ரூ.90 கோடி மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் அச்சடித்து விநியோகிக்க முயன்ற மூவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் மற்றும் ஜாம்நகரில் அச்சடிக்கப்பட்ட 90 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இதில் சுமார் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபகாலங்களில் குஜராத்தில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் சூரத்தில் உள்ள காம்ரேஜ் காவல்துறையினர் விசாரணையில் போலி நோட்டுகளை நேரடியாக சந்தையில் புழக்கத்தில் விடாமல், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது இதன் மூளையாக செயல்பட்ட … Read more

தூய்மையான நகரங்கள் பட்டியலில் 6-வது முறையாக முதலிடம் பிடித்தது இந்தூர்

புதுடெல்லி: தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற பெயரில் விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் தொடர்பான தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு … Read more

உபி.யில் பரிதாபம் டிராக்டர் கவிழ்ந்து 25 பேர் பலி

கான்பூர்: உ.பி.யில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் டிராக்டரில் சென்ற 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  விபத்தில் 25 பேர் பலியான சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உ.பி. மாநிலம் கான்பூரை சேர்ந்த கிராமவாசிகள் பலர் டிராக்டர் ஒன்றில் உனோவ் மாவட்டத்தில் உள்ள கோயில் விழாவில் பங்கேற்றுவிட்டு கான்பூர் திரும்பி கொண்டிருந்தனர். கதாம்பூர் அருகே டிராக்டர் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது அதில் பயணித்த 25 … Read more

உலக அளவில் அசிங்கப்பட்ட இந்தியா… வட மாநில மக்களே காரணம்!!

வட இந்தியர்கள் லண்டனிலும் எச்சில் துப்பி சமூகவலைதளத்தில் அசிங்கப்படுத்துவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வட இந்தியாவில், பான் மற்றும் புகையிலை பொருட்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இதைப் பயன்படுத்தும் நபர்கள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி வருகின்றனர். இவர்களின் இந்த செயல் பல இடங்களின் அழகையே கெடுத்து வருகிறது. குறிப்பாக ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் எச்சில் துப்பு சேதப்படுத்தி வருகின்றனர். அபராதம் விதித்தாலும் இவர்கள் இந்த அசிங்கத்தை நிறுத்த மறுக்கின்றனர். பான்பராக் … Read more

பாஜக கூட்டத்துக்கு வர தாமதமானதால் மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அபு சாலையில் நேற்று முன்தினம் இரவு பாஜக பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி கூட்ட மேடைக்கு வருவதற்கு இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது. அப்போது மேடையேறிய பிரதமர் மோடி, மைக்கை தவிர்த்து விட்டு மக்களிடம் நேரடியாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பொதுக்கூட்ட மேடைகளில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை உள்ளது. நான் இங்கு வருவதற்கு காலதாமதமாகி விட்டது. ஒலிபெருக்கி பயன்படுத்த … Read more

அக்டோபரில் திருப்பதி செல்ல பிளானா? இந்த தேதியில் தரிசிக்க முடியாது

திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது. அதன்படி தொற்று பரவல் குறைந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது, அதன் பேரில் பக்தர்களும் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர்.  இந்த நிலையில் வரும் … Read more

2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-முதல் BSNL-ல் 5-ஜி சேவை தொடக்கம்: ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி: 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-முதல் BSNL-ல் 5-ஜி சேவை தொடங்கப்பட உள்ளதாக ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதத்தில் 200 நகரங்களில் 5-ஜி சேவை அமுல்படுத்தபடும். 2 ஆண்டுகளில் நாட்டின் 80 முதல் 90% பகுதிகளுக்கு 5-ஜி சேவையை கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.

இன்று மதியம் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்!!

ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் ஊர்வலம் இன்று மதியம் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. காந்திஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்த உள்ளனர். பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த ஊர்வலம் தடை செய்யப்பட்டது. அதே நேரத்தில் நவம்பர் மாதம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இன்று ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பிற்பகல் 2.30 மணிக்கு புதுவை பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து இந்த ஊர்வலம் … Read more

பக்தர்கள் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 26 பேர் பலி!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் யாத்திரைக்கு வந்த பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர். உன்னாவ் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி கோயிலுக்கு கான்பூரின் கதம்பூர் பகுதியில் இருந்து 50 பக்தர்கள் டிராக்டர் – ட்ராலியில் பயணம் செய்தனர். நேற்று கோயிலில் இருந்து திரும்பி வந்த கொண்டிருந்த போது, பாஹாதுனா கிராமத்தின் அருகே உள்ள குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் … Read more

மல்லிகார்ஜுன கார்கே Vs சசி தரூர் – யாருக்கு வெற்றி வாய்ப்பு?

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே – சசி தரூருக்கு இடையே வரும் 17-ம் தேதி நேரடி போட்டி நடக்கிறது. இதில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைமை, காந்தி குடும்பத்தின் கைகளிலேயே உள்ளது. இதையே புகாராக எழுப்பும் பாஜக.வை சமாளிக்க, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகி நிற்க காந்தி குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக காங்கிரஸ் கட்சி … Read more