தமிழகத்தைச் சேர்ந்த 14 கட்சிகள் உட்பட 253 அரசியல் கட்சிகள் முடக்கம் – சின்னங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 14 கட்சிகள் உட்பட 253 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ஒவ்வாரு அரசியல் கட்சியும், தங்களது பெயர், தலைமை அலுவலகம், நிர்வாகிகள், முகவரி, பான் எண் ஆகியவற்றில் மாற்றம் செய்தால் அதை தேர்தல் ஆணையத்துக்கு தாமதமின்றி தெரிவிக்க வேண்டும். சில அரசியல் கட்சிகள் தங்களது பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டு, செலயற்றதாக உள்ளன. இந்த கட்சிகள் செயல்படுகிறதா என மாநில … Read more

மருத்துவமனைக்கு ஒன்றாக சென்ற வீடியோ வைரல் பிரபாஸ், அனுஷ்கா மீண்டும் இணைந்தனர்

ஐதராபாத்: மருத்துவமனைக்கு ஒன்றாக சென்றதால் பிரபாஸ், அனுஷ்கா மீண்டும் இணைந்துவிட்டதாக பேசப்படுகிறது. பில்லா படத்தின்  தெலுங்கு ரீமேக்கில் பிரபாசுடன் நடித்தார் அனுஷ்கா. அதைத் தொடர்ந்து பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் பிரபாசுடன் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தகவல் பரவியது. இதை இருவருமே மறுக்கவில்லை. இந்நிலையில் பிரபாசின் குடும்பத்தார் இந்த காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை சமாதானப்படுத்தும் வேலைகளில் பிரபாஸ் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே பிரபாசின் முயற்சி பலனளிக்கவில்லை என்றும் அனுஷ்காவுடன் … Read more

வீட்டில் இருந்து வேலை 1 கல்லில் 2 மாங்காய் அடிக்கும் ஊழியர்கள்: ஐடி நிறுவனங்கள் எச்சரிக்கை

பெங்களூரு: ஐடி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, ‘ஒர்க் பிரம் ஹோம்’ சலுகையை முன்னணி ஐடி நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. மேலும், இரட்டை வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காலகட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலைபார்க்க அனுமதி வழங்கியது. மேலும், பெங்களூருவில் மழை வெள்ளம் ஏற்பட்டு வெளிவட்ட சாலைகள் தீவுகளாக மாறியதால் ஐடி நிறுவனங்கள் அனைத்துமே ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதி வழங்கியது. ஆனால், இந்த … Read more

சபரிமலை ஆன்லைன் முன்பதிவு தேவசம் போர்டு டாடா ஒப்பந்தம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி கடந்த 12 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. கேரள காவல்துறை இந்த திட்டத்தை இலவசமாக செயல்படுத்தி வந்தது. இந்நிலையில், ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் ஒப்படைக்க காவல்துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதற்கு கேரள காவல் துறையும் சம்மதித்தது. இதைத் தொடர்ந்து, ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க டாடா கன்சல்டன்சி நிறுவனம் முன்வந்துள்ளது. இது … Read more

ஜாமீன் கிடைத்தும் சித்திக் சிறைவாசம்: அமலாக்கத் துறையால் சிக்கல்

லக்னோ: உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதும், அமலாக்கத் துறையின் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராசில் தலித் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, எரிக்கப்பட்டார். டெல்லி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக, கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் சித்திக் கப்பான் உத்தரப் … Read more

மேற்கு வங்கத்தில் பதற்றம் பாஜ போராட்டத்தில் வெடித்தது வன்முறை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவின் அரசுக்கு எதிராக பாஜ நடத்திய போராட்டத்தில்  வன்முறை வெடித்தது.  மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த அரசை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை பாஜ அறிவித்தது.  அதன்படி நேற்று பேரணி நடந்தபோது, போலீசார் அதை தடுத்து நிறுத்தினர். இதனால், ஹவுரா பாலம் அருகே போலீசாருக்கும் பாஜ தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பாஜ.வினர் வன்முறையில் … Read more

ஒன்றிய அரசு உஷாராக இருந்திருந்தால் கொரோனா 2ம் அலையில் உயிர் இழப்புகளை தடுத்து இருக்கலாம்: நாடாளுமன்ற நிலைக்குழு குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘நோய் பரவலின் வீரியத்தை ஒன்றிய அரசு ஆரம்பத்திலேயே கணித்து இருந்தால், கொரோனா 2ம் அலையில் ஏற்பட்ட உயிர் பலிகளை தடுத்து இருக்கலாம்,’ என்று நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் குற்றம்சாட்டி உள்ளது. நாட்டில் கடந்தாண்டு ஏற்பட்ட கொரோனா 2ம் அலையில், உயிர் பலி அதிகளவில் ஏற்பட்டது. இந்நிலையில், சுகாதாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது 137வது அறிக்கையை மாநிலங்களவையில் நேற்று முன்தினம் சமர்பித்தது. இந்த அறிக்கையில் அது கூறியிருப்பதாவது: கொரோனா 2ம் அலையின்போது உயிர் இழப்புகள் அதிகமாக … Read more

“என் உடலைத் தொடாதே.. நீ ஒரு பெண்” – பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

கொல்கத்தா: மேற்குவங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி இன்று கொல்கத்தாவில் நடந்த ‘நபன்னா சலோ’ போராட்டத்தின் போது பெண் போலீஸ் அதிகாரியிடம் நடந்துகொண்ட விதம் சர்ச்சையாகியுள்ளது. மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்ததாக கூறி எதிர்க்கட்சியான பாஜக சார்பில் தலைமைச்செயலகம் நோக்கி பேரணி சென்றனர். இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய சுவேந்து அதிகாரி தலைமையேற்று நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். சுவேந்து அதிகாரியை கைது செய்து அழைத்துச் செல்ல … Read more

தலைமைச் செயலக முற்றுகை போராட்டம்… போலீஸ் -பாஜக மோதல்!

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவ கூறி, தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தது பாஜக. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருநதும் திரண்ட பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்டோர் தலைமையில் கோட்டையை நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர் போராட்டக்காரர்கள் தலைமைச் செயலக பகுதியை நெருங்கியபோது போலீசார் அவர்களை … Read more

பூஸ்டர் தடுப்பூசி ஏன் போடணும்? இதோ 5 முக்கிய காரணங்கள்

புதுடெல்லி: உலகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதில், தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளவில் 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு, இப்போது முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் பூஸ்டர்  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இது போடப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா மீதான பயம் நீங்கி விட்டதால், இந்த பூஸ்டர் தடுப்பூசியை போடுவதில் மக்களிடையே அலட்சியம் காணப்படுகிறது.  இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், அங்குள்ள இளைஞர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள … Read more