உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடியாது-மத்திய அரசு

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பினை தொடர ஏற்பாடுகள் செய்து தர இயலாது என மத்திய  அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  உக்ரைன்-ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் 20,000 பேர் நாடு  திரும்பினர். இவர்கள், இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியுறவுத்துறைக்கான மக்களவை குழு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை … Read more

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடியாது: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம்..!

டெல்லி: உக்ரைன் போரால் திரும்பி வந்த மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் இந்தியா திரும்பினர். அவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நிலத்துறை அமைச்சகத்துக்கு வெளியுறவுத்துறைக்கான மக்களவைக்குழு கடந்த ஆகஸ்ட் 3ம் … Read more

நாடு திரும்பும் சோனியா காந்தி.. காங்கிரஸ் கட்சியில் காத்திருக்கும் தலைவர் பதவி பஞ்சாயத்து!

வெளிநாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை நாடு திரும்ப உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை சோனியா காந்தியை நியமிக்க வேண்டும் என காந்தி குடும்ப விசுவாசிகள் அதற்கான ஆலோசனைகளை தொடங்கியுள்ளனர். கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட இதுவரை ராகுல் காந்தி ஒப்புதல் தெரிவிக்காத நிலையில், சோனியா காந்தி கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் அல்லது அடுத்த தலைவரை சோனியாவே நியமிக்க வேண்டும் என்பது சோனியா-ராகுல் ஆதரவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.கட்சி … Read more

கர்நாடக மேலவையில் கட்டாய மதமாற்றத் தடை மசோதா நிறைவேற்றம்

பெங்களூரு: கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் மசோதா கர்நாடக மேலவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, அம்மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் நோக்கில் அதற்கான மசோதாவை கடந்த ஆண்டு டிசம்பரில் கொண்டு வந்தது. அப்போது இந்த மசோதா சட்டப்பேரவையின் கீழவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மேலவையில் போதிய எண்ணிக்கை பலம் இல்லாததால், மசோதா அங்கு தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், இந்த மசோதா நிலுவையில் இருந்தது. இதனிடையே, கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் … Read more

ரயிலில் சிக்கிய செல்போன் திருடன்..! – இணையத்தில் பரவும் வைரல் வீடியோ..!

பீகார் மாநிலத்தில் ஒரு ரயில் நிலையத்தில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை திருட நினைத்த ஒரு திருடனை சக பயணிகள்ரயில் ஜன்னல் வழியாக லாவகமாக பிடித்து 15 கிமீ தொங்கவிட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர் . பீகார் மாநிலத்தில் பெகுசாராய் மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணிஒருவரிடம் அவர் ரயிலில் பயணித்து கொண்டிருக்கும் போது, ஒரு திருடன்ரயில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை பறித்து கொண்டு தப்பிக்க முயற்சித்தான். அந்த சமயம் சுதாரித்துக்கொண்ட சக பயணிகள், லாவகமாக ஜன்னல் வழியாக … Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்: பயங்கரவாத அமைப்பில் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நேற்று மாலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்து கொண்ட பாதுகாப்பு படையினர், திருப்பி … Read more

குழப்பத்திற்கு முடிவு கட்டுங்கள்: ஆளுநரை சந்தித்து ஹேமந்த் சோரன் வலியுறுத்தல்

ராஞ்சி: தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக எழுந்துள்ள குழப்பத்திற்கு முடிவு கட்டுமாறு ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பையசை சந்தித்து, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தி உள்ளார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக குற்றம்சாட்டி இருந்தது. இதன் அடிப்படையில், அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி கோரியிருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம், … Read more

பொறியாளர் தினம் பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: பொறியாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பொறியாளர்கள் தினத்தில் அனைத்து பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். தேசத்தை கட்டி எழுப்புவதில் பங்களிக்கும் திறமையான மற்றும் திறமையான பொறியாளர்களை கொண்டிருப்பது தேசம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் கல்லூரிகளை உருவாக்குவது உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த தினத்தில், சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூறுகிறோம். வருங்கால பொறியாளர்களின் தலைமுறையினர், தங்களை வேறுபடுத்தி கொள்ள … Read more

குரங்குகளின் தொல்லையை தடுத்த ’சீனப் பாம்புகள்’! கேரள காவல்துறையின் நூதன டெக்னிக்!

கேரளாவில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஒரு காவல் நிலையத்தில் அதிகரித்து வந்த குரங்குகளின் தொல்லையை “சீனப் பாம்புகளைப்” பயன்படுத்தி காவல்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர். கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள நெடும்கண்டத்தில் அமைந்துள்ளது கும்பம்மெட்டு காவல் நிலையம். கேரள – தமிழ்நாடு எல்லையில் வனப்பகுதியை ஒட்டி இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்திற்கு பெரும் தொல்லையாக இருந்து வந்தவை “குரங்குகள்”. காட்டில் இருந்து வழி தவறி இந்த காவல்நிலையத்திற்கு படையெடுத்த குரங்குகள் தங்களுக்கே உரிய … Read more

இரு வகையானவர்களே காங்கிரசை விட்டு வெளியேறுகிறார்கள்: ஜெய்ராம் ரமேஷ்

கேரளா: இரு வகையானவர்களே காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியால் அனைத்தையும் பெற்றவர்கள், விசாரணை அமைப்புகளின் நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் என இரு வகையானவர்கள் மட்டுமே காங்கிரசை விட்டு வெளியேறுகின்றனர்.முதல் வகைக்கு மிகச் சிறந்த உதாரணம் குலாம் நபி ஆசாத். இளைஞர் காங்கிரஸ் தலைவர், பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர், பொதுச் செயலாளர், மத்திய கேபினெட் அமைச்சர் என அனைத்தையும் காங்கிரஸ் … Read more