இலகு ரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் இன்று சேர்ப்பு

புதுடெல்லி: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர் இன்று விமானப்படையில் சேர்க்கப்படுகிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால், நாட்டின் விமானப்படை, ராணுவத்துக்கு வலுசேர்க்க அனைத்து காலநிலையிலும், இரவு நேரத்திலும் தாக்கும் திறன் கொண்ட 15 இலகு ரக ஹெலிகாப்டர்கள் ரூ.3,887 கோடி மதிப்பில் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விமானப்படைக்கு 10, ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட உள்ளன. சியாச்சின், லடாக் உள்ளிட்ட உயரமான மலை பகுதிகளில் உள்ள பதுங்கு குழிகளை தகர்க்க, காடுகள் … Read more

154-வது பிறந்த தினம் கொண்டாட்டம்; காந்தி நினைவிடத்தில் மரியாதை

புதுடெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்ட பல தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி தனது டிவிட்டரில், `நாடு சுதந்திர அமிர்த பெருவிழாவினை கொண்டாடி வரும் நிலையில், … Read more

ஒன்றிய அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு; தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தரும் தகவலை புறக்கணிக்காதீர்

புதுடெல்லி: ‘தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளிக்கும் தகவல்களை புறக்கணிக்க வேண்டாம்’ என்று அனைத்து ஒன்றிய அமைச்சகங்களுக்கும் பிரதமர் மோடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த வாரம் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனைகளின் போது பல்வேறு ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. இதை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் … Read more

குஜராத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? -காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு ஷாக் கொடுத்த கருத்துக்கணிப்பு!

குஜராத் ,ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது குறித்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில், ‘குஜராத் மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதாவது தற்போது ஆளுங்கட்சியான பாஜகவுக்கு … Read more

பெண்களுக்கு அதிக மரியாதை அளிக்கும் சமுதாயத்தை உருவாக்குவோம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு பேச்சு

டெல்லி: பெண்களுக்கு அதிக மரியாதை அளிக்கும் சமுதாயத்தை உருவாக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இந்து மத பண்டிகையான துர்கா பூஜையையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், துர்கா பூஜையின் நல்ல நேரத்தில், இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். துர்கா பூஜை பண்டிகை மூலம் நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் பலப்படுத்தப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன். நாட்டை … Read more

ஐசியூவில் முலாயம் சிங் யாதவ்… உ.பி முன்னாள் முதல்வர் கவலைக்கிடம்!

நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. இம்மாநிலத்தை மூன்று முறை ஆட்சி செய்தவர் முலாயம் சிங் யாதவ். ஆனால் ஒருமுறை கூட 5 ஆண்டுகளை நிறைவு செய்தது இல்லை. இவர் சமாஜ்வாதி கட்சி தலைவராகவும் விளங்குகிறார். உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். … Read more

யாரையும் எதிர்ப்பதற்காக நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை; மல்லிகார்ஜுன் கார்கே பேட்டி

டெல்லி: யாரையும் எதிர்ப்பதற்காக நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜக்ஜீவன் ராமுக்குப் … Read more

உ.பி: ஒருமணி நேரத்தில் இருவேறு விபத்துகள் – 31 பேர் உயிரிழப்பு

வட மாநிலங்களில் இன்னும் பொதுமக்களை ஏற்றிச்செல்ல டிராக்டர்களை அதிகளவில் பயன்படுத்துகின்றது. இதனால், அடிக்கடி டிராக்டர்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம்  கான்பூர் அருகே ஃபதேபூரில் உள்ள சந்திரிகா தேவி கோயிலுக்கு நேற்று மாலை சுமார் 50 பேர் டிராக்டரில் பயணித்துச் சென்றுள்ளனர். அங்குள்ள கதம்பூர் எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தொடர்ந்து டிராக்டர் முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள குளம் ஒன்றில் தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது. இந்தக் கோர விபத்தில் … Read more

ஆம்புலன்சுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளால் ‘டிராபிக்’ போலீசாக மாறிய டாக்டர்; நொய்டாவில் நெகிழ்ச்சி

நொய்டா: நொய்டா பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர், தனது பணி நேரம் போக மற்ற நேரத்தில் டிராப்பிக் போலீசை போன்று போக்குவரத்தை சரிசெய்து வருவதால் பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ெநாய்டா பகுதியை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணா யாதவ் என்பவர், கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ​​கடுமையான போக்கவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஒன்றைக் கண்டார். அந்த ஆம்புலன்சில் நோயாளி இருந்ததால், அவர் … Read more

பாத யாத்திரை.!தேர்தல் வியூகவாதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர்

சுமார் 3500 கி.மீ பாதயாத்திரையாக செல்லும் நடைபயணத்தை தொடங்கினார், தேர்தல் வியூகவாதியாக மாறிய அரசியல் ஆர்வலரான பிரசாந்த் கிஷோர். மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வா ஆசிரமத்தில் இருந்து மாநிலம் தழுவிய நடைபயணத்தை தொடங்கியுள்ளார். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன், அடிமட்டத்தில் உள்ள மக்களுடன் உரையாடி, அவர்களின் பிரச்னைகளை கண்டறியும் நோக்கத்துடன், ‘ஜான்சுராஜ்’ பரப்புரையின் கீழ், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், சுமார் 3500 கி.மீ., நடக்க உள்ளார்பிரசாந்த் கிஷோர். 1917ல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக மகாத்மா காந்தி … Read more