கலந்துரையாடினர். அப்போது பேசிய மாணவி ஒருவர், “அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூ.20, ரூ.30இல் சானிட்டரி நாப்கின்கள் அரசால் வழங்க முடியாதா?” என கேள்வி எழுப்பினார். … Read more

சானிட்டரி நாப்கினை சலுகை விலையில் வழங்க கோரிய மாணவியிடம் அரசிடம் இருந்து ஆணுறை கேட்பீர்களா? என்று கேட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி

பாட்னா: சானிட்டரி  நாப்கினை சலுகை விலையில் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த பள்ளிச் சிறுமிஇடம் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், பீகார் மாநில குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை செயலருமான ஹர்ஜோத் கவுர் பாம்ரா அடுத்து அரசிடம் இருந்து ஆணுறையை கேட்பீர்கள்… அப்படித்தானே’ என பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பீகாரில், ‘சிறுமிகளுக்கான கண்ணியத்தை மேம்படுத்துவோம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பள்ளி சிறுமிகளும், மாநில குழந்தைகள் நல மேம்பாட்டு … Read more

’அண்ணா, அங்கிள்னு கூப்டாதீங்க’ : Uber டிரைவரின் பாஸ் லெவல் கோரிக்கை: வைரல் பதிவின் பின்னணி

டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் குறித்தும் சவாரி செய்யும் போது நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் பல செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் ஆப்ஸ்கள் மூலம் ஊபர் போன்ற சேவைகளை பெரும் போது நடக்கும் பல சுவாரஸ்யங்கள், குளறுபடிகள் பலவும் உலவிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், சோஹினி என்ற பயனர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஊபர் டிரைவரின் கார் சீட்டில் எழுதியிருந்த வாசகத்தைதான் பகிர்ந்திருக்கிறார். அதில், “யாரும் என்னை அண்ணா என்றோ அங்கிள் … Read more

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி கருக்கலைப்பு செய்துகொள்ளலாம்

டெல்லியை சேர்ந்த திருமணமாகாத 25 வயது பெண், பரஸ்பர சம்மதத்தின் பேரில் பாலியல் உறவால் கர்ப்பம் அடைந்தார். இந்நிலையில், கர்ப்பத்தை கலைக்க, உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரிய வழக்கில், நீதிபதிகள் சந்திராசூட், சூர்யகாந்த் மற்றும் போபண்ணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதன்படி சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களும் தகுதி உடைவர்கள் எனவும் ,கருக்கலைப்புக்கான உரிமை … Read more